"ஹலோ தலைவரே, இதோ அதோன்னு சொல்லப்பட்டு வந்த, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், இப்ப அதிரடியா வந்து நின்னு, அனைத்து அரசியல் கட்சிகளையும் பரபரப்பில் மூழ்கடிச்சிருக்கு.''”
"ஆமாம்பா, தேர்தலுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கால், தேர்தல் தள்ளிப்போகலாம்கிற எதிர்பார்ப்பு எல்லாக் கட்சிகளுக்கும் இருந்ததே?''”
"உண்மைதாங்க தலைவரே, ஆனாலும், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19-ந் தேதி நடக்கும் என்றும், வாக்கு எண்ணிக்கை 22 ஆம் தேதி என்றும் மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவிச்சிடுச்சி. இதன் அடிப்படையில் மேயர்கள், நகராட்சித் தலைவர்கள், பேரூராட்சித் தலைவர்கள் ஆகியோரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மார்ச் 4-ல் நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கு. இதுதான் இங்குள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒருவித பதட்டப் பரபரப்பில் மூழ்கடிச்சிருக்கு. இருந்தாலும் தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் தேர்தல் களத்தில் உடனே குதிக்க ஆரம்பிக்க, மத்த கட்சிகளிடம் கொஞ்சம் திணறல் தெரியுது. குறிப்பா, கமலின் மக்கள் நீதி மய்யம் இன்னும் பெண் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை முழுதாகத் தேர்வு செய்யலை. அதனால் அவர்கள் வேட்பாளர்களைத் தேடும் அவசரத்தில் இருக்காங்க. ஏனைய கட்சிகளும் வேட்பாளர்களை இறுதி செய்வதில் மும்முரம் காட்டுது.''”
"ஆளுந்தரப்பின் வியூகம் என்ன?''”
"அது பற்றி நம்ம நக்கீரனில் தனிக் கட்டுரை இருக்கு. என் தகவலையும் சொல்லிடுறேன். தேர்தல் வாக்குறுதிகளில் இன்னும் சிலவற்றை நிறைவேற்றவும், வேட்பாளர் தேர்வில் கவனம் செலுத்தவும், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை 3 மாதம் தள்ளி வைக்கலாம்னு கடந்த மாதமே தி.மு.க சீனியர் அமைச்சர்கள் சிலர், முதல்வர் ஸ்டாலினிடம் வலியுறுத்தி இருந்தாங்க. ஆனால், முதல்வர் ஸ்டாலின் கான்ஃபிடன்ட்டா இருந்தாரு. உச்சநீதிமன்றம் தேர்தலை நடத்தியே ஆகணும்னு சொன்ன தால், தைரியமாக் களமிறங்கு வோம்னு, சீனியர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்தார். இந்த நிலையில், கடந்த வாரம் உளவுத் துறை ஒரு ரிப்போர்ட் டை அரசுக்குக் கொடுத்திருக்கு. அதில் சில பாதகமான நிலைமைகள் சுட்டிக்காட்டப்பட்டிருந்ததாம். இதனால் அது பற்றிய யோசனையில் தி.மு.க. அரசு இருந்தப்ப, உயர்நீதிமன்றம் 25 ஆம் தேதி, தேர்தலை நடத்தத் தடை யில்லைன்னு சொல்லிடிச்சி. அதனால்தான் தேர்தல் தேதியை அறிவிக்கவேண்டியதா ஆயிடுச்சி.''”
"பா.ஜ.க. இன்னும் பரிதவிப்பில் இருக்குதே?''”
"ஆமாங்க தலைவரே, உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள் வது பற்றி, அ.தி.மு.க. தலைவர்கள் தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்கள்னு எதிர்பார்த்த பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு, அங்கிருந்து எந்த சிக்னலும் வராம இருந்தது. அதனால் அ.தி.மு.க. தரப்புக்கு, தேர்தல் பற்றிப் பேசலாமான்னு தகவல் கொடுத்தாராம். ஆனால் அ.தி.மு.க. தரப்போ, பேசலாம், கொஞ்சம் பொறுங்கன்னு அசால்ட் டாவே பதில் சொல்லியிருக்கு. இதற்கிடையே, தமிழக பா.ஜ.க., தலைமைக் குழுவைக் கூட்டி தேர்தல் குறித்து விவாதிச்சப்ப, அதில் பேசிய பலரும், நாம் எதிர்பார்த்த சீட்டைக் கொடுத்தா அ.தி.மு.க.வுடன் கைகோர்ப்போம். இல்லைன்னா, கழற்றிவிட்டுட்டு நாம் பாட்டுக்கு சிங்கிளா மக்க ளிடம் போவோம்னு சொல்லியிருக்காங்க.''”
