"ஹலோ தலைவரே, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் 2 நாள் தமிழக விசிட் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்திக்கிட்டு இருக்குது.''”
"ஆமாம்பா, சர்ச்சைக்குரிய வன ஆக்கிரமிப்புச் சாமியாரான ஜக்கியின் ஆசிரமத் துக்கு குடியரசுத் தலைவர் விசிட் அடித்திருப்ப தால் அவர் குறித்தும் சர்ச்சை வரத்தானே செய்யும்”
"உண்மைதாங்க தலைவரே, தமிழகத்திற்கு 2 நாள் பயணமாக தனி விமானத்தில் வந்திருந்தார் ஜனாதிபதி முர்மு. முதலில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் சென்ற அவரை, தமிழ் முறைப்படி சிறப்பான பூரண கும்ப மரியாதை கொடுத்து வரவேற்றது கோவில் நிர்வாகம். அங்கே மீனாட்சி அம்மன் தரிசனம் மற்றும் சிறப்பு பூஜையை முடித்துக்கொண்டு, கோவைக்குச் சென்ற அவர், ஜக்கியின் ஈசா மைய மகா சிவராத்திரி கொண்டாட்டத்தில் கலந்துக்கிட்டார். லட்சக்கணக்கான பக்தர்கள் அந்த ஆசிரமத்தை முற்றுகையிட்டிருந்த நிலையில் அவர் கலந்துக்கிட்டு, அங்கிருந்து கிளம்பும் வரை காவல்துறை உள்ளிட்ட அத்தனை பாதுகாப்பு அமைப்புகளும் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டுதான் இருந்தன. ஜக்கி பற்றி முர்முவுக்கு நெகட்டிவ் ரிப்போர்ட் வந்ததோ என்னவோ தெரியவில்லை, அவர் முகத்தில் ஒருவித இறுக்கம் இருந்தது.''”
"வழக்கமா பிரதமர் மோடியைத்தானே ஜக்கி அழைப்பார்?''
"ஆமாங்க தலைவரே, அவரைத்தான் தனது பலமாக நினைக்கிறார் ஜக்கி. தனது ஆசிரமத்துக்கு நாளுக்கு நாள் எதிர்ப்பு வலுப்பதை உணர்ந்த ஜக்கி, இந்த முறையும் பிரதமர் மோடியைத்தான் அழைத்திருக்கிறார். ஆனால் மோடியோ, தனக்கு இந்தமுறை வர வாய்ப்பில்லைன்னு தட்டிக் கழிச்சிருக்கார். அதேசமயம் ஒன்றிய அரசு சார்பில் தனது அமைச்சரவையில் உள்ள ஒருவரை ஆசிரமத்துக்கு அனுப்புவதாகவும் மோடி தெரிவித்தாராம். ஆனால் ஜக்கியோ, பிரதமரான நீங்க வராட்டி, குடியரசுத் தலைவராவது வந்தால்தான் எங்க ஆசிரமத்துக்கு மரியாதைன்னு சொல்லி இருக்கார். இதைத் தொடர்ந்துதான் குடியரசுத் தலை வரின் பயணத்திட்டம் வகுக்கப்பட்டி ருக்கிறது. இந்த ஈஷா விழாவில் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவியும் கலந்துக்கிட்டார்.''”
"கவர்னர் ரவி கலந்துக்கிட்டதில் ஆச்சரியம் இல்லை. ஆனால் ஈஷா ஜக்கிக்கும் தமிழக அரசுக்கும் ஏழாம்பொருத்தமாக இருந்து வரும் நிலையில், தமிழக தகவல் தொழில் நுட்ப அமைச்சரான மனோதங்கராஜும் கலந்துக் கிட்டாரே?''”
