வறுமை-பசி-வருமானம் இழப்பு! உழைப்பாளிகளை கொள்ளையர்களாக்கும் கொரோனா!

rr

ண்ணுக்குத் தெரியாமலிருந்து கொலை வேட்டையை நடுத்துகிற கொடூரக் கொரானாவிடமிருந்து உயிர் தப்பிக்க மனித குலம், கடும் அச்சத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது. அரசின் லாக்டவுன் மெல்ல தளர்த்தப்பட்டாலும் இயல்பு வாழ்க்கை முழுமையாக அமையவில்லை. மீட்டெடுக்க முடியாத நிலையில் இருக்கிறது நாட்டின் பொருளாதார மும் வீட்டின் நிலவரமும். அடித்தட்டு முதல் மேல் தட்டு மக்கள் என்று வர்க்க பேதமில்லாமல் அடிவாங்குவது அவலத்தின் உச்சம். ஆறுமாதங்கள் ஊரடங்கில் கழிந்து விட்ட நிலையில், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தென்மாவட்டத்தில் நடந்த தொடர் கொள்ளை சம்பவங்களின் எண்ணிக்கை ஒன்பது. இது ஒரு பதமாகத்தான் தெரிகிறது என்பது சமூக நல ஆர்வலர்களின் கருத்தாக இருக்கிறது.

r

பர்தா அணிந்து கொள்ளை

செப்-07 பட்டப்பகல் மதியம் ஒன்றரை மணிவாக்கில் தென்காசி நகரின் மையப்பகுதியிலுள்ள ஜன நடமாட்டமான மெயின் சாலை சிக்னல் பகுதியிலுள்ள மட்டப்பா தெருவின் பங்களா டைப்பான வீட்டின் முன்னே பல்சர் பைக்கில் ஹெல்மெட்டுடன் வந்தவரின் பின்னே பர்தா அணிந்தவரும் வந்திருக்கிறார். அந்த வீட்டின் காலிங் பெல்லை அழுத்தியிருக்கிறார் பர்தா போட்டவர். வீட்டிலிருந்து வந்த அந்தப் பெண்ணிடம், குடிப்பதற்குத் தண்ணீர் கேட்டிருக்கிறார். பைக்கில் வந்திருப்பவர், பர்தா அணிந்தவரின் கணவர் போலும் என நினைத்தபடி தண்ணீர் கொண்டு வருவதற்காக உள்ளே சென்றார் அந்தப் பெண்.

பின்னாலேயே சென்ற பர்தா போட்டவரும் ஹெல்மெட் ஆசாமியும் திடீரென அந்தப் பெண்ணை மடக்கிப் பிடித்து திமிற விடாமல் படுக்கையறைக்குக் கொண்டு வந்தவர்கள், அவளை மிரட்டியதோடு அருகில் கிடந்த வயர்களால் அவளின் கைகால்களைக் கட்டிப் போட்டிருக்கிறார்கள். பர்தா போட்டவர் பெண் அல்ல, ஆண் என்பது பிறகுதான் தெரிந்திருக்கிறது அந்தப் பெண்ணுக்கு. ஆனாலும் அவர்களின் கொலை மிரட்டலால், குலை பதறிய அந்தப் பெண்ணால் கத்த முடியவில்லை.

பிறகு அவளிடம், பணம் நகைகள் இருக்குமிடத்தை மிரட்டித் தெரிந்து கொண்டு, பீரோவ

ண்ணுக்குத் தெரியாமலிருந்து கொலை வேட்டையை நடுத்துகிற கொடூரக் கொரானாவிடமிருந்து உயிர் தப்பிக்க மனித குலம், கடும் அச்சத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது. அரசின் லாக்டவுன் மெல்ல தளர்த்தப்பட்டாலும் இயல்பு வாழ்க்கை முழுமையாக அமையவில்லை. மீட்டெடுக்க முடியாத நிலையில் இருக்கிறது நாட்டின் பொருளாதார மும் வீட்டின் நிலவரமும். அடித்தட்டு முதல் மேல் தட்டு மக்கள் என்று வர்க்க பேதமில்லாமல் அடிவாங்குவது அவலத்தின் உச்சம். ஆறுமாதங்கள் ஊரடங்கில் கழிந்து விட்ட நிலையில், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தென்மாவட்டத்தில் நடந்த தொடர் கொள்ளை சம்பவங்களின் எண்ணிக்கை ஒன்பது. இது ஒரு பதமாகத்தான் தெரிகிறது என்பது சமூக நல ஆர்வலர்களின் கருத்தாக இருக்கிறது.