"தே.மு.தி.க. புதிய வியூகத்தில் இருக்குதே?''”
"ஆமாங்க தலைவரே, உள்ளாட்சித் தேர்தலில் பா.ம.க, நாம் தமிழர் கட்சி, தே.மு.தி.க ஆகியவை தனித்து போட்டி யிடும் எண்ணத்தில் செயல்படுது. இருந்தும், தே.மு.தி.க. சீனியர் களோ, நாம் தனிச்சிப் போட்டி யிட்டால், மண்ணைக் கவ்வ வேண்டியதுதான். அதோட பண நெருக்கடியிலும் சிக்கிச் சின்னாபின்னமா ஆயிடுவோம். அதனால், ஏதாவது ஒரு கட்சி யுடன் நாம் கூட்டணி வைக்க ணும்னு பொருளாளரான பிரேம லதாவிடம் சொன்னதோட, இப்போதைக்கு நமக்கு ஏற்றது, ’நாம் தமிழர்’ கட்சிதான். அதனால் சீமானுடன் உடனடி யாகக் கூட்டணி பற்றிப் பேசுங்கள். அப்பதான் நம் தொண்டர்களிடம் உற்சாகம் வரும்னு வலியுறுத்தியிருக்காங்க. இதைக்கேட்ட பிரேமலதா, பார்க்கலாம்னு சொல்லியிருக்கா ராம். இதுவரை யாருடனும் கூட்டணி வைக்காத நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தே.மு.தி.க.வை எப்படி அணுகு வாருன்னும் தெரியலை.''”
"உள்ளாட்சித் தேர்தல் அரசியலில் தமிழக கட்சிகளின் கவனம் குவிந்திருக்கும் நிலை யில், அகில இந்திய அரசியல் நோக்கி மு.க.ஸ்டாலினின் கவனம் திரும்பியிருக்கே?''”
"அகில இந்திய தொகுப்புக்கு ஒதுக்கப்பட்ட மருத்துவப் படிப்புக்கான இடங்களில், இதர பிற்படுத் தப்பட்டோருக்கான 27% இடஒதுக்கீட்டை நிலை நாட்டுவதில் தி.மு.க. தலை வரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் காட்டிய அக்கறையும், நீதிமன்றம் மூலம் பெற்ற வெற்றியும் இந்திய அளவில் கவனத்தை ஈர்த்திருக்கு. அதற்காக அவருக்கு 26-ந் தேதியன்று காணொலி வாயிலா பாராட்டு நடத்தப்பட்டது. திரிணாமூல் காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதாதளம், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், முஸ்லிம் லீக் இப்படிப் பல கட்சிகளுடன் ஓய்வுபெற்ற நீதிபதிகளும் கலந்துக்கிட் டாங்க. அதில் பேசிய ஸ்டாலின், சமூக நீதிக் கொள்கையை முன்னெடுப்பதற்காக அகில இந்திய கூட்டமைப்பு ஒன்று விரைவில் உருவாக்கப்படும்னு சொன் னார். இந்திய அளவில் பா.ஜ.க.வுக்கு எதிரான வலுவான அரசியல் இயக்கம் தேவைப்படும் நிலையில், ஸ்டாலினின் இந்த அறிவிப்பு கவனம் பெற்றிருக்குது.''”
"நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் ஜனாதிபதி தேர்தல் வருமே?''”
"ஆமாங்க தலைவரே, நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டம் ஜனாதிபதி உரையுடன் 31-ந் தேதி கூடுது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு ஜூலை மாதத்தோடு பதவிக்காலம் முடிவடை வதால், தனது நாடாளுமன்ற உரையில், கடந்த 6 ஆண்டு காலத்தில் தனது பணியின் சிறப்பியல்பு களைப் பதிவு செய்யும் விதமாக சில சம்பவங்களைத் தனது உரையில் இடம்பெறச் செய்ய நினைக்கிறாராம் ஜனாதிபதி. ஜூலையில் புதிய ஜனாதிபதி தேர்தல் நடக்கும்போது ஸ்டாலின், மம்தா ஆகியோரின் வியூகங்கள் முக்கியமானதாக இருக்கும். பா.ஜ.க தரப்பில் மீண்டும் ஒரு வாய்ப்பை ராம்நாத் கோவிந்திற்கே கொடுக்கணும்னு மோடி விரும்புவதாகவும், ஆனால், ஆர்.எஸ்.எஸ். தலைமை அதை விரும்பலைன்னும் பா.ஜ.க. டெல்லி வட்டா ரங்கள் சொல்லுது.''”