"உண்மைதாங்க தலைவரே, வனப்பகுதி மற்றும் யானைத் தடங்களை ஆக்கிரமித்திருக்கும் ஈஷா மையத்தின் நடவடிக்கைகளுக்கு எதிரான மனநிலையில்தான் தி.மு.க. அரசு இருக்கிறது. அதோடு பக்தியின் பேரால் ஏராளமான நிதியையும் வசூலித்து விடிய விடிய ஆடல் பாடல்ன்னு சுற்றுச் சூழல் அதிர அதிர ஜக்கி, சிவராத்திரி விழாவைக் கொண்டாடுவதால், வன உயிர்களுக்கு அது பெருந்தொந்தரவுன்னு இயற்கை ஆர்வலர்கள் புகார் வாசிக்கிறாங்க. அப்படிப்பட்ட விழாவுக்கு ஜனாதிபதி வரலாமான்னு அவங்க அதிருப்தி அடைஞ்சிருக்காங்க. இதெல்லாம் தெரிஞ்சாலும், குடியரசுத் தலைவர் ஒரு மாநிலத்திற்குள் ஏதேனும் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டால், மாநில அரசு சார்பில் ஒருவர் அவர் பயணத்தில் அவர் கூடவே இருப்பது என்பது மரபாகும். அந்த வகையில்தான் அமைச்சர் மனோ தங்கராஜை, முதல்வர் ஸ்டாலின் கோவைக்கு அனுப்பி வைத்தார்னு கோட்டை வட்டாரம் சொல்லுது. அதிகார வர்க்கத்தைக் கையில் வைத்துக்கொண்டு எதையும் சாதிக்கலாம்னு ஈஷா தரப்பு நினைத்தாலும், அங்கு நடக்கும் அத்துமீறல்களைக் கண்காணிக்கவும் சில கண்கள் இருக்கின்றன.''”
"இடைத்தேர்தலை ரத்து செய்துவிட வேண்டும் என்று அ.தி.மு.க.வும் பா.ஜ.க.வும் துடிக்குதே?''”
"ஆமாங்க தலைவரே, எடப்பாடி தரப்பு வாக்குகளையும் ஓ.பி.எஸ். தரப்பு வாக்குகளையும் ஒருமுகப்படுத்தினாலும் இரட்டை இலை, ஈரோடு கிழக்கில் கரையேறாதுன்னு பா.ஜ.க,. தெரிந்துகொண்டது. இதை அ.தி.மு.க.வும் புரிந்துகொண்டது. அதனால் இந்த இரண்டு தரப்பும், எந்த வகையிலாவது இடைத் தேர்தலை ரத்து பண்ண வைத்துவிட வேண்டும் என்று, பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றன. இதைத் தெரிந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின், தேர்தல் ரத்தாகிவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார். அதோடு கைச்சின்னத்தை எதிர்த்து நிற்பவர்கள் டெபாசிட்டே வாங்கக்கூடாது என்றும் அவர் விரும்பு கிறார். அதனால் மிகுந்த எச்சரிக்கையோடு செயல்படும்படி தேர்தல் களத்தில் இருக்கும் தங்கள் கட்சியினருக்கு ஸ்டாலின் அறிவுறுத்தி இருக்கிறார்.'' ”
"அதனால்தான் இப்ப தி.மு.க. தரப்பு நிதானிக்கிதா?''”
"ஆமாங்க தலைவரே, கரன்சியில் இத்தனை நாளாய் தாராளம் காட்டி வந்த தி.மு.க. முதல்வரின் எச்சரிக்கையால் நிதானிக்க ஆரம்பிச்சிடிச்சி. அதே நேரம் எடப்பாடித் தரப்பு கரன்சி விநியோகத்தை சர்வசுதந்திரமா நடத்திக்கிட்டு இருக்கு. இந்த நிலையில் டெல்லியின் கண் ஜாடையால், தேர்தல் ஆணையமும் பறக்கும் படையினரும் தி.மு.க.வை மட்டும் தீவிரமாகக் கண்காணிக்கின்றன. அதனால்தான் தேர்தல் வியூகங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்றும் எந்த சூழலிலும் தேர்தல் ஆணையத்துக்கு புகார் போகிற அளவுக்கு நடந்துகொள்ளக் கூடாது என்றும், தனது அமைச்சரவை சகாக்களான கே.என்.நேரு, முத்துச்சாமி, செந்தில்பாலாஜி ஆகியோரை எச்சரித்திருக்கிறாராம் ஸ்டாலின். அதனால் தனிக் கட்டிடங்களிலும், டெண்ட்டுகளிலும் வாக்காளர்களை தினந்தோறும் அழைத்து வந்து கவனிக்கும் நடைமுறையையும் பரிசளிப்புத் திட்டத்தையும் இப்போது நிறுத்திவிட்டது சூரியத் தரப்பு. ஆனால் வாக்காளர்களோ தி.மு.க. கடைசி நேரத்தில் கவனிக்கும்னு எதிர்பார்ப்போடு இருக்காங்க.''”
