“நீலகிரி மலையில்... அதுவும் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் நடந்த கொலை- கொள்ளை எடப்பாடிக்காக நடத்தப்பட் டது. ""எடப்பாடி சம்பந்தமான முக்கிய ஆவணங்களை எடுக்கப் போனோம். எதிர்பாராத விதமாக ஓம் பகதூர் என்கிற காவலாளியை கொலை செய்து விட்டோம்'' என பொது வெளியில் வாக்கு மூலம் கொடுத்தார்கள் வழக்கின் குற்றவாளிகளான சயானும், மனோஜூம்.
அதே நேரத்தில், கொடநாடு பங்களாவைப் பற்றி அறிந்த ஒருவனால் மட்டுமே இந்த கொள்ளை திட்டத்தை வகுத்து இருக்க முடியும். அந்த ஒரு நபர் சஜீவன்... என நக்கீரன் சொல்லி வந்தது. அதை தற்போது வழி மொழிந்த சயானும், மனோஜூம், ""இந்த கொலை- கொள்ளை வழக்கில் மிக முக்கியமானவன் சஜீவன்தான். அவன் எந்த விதத்தில் முக்கியப்படுகிறான் என்பதை மீடியாக்களிடம் சொல்லுவோம்...'' என இரு வரும் சொன்னதை அடுத்து மீடியா
“நீலகிரி மலையில்... அதுவும் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் நடந்த கொலை- கொள்ளை எடப்பாடிக்காக நடத்தப்பட் டது. ""எடப்பாடி சம்பந்தமான முக்கிய ஆவணங்களை எடுக்கப் போனோம். எதிர்பாராத விதமாக ஓம் பகதூர் என்கிற காவலாளியை கொலை செய்து விட்டோம்'' என பொது வெளியில் வாக்கு மூலம் கொடுத்தார்கள் வழக்கின் குற்றவாளிகளான சயானும், மனோஜூம்.
அதே நேரத்தில், கொடநாடு பங்களாவைப் பற்றி அறிந்த ஒருவனால் மட்டுமே இந்த கொள்ளை திட்டத்தை வகுத்து இருக்க முடியும். அந்த ஒரு நபர் சஜீவன்... என நக்கீரன் சொல்லி வந்தது. அதை தற்போது வழி மொழிந்த சயானும், மனோஜூம், ""இந்த கொலை- கொள்ளை வழக்கில் மிக முக்கியமானவன் சஜீவன்தான். அவன் எந்த விதத்தில் முக்கியப்படுகிறான் என்பதை மீடியாக்களிடம் சொல்லுவோம்...'' என இரு வரும் சொன்னதை அடுத்து மீடியாக்களிடம் பேசக் கூடாது என ஊட்டி நீதி மன்றம் உத்தரவிட்டது.
எங்கே தன்னைப் பற்றி சொல்லி விடுவார்களோ? என பயத்தில் இருந்த சஜீவனை உற்சாகம் ஊட்டும் விதமாக... அ.ம.மு.க.வில் இருந்து சஜீவனை வரவழைத்து, அ.தி.மு.க.வின் மாநில வர்த்தக அணியின் செயலாளராக போஸ்டிங் கொடுத்திருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி. அதோடு நீலகிரி மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் பதவியும் சஜீவனுக்கு வழங்கி இருக்கிறார்.
அவ்வளவுதான்... நீலகிரி அ.தி.மு.க.வில் தினந்தோறும் தலைமையைக் கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் நடக் கின்றன.