r

பர்தா அணிந்து கொள்ளை

செப்-07 பட்டப்பகல் மதியம் ஒன்றரை மணிவாக்கில் தென்காசி நகரின் மையப்பகுதியிலுள்ள ஜன நடமாட்டமான மெயின் சாலை சிக்னல் பகுதியிலுள்ள மட்டப்பா தெருவின் பங்களா டைப்பான வீட்டின் முன்னே பல்சர் பைக்கில் ஹெல்மெட்டுடன் வந்தவரின் பின்னே பர்தா அணிந்தவரும் வந்திருக்கிறார். அந்த வீட்டின் காலிங் பெல்லை அழுத்தியிருக்கிறார் பர்தா போட்டவர். வீட்டிலிருந்து வந்த அந்தப் பெண்ணிடம், குடிப்பதற்குத் தண்ணீர் கேட்டிருக்கிறார். பைக்கில் வந்திருப்பவர், பர்தா அணிந்தவரின் கணவர் போலும் என நினைத்தபடி தண்ணீர் கொண்டு வருவதற்காக உள்ளே சென்றார் அந்தப் பெண்.

பின்னாலேயே சென்ற பர்தா போட்டவரும் ஹெல்மெட் ஆசாமியும் திடீரென அந்தப் பெண்ணை மடக்கிப் பிடித்து திமிற விடாமல் படுக்கையறைக்குக் கொண்டு வந்தவர்கள், அவளை மிரட்டியதோடு அருகில் கிடந்த வயர்களால் அவளின் கைகால்களைக் கட்டிப் போட்டிருக்கிறார்கள். பர்தா போட்டவர் பெண் அல்ல, ஆண் என்பது பிறகுதான் தெரிந்திருக்கிறது அந்தப் பெண்ணுக்கு. ஆனாலும் அவர்களின் கொலை மிரட்டலால், குலை பதறிய அந்தப் பெண்ணால் கத்த முடியவில்லை.

பிறகு அவளிடம், பணம் நகைகள் இருக்குமிடத்தை மிரட்டித் தெரிந்து கொண்டு, பீரோவின் கப்போர்டைத் திறந்து 100 பவுனுக்கும் மேற்பட்ட தங்க நகைகள் ஐம்பதாயிரம் ரொக்கம் மொத்தத்தையும் அள்ளியவர்கள் போகும் போது அவள் கத்திக் கூச்சல் போடாமலிருப்பதற்காக அவளது வாயில் அழுத்தமான டேப்பை ஒட்டி விட்டு எஸ்கேப் ஆனார்கள். கத்த முடியாமல் போன அந்தப் பெண்ணோ பணமும், நகைகளும் கொள்ளை போன வேதனையில், மெள்ள மெள்ள உருண்டபடியே வாசல் பக்கம் வந்திருக்கிறார். போராடிக் கொண்டிருந்த வரைத் தற்செயலாகப் பார்த்த அண்டை வீட்டுக்காரர் பதறிப் போய் ஊரைக் கூட்டியிருக்கிறார்.

rr

அந்தப் பெண்ணை மீட்டு விசாரித்த பிறகே பட்டப் பகல் கொள்ளை தெரியவந்து ஆடிப்போனார்கள். மக்கள் கொடுத்த தகவலால் ஸ்பாட்டுக்கு டீமுடன் வந்த தென்காசி டி.எஸ்.பி.யான கோகுலகிருஷ்ணனின் பார்வைக்குப் பிறகே, நடந்தது மிகப் பெரிய பகல் கொள்ளை என தெரியவர... காக்கிச் சட்டைகள் விதிர் விதிர்த்துப் போனார்கள்.

