ஜனாதிபதி தேர்தலை மோடியும் எதிர்க்கட்சிகளும் கடும் பலப்பரீட்சையாகக் கருதுகின்றன. ஜூலை 18-ல் நடக்கவிருக்கும் இந்திய ஜனாதிபதிக்கான தேர்தலுக்கு ஜூன் 15 முதல் வேட்புமனுத் தாக்கல் தொடங்குகிறது. நாடாளுமன்றத்தின் லோக்சபா, ராஜ்யசபா எம்.பி.க்களும், மாநில சட்டமன்ற எம்.எல்.ஏ.க்களும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கும் உரிமை பெற்றவர்கள். எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு வாக்கு மதிப்பு உண்டு. அந்த மதிப்பைக்கொண்டே வெற்றி-தோல்விகள் தீர்மானிக்கப்படுகின்றன. ஒவ்வொரு மாநிலத்தின் மக்கள் தொகைக்கேற்ப எம்.எல்.ஏ.க்களின் வாக்கு மதிப்பு மாறும். ஆனால், எம்.பி.க்களின் வாக்கு மதிப்பு மாநிலங்களுக்கேற்ப மாறாது.
அந்த வகையில், ஒரு எம்.பி.யின் வாக்கு மதிப்பு 700. எம்.எல்.ஏ.க்களின் வாக்கு மதிப்பு மாறும் என்பதால் இந்தியாவிலேயே உத்திரப்பிரதேச மாநில எம்.எல்.ஏ.க் களின் மதிப்புதான் அதிகம். இங்கு ஒரு எம்.எல்.ஏ.வின் வாக்கு மதிப்பு 208. நாட்டிலேயே குறைந்த வாக்கு மதிப்பு சிக்கிம் மாநில எம்.எல்.ஏ.க்களின் வாக்கு மதிப்பு தான். இந்த மாநில எம்.எல்.ஏ.வின் வாக்கு மதிப்பு 7 ஆகும். அந்த வகையில் கணக்கிட்டால் தமிழகத்தில் ஒரு எம்.எல்.ஏ.வின் வாக்கு மதிப்பு 176.
இந்த நிலையில் இந்த தேர்தலில் 776 எம்.பி.க்களும், 4,033 எம்.எல்.ஏ.க்களும் வாக்களிக்கவிருக்கிறார்கள். இவர்களது வாக்குகளின் மொத்த மதிப்பு 10,86,431. இந்த மொத்த மதிப்பில் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெறுபவர்களே ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றவராவார்.
அந்த வகையில், தற்போது மத்திய ஆளும் கட்சியான பா.ஜ.க.வுக்கு 46 சதவீத வாக்குகள் இருக்கின்றன. பா.ஜ.க.வின் கூட்டணிக் கட்சிகளின் வாக்குகள் 2.9 சதவீதம். ஆக, பா.ஜ.க.வின் மொத்த பலம் 48.9 சதவீதமாக இருக்கிறது. எதிர்க்கட்சிகளிடம் 51.1 சதவீத வாக்குகள் இருக்கின்றன. ஆனால், அவை சிதறிக் கிடப்பதால் அவைகளை ஒருங்கிணைக்க காங்கிரஸ் தலைவர் சோனியாவும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவரான மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் தனித்தனி ரூட்டில் முயற்சிகளை மேற்கொண்டிருப்பதால் ஜனாதிபதி தேர்தல் சூடு பிடித்திருக்கிறது.
பா.ஜ.க. தலைவர் ஒருவரிடம் நாம் விவாதித்தபோது, "வாக்கு களின் மதிப்பை வைத்துக் கணக்கிட்டால்
ஜனாதிபதி தேர்தலை மோடியும் எதிர்க்கட்சிகளும் கடும் பலப்பரீட்சையாகக் கருதுகின்றன. ஜூலை 18-ல் நடக்கவிருக்கும் இந்திய ஜனாதிபதிக்கான தேர்தலுக்கு ஜூன் 15 முதல் வேட்புமனுத் தாக்கல் தொடங்குகிறது. நாடாளுமன்றத்தின் லோக்சபா, ராஜ்யசபா எம்.பி.க்களும், மாநில சட்டமன்ற எம்.எல்.ஏ.க்களும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கும் உரிமை பெற்றவர்கள். எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு வாக்கு மதிப்பு உண்டு. அந்த மதிப்பைக்கொண்டே வெற்றி-தோல்விகள் தீர்மானிக்கப்படுகின்றன. ஒவ்வொரு மாநிலத்தின் மக்கள் தொகைக்கேற்ப எம்.எல்.ஏ.க்களின் வாக்கு மதிப்பு மாறும். ஆனால், எம்.பி.க்களின் வாக்கு மதிப்பு மாநிலங்களுக்கேற்ப மாறாது.