"அதே சமயம் சாதி ரீதியாக எடப்பாடி ஓட்டு கேட்கும் கடிதம், அவர் சமூக மக்களுக்கு அனுப்பப்பட்டிருக்குதே?''”
"ஆமாங்க தலைவரே, தொகுதியில் இருக்கும் தனது சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு எடப்பாடி எழுதியதாக கடிதம் விநியோகிக்கப் பட்டிருக்கிறது. அதில் "இந்த தேர்த லில் கண்ணன் குலத்தை சேர்ந்த நமது பங்காளிகள் கழக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்கவும், தங்கள் உற்றார், உறவினர்கள், நண்பர்களும் வாக்களிக்க தாங்கள் உதவி செய்ய வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். கண்ணன் குலத்தில் நானும் ஒருவன் என்ற முறையிலும், கண்ணன் குலத்தைச் சேர்ந்த ஒருவர் மிகப்பெரிய ஒரு இயக்கத்தின் தலைமைப் பொறுப் பில் இருப்பதால் இந்த வெற்றி நம் கண்ணன் குலத்திற்கு பெருமை சேர்க்கும் என்பதைத் தெரிவித்துக்கொள் கிறேன்'’என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. சட்ட விரோதமாக இப்படி சாதி ரீதியில் இந்தக் கடிதம் விநியோகிக்கப்பட்டதை, பல தரப்பினரும் கடுமையாகக் கண்டித்தனர். இதைத் தொடர்ந்து எடப்பாடி, இப்படி ஒரு கடிதத்தையே எழுதவில்லை என்றும், அது எடப்பாடி பெயரில் போர்ஜரியாக அரசியல் எதிரிகள் தயாரித்த கடிதம் என்றும் மாஜி மந்திரி வைகைச்செல்வன் மறுத்திருக்கிறார்.''”
"நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டும்னு உச்சநீதி மன்றத்தில் தி.மு.க. அரசு புதிதாக ஒரு மனுவைத் தாக்கல் செய்திருக்கிறதே?''”
"தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வுக்கு விலக்களிக்கும் சட்ட மசோதாவை ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் ஏற்கனவே நிராகரித்துவிட்டது. இதே சட்ட மசோதாவை மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றி கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது தி.மு.க. அரசு. அதனை ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தார் கவர்னர். அந்த மசோதா மீது எந்த முடிவையும் எடுக்காமல் கிடப்பில் வைத்திருக்கிறார் குடியரசுத் தலைவர். இந்த நிலையில், மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயம் என்கிற மருத்துவ கவுன்சிலின் விதியை எதிர்த்து, தி.மு.க. அரசு ரிட் மனுவை தாக்கல் செய்திருந்தது. அந்த வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் தற்போது இப்படியொரு புதிய மனு தாக்கல் செய்யப்பட்டி ருக்கிறது.''”
"அந்த மனுவில் அப்படி என்ன சொல்லப் பட்டிருக்கிறது?''”
"நீட் தேர்வு கட்டாயம் என்பது அதிகார வரம்பு மீறலாகும். அதோடு அது அரசியல் சாசனத்தின் கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது. மருத்துவப் படிப்பில் மாநில அரசுக்கு உள்ள அதிகாரமும் உரிமையும் நீட் தேர்வால் பறிக்கப்பட்டுள்ளது. அதனால் நீட் தேர்வு கட்டாயம் என்கிற முந்தைய தீர்ப்பி லிருந்து தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டும் என்று புதிய மனுவில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. இந்த மனு மீதான விசாரணை விரைவில் வரவிருக்கிறது. வரும் கல்வியாண்டில் நீட் தேர்வுக்கு விலக்கு பெற்றுவிடுவோம் என்கிற நம்பிக்கையில் இருக்கும் தி.மு.க. அரசு. இருக்கிற வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்தியிருக்கிறது. இறுதியாக இப்போது இந்த சட்ட யுத்தத்தை மேற்கொண்டிருக்கிறது. இந்த நிலையில், தமிழகத்தில் மருத்துவக் கல்லூரிகளை நேரடியாகவும் பினாமியாகவும் நடத்தும் தி.மு.க. வி.ஐ.பி.க்களின் பட்டியலை சேகரித்து வருகிறதாம் ஒன்றிய அரசின் சுகாதார அமைச்சகம்.''”
