மோடி தலைமையிலான ஒன்றிய அரசின் ஏற்றுமதி இறக்குமதிக் கொள்கையில் இருக்கும் முரண்பாடுகளால், ஜவுளி உற்பத்தித் துறையே முடங்கிப்போயிருக்கிறது. ஒருபக்கம் உள்நாட்டுத் தயாரிப்புகளையே பயன்படுத்த வேண்டும் என்று கூறிக்கொண்டு, உள்நாட்டில் தயாரிக்கப்படும் நூல்களை வெளிநாடு களுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதித்ததால், உள்நாட்டு ஜவுளி உற்பத்திக்குப் போதுமான நூல் கிடைக்காமல் விலை விண்ணைத் தாண்டுவதாக ஜவுளி உற்பத்தியாளர்கள் குமுறுகிறார்கள்.
அதிரடியான நூல் விலையேற்றத்தால், தென்காசி மாவட்டத்தின் ஜவுளித் தொழில் நகரமான சங்கரன்கோவில் மற்றும் அதைச் சுற்றியுள்ள, சுமார் 5000 விசைத்தறிகளைக் கொண்ட சிறு குறு விசைத்தறி நெசவுத் தொழிற்கூடங்கள் காலவரையறையின்றி மூடப்பட்டு விட்டன. இதனால் சுமார் 20 ஆயிரம் நெசவாளர் குடும்பங்களின் பிழைப்பு நூலிழையில் தொங்கிக் கொண்டிருக்கிறது. கொரோனாவால் பெருத்த அடி வாங்கியவர்கள், தற்போது ஒன்றிய அரசின் நூல் ஏற்றுமதிக் கொள்கையால் எழவே முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள
மோடி தலைமையிலான ஒன்றிய அரசின் ஏற்றுமதி இறக்குமதிக் கொள்கையில் இருக்கும் முரண்பாடுகளால், ஜவுளி உற்பத்தித் துறையே முடங்கிப்போயிருக்கிறது. ஒருபக்கம் உள்நாட்டுத் தயாரிப்புகளையே பயன்படுத்த வேண்டும் என்று கூறிக்கொண்டு, உள்நாட்டில் தயாரிக்கப்படும் நூல்களை வெளிநாடு களுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதித்ததால், உள்நாட்டு ஜவுளி உற்பத்திக்குப் போதுமான நூல் கிடைக்காமல் விலை விண்ணைத் தாண்டுவதாக ஜவுளி உற்பத்தியாளர்கள் குமுறுகிறார்கள்.
அதிரடியான நூல் விலையேற்றத்தால், தென்காசி மாவட்டத்தின் ஜவுளித் தொழில் நகரமான சங்கரன்கோவில் மற்றும் அதைச் சுற்றியுள்ள, சுமார் 5000 விசைத்தறிகளைக் கொண்ட சிறு குறு விசைத்தறி நெசவுத் தொழிற்கூடங்கள் காலவரையறையின்றி மூடப்பட்டு விட்டன. இதனால் சுமார் 20 ஆயிரம் நெசவாளர் குடும்பங்களின் பிழைப்பு நூலிழையில் தொங்கிக் கொண்டிருக்கிறது. கொரோனாவால் பெருத்த அடி வாங்கியவர்கள், தற்போது ஒன்றிய அரசின் நூல் ஏற்றுமதிக் கொள்கையால் எழவே முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
"உள்நாட்டு நூல் தயாரிப்புகளில், 60 கவுன்ட்ஸ் எனப்படும் நைஸ்ரக நூல்களே சங்கரன்கோவில் உட்பட தமிழகமெங்கும் உபயோகப்படுத்தப்படுகிறது. இதன்மூலம் தயாரிக்கப்படுகிற காட்டன் ஜவுளிகளின் விற்பனைச் சந்தையே வெளி மாநிலங்கள் தான். இதை நம்பி, சங்கரன்கோவில், ஈரோடு, குமாரபாளை யம், அருப்புக்கோட்டை, சேலம், எடப்பாடி உட்பட தமிழகம் முழுக்க உள்ள சுமார் 6 லட்சம் விசைத்தறிகளை, 30 லட்சம் தொழிலாளர்களின் குடும்பங்கள் நம்பியுள்ளன. 2021 ஆகஸ்ட் வரை, கட்டு ஒன்றுக்கு 1,455 ரூபாய் என்றிருந்த நூலின் விலை, தற்போது 64 சதவிகிதம் உயர்ந்து 2,385 ரூபாயை எட்டி யுள்ளதால் நெசவுத்தொழிலே தள்ளாட்டத்தில் உள்ளது.
