"எனது முன்னோர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் காவலுக்கு வந்தவர்கள். ஊர் மரியாதை செய்து நாங்கள் எடுத்துக்கொடுக்கும் பட்டு, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலிலிருந்து எடுத்துச்செல்லப்பட்டு, மதுரை வைகை ஆற்றில் இறங்கும் கள்ளழகருக்குச் சாத்தப்படும். அந்தவகையில், ஆண்டாள் கோவிலின் புனிதம் காக்கப்படவேண்டும் என்பதே எனது நோக்கம்''’என்று நம்மைச் சந்தித்தபோது ஆவணங்களைப் பரப்பிய சுந்தரபாண்டி, “"ஆதாரங்களின் அடிப்படையில் சில விவகாரங்களைக் கூறக் கடமைப்பட்டிருக்கிறேன்'’எனத் தொடர்ந்தார்.

aa

"ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ‘ஸ்தானிகம்’ ரெங்கராஜன் என்ற ரமேஷ், அர்ச்சகர்கள் மற்றும் பரிசாரகர்கள் மத்தியில் மிரட்டலான பேர்வழியாக இருந்துவருகிறார். ரெங்கராஜனுக்கு மூன்று மனைவிகள் மட்டுமல்ல, நான்கு தொடர்புகளும் இருப்பதாக, அவரை நன்கறிந்த அக்கோவிலின் அர்ச்சகர்கள், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் வரைக்கும் அவருடைய அட்டூழியங்களைப் பட்டியலிட்டு புகார் அனுப்பினார்கள். அவருடைய இரண்டாவது மனைவி முத்துலட்சுமி, இதே ஆண்டாள் கோவில் சக்கரத்தாழ்வார் சன்னதியில் நாளொன்றுக்கு ரூ.250 பெறும் தினக்கூலி பணியாளராகப் பணிபுரிந்துவருகிறார். முத்துலட்சுமியின் முதல் கணவர் ரெங்கராஜனால் விரட்டப்பட்டார்.

ஸ்தானிகம் ரெங்கராஜனின் சேவைப் பணியானது, அர்ச்சகர்களுக்கு உதவியாக இருப்பது, பக்தர்களுக்கு குங்குமம், தீர்த்தம், துளசிப் பிரசாதம் வழங்குவது, பூஜைக்கு தூபக்கால் தீபத்தட்டு தயார் செய்து கொடுத்து கைங்கரியம் செய்வது, சாமி திருமஞ்சனம் மற்றும் பூஜைக்குத் தேவையான தண்ணீர் கொண்டுவருவது போன்றவை மட்டும்தான். ஆனால், ஆண்டாள் கோவிலில் கருவறை வரையிலும் சகலமுமாக கோலோச்சி வருகிறார். அதிகாரிகள் பலரும் இவருடைய பிடியில் இருக்கிறார்கள். உபயதாரர்களான பெரும் செல்வந்தர்களை வளைத்துப் போட்டிருக்கிறார். கோவிலுக்கு உள்ளே முறைகேடுகள், வெளியே வசூல் வேட்டை எனப் பல வழிகளில், தன் பெயரிலும், முத்துலட்சுமி பெயரிலும் கோடிக்கணக்கான சொத்துகளைச் சேர்த்திருக்கிறார். தமிழ்நாடு ஆன்மிக வளர்ச்சிப் பேரவை டிரஸ்ட் என்ற லேபிளை, தனது மோசடி காரியங் களுக்குப் பயன் படுத்திவருகிறார்.

அ.தி.மு.க. ஆட்சி நடந்த போது ஆண்டாள் கோவிலில் கொடி மரங்கள் காணாமல் போனதாகவும், லாரி மூலம் எடுத்துச் செல்லப்பட்டதாகவும், மதுரையில் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையிடம் புகாரானது. குடமுழுக்குக்கு முன் கொடிமரங்கள் கொள்ளைபோனதாக சர்ச்சை எழுந்தது. ‘எடுபிடி’ என்று அர்ச்சகர்களால் விமர்சிக்கப்படும் ரெங்கராஜனின் பெயர், அப்போது கொடிமரம் கும்பாபிஷேக விழா கல்வெட்டில் காரியார்த்தம் செய்த ஸ்தலத்தார் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. அறநிலையத் துறை அதிகாரிகள் மத்தியில் ரெங்கராஜனுக்கு அன்றைக்கு இருந்த அதே செல்வாக்கு இன்று வரையிலும் தொடர்வது கொடுமையானது. அப்போது கொடிமரம் மாற்றியமைப்பதற்கு ரெங்கராஜனுக்கு அதிகாரம் தந்தது யார்? கோவில் நிர்வாகம் ஏன் எடுத்துச் செய்ய வில்லை? பழைய கொடிமரத்துக்குக் கீழே பதிக்கப்பட்ட பாண்டியர் காலத்துப் பஞ்சலோகத் தகடுகள் எங்கே? வைரம், வைடூரியம், தங்க நகைகள் கொள்ளையடிக்கப் பட்டனவா? என பல குற்றச்சாட்டுகள் எழுந்தன.