"எடப்பாடி தரப்பைச் சேர்ந்த கே.பி.முனுசாமி தொடர்பான ஒரு ஆடியோ அண்மையில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்துச்சே?''”
"ஆமாங்க தலைவரே, ஓ.பி,.எஸ். தரப்பைச் சேர்ந்த கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் கடந்த சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் எம்.எல்.ஏ. சீட் கேட்டபோது, கே.பி.முனுசாமி ஒரு கோடி ரூபாய் கேட்டதாக ஒரு ஆடியோவை அண்மையில் வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தினார். இதை மழுப்பலாக கே.பி.முனுசாமியும் ஒப்புக்கொண்டுவிட்டார். இந்த கிருஷ்ணமூர்த்தி, ஓ.பி.எஸ்.ஸுக்கு மிக நெருக்கமானவர். சொல்லப்போனால் ஓ.பி.எஸ். தரப்பின் பணப் பரிவர்த்தனைகளைச் செய்துவரும் முக்கிய நபர்களில் இவரும் ஒருவராம். வில்லங்கப் பேர்வழியான கிருஷ்ணமூர்த்தி, ஏற்கனவே பங்காரு அடிகளாரின் மகனான அன்பழகனை மிரட்டி, லட்சக்கணக்கில் பணம் பறித்தவர் என்று அவர் தரப்பினரே சொல்கிறார்கள். எனினும் இந்த ஆடியோ வெளிவந்ததின் பின்னணியில், எடப்பாடி தரப்பிலேயே இருக்கும் வேலுமணி இருக்கிறார் என்கிறார்கள். கே.பி.முனுசாமி மீதான எரிச்சலில்தான் அவருக்கு எதிராக இந்த ஆடியோவை வேலுமணி ஏவிவிட்டாராம். இது எடப்பாடி தரப்பில் நிகழும் கோஷ்டி யுத்தத்தின் விளைவு என்கிறார்கள் எதிர்த்தரப்பினர்.''”
"நானும் ஆளுங்கட்சியைச் சேர்ந்த அடாவடி எம்.எல்.ஏ. ஒருவ ரைப் பற்றிய செய்தியைப் பகிர்ந்துக்கறேன். வணிக நிறுவனங்களுக்கு பெயர்பெற்ற சென்னையின் மையத் தொகுதியைச் சேர்ந்த அந்த ஆளும்கட்சி எம்.எல்.ஏ.வின் மாமுல் டார்ச்சர் எல்லை மீறிவிட்டதாகப் புகார்கள் கிளம்பியுள்ளன. மாமூல் வசூலிப்பதில் அவர் யாருக்கும் கருணையே காட்டுவதில்லையாம். ஜுவல்லரிகள் முதல் ஜவுளிக் கடைகள் வரை, அவர் பிக்ஸ் பண்ணிக் கேட்பதை பெரும்வியாபாரிகள் கொடுத்தே ஆகவேண்டுமாம். அதிலும் பண்டிகைக் காலங்கள் வந்து விட்டால், ஜவுளிக்கடைகள் தரப்பில் இருந்து மட்டும் குறைந்தபட்சம் 13 கோடி ரூபாய் வரை மாமூல் வசூலாகிவிடுகிறதாம். தன் தொகுதியில் இல்லீகல் விசயங்களை ஆசிர்வதிக்கும் அவர், கோடிக்கணக்கில் பணம் புரளும் 6 சீட்டாட்ட கிளப்புகளையும் மிரட்டி வாரந்தோறும் தலா 1 லட்சம் வீதம் மொய் வசூலிக்கிறார் என்கிறார்கள். அதேபோல் பிரபல ஓட்டல்களில் இரவு நேரங்களில் பப் நடத்தச் செய்தும் அந்த எம்.எல்.ஏ. கல்லா கட்டுகிறாராம். இதனால் ஏற்படும் சட்டம் ஒழுங்குப் பிரச்சனைகளைச் சமாளிக்க முடியாமல் காவல்துறையே கைபிசைந்து வருகிறது. மேலும், தொகுதியில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான சமுதாய நலக் கூடங்களை மேல் வாடகைக்கு விட்டும் அவர் வசூல் வேட்டை நடத்துகிறாராம். இவையெல்லாம் முதல்வர் கவனத்துக்கு போய்க்கொண்டிருக்கிறது.''’