அந்த வகையில், ஒரு எம்.பி.யின் வாக்கு மதிப்பு 700. எம்.எல்.ஏ.க்களின் வாக்கு மதிப்பு மாறும் என்பதால் இந்தியாவிலேயே உத்திரப்பிரதேச மாநில எம்.எல்.ஏ.க் களின் மதிப்புதான் அதிகம். இங்கு ஒரு எம்.எல்.ஏ.வின் வாக்கு மதிப்பு 208. நாட்டிலேயே குறைந்த வாக்கு மதிப்பு சிக்கிம் மாநில எம்.எல்.ஏ.க்களின் வாக்கு மதிப்பு தான். இந்த மாநில எம்.எல்.ஏ.வின் வாக்கு மதிப்பு 7 ஆகும். அந்த வகையில் கணக்கிட்டால் தமிழகத்தில் ஒரு எம்.எல்.ஏ.வின் வாக்கு மதிப்பு 176.
இந்த நிலையில் இந்த தேர்தலில் 776 எம்.பி.க்களும், 4,033 எம்.எல்.ஏ.க்களும் வாக்களிக்கவிருக்கிறார்கள். இவர்களது வாக்குகளின் மொத்த மதிப்பு 10,86,431. இந்த மொத்த மதிப்பில் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெறுபவர்களே ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றவராவார்.
அந்த வகையில், தற்போது மத்திய ஆளும் கட்சியான பா.ஜ.க.வுக்கு 46 சதவீத வாக்குகள் இருக்கின்றன. பா.ஜ.க.வின் கூட்டணிக் கட்சிகளின் வாக்குகள் 2.9 சதவீதம். ஆக, பா.ஜ.க.வின் மொத்த பலம் 48.9 சதவீதமாக இருக்கிறது. எதிர்க்கட்சிகளிடம் 51.1 சதவீத வாக்குகள் இருக்கின்றன. ஆனால், அவை சிதறிக் கிடப்பதால் அவைகளை ஒருங்கிணைக்க காங்கிரஸ் தலைவர் சோனியாவும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவரான மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் தனித்தனி ரூட்டில் முயற்சிகளை மேற்கொண்டிருப்பதால் ஜனாதிபதி தேர்தல் சூடு பிடித்திருக்கிறது.
பா.ஜ.க. தலைவர் ஒருவரிடம் நாம் விவாதித்தபோது, "வாக்கு களின் மதிப்பை வைத்துக் கணக்கிட்டால் இன்னும் 1 சதவீத வாக்குகள் எங்களுக்குக் கிடைத்தாலே போதும்; பா.ஜ.க.வின் வேட்பாளர் வெற்றிபெற்று விடுவார். அந்த 1 சதவீத வாக்குகள் எங்களுக்கு எளி தாகக் கிடைத்து விடும். அதனைப் பெறுவதில் பெரிய நெருக்கடியெல் லாம் பா.ஜ.க.வுக்கு இல்லை. ஆனால், சொற்ப வித்தியாசத்தில் கிடைக்கும் வெற்றியை பிரதமர் மோடி விரும்பவில்லை. மாறாக, குறைந்தபட்சம் 60 சதவீத வாக்குகளைப்பெற்று தங்களின் ஜனாதிபதி வேட்பாளர் ஜெயிக்க வேண்டும் என விரும்புகிறார். அதற்கான காய்களை மோடியும் அமித்ஷாவும் நகர்த்தி வைத்துள்ளனர்'' என்கிறார் அழுத்தமாக.
