கிராம சபைக்கு அதிகாரம்! நீட்டை ரத்து செய்ய புது வழி!

neet

நீட் தேர்வுக்கு விலக்களித்து தமிழக சட்டப்பேரவை நிறை வேற்றிய இரண்டாவது சட்ட மசோதாவையும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்காமல் கிடப்பிலேயே வைத்திருக்கிறார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. சமீபத்தில் டெல்லி சென்று பிரதமர் மோடியை ஆளுநர் சந்தித்தபோது, ’ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு முடிவு செய்வோம்” என்று பிரதமர் மோடி அறிவுறுத்தியதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

neet

அண்மையில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் அதற்கு முந்தைய ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் ஆளும் கட்சியான தி.மு.க., அசுர வெற்றியைப் பெற்றிருப்பதால் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நீட் தேர்வு விவகாரத்தில் ஒன்றிய அரசுக்கு அழுத்தம் தரமுடியும் என்கிற யோசனை ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மத்தியில் பரபரப்பாக விவாதிக்கப்படுகின்றன.

இதுகுறித்து பஞ்சாயத்துராஜ் சட்ட நுணுக்கங்களை அறிந்தவரும் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான சவுண்டையாவிடம் நாம் விவாதித்தப

நீட் தேர்வுக்கு விலக்களித்து தமிழக சட்டப்பேரவை நிறை வேற்றிய இரண்டாவது சட்ட மசோதாவையும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்காமல் கிடப்பிலேயே வைத்திருக்கிறார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. சமீபத்தில் டெல்லி சென்று பிரதமர் மோடியை ஆளுநர் சந்தித்தபோது, ’ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு முடிவு செய்வோம்” என்று பிரதமர் மோடி அறிவுறுத்தியதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

neet

அண்மையில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் அதற்கு முந்தைய ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் ஆளும் கட்சியான தி.மு.க., அசுர வெற்றியைப் பெற்றிருப்பதால் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நீட் தேர்வு விவகாரத்தில் ஒன்றிய அரசுக்கு அழுத்தம் தரமுடியும் என்கிற யோசனை ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மத்தியில் பரபரப்பாக விவாதிக்கப்படுகின்றன.

இதுகுறித்து பஞ்சாயத்துராஜ் சட்ட நுணுக்கங்களை அறிந்தவரும் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான சவுண்டையாவிடம் நாம் விவாதித்தபோது, "உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள கிராம சபைகளுக்கான அதி காரம் மிக வலிமை யானது என்பதை பஞ்சாயத்து ராஜ் சட்டம் அழுத்தமாகச் சொல்கிறது. நாடளுமன்ற -சட்டமன்றத் தீர்மானங்களுக்கு இணையான அதிகாரம் கிராம சபை தீர்மானத்திற்கு உண்டு.

கிராம சபையில், அந்தந்த கிராமத்தில் பதிவுபெற்ற வாக்காளர்கள்தான் உறுப்பினர்கள். அதில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள், பஞ்சாயத்துகளை மட்டுமல்ல; பல சட்ட மசோதாக்களைக்கூட திருத்தியிருக்கிறது. நீதிமன்றங்களும் சபையின் முடிவுகளை ஏற்றுத் தீர்ப்பளித்திருக்கின்றன.

விருதுநகர் மாவட்டம் வடமலாபுரம் கிராம பஞ்சாயத்தில் டாஸ்மாக் கடைகள் இல்லாததால் அந்த கிராமத்தில் டாஸ்மாக் கடை திறக்க டாஸ்மாக் நிர்வாகம் 2013-ல் முடிவு செய்தது. அதன்படி, கலெக்டரும் கிராமத்தில் ஆய்வு நடத்தி கடை திறக்க அனுமதி தரவே, கடை திறப்பதற்கான செயல்முறைகள் நடக்கின்றன. இந்த சூழலில், கிராம சபையில், ’எங்க கிராமத்தில் டாஸ்மாக் கடை திறக்கக் கூடாது’ என எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றி அதனை கலெக்டருக்கு அனுப்பி வைக்கிறது வடமலாபுரம் பஞ்சாயத்து. ஆனாலும் கடையைத் திறக்க உத்தரவிடுகிறார் கலெக்டர்.