அடுத்த நெருக்கடியாக, ஜவுளி ரகங்கள் மீதான ஜி.எஸ்.டி. விகிதம், 5 சதவிகிதத்திலிருந்து 12 சதவீதமாக உயர்த்துவதற்கான அறி விப்பை மத்திய அரசு வெளியிட் டது. அதை எதிர்த்து விசைத்தறி நெசவாளர்கள் கடும் போராட்டம் நடத்தினார்கள். எம்.பி. கனிமொழியும் பாராளுமன்றத்தில் இதுகுறித்து பேசியதில், ஜி.எஸ்.டி. உயர்வை மட்டும் தற்காலிகமாக நிறுத்திவைத்தது. அதேபோல், நூலுக்கு விதிக்கப்படும் ஜி.எஸ்.டி.யும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகிறது. எடுத்துக்காட்டாக, சங்கரன்கோவில் பகுதி நெசவாளர்கள், மாதம் 10 கோடி ரூபாய் அளவுக்கு கொள்முதல் செய்யும் நூலுக்கு ஜி.எஸ்.டி.யாக 50 லட்சம் ரூபாயும், நெசவுக்குப்பின் ஜவுளியாக மாதம் 20 கோடி ரூபாய் அளவிற்கு விற்பனைக்கு அனுப்பும்போது ஒரு கோடி ரூபாயும் ஜி.எஸ்.டி.யாகச் செலுத்த வேண்டியுள்ளது. இதேபோல் தமிழகம் முழுக்க மாதம் ஒன்றுக்கு சுமார் 225 கோடி ரூபாய்க்கு ஜி.எஸ்.டி. செலுத்த வேண்டியுள்ளது.
பஞ்சு வியாபாரிகள், புரோக்கர்கள் மற்றும் ஆலைகளும் சிண்டிகேட் அமைத்துக் கொண்டு பஞ்சைப் பதுக்கி செயற்கையான விலையேற்றத்தை ஏற்படுத்துவதால் மில்காரர்கள் இஷ்டத்திற்கு விலையை ஏற்றுகிறார்கள். அதே சமயம் மத்திய அரசின் நூல் ஏற்றுமதிக் கொள்கையால் உள்நாட் டில் பற்றாக்குறை ஏற்பட்டு விலையேறுகிறது. ஜவுளி யின் அடக்க விலையும் கூடுதலாகிறது. இதனால் உற்பத்தி முடக்கம், தொழில் நிறுத்தம் போன்ற நெருக்கடிகளுக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். விசைத்தறி நெசவாளர்களின் பாதிப்பையும், விலையையும் கட்டுப்படுத்தக்கோரி எம்.பி. கனி மொழி அண்மையில் நாடாளுமன்றத்தில் குரலெழுப்பியும், மத்திய அரசு முறையான நட வடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலை இப்படியே நீடிக்குமானால், ஜவுளி உற்பத்தி நசிந்து, தொழிலும் முடங்கிவிடும்'' என்கிறார்கள் நெசவாளர்கள்.
சங்கரன்கோவில் மாஸ்டர் வீவர்ஸ் அசோசி யேசன் செயலாளரும், தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப் பாளருமான சுப்பிரமணியன், "எங்களின் முதல் கோரிக்கை, நூல் ஏற்றுமதிக்கான அனு மதியை நிறுத்தணும். விசைத் தறி நெசவு உற்பத்தியில் ஜி.எஸ். டி.யாக பல கோடி வருமானம் அரசுக்குக் கிடைத்தாலும், எங் கள் நலனுக்காக மத்திய அரசு எவ்வித மானியமோ, நிதி உதவியோ செய்யவில்லை. பஞ்சு வியாபாரிகளின் பதுக்கலால் உயரும் நூல் விலையைக் கட்டுப்படுத்த, அரசு அதிகாரிகள், மில் காரர்கள், நூல் உபயோகிப்பாளர்களைக் கொண்ட நூல் விலை நிர்ணய முத்தரப்புக் குழுவை அமைக்க வேண்டும். அந்தக் குழுவின் ஆலோசனைப்படி செயல்பட்டால் கட்டுக்குள் கொண்டுவர முடியும். நெசவுத்தொழிலே எங்களின் சுவாச மூச்சு. இந்த போராட்டம், போகப் போக விசுவரூபமெடுக்கும்" என்கிறார் அழுத்தமான குரலில்.
சங்கரன்கோவிலின் கோமதி, முப்புடாதி உள்ளிட்ட நெசவாளர் பெண்களோ, "காலைல யிருந்து ராவு 9 மணி வரைக்கும் குறுக்கொடிய தறியில வேலை பாத்தா 350 ரூவா கூலி தாம்யா கெடைக்கும். எண்ணெய், காய்கறி, மஞ்ச மசாலா வெல எல்லாம் ஒன்னுக்குப் பத்தா ஏறிடுச்சி. எங்க கூலிக்கு காய்கறில்லாம் நெனைச்சுப் பாக்க முடியாது. நூல் விலை கூடிடுச்சின்னு தறி ஓட்டம் நின்னுபோயிடுச்சி. கையிலயிருக்கிற காசு இப்பவோ, அப்பவோன்னு இருக்கு. உடைச்சிச் சொல்றோம், 2 வேளை சாப்பாட்ட மூணு வேளைக்கு நெரத்தி சாப்புடுற நெலைக்கி வந்திட்டோம்யா'' கண் கலங் கிய அவர்களின் குரல் உடைந்திருந்தது. நகரின் பொருளாதாரம், விசைத்தறி ஜவுளி உற்பத்தியின் கூலியையே சார்ந்திருப்பதால், அசாதாரண நிலையிலிருக்கிறது சங்கரன்கோவில் நகரம்.