இந்த நிலையில், பொது வேட்பாளரை நிறுத்தி மோடியின் வேட்பாளரை தோற்கடிக்க எதிர்க்கட்சிகளின் வாக்குகளை ஒரே புள்ளியில் ஒன்றிணைக்கும் முயற்சியைத் துவக்கியிருக்கிறார் மம்தா பானர்ஜி. இதற்காக, ஜூன் 15-ந்தேதி டெல்லியில் அவசர ஆலோசனைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறார் மம்தா.
அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த்சிங், ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே உள்ளிட்டவர்களுக்கு கடிதம் அனுப்பியிருக்கிறார்.
மேலும், காங்கிரஸ் தலைவர் சோனியா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் பொதுச்செயலர் சீதாராம்யெச்சூரி, ராஷ்ட்ரிய லோக்தள் தலைவர் ஜெயந்த் சவுத்ரி, சிரோன்மணி அகாலிதள் தலைவர் சுக்பீர் சிங், தேசிய மாநாட்டுக் கட்சி தலைவர் ஃபரூக் அப்துல்லா, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொய்தீன், மதச்சார்பற்ற ஜனதாதள் குமாரசாமி, மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா உள்பட பா.ஜ.க. அல்லாத அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளார் மம்தா.
அந்த கடிதத்தில், "தேசத்தை ஆட்டிப்படைக்கும் பிரிவினை சக்தியை வீழ்த்த, நாட்டிலுள்ள அனைத்து முற்போக்கு சக்திகளும் ஒன்றிணைய வேண்டும். வலிமையான ஜனநாயக தேசத்திற்கு அதைவிட வலிமையான எதிர்க்கட்சி தேவைப்படுகிறது. ஆனால், இந்த நாட்டில் எதிர்க்கட்சிகள் ஒன்றிய அரசின் பல்வேறு ஏஜென்சிகளால் குறி வைக்கப்படுகின்றன. இதனை முறியடிக்கவும், எதிர்க்கட்சிகளின் வலிமையான எதிர்ப்பைக் காட்டவும் ஜனாதிபதி தேர்தலை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்த வேண்டும். இதற்காக கூட்டப்பட்டுள்ள கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களின் ஆலோசனைகளைத் தர வேண்டும்''’என்று சுட்டிக்காட்டியிருக்கிறார் மம்தா பானர்ஜி.
மம்தாவின் கடிதம் தேசிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அவர் கூட்டியுள்ள கூட்டத்தில் எத்தனை கட்சிகள் கலந்துகொள்ளும் என்பது புரியாத புதிராகவே இருக்கிறது. காரணம், 12-ந்தேதி வரை முக்கிய தலைவர்கள் யாரும் இதற்கு பதில் தரவில்லை. இந்த நிலையில், கடிதம் எழுதிய அனைத்துத் தலைவர்களையும் தொடர்புகொண்டு மம்தாவும், திரிணாமுல் காங்கிரசின் மூத்த தலைவர்களும் பேசி வருகின்றனர்.
மம்தாவின் முயற்சிகள் இப்படி இருக்க, ராகுல்காந்தி, ப.சிதம்பரம், மல்லிகார்ஜுன கார்க்கே, அம்பிகா சோனி, திக் விஜயசிங், ஆனந்த் சர்மா, ஜெய்ராம் ரமேஷ், குலாம்நபி ஆசாத், கே.சி.வேணு கோபால், ஜித்தேந்திர சிங், முகுல் வாஸ்னிக் உள்ளிட்ட காங்கிரசின் மூத்த தலைவர் களுடன் ஒரு அவசர ஆலோசனையை நடத்தி முடித்துள்ளார் சோனியா காந்தி.