கொள்ளை நடந்த பங்களாவின் ஓனரான தொழிலதிபர் ஜெயபாலன் வெளி நாட்டு மரத்தடிகளை இறக்குமதி செய்து தன்னுடைய மர அறுவைமில்களான தென்காசி, கோவில்பட்டி காஞ்சிபுரத்திலிருக்கும் மில்களில் அறுத்து மொத்த வியாபாரப் பிசினசிலிருக்கும் பிசியான பசையுள்ள புள்ளி. அடிக்கடி தொழில் நிமித்தம் ஜெயபாலனும் அவரது மகனும் தங்களின் வெளியூர் மில்களுக்குச் செல்பவர்கள் இரண்டு நாட்களுக்குப் பின்புதான் திரும்புவார்கள். அது சமயம் வீட்டில் அவரது மனைவி விஜயலட்சுமி மட்டுமே தனியாக இருப்பார்.

சம்பவத்தன்றும் ஜெயபாலனும் அவரது மகனும் சென்னை கிளம்பிப் போயிருக்கிறார்கள். விவரம் அறிந்து, பகல் நேரத்தில் பர்தா மாறுவேடத்தில் பல்சர் பைக்கில் வந்த கொள்ளையர்கள் விஜயலட்சுமியை மடக்கி நகைகள், பணத்தைக் கொள்ளளையடித்திருக்கிறார்கள்.

இது தொடர்பான புலன் விசாரணைக்காக அமைக்கப்பட்ட எஸ்.ஐ.டி. அதிகாரியிடம் பேசியதில், ""கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள், ரொக்கத்தின் மொத்த மதிப்பு மட்டும் 35 லட்சத்துககு மேல் இருக்கும். தென் மாவட்டத்தில் நடந்த மிகப் பெரிய பட்டப் பகல் டெக்காயிட்டி இது. அந்த வீட்டில் பகல் நேரத்திற்கு வாட்ச்மேன் கிடையாது. இரவில் மட்டுமே வாட்ச்மேன் காவல். வீட்டில் ஒரு சி.சி.டி.வி.கூட வைக்கவில்லை. வீட்டு நிலவரத்தை துல்லியமாக கவனித்து திருடியிருக்க வேண்டும். வீடு வந்து போனவர்கள். அல்லது ஜெயபாலனுடன் பழகியவர் கள், அவர்களைப் பற்றி அறிந்தவர்களுக்கு மட்டுமே தெரிந்த விஷயம். இதையும் தாண்டித்தான் கொள்ளையன் பல நாட்கள் கண்காணிப்பிற்குப் பிறகே நடத்தியிருக்க வேண்டும்.

rr

மேலும் கொள்ளையர்கள் தங்கள் பற்றிய தடயங்கள் எதையும் விட்டுச் செல்லவில்லை. தவிர, கத்தாமலிருக்க, விஜயலட்சுமியின் வாயில் அழுத்தமான டேப்பை ஒட்டி விட்டுத் தப்பியது தென் பக்கம் நடந்த கொள்ளையடிப்பில் காணப் படாத புதுமையான டெக்னிக்காகவே தெரிகிறது. எனவே சவாலான கேஸ்தான் இது'' என்கின்றனர்.

குற்றப் புலனாய்வில் திறமையான அதிகாரியோ, டேப் ஒட்டிவிட்டு கொள்ளையடிக்கும் டெக்னிக் கொண்டது. இந்தப் பக்கம் இல்லா விட்டாலும், பக்கத்திலுள்ள கேரளாவில் இந்த டைப் கொள்ளைகள் நடப்ப துண்டு. தி.மு.க.வின் திருச்சி கே.என்.நேருவின் சகோதரன் கே.என். ராமஜெயம் கொலை செய்யப்பட்ட நேரத் தில்கூட அவரது வாயில் டேப் ஒட்டப்பட்ட நிலையில்தான் உடல் கிடந்திருக்கிறது. அதன் பிறகு இந்தக் கொள்ளையில் டேப் ஒட்டப்பட்டது இப் போது இந்தப் பக்கம் நடந்திருக்கிறது.