2006க்கு மேல் மளமளவென்று கோடிக்கணக்கான சொத்துகளைக் குவிக்க ரெங்கராஜனுக்கு எங்கிருந்து பணம் வந்தது? ரூ.250 தினக்கூலி பெறும் ரெங்கராஜனின் இரண்டாவது மனைவியின் பெயரில் இத்தனை சொத்துக்களை எப்படி வாங்க முடிந்தது? வருமானவரித்துறைக்கு புகார் மனு அனுப்பி னேன். ஒரு நடவடிக்கையும் எடுக்க வில்லை''’என்று சலித்துக்கொண்டார்.

a

பொதுமக்கள் சார்பில் ஆண்டாள் கோவில் அர்ச்சகர்களுக்காகப் பரிந்து அனுப்பப் பட்ட புகார் மனுவில், "இங்கே 10 அர்ச்சகர் களும் 10 பரிசாரகர்களும் பணியாற்றுகிறார்கள். இவர்களில் பரிசாரகரான ரெங்கராஜன் என்ற ரமேஷ் அய்யங்கார் மட்டும் வேறு மாதிரி யானவர். அறநிலையத் துறை ஆணையரால் கூட இவரளவுக்கு சம்பாதிக்க முடியாது. உலகம் முழுவதும் உள்ள ஆண்டாளின் பக்தர்களை ஏமாற்றி கோடிக்கணக்கில் குவித்துவருகிறார். கோவில் செயல் அலு வலரும்கூட இவரிட மிருந்து ஆதாயம் அடைகிறார். ரமேஷ் மற்றும் அவருடைய மகன்கள் இருவரால் பட்டர்கள், அர்ச்சகர்கள், அரையர்கள், வேதபிரான் பட்டர் மற்றும் பரிசாரகர்கள் கடுமையாக மிரட்டப்படு கின்றனர். ஆண்டாள் கோவிலுக்குள் ரவுடியிசம் தலைவிரித்தாடுகிறது'’ என இக்கோவில் சம்பந்தப்பட்ட பல விவகாரங்கள் சுட்டிக்காட் டப்பட்டுள்ளன. இந்நிலையில், சக்கரத்தாழ்வார் சன்னதியில் கட்டணச் சீட்டுகள் விற்பனை செய்யும் முத்துலட்சுமியைத் தொடர்புகொண்டு "இத்தனை கோடி சொத்துகள் எப்படி வந்தன?''’எனக் கேட்டோம். “

நமது லைனுக்கு வந்தார் ரெங்கராஜன் என்ற ரமேஷ். "முத்துலட்சுமி என் மனைவிதான். எங்களுக்கு கோவில் பணி மட்டுமில்ல. லாட்ஜ் வச்சிருக்கோம். 2 பில்டிங் வச்சிருக்கோம். புரோகிதம் பண்ணுறோம். புளியோதரை, சக்கரைப் பொங்கல்னு சமையல் பண்ணி கொடுக்கிறோம். இங்கே நெறய பேரு என்னை பிளான் பண்ணி பிளாக்-மெயில் பண்றாங்க. கோவிலுக்கு வர்றவங்க ஏதாவது திருப்பணி பண்ணச் சொல்றாங்க.. அதான் பண்ணுறோம். கோயில்ல இருக்கிற அய்யங்கார் பூராமே என்னோட சொந்தபந்தங்க. தக்கார் முன்னிலைல தான் எல்லாமே நடக்குது. செயல் அலுவலர் இருக்காங்க. இணை ஆணையர் இருக்காங்க. ஆணையர் உத்தரவுப்படிதான் நடக்குது''” என்றார் வேகமாக.

