ராங்கால் உயிருடன் உள்ளார் பிரபாகரன் மனைவி! - துளிர்க்கும் ஈழத் தமிழர் நம்பிக்கை! பா.ஜ.க.வில் சாதி வெறி! அ.தி.மு.க. மாநாட்டுக்கு செக்!

ff

"ஹலோ தலைவரே, நாட்டின் 77ஆவது சுதந்திர தினம், தமிழகத்திலும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டிருக்கிறது.''’

"ஆமாம்பா, சென்னை தலைமைச் செயலகத்தில் கொடியேற்றிய முதல்வர் ஸ்டாலின், பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டி ருக்கிறாரே?''”

"உண்மைதாங்க தலைவரே, சுதந்திர தினத்தில் தலைமைச் செயலகத்தில் உள்ள கோட்டைக் கொத்தளத்தில் முதல்வர் ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றினார். இந்த விழாவில் பேசிய அவர், விடுதலைக்காகப் போராடிய தலைவர்களை நினைவுகூர்ந்துவிட்டு, சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்குதல், அரசுப் பள்ளிகளில் வழங்கப்படும் காலை சிற்றுண்டித் திட்டத்தை விரிவுபடுத்துதல், மூன்றாம் பாலினத் தவர்களின் நலனைப் பாதுகாத்தல் என்பது உள் ளிட்ட புதிய திட்டங்களை அறிவித்ததோடு, 2 ஆண்டுகால தி.மு.க. ஆட்சியில் தமிழகம் வளர்ச்சி அடைந்திருப்பதையும் விவரித்துவிட்டு, வளர்ச்சி என்றால் அது பொருளாதார வளர்ச்சி என்பது மட்டுமல்ல. சமூக வளர்ச்சியாகவும் இருக்கவேண் டும். அதுதான் திராவிட மாடல் வளர்ச்சி என்று பிரகடனம் செய்தார். அவரது எழுச்சி உரை இளைய தலைமுறையினரின் நாடி நரம்புகளை மீட்டும் வகையில் அமைந்திருந்தது.''”

"கவர்னர் ரவி, ராஜ்பவனில் நடக்கவிருந்த சுதந்திர தின விருந்தை திடீரென ஒத்தி வைத்து விட்டாரே?''”

"சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ல், ராஜ் பவனில் முக்கிய பிரமுகர்களுக்கு கவர்னர் தேனீர் விருந்தளிப்பது மரபாகும். அந்த வகையில் இந்த வருடமும் விருந்து அறிவிக்கப்பட்டது. நீட் தொடங்கி பல விசயத்திலும் முரண்டு பிடிக்கும் கவர்னருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த விருந்தைப் புறக்கணிப்பதாக, முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதனால், அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் என ஒட்டுமொத்த தி.மு.க. அரசும் அந்த விருந்தில் கலந்துகொள்ளாது என்பதோடு, தி.மு.க.வின் தோழமைக் கட்சிகளும் தேனீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்துவிட் டன. இதனால் திகைத்துப்போன கவர்னர், தன் சங்கடத்தை மறைத்துக்கொண்டு, சென்னையில் பெய்த மழையை, சப்பைக் காரண மாகக் காட்டி, விருந்தை ஒத்திவைப்பதாக அறி வித்துவிட்டார். இதனால் ஆகஸ்ட் 15-ல் பரபரப் பாகக் காணப்பட வேண் டிய ராஜ்பவன், வெ

"ஹலோ தலைவரே, நாட்டின் 77ஆவது சுதந்திர தினம், தமிழகத்திலும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டிருக்கிறது.''’

"ஆமாம்பா, சென்னை தலைமைச் செயலகத்தில் கொடியேற்றிய முதல்வர் ஸ்டாலின், பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டி ருக்கிறாரே?''”