"தமிழக அரசின் பொங்கல் பரிசு விவகாரத்தில், கிறிஸ்ட்டி ஃபுட்டின் திருவிளையாடல்தான், குளறுபடி களுக்குக் காரணம்னு தகவல் வருதே?''”
"உண்மைதாங்க தலைவரே, கடந்த அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில், அன்றைய உணவுத்துறை அமைச்சர் காமராஜின் ஒத்துழைப்போடு அரசு உணவுப்பொருள் டெண்டர்களில் ரூ.2000 கோடிக்கு மேல் ஊழல் செய்ததாக இந்த நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டு இருக்கிறது. இந்த நிறு வனத்தை பிளாக் லிஸ்ட்டில் சேர்க்கணும்னு பல்வேறு அமைப்புகளும் கோரிக்கை வைத்தாலும், ‘என்னை எவராலும் ஒன்றும் செய்ய முடியாதுன்னு சர்வ வல்லமையுடன் அந்த நிறுவனம், தன் ஆக்டோபஸ் கைகளை விரித்தபடியே இருக்குது. கர்நாடக மாநிலம் கிறிஸ்டியை பிளாக் லிஸ்டில் வச்சிடுச்சி. இதையெல்லாம் பார்த்த முதல்வர் ஸ்டாலின், கிறிஸ்டியை ஓரங் கட்டுங்கன்னு சொல்லியிருந்த நிலையிலும், அது பொங்கல் பரிசு விவகாரத்தில் உள்ளே நுழைந்து, தன் ’தில்லாலங்கடி’ வேலைகளை அரங்கேற்றிவிட்டது.''”
"எப்படி?''”
"தமிழக ரேசன் அட்டைதாரர்களுக்கு 1,219 கோடி ரூபாயைப் பொங்கல் பரிசுகளின் கொள்முதலுக்கு செலவிட்டிருக்கிறது தமிழக அரசு. ஒரு பேக் தலா ரூ 360 என்று ‘மத்திய அரசுப் பணியாளர்களின் கூட்டுறவு சங்கமான’ சென்ட்ரல் பந்தர் என்ற நிறுவனம், டெண்டர் மூலம் 21 பொருட்கள் அடங்கிய பரிசுப் பைகளை சப்ளை செய்திருக்கு. பெயருக்கு அந்த நிறுவனம் டெண்டர் எடுத்திருந்தாலும், அதன் பின்னணியில் இருந்தது கிறிஸ்டியாம். மக்கள் நீதி மையப் பிரமுகரான சந்திரசேகரின் அனிதா டெக்ஸ் என்ற நிறுவனத்தின் மூலமே, அனைத்துப் பொருட்களும் சப்ளை செய்யப்பட்டிருக்கு. இவற்றை எல்லாம் பின்னால் இருந்து இயக்கி, பெரிய அளவில் கிறிஸ்டி ஃபுட் லாபம் பார்த்திருக்கிறதாம். இதெல்லாம் இப்போது முதல்வர் ஸ்டாலி னின் கவனத்துக்குப் போயிருப்பதால், இந்த விவகாரத்தை தீவிரமாகக் கையாள நினைக்கிறாராம்.''”
"நானும் ஒரு முக்கியமான தகவலை உங்க மூலம் பகிர்ந் துக்கறேன். ஜெ..வின் கொடநாடு பங்களா தொடர்பான கொலை, கொள்ளை விவகாரத்தில், குற்றவாளிகள் தரப்பிற்கும், எடப்பாடி தரப்பிற்கும் இடையில் பாலமாக இருந்த திலீப் என்பவரை ஸ்மெல் செய்த விசாரணை டீம், இப்போது அவரை அள்ளிவந்து துருவிக்கிட்டு இருக்கு. இவர், கேரள மாநில இரிஞ்சாலக்குடா என்ற ஊரைச் சேர்ந்தவராம். இவரிடமிருந்து நிறைய தகவல்கள் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப் படுது.''”