கேரளாவில் நடந்த முக்கியமான, பெரிய கொள்ளைகள், வங்கிக் கொள்ளையடிப்பு சம்பவத்தில் ஈடுபடும் தேர்ச்சியான கொள்ளையர்கள், கொலைவரை போக மாட்டார்கள். கொள்ளைடித்துவிட்டுக் கிளம்பும் போது, கத்திக் கூச்சலிட்டுத் தங்களைக் காட்டிக் கொடுக்காமலிருக்க, வாயில் ஒரு சிறிய எலுமிச்சைப் பழத்தைப் போட்டு டேப் ஒட்டி விடுவதால் அவர்களால் சப்தமிட முடியாது. அப்படியே கத்த முயற்சித்தாலும் வாயில் போட்டிருக்கும் எலுமிச்சைப் பழம் தடையாய் இருக்கும். அதையும் மீறி கத்திக் கூக்குரலிட முயன்றால் வாயிலுள்ள எலுமிச்சை பழம் தொண்டைக் குழியில் இறங்கி மூச்சுத் திணறலாகி மரணத்தை ஏற்படுத்தி விடும். இந்த முறையால் கொள்ளையர்கள் வெகு தொலைவிற்குத் தப்பிச் சென்றுவிடுவார்கள்.

இதுபோன்ற டைப் கொள்ளைகள் கேரளாவின் பாலக்காடு, கொல்லம், திருச்சூர் ஏரியாக்களில் நடப்பவை என்கிறார்கள் பணி ஓய்வுக் குற்றப் புலனாய்வினர். டெக்னிக்கலாக நடத்தப்பட்ட இந்தப் பெரிய கொள்ளைச் சம்பவம் தென் மாவட்டத்தில் அதிர்வலைகளைக் கிளம்பியுள்ளது.

கொள்ளையனாக்கும் வறுமை

தென்காசியில் நடந்த இந்தக் கொள்ளைச் சம்பவத்தின் மறுநாள் காலை தென்காசி அருகேயுள்ள இலஞ்சிப் பகுதியிலுள்ள ஒரு ஏ.டி.எம் உடைக்கப் பட்டுக் கொள்ளை முயற்சி நடந்திருக்கிறது. அந்த ஏ.டி.எம் மெஷின் தொழில்நுட்ப வடிவம் கொண்டதால், அதனை உடைக்க முடியாமல் போக பல லட்சம் ரூபாய் தப்பியது. நகரின் அடுத்த இரண்டாவது கொள்ளை முயற்சி என்பதால், பரபரவென செயல்பட்ட போலீசார், கிடைத்த தகவலால், இலஞ்சியின் பட்டமுத்து என்ற வாலிபரைத் தூக்கியிருக்கிறார்கள்.

""ஆட்டோ ஓட்டிப் பிழைக்கும் தனக்கு, லாக்டவுண் நேரத்தில ஆட்டோவும் ஓடல. தொழிலும் போச்சு. குடும்பத்தையும் ஓட்ட முடியல, சோத்துக்கே திண்டாட்டம். வறுமை, கடன் தொல்லையால் திருட முயன்ற நான், ஏ.டி.எம்.மை உடைச்சேன்... முடியல'' என்றிருக் கிறார் பிடிபட்ட ஆட்டோ டிரைவரான பட்டமுத்து.

இதே மாவட்டத்தின் கடையம் பக்கம் உள்ள சிவசைலம் பகுதியில் மைக் செட் உரிமையாளரான ஜெயபால் சவுண்ட் சர்வீஸ் நடத்தி வருகிறார். செப் 12 அன்று ஜெயபாலும் தொழிலுக்காகச் சென்று விட, அவரது மனைவி ராதா குடும்பத்துடன் கோவிலுக்குப் போன சமயம், வீட்டின் பூட்டை உடைத்தும் பீரோவின் பூட்டையும் நொறுக்கி 87 கிராம் நகைகளைக் கொள்ளையடித்துப் போயிருக்கிறார்கள். பட்டப்பகல் அரைமணி நேரச் சம்பவத்தில் நடத்தப்பட்ட இந்தக் கொள்ளையின் மதிப்பு மூன்றரை லட்சம் என்கிறார்கள் கடையம் போலீசார்.