அதில்,”"பா.ஜ.க.வுக்கு எதிராக பொது வேட்பாளரை நிறுத்தும் தகுதி காங்கிரசுக்குத்தான் இருக்கிறது. அதனால், பொது வேட்பாளரை நாம் நிறுத்த வேண்டும். அதற்கு ஆதரவாக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க அக்கட்சிகளின் தலைவர்களுடன் விவாதிக்கலாம். இதே முயற்சியை மம்தா எடுத்திருந்தாலும் காங்கிரஸ் மீதான நம்பிக்கையை எதிர்க்கட்சிகளிடம் ஏற்படுத்த காங்கிரஸ் முயற்சிப்பது அவசியம். ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க.வை தோற்கடிப்பதன் மூலம்தான், 2026-ல் நடக்கும் நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் காங்கிரசின் கை உயரும்''” என்று விவாதிக்கப்பட்டதாக டெல்லி தகவல்கள் கூறுகின்றன.
இதனையடுத்து, சோனியாகாந்தியின் உத்தரவின்படி எதிர்க்கட்சித் தலைவர்களிடம் பேசும் பொறுப்பை ஏற்றுக்கொண்ட மல்லிகார் ஜுன கார்க்கே, அவர்களைத் தொடர்புகொண்டு விவாதித்திருக்கிறார். ஆனால், காங்கிரசின் முயற்சிக்கும் முழுமையான ரிசல்ட் கிடைக்கவில்லை.
இதுகுறித்து நம்மிடம் பேசிய தமிழக காங்கிரசின் மாநில துணைத்தலைவர் சொர்ணா சேதுராமன்,”"பா.ஜ.க.வை தேசிய அளவில் எதிர்க்கக்கூடிய பலம் காங்கிரசுக்குத்தான் இருக்கிறது. அதனால் காங்கிரஸ் தலைமையில் மம்தா உள்ளிட்ட தலைவர்கள் ஒன்றுசேர்வதுதான் சரியாக இருக்கமுடியும். இந்த தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்தும் வாய்ப்பு எதிர்க்கட்சிகளுக்கு இருப்பதால் அரசியல் மாச்சரியங்களை கடந்து சிந்திப்பது காலத்தின் கட்டாயம். தேர்தலில் பா.ஜ.க.வுக்கு கடிவாளம் போடப் படவில்லையெனில் மதச்சார்பின் மைக்கு ஆபத்து அதிகரிக்கும்.
எதிர்க்கட்சிகளின் வாக்குகள் சிதறி யிருப்பதால்தான் பா.ஜ.க. திமிராக இருக்கிறது. இதனை உணர்ந்துதான் காங்கிரஸ் தலைமையில் எதிர்க் கட்சிகளை ஒற்றுமைப்படுத்த எங்கள் தலைமை அதீத முயற்சி எடுத்துள்ளது. நவீன்பட்நாயக்கையும், ஜெகன் மோகனையும் வைத்துதான் விளையாட நினைக்கிறார் மோடி. அதனால், எதார்த்த அரசியலை புரிந்துகொண்டு பா.ஜ.க.வை வீழ்த்த மம்தா பானர்ஜி, நவீன்பட்நாயக், ஜெகன்மோகன், சந்திரசேகரராவ் ஆகிய தலைவர்கள் காங்கிரசை ஆதரிக்கும் முடிவுகளை எடுக்கவேண்டும்''’என்கிறார்.
இந்த நிலையில், ஜனாதிபதி தேர்தல் குறித்து டி.ஆர்.பாலு, ஆ.ராசா, பொன்முடி உள்ளிட்ட தி.மு.க.வின் சீனியர்களிடம் விவாதித்திருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். மம்தா கூட்டியுள்ள ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்வதா? காங்கிரஸ் எடுக்கும் முயற்சிகளை ஆதரிப்பதா? என்று இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டிருக்கிறது.