neet

கிராம சபையின் தீர்மானத்தை மதிக்காத கலெக்டரின் உத்தரவை எதிர்த்து கவுன்சிலர் பால்ராஜ் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடுக்கிறார். வழக்கை ஏற்ற டிவிஷன் பெஞ்ச், கிராம சபையின் தீர்மானத்தை அரசு புறக்கணிக்கக்கூடாது எனச் சொல்லி, கலெக்டரின் உத்தரவை ரத்து செய்கிறது. அதனால் அங்கு டாஸ்மாக் கடை இப்போதுவரை திறக்கப்படவில்லை. தமிழக அரசு செய்த மேல்முறையீடு நிலுவையில் இருக்கிறது.

தமிழக அரசின் மதுவிலக்கு ஆயத்தீர்வை சட்டத்தில், மது பானங்களை இனி அரசே கொள்முதல் செய்து, சில்லறை விற்பனையையும் செய்யும் எனும் சட்டத் திருத்த மசோதாவை சட்டப்பேரவையில் 2003-ல் நிறைவேற்றுகிறார் ஜெயலலிதா. ஆக, ஒரு சட்டத்தின் படி இயங்கும் டாஸ்மாக் நிறுவனத்தின் முடிவுக்கு எதிராகவும் அரசின் கொள்கை முடிவுகளுக்கு எதிராகவும் கிராம சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஏற்று தீர்ப்பளிக்கிறது நீதிமன்றம். அந்தளவுக்கு கிராம சபைகளுக்கு அதிகாரம் இருக்கிறது.

neet

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகள் அனைத்துக்கும் தற்போது தேர்தல்கள் நடந்து முடிந்துவிட்டன. இதில் பெரும்பான்மை அமைப்புகள், ஆளும் கட்சியான தி.மு.க.விடம்தான் இருக்கின்றன. அதனால், தமிழகத்தில் உள்ள 12,524 கிராம சபைகளில் சுமார் 1 கோடிக்கும் அதிகமான பதிவு பெற்ற வாக்காளர்கள் இருப்பதால், நீட் தேர்வுக்கு விலக்களிக்கும் அரசின் சட்ட மசோதவை ஏற்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி ஜனாதிபதிக்கும், கவர்னருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

கிராம சபையின் தீர்மானம் ஜனாதிபதியை கட்டுப்படுத்தாது என்றாலும் கூட மக்களின் அதிகாரசபை தருகிற அழுத்தம், தி.மு.க. அரசு நிறைவேற்றிய சட்ட மசோதாவுக்கு வலிமை சேர்க்கும். அப்போது 1 கோடி மக்களின் உணர்வுகளுக்கு ஜனாதிபதி மதிப்பளிக்க வேண்டும். ஜல்லிக்கட்டுக்கான அனுமதியும் வேளாண் திருத்தச் சட்டங்கள் வாபஸும் மக்களின் உணர்வுமிக்க போராட்டத்தால்தான் நிகழ்ந்தன. ஒருவேளை கிராமசபை தீர்மானத்திற்கு ஜனாதிபதி மதிப்பளிக்காவிட்டாலும், அந்தத் தீர்மானத்தின் அடிப்படையில், பொதுநல வழக்கு தாக்கல் செய்யமுடியும். வழக்கின் தீர்ப்பில், நீட் ரத்து உத்தரவு வருவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. அதனால் வாய்ப்புகளை தி.மு.க. அரசு தவறவிடக்கூடாது''‘என்று விரிவாக சுட்டிக்காட்டுகிறார் சவுண்டையா ஐ.ஏ.எஸ். (ஓய்வு).

குடியரசு தினம், உழைப்பாளர் தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி ஆகிய 4 நாட்களில் கிராமசபை கூட்டம் நடத்தப்பட வேண்டும். தற்போது அருகில் வரவிருப்பது உழைப்பாளர் தினம் (மே-1). இதனை பயன்படுத்தி அனைத்து கிராமசபைகளிலும் நீட்டுக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றி ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க தி.மு.க. அரசு முன்முயற்சி எடுக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளிடம் இருக்கிறது.

nkn120322
இதையும் படியுங்கள்
Subscribe