"உண்மைதாங்க தலைவரே, சுதந்திர தினத்தில் தலைமைச் செயலகத்தில் உள்ள கோட்டைக் கொத்தளத்தில் முதல்வர் ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றினார். இந்த விழாவில் பேசிய அவர், விடுதலைக்காகப் போராடிய தலைவர்களை நினைவுகூர்ந்துவிட்டு, சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்குதல், அரசுப் பள்ளிகளில் வழங்கப்படும் காலை சிற்றுண்டித் திட்டத்தை விரிவுபடுத்துதல், மூன்றாம் பாலினத் தவர்களின் நலனைப் பாதுகாத்தல் என்பது உள் ளிட்ட புதிய திட்டங்களை அறிவித்ததோடு, 2 ஆண்டுகால தி.மு.க. ஆட்சியில் தமிழகம் வளர்ச்சி அடைந்திருப்பதையும் விவரித்துவிட்டு, வளர்ச்சி என்றால் அது பொருளாதார வளர்ச்சி என்பது மட்டுமல்ல. சமூக வளர்ச்சியாகவும் இருக்கவேண் டும். அதுதான் திராவிட மாடல் வளர்ச்சி என்று பிரகடனம் செய்தார். அவரது எழுச்சி உரை இளைய தலைமுறையினரின் நாடி நரம்புகளை மீட்டும் வகையில் அமைந்திருந்தது.''”

"கவர்னர் ரவி, ராஜ்பவனில் நடக்கவிருந்த சுதந்திர தின விருந்தை திடீரென ஒத்தி வைத்து விட்டாரே?''”

"சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ல், ராஜ் பவனில் முக்கிய பிரமுகர்களுக்கு கவர்னர் தேனீர் விருந்தளிப்பது மரபாகும். அந்த வகையில் இந்த வருடமும் விருந்து அறிவிக்கப்பட்டது. நீட் தொடங்கி பல விசயத்திலும் முரண்டு பிடிக்கும் கவர்னருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த விருந்தைப் புறக்கணிப்பதாக, முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதனால், அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் என ஒட்டுமொத்த தி.மு.க. அரசும் அந்த விருந்தில் கலந்துகொள்ளாது என்பதோடு, தி.மு.க.வின் தோழமைக் கட்சிகளும் தேனீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்துவிட் டன. இதனால் திகைத்துப்போன கவர்னர், தன் சங்கடத்தை மறைத்துக்கொண்டு, சென்னையில் பெய்த மழையை, சப்பைக் காரண மாகக் காட்டி, விருந்தை ஒத்திவைப்பதாக அறி வித்துவிட்டார். இதனால் ஆகஸ்ட் 15-ல் பரபரப் பாகக் காணப்பட வேண் டிய ராஜ்பவன், வெறிச் சோடிப் போய் மயான அமைதியில் மூழ்கி யது. இன்னொரு பக்கம் சுதந்திர தின மரபை ராஜ்பவன் கடைப் பிடிக்காததது, சர்ச்சையைக் கிளப்பி வருகிறது.''”

"சென்னை தேனாம்பேட்டையில விடுதலை சிறுத்தைகள் கட்சித் தொண்டர்கள் நடத்திய மணிவிழாவுல தொல் திருமாவளவன் உணர்ச்சி கரமா பேசியிருக்காரே''…”

rr

"ஆமாம்பா, இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லக்கண்ணு, கி.வீரமணி உள்ளிட்ட பலரும் விழாவுல கலந்துக்கிட்டு சிறப்பிச்சாங்க. அதுல திருமாவளவன் பேசும்போது, விடுதலை சிறுத்தைகள் ஆண்ட வம்சமல்ல. புத்தர் வழிவந்த ஞானவம்சம். நஞ்சைப் பரப்பும் சனாதன சக்திகளை நடுங்கவைக்கும் பெரியாரின் பேரப்பிள்ளைகள். அனைத்துத் தரப்பு மக்களையும் திரட்டி ஆட்சி பீடத்திலிருந்து சனாதனத்தை விரட்டியடிப்போம். இந்தியா வெல்லும்…. இந்தியா கூட்டணி வெல்லும்னு பேசி பா.ஜ.க. தரப்பை அதிரவெச்சிருக்கார்.''”

rr

"மதிவதனியின் சகோதரி தாருகா காணொலி பற்றி உங்களுக்கு ஏதாச்சும் கூடுதல் தகவல் கிடைச்சதா தலைவரே?''”