அதேசமயம், சோனியாவும், மம்தாவும் தனித்தனியாக கூட்டும் ஆலோசனைக் கூட்டத்துக்கு எதிர்ப்பும் ஆதரவும் சம அளவில் இருக்கிறது. இப்படி பிரிந்து நிற்பது பா.ஜ.க.வுக்குத்தான் லாபம் என்றும், அதனால் இரு தரப்பையும் ஒற்றுமைப்படுத்த தி.மு.க. முயற்சித்தால் நல்லது நடக்க வாய்ப்பு இருக்கிறது என்றும் ஸ்டாலினிடம் சீனியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
நக்கீரனில் முந்தைய இதழ்களில் எழுதியது போல, பா.ஜ.க.வின் ஜனாதிபதி வேட்பாளராக பழங்குடியினர் சமூகத்தினருக்கு அல்லது முஸ்லீம் மதத்தினருக்கு வாய்ப்பளிக்கும் முடிவுகளில் 12-ந்தேதி வரை எந்த மாற்றமும் இல்லை. அந்த வகையில், பழங்குடியினர் சமூகத்தில் இப்போது வரை பா.ஜ.க.வுக்கு 25 சதவீத ஆதரவை நிலைநிறுத்தியிருக்கும் மோடி, அதனை 50 சதவீதமாக உயர்த்த திட்டமிட்டிருக்கிறார்.
அதற்காக, ஜனாதிபதி வேட்பாளராக பழங்குடியினர் சமூகத்தை சேர்ந்த ஜார்கண்டின் முன்னாள் கவர்னர் திரௌபதி முர்மு, சி.ஏ.ஜி.யின் தலைவரான கிரிஸ்சந்திர முர்மு மற்றும் இஸ்லாமிய சமூகத்தில் கேரள கவர்னர் ஆரிஃப் முகமது கான், மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி ஆகிய நால்வரின் பெயர்கள் மட்டுமே பரிசீலனையில் இருக்கிறது.
இந்த நிலையில், ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுடன் பா.ஜ.க. தலைவர்கள் நடத்திய ஆலோசனையில் மத்திய அமைச்சரும் பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ராஜ்நாத்சிங், வெங்கையா நாயுடு உள்பட மேலும் நான்கு நபர்களின் பெயர்கள் விவாதிக்கப்பட்டுள்ளன என்கிறார்கள் பா.ஜ.க.வின் மேலிட தொடர்பாளர்கள்.
இப்படிப்பட்ட சூழலில், பா.ஜ.க.வின் தேசிய தலைமைக்கு நெருக்க மான ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்களிடம் நாம் விசாரித்தபோது,”"ஜனாதிபதி தேர்தலில் மிருக பலத்துடன் ஜெயித்து எதிர்க்கட்சிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கவிருக்கும் பிரதமர் மோடி, இந்தத் தேர்தல் முடிந்ததும் 2024-ல் நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை ஆகஸ்டிலிருந்து துவக்கப்போகிறார். இதற்கான செயல்திட்டங்கள் ரகசியமாக வகுக்கப்பட்டுவிட் டன. முதல் திட்டம், நாடாளுமன்றத் தொகுதி களின் எண்ணிக்கையை அதி கரிக்கச் செய்வது. இதற்கான டிலிமிட்டேஷன் ஃபார்முலா தயாரிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், தற்போது இந்தியா முழுவது முள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளை 846 ஆக உயர்த்தப்போகிறார் மோடி. தமிழகத்தில் தற்போது 39 நாடாளுமன்ற தொகுதிகள் இருக்கின்றன. அதனை 49 ஆக உயர்த்துகின்றனர். 80 தொகுதிகளை கொண்ட உத்தரப்பிரதேசத்தில் 143 தொகுதிகளை உருவாக்கு கிறார்கள். இப்படி ஒவ்வொரு மாநிலத்திலும் தற்போதைய எண்ணிக்கை அதிகரிக்கும். அதன்படி தென்னிந்தியாவில் மட்டும் 40 தொகுதிகளும் வட இந்தியாவில் மட்டும் 263 தொகுதிகளும் புதிதாக கூடுதலாக உருவாக்கப்படு கிறது. அந்த 263-ல் 200 தொகுதிகளை பா.ஜ.க. எளிதாக ஜெயிக்கும் வகை யிலும் திட்டமிடப்பட்டுள் ளன. மோடி வீசப்போகும் இந்த அஸ்திரத்தால் எதிர்க் கட்சிகள் மிரண்டுபோகும்'' என்கிறார்கள் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்கள்.
"ஜனநாயகத்தில் அஸ்திரத்தின் வலிமையைத் தீர்மானிப்பவர்கள் மக்கள் தான். இது அனுபவப் பாடம்' என்கின்றன காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்.