"கொட நாடு கொலை; கொள்ளை, மரக்கடத்தல் செய்யும் சஜீவனை கட்சியில் இருந்து நீக்க வேண்டும். சஜீவனை கட்சியில் இருந்து நீக்கும் வரை போராட்டம் தொடரும். கட்சியின் சீனியர்கள் யாருக்கும் பதவி கொடுக்கவில்லை. குன்னூர் எம்.எல்.ஏ சாந்தி ராமு கட்சியினரை மதிப்பதில்லை. சஜீவனுடன் சேர்ந்து போடும் ஆட்டம் சொல்லிமாளாது என கட்சியின் சீனியர்களான மாயன், பாரதியார் ஆகியோர் தலைமையில் கோத்தகிரி எம்.ஜி. ஆர் சிலை முன்பு கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இது ஒரு புறமிருக்க... "நகராட்சியில் நடக்கும் எல்லா விதமான டெண்டர்களையும் ‘நான் சொல்லும் எனது ஆட்களின் பெயரில்தான் கொடுக்க வேண்டும்'’ என சஜீவன் தலையிடுகிறார். இப்போது தனது வலது கையாக இருக்கும் கூடலூர் அனூப்தான் டெண்டர் விஷயங்களை பார்த்துக் கொள்கிறாராம்.
இந்த அனூப் அ.ம.மு.க. வில் நகரச் செயலாராக இருந்து, இப்போது சஜீவனைப் போலவே அ.தி.மு.க.வுக்குள் கொண்டு வரப்பட்டு நகர செயலாளராக போஸ்டிங் போடப்பட்டு இருக்கிறது என்கிறார்கள் அதிமுகவினர்.
டெண்டர் விஷயங்களில் சஜீவன் தலையிடுகிறாரா? என கூடலூர் நகராட்சி கமிஷனர் பாஸ்கர் அவர்களிடம் கேட் டோம். ""இல்லைங்க சார். யாராவது, எதையாவது சொல் லிட்டேதான் இருப்பாங்க. சஜீவன் சாருக்கு போஸ்டிங் போட்டிருக்காங்க. அதுக்காக ஒரு மரியாதை நிமித்தத்திற்காக நகராட்சியின் அனைத்து அதிகாரிகளும் அவரைப் போய் சந்தித்தோம். அவ்வளவுதான்...'' என மறுத்தார்.
அதே நகராட்சியில் பணிபுரிபவர்களோ நம்மிடம்... ""ஆமாம் சார். நீங்க சொல்றது உண்மைதான். கூடலூர் டவுன் பிள்ளையார் கோவில் தெருவுல இருந்து சஜீவனோட மர ஆலைக்கு போற ரோட்டை போடறாங்க. கமிஷனர் பாஸ்கரே முன்னால நின்னு, அ.தி.மு.க. ஒன்றியச் செயலாளர் மாதிரி வேலை செய்யறாரு. கூடலூர்ல பெய்த மழை வெள்ளத்துல எத்தனையோ ரோடு கள் குண்டும், குழியுமா கெடக்குது. பொது மக்கள் ரோடு போடச் சொன்னாலும் கேட் காத இந்த கமிஷனர்... சஜீவன் பேச்சுக்கு பாம் பாய் நெளியிறாரு...'' என்கின்றனர் உண்மையாய். கூடலூர் நகராட்சியில் உள்ள அனைத்துக் கட்சி ஒப்பந்ததாரர்களும் கூட்டம் போட்டனர். டெண்டர் விடுவதை வெளிப்படையா அறிவிக்கணும். மறைமுகமாக நடத்துறதை நிறுத்தணும். டெண்டர் விடுதலில் ஏகப்பட்ட ஊழல் நடந்திருக்கிறது... என அறிவிப்பு செய்தனர். இதே போல நெல்லியாளம் நகராட்சியிலும் சஜீவனுக்கு நெருக்கமான குமார் என்பவருக்கு மட்டுமே வேலைகள் கொடுக்கப்படுகின்றன... என புகார் வாசிக்கிறார்கள் பழைய ஒப்பந்ததாரர்கள்.
பூனைக்குட்டி வெளியே வந்த கதையாக, கொடநாடு விவகாரத்தில் எடப்பாடியால் பொத்திப் பொத்தி வைக்கப்பட்ட பூனைக் குட்டியான சஜீவன் வெளியே வந்திருக்கிறார். அந்தப் பூனை, யானையைப் போல பெரிதாகவும், நீலகிரி மலை முழுக்க விரவியிருக்கிற பனி போலும் படர்ந்தும் கொண்டிருக்கிறது.
-அ.அருள்குமார்