rr

"டென்மார்க்கில் வசித்துவரும் தாருகா ஹரித்தரன் திடீர்னு ஒரு காணொலியை வெளியிட்டிருக்கார். அதில கடந்த 2009-ஆம் ஆண்டு நடந்த இறுதிப்போரில் இறந்ததா நம்பப்படுற விடுதலைப் புலிகள் தலைவரின் மனைவியும் மகளுமான மதிவதனி, துவாரகா இருவரும் இலங்கை இராணுவமும் ஊடகங்களும் அறிவித்த படி இறக்கவில்லை என்றும் அவர்கள் உயிருடன் இருப்பதை அறியவந்ததாகவும், அவர்களை நேரில் சந்தித்துப் பேசியதோடு, அவர்களோடு சேர்ந்து உணவருந்தி வந்ததாகவும் தெரிவிச்சிருக்கார். சில மாதங்களுக்கு முன்புதான் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக பழ.நெடுமாறன் கூறியிருந்தார். இப்போது மதிவதனி, துவாரகா. இத்தகைய செய்திகளில் உண்மையிருந்தால் மகிழ்ச்சியடையும் முதல் இதயங்கள் தமிழர்களுடையதுதான். எது எப்படியிருந்தாலும் புகைப்பட ஆதாரங்களோ, வேறு திடமான ஆதாரங்களோ வெளியாகாதது இதுவும் மற்றுமொரு பரபரப்புச் செய்தியோ என்ற எண்ணத்தைத்தான் மக்களிடம் ஏற்படுத்தும்.''

"பா.ஜ.க.வில் சாதிவெறி தலைவிரித்தாடுவ தாகப் புகார் எழுந்திருக்கிறதே?''”

rr

"உண்மைதாங்க தலைவரே, இப்படி ஒரு அதிரடிப் புகாரை பா.ஜ.க.வுக்குள் எழுப்பியபடி மனம் நொந்து புலம்பிக்கொண்டிருப்பவர் சிட்டிங் ஒன்றிய அமைச்சரான எல்.முருகன் தான். இவரை தமிழக பா.ஜ.க. அலுவலகமான கமலாலயத்திற்குள் நுழையக்கூடாது என்றும், ஊடகங் களுக்குப் பேட்டி கொடுக்கக்கூடாது என்றும் பி.எல்.சந் தோஷ் மூலம் சாதிக் கண்ணோட்டத்தோடு அண்ணாமலை தடை விதித்திருக் கிறாராம். இதனால் மனம் கொதித்துப்போன முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனிடமும், புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியிடமும் ’"பா.ஜ.க. வில் என் நிலையைப் பார்த்தீர்களா?'’என்று ஆதங்கப்பட்டாராம்.''”

"அண்ணாமலை கரூரில் ஃபைனான்ஸ் நிறுவனம் நடத்துகிறாராமே?''”

"இது பற்றி விசாரித்தபோது, அண்ணாமலை யின் பவரோடு, அவர் மைத்துனரான சதீஷ் என்பவர், பள்ளப்பட்டி முஸ்லீம் பிரமுகர்கள் சிலரோடு சேர்ந்து கோடிக்கணக்கான ரூபாய் முதலீட்டுடன் அங்கே ஃபைனான்ஸ் நிறுவனம் நடத்துகிறாராம். அவரிடம் கடனுதவி பெற்றுத் தொழில் நடத்தும் தொழிலதிபர்களுக்கு வருமான வரித்துறையினரின் இடைஞ்சல் இருக்காது என்று உறுதி தரப்படுகிறதாம். அண்ணாமலை தன் அரசியல் பவரைக் காட்டி கரூர் அன்புநாதன், அமைச்சர் செந்தில் பாலாஜி, மாஜி மந்திரி எம்.ஆர்.விஜய பாஸ்கர் பாணியில், தன் மைத்துனர் மூலம் வட்டித் தொழிலை நடத்துவதாக, பா.ஜ.க. தரப்பிலேயே டாக் அடிபடுகிறது. குறைந்த காலத்திலேயே வட்டித் தொழிலில் வளர்ச்சிபெற்ற சதீஷ், அடுத்து சினிமா ஃபைனான்சியராகவும் மாற இருக்கிறாராம்.''

"பா.ஜ.க. அண்ணாமலை அப்செட்டில் இருக்கிறாராமே?''”