தூத்துக்குடி மாவட்டத்தின் சாத்தன்குளம் நகரின் பஜாரிலுள்ள அய்யாக்குட்டி என்பவரின் ஹோட்டல், ராஜசேகரின் பேன்சி கடை, அடுத்து தேவாலயம் அருகிலுள்ள ஜெகதீசன் கடை என்று செப்-10 அன்று ஒரே நாள் இரவில் மூன்று கடைகளி லும் பணம் கொள்ளை யடிக்கப்பட்டுள்ளது. சிக்கிய பாளை திம்மராஜபுரத்தின் கார்த்தீசனோ, குடும்ப வறுமை, வேலையில் லை. அதனால், ஒற்றை ஆளாக கொள்ளைக்கு வந்ததை சாத்தான்குளம் போலீசாரிடம் தெரிவித் திருக்கிறான்.

பட்டப்பகலில் நகை பறிப்புகள்

நெல்லை மாவட்டத்தின் நாங்குநேரியின் சன்னதி தெருவில் செப் 13 அன்று காலையில் கோலம் போட்டுக்கொண்டிருந்த பெண்ணிடம், பைக்கில் வந்த மர்ம நபர்கள் அவளது கழுத்து நகையை பறித்துச் சென்றுள்ளனர். அன்றைய தினத்திலேயே பக்கமுள்ள களக்காட்டின் அ.ம.மு.க. பிரமுகரின் தாயின் கழுத்துச் செயின் 7 பவுனும் கொள்ளையர்களால் அறுக்கப்பட்டுள்ளது. நாங்குநேரியின் சரவணனும் அவரது மனைவி லட்சுமியும் சென்ற பைக்கை மூலக்கரைப்பட்டியில் வழிமறித்த 2 பேர், லட்சுமியின் செயின் மற்றும் தாலிச் செயினயும் பறித்துச் சென்றுள்ளனர். கொள்ளையர்களுக்கும் சரவணனுக்கும் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவால் அவரது மனைவிக்கு காயமும் ஏற்பட்டிருக்கிறது. ஒரே நாளில் நடந்த இந்தப் பகல் கொள்ளையால், பீதியிலிருக்கிறது நாங்குநேரி வட்டாரம்.

இது குறித்து நாம் எஸ்.பி. சுகுணாசிங்கிடம் பேசிய போது, ""மூன்று தனிப்படைகளை அமைத்து குற்றவாளிகளைப் பிடிக்கவும், பொருட்களை மீட்பதற்காகவும் நடவடிக்கைகள், விசாரணைகள் வேகப்படுத்தப்பட்டுள்ளன. கேரளாவின் கொல்லம் நகர எஸ்.பி.யையும் தொடர்பு கொண்டு பேசப்பட்டுள்ளது. எப்படியும் குற்றவாளிகளைப் பிடித்துவிடுவோம்'' என்கிறார்.

லாக்டவுண் கால முடக்கத்தால் மக்களின் வாழ்வியல், பொருளாதாரம் மீட்டெடுக்கமுடியாத சரிவிற்குப் போய்விட்டது. வேலை வாய்ப்பின்மை, வறுமை, குடும்பச் சூழல் போன்ற காரணிகளே, அடுத்த கட்ட கொள்ளைச் சம்பவத்திற்கு நகர்த்தியிருப்பது விபரீதத்திற்கான வழிவகுத்தலே. மக்களின் ஜீவாதாரமோ அரசை நம்பியுள்ளது.

யாரைச் சொல்லியும் குற்றமில்லை.

கொரோனா காலம் செய்த கோலமிது.

-பரமசிவன்

படங்கள் : ப.இராம்குமார்

nkn230920
இதையும் படியுங்கள்
Subscribe