ஆண்டாள் கோவில் செயல் அலுவலர் சக்கரையம்மாளிடம் பேசினோம். “"ரெங்கராஜன் எத்தனை மனைவி வச்சிருந்தா எனக்கென்ன? அது அவரோட பெர்சனல். அதுக்குள்ள எதுக்கு தலையிடணும்? கோயில் அர்ச்சகர்கள் எல்லாருமே லாட்ஜஸ் வச்சிருக்காங்க. முத்துபட்டர் பையன்கூட லாட்ஜ் வச்சிருக்காரு. எல்லா அர்ச்சகர்களும் சொத்து சேர்த்திருக்காங்க. ரெங்கராஜனுக்கு குறுகிய கால வளர்ச்சின்னு நினைக்கிறேன். அதனாலதான் ஆளாளுக்கு மிரட்டுறாங்க. மற்ற அர்ச்சகர்கள் மிரட்டுறவங்களுக்கு பணம் கொடுத்துப் பழக்கிட்டாங்க. ரெங்கராஜன் போல்டா நின்னு பணம் கொடுத்திருக்க மாட்டாரு. அதனால.. அவரு மேல மட்டும் பெட்டிஷன் வருது. இங்கே யாரு ssசம்பாதிக்காம இருக்கா? அந்த டிரஸ்ட், இந்த டிரஸ்ட்டுன்னு எல்லா அர்ச்சகர்களும் டிரஸ்ட் வச்சிருந்தாங்க. ஒரு லெட்டர் கொடுத்து எல்லா டிரஸ்ட்டையும் க்ளோஸ் பண்ணியாச்சு. ரெங்கராஜன் பழைய பேலன்ஸ சொல்லுவாரு. இப்ப எந்த டிரஸ்டும் ரன் ஆகுறது இல்ல. கொடிமரம் ரிப்போர்ட் எல்லாம் கொடுத்தாச்சு. இன்னும் கேஸ் முடி யல. கொடிமரத்துக்கு கீழே வைரம், வைடூரியம் எதுவும் கிடையாது. அந்தக் காலத்துல எதுவும் வைக்கமாட்டாங்க. கொடி மரத்துக்குக் கீழே ஒரே ஒரு தகடுதான் இருந்திருக்கு. அர்ச்சகர்கள் பூஜைதான் பண்ணுவாங்க. கொடிமரத்த எடுக் கும்போது அவங்களுக்கு வேலை கிடையாது. கொடிமரம் பிரதிஷ்டை எல்லாம் அதிகாரிகள் முன்னிலைல நடந்திருக்கு. ரெங்கராஜன் மீதான அந்த கம்ப்ளைன்ட் லெட் டரை வச்சு, ரெண்டு தரப்பையும் கூப்பிட்டு விசாரிச்சோம். எங்க பேரைச் சொல்லி யாரோ எழுதிருக்காங்கன்னு அர்ச்சகர்கள் சொல்லிட்டாங்க. நெறய சொத்து சேர்த்தாருன்னு ரெங்கராஜன் மேல ஒரு வழக்கு இருக்கு. அவரு ஸ்டே வாங்கி வச்சிருக்காருன்னு நினைக்கிறேன். ஒருத்தங்க மேல நடவடிக்கை எடுக்கணும்னா ஆவணம் வேணும், ஆதாரம் வேணும். சும்மா மானாங்கனியா சொன்னாங் கன்னா.. அஃபிசியல் லெவல்ல எதுவும் பண்ண முடியாது''’என்றார்.

"ரெங்கராஜன் சம்பந்தப்பட்ட சொத்து ஆவணங்களைத் திரட்டி பணம் கேட்டு மிரட்டினீர்களா?''’ என்று சுந்தரபாண்டியிடம் கேட்டோம்.

"அடிப்படையில் நான் ஒரு சமூக ஆர்வலர். இந்தப் பகுதியில் கலசலிங்கம் பல்கலைக்கழகம், நீரோடை புறம்போக்கு இடத்தை ஆக்கிரமித்து கட்டி டங்கள் கட்டியது குறித்து புகார் அளித்தேன். வருவாய்த் துறையும் மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்காத நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தேன். நான் தொடர்ந்து போராடி னேன். 5 வருடங்களுக்குப் பிறகு வருவாய்த் துறை நீரோடை ஆக்கிரமிப்பை உறுதி செய்தது. கிருஷ்ணன் கோவில் காவல்நிலையம் அந்தப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் மீது வழக்கு பதிவு செய்தது. அனைத்துத் துறையிலும் தொடர்புள்ளவர் ரெங்கராஜன், அவரை மிரட்டியதாகப் புகார் செய்தார். ஸ்ரீவில்லிபுத்தூர் டவுண் காவல்நிலையத்தில் என் மீது வழக்கு பதிவானது. அது அடிப்படை ஆதாரம் இல்லாத பொய்ப் புகார் என்பதால் சட்டத்தின் துணையுடன் போராடி வருகிறேன்''’என்றார்.

தொடர்ந்து பலரும் ரெங்கராஜனைப் பிளாக்-மெயில் செய்து வருகிறார்கள் என்றால் உறுத்தலாக அல்லவா இருக்கிறது?

____________

மலைக்கவைக்கும் சொத்துப் பட்டியல்!

Advertisment

ஆண்டாள் கோவிலில் சம்பளம் என்பதே இல்லாமல் ஸ்தானிகம் ரெங்கராஜன் என்ற ரமேஷ் தன் பெயரிலும், மனைவி முத்துலட்சுமி பெயரிலும் சேர்த்த சில சொத்துகளைப் பட்டியலிட்டார் சுந்தரபாண்டி.

ஆண்டாள் கோவில் அருகே இரண்டு விடுதிகள் -மதிப்பு சுமார் ரூ.4.5 கோடி.

யாத்ரிகா நிவாஸ் -மதிப்பு சுமார் ரூ.3.5 கோடி

Advertisment

விடுதி அருகே ஒரு வீடு -மதிப்பு சுமார் ரூ.60 லட்சம்

மேலரத வீதியில் 3 வீடுகள் -மதிப்பு சுமார் ரூ.4 கோடி

தன்யா நகரில் லைன் வீடு, கடை, காலிமனை -மதிப்பு சுமார் ரூ.2 கோடி

பழைய சென்னாகுளத்தில் 25 சென்ட் நிலம்

டொயோட்டா கிரிஸ்டா கார் -மதிப்பு சுமார் ரூ.35 லட்சம்