"அண்மையில் சென்னைக்கு வந்த ஒன்றிய அமைச்சரான அனுராக் தாக்கூர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் ஹாக்கிப் போட்டி பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டார். அவரை, பாத யாத்திரை நடத்தும் அண்ணாமலையை வாழ்த்த வரும்படி கட்சியினர் அழைத்தபோது வர மறுத்துவிட்டாராம். இதேபோல் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டபோதும், அவர் அண்ணாமலையை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ள வில்லையாம். இப்படி ஒன்றிய அமைச்சர்கள் பலரும் தன் நடைபயணத்தை உதாசீனம் செய்வது அண்ணாமலையை அப்செட்டாக்கியிருக்கிறதாம்.''”

"அமைச்சர் செந்தில்பாலாஜியின் தம்பி கைதானதாக இடையில் செய்தி கிளம்பி பரபரப்பை ஏற்படுத்துச்சே?''”

"அமலாக்கத்துறையின் கஸ்டடி விசாரணை முடிந்து, அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அவர் தம்பி அசோக் கேரளாவில் கைதானதாக விறுவிறு தகவல் கிளம்பியது. வெளிநாட்டுக்குத் தப்பிச்செல்லும் நோக்கத்தில் அவர், அங்குள்ள கொச்சி விமான நிலையம் வந்தபோது அவரை அமலாக்கத்துறை மடக்கியதாக, அவர்கள் தரப்பே செய்தியைக் கசிய விட்டதாம். தலைமறைவாக இருக்கும் அவரைக் கண்டறியவே, இப்படி ஒரு செய்தியைப் பரப்பி, எங்காவது சலனம் தெரிகிறதா என்று அவர்கள் கவனித்தார்களாம். இப்போது, அசோக்கின் மனைவி மற்றும் அவரது உறவினர்கள் தரப்பிற்கு நெருக்கடி கொடுத்தால், அசோக் வெளிப்படலாம் என்று அமலாக்கத்துறை நினைக்கிறதாம். எனினும் பூதாகரமாக கிளப்பப்பட்ட. செந்தில்பாலாஜி தொடர்பான சகல பரபரப்பும் கொஞ்சம் கொஞ்சமாக அடங்கிவிட்டது.''”

"மதுரையில் அ.தி.மு.க. மாநாடு நடத்தும் ஆகஸ்ட் 20ஆம் தேதியில் தி.மு.க. நீட் எதிர்ப்புப் போராட்டத்தை நடத்தப்போவதாக அறிவித்திருக் கிறதே?''”

rr

"நீட் தேர்வுக்கு எதிராகவும், நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க ஒன்றிய அரசை வலியுறுத்தியும், தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களி லும் தி.மு.க. சார்பில் உண்ணாவிரத போராட்டத் தை நடத்தவிருப்பதாக தி.மு.க. அறிவித்திருக்கிறது. தி.மு.க.வில் இருக்கும் இளைஞரணி, மருத்துவ அணி, மாணவர் அணி ஆகிய 3 அணிகளும் இந்த போராட்டத்தை முன்னெடுக்கின்றன. இப்படி ஒரு உண்ணாவிரத போராட்டம் நடத்துவது குறித்து உதயநிதியிடம் இரண்டு நாட்களுக்கு முன்பு விவா தித்துள்ளார் ஸ்டாலின். குறிப்பாக, நீட் தேர்வி னால் மூன்று நாட்களுக்கு முன்பு ஜெகதீஸ்வரன் என்ற மாணவர் தற்கொலை செய்துகொள்ள, அவரது மரணத்தை ஜீரணிக்க முடியாத சோகத் தில் அவர் தந்தை செல்வசேகரும் தற்கொலை செய்துகொண்டு, பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருக்கிறார். இவர்கள் உயிரிழந்ததை தொடர்ந்தே இந்த போராட்டத்தை நடத்தும் முடிவுக்கு தி.மு.க. வந்திருக்கிறது. ஆகஸ்ட் 20 ஆம் தேதியிலேயே இந்தப் போராட்டம் நடக்க விருப்பதால், அதேநாளில் நடக்கும் அ.தி.மு.க. மாநாட்டைப் பிசுபிசுத்துப் போக வைக்கும் அரசியலாகவே இது பார்க்கப்படுகிறது.''”

"ஓ.பி.எஸ்.ஸுக்கு எதிராக புதிய அஸ்திரம் ஒன்றை எடப்பாடி எடுக்கிறார் என்கிறார்களே?''

eps"தனக்கு எதிராக அரசியல் செய்துவரும் ஓ.பி.எஸ்.ஸை பலவிதத்திலும் போட்டுத் தாக்கி வருகிறார் எடப்பாடி. இந்த நிலையில், தேனி மாவட்டத்தில் ஓ.பி.எஸ்.ஸின் வாரிசுகள், அரசுக்குச் சொந்தமான இடங்களில் கிராவல் மண்ணை அள்ளி வருவதோடு, அவற்றுக்கு போலி பட்டா தயார் செய்து விற்றுவருவதாகத் தெரியவந்திருக்கிறதாம். ஏற்கனவே ஓ.பி.எஸ்.ஸின் சகோதரர் ராஜா, அவர் அணியைச் சேர்ந்த அன்னபிரகாஷ் ஆகியோர் இந்த விவகாரத்தில் சிக்கி கைதான நிலையில், தற்போது ஓ.பி.எஸ்.ஸின் வாரிசுகளின் இத்தகைய திருவிளை யாடல்களுக்கான ஆதாரங்களைத் திரட்டிவரும் எடப்பாடி, தங்கள் பொன்விழா மாநாட்டுக்குப் பிறகு, இதை பூதாகரமாக்கத் திட்ட மிட்டிருக்கிறாராம்.''”

"தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவராக இளங்கோவனை அக்கட்சி நியமிக்கவிருக்கிறது என்கிறார்களே?''”

"இப்போது சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவராக செல்வப்பெருந்தகை இருந்துவருகிறார். இதற்கிடையே ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் மூலம் எம்.எல்.ஏ.வாகி சட்டமன்றத்தில் நுழைந்திருக்கிறார், அக்கட்சியின் சீனியரான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன். இத்தனை நாளாய் rrஇளங்கோவன் உடல் நலிவுற்று இருந்ததால், செல்வப்பெருந்தகை தனது பதவியில் நிம்மதியாக இருந்தார். இப்போது இளங்கோவன் இயல்பான உடல்நிலைக்குத் திரும் பியதால், அவரை சட்டமன்றக் கட்சித் தலைவ ராக்க வேண்டும் என்று, அவரது ஆதரவாளர்கள் குரல் கொடுக்கிறார்கள். இதை அகில இந்திய காங் கிரஸும் ஏற்கும் மனநிலைக்கு வந்திருக்கிறதாம். இதனால் திகைத்துப்போன செல்வப்பெருந்தகை, தனது பதவி பறிபோகும் பட்சத்தில் தன்னை, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமிக்க வேண்டும் என்று டெல்லியிடம் முட்டி மோதிக்கொண்டிருக்கிறார்.''”

"நானும் ஒரு தகவலைப் பகிர்ந் துக்கறேன். நெல்லை சரக டிஐ.ஜி. பதவி காலியாக இருப்பதால்தான் நாங்குனேரியில் சாதிய வன்மம் தலை தூக்கியது என்கிற குற்றச்சாட்டை ஒரு தரப்பினர் எழுப்புகிறார்கள். காரணம், இங்கு டி.ஐ.ஜி.யாக இருந்த ராஜேந்திரன், கொஞ்ச நாட்களுக்கு முன்னர்தான் உளவுத்துறைக்கு மாற்றப்பட்டார். அந்த நிலையில்தான் நாங்குனேரியில் சாதி வன்மம் மாணவர்களிடையே மிக மோசமாக வெளிப் பட்டது. எனினும் காவல்துறை விரைந்து களமிறங்கி, இந்த விவகாரத்தில் தொடர்புடை யவர்களை அதிரடியாகக் கைது செய்திருக்கிறது. டி.ஐ.ஜி. பதவி நிரப்பப்பட்டிருந்தால் இந்த வேகமும் இன்னும் அதிகரித்திருக்கும் என்கிறார்கள்.''

nkn190823
இதையும் படியுங்கள்
Subscribe