ராங்கால் பொதுச்செயலாளர் பதவி! எடப்பாடியை நடுங்க வைக்கும் நபர்! ஈஷா நடத்தும் பண டீலிங் சிவராத்திரி!

sss

""ஹலோ தலைவரே, ஒன்றிய பா.ஜ.க., மாநில அரசுகளுக்கு எதிராக ஏதேச்சதிகாரப் போக்கில் நடந்துவருகிறது?''’’

""ஆமாம்பா, கல்வி விவகாரத்தில் அது பகிரங்கமாகவே தமிழக அரசை மிரட்டுகிறதே?''’’

""உண்மைதாங்க தலைவரே, புதிய தேசிய கல்விக் கொள்கைத் திட்டத்தை வைத்து நம் தமிழக அர சோடு மோதிவருகிறது ஒன்றிய அரசு. புதிய கல்விக் கொள்கையை ஏற்கும்வரை தமிழக அரசுக்கு தரவேண் டிய சுமார் 2000 கோடியைத் தரமாட்டோம் என்று அண்மையில் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திரபிரதான் பகிரங்கமாகவே தமிழக அரசுக்கு மிரட்டல் விடுத்த தால், தமிழக மக்கள் கொதிப்பில் இருக்கிறார்கள். இதுகுறித்து, முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடிக்குக் கடிதமும் எழுதியிருக்கிறார். அதோடு, கடலூர் மாவட் டத்தில், ’பெற்றோரை கொண்டாடுவோம்’ என்கிற தலைப்பிலான மாநாட்டில் கலந்துகொண்ட ஸ்டா லின், ’புதிய கல்விக் கொள்கையை ஏற்று கையெழுத்துப் போட்டால், 10 ஆயிரம் கோடி கிடைக்கும் எனச் சொன்னாலும் நாங்கள் கையெழுத்துப் போட மாட்டோம்’ என்று, ஒன்றிய அரசை நோக்கி சூளுரைத்திருக்கிறார். இதனை நோட்பண்ணி, முதல்வரின் ஆடியோ -வீடியோவை டெல்லிக்கு அனுப்பி வைத்திருக்கிறது ஒன்றிய உளவுத்துறை.''’’

""மாநில அரசுகளின் அதிகாரத்தைப் பறிக்கும் செயலிலும் ஒன்றிய அரசு இறங்கியிருக்கிறதே?''’’

""ஆமாங்க தலைவரே, தேசியக் கல்வி விவகாரத் தில் தி.மு.க. அரசுக்கு எதிராக வரிந்துகட்டும் ஒன்றிய அரசு, தமிழக அரசு உள்ளிட்ட, மாநில அரசுகளின் அதிகாரத்தைப் பறிக்கும் அடுத்த பாய்ச்சலையும் நடத்தியிருக்கிறது. அதாவது, மாநிலங்களில் மத்திய அரசின் கல்விக்கூடங்களான சி.பி.எஸ்.சி. பள்ளிக்கூடங் கள் தொடங்கப்பட வேண்டுமானால், சம்பந்தப்பட்ட மாநில அரசின் தடையில்லாச் சான்றிதழை உரியவர் கள் பெற்றாக வேண்டும். ம

""ஹலோ தலைவரே, ஒன்றிய பா.ஜ.க., மாநில அரசுகளுக்கு எதிராக ஏதேச்சதிகாரப் போக்கில் நடந்துவருகிறது?''’’

""ஆமாம்பா, கல்வி விவகாரத்தில் அது பகிரங்கமாகவே தமிழக அரசை மிரட்டுகிறதே?''’’

""உண்மைதாங்க தலைவரே, புதிய தேசிய கல்விக் கொள்கைத் திட்டத்தை வைத்து நம் தமிழக அர சோடு மோதிவருகிறது ஒன்றிய அரசு. புதிய கல்விக் கொள்கையை ஏற்கும்வரை தமிழக அரசுக்கு தரவேண் டிய சுமார் 2000 கோடியைத் தரமாட்டோம் என்று அண்மையில் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திரபிரதான் பகிரங்கமாகவே தமிழக அரசுக்கு மிரட்டல் விடுத்த தால், தமிழக மக்கள் கொதிப்பில் இருக்கிறார்கள். இதுகுறித்து, முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடிக்குக் கடிதமும் எழுதியிருக்கிறார். அதோடு, கடலூர் மாவட் டத்தில், ’பெற்றோரை கொண்டாடுவோம்’ என்கிற தலைப்பிலான மாநாட்டில் கலந்துகொண்ட ஸ்டா லின், ’புதிய கல்விக் கொள்கையை ஏற்று கையெழுத்துப் போட்டால், 10 ஆயிரம் கோடி கிடைக்கும் எனச் சொன்னாலும் நாங்கள் கையெழுத்துப் போட மாட்டோம்’ என்று, ஒன்றிய அரசை நோக்கி சூளுரைத்திருக்கிறார். இதனை நோட்பண்ணி, முதல்வரின் ஆடியோ -வீடியோவை டெல்லிக்கு அனுப்பி வைத்திருக்கிறது ஒன்றிய உளவுத்துறை.''’’

""மாநில அரசுகளின் அதிகாரத்தைப் பறிக்கும் செயலிலும் ஒன்றிய அரசு இறங்கியிருக்கிறதே?''’’

""ஆமாங்க தலைவரே, தேசியக் கல்வி விவகாரத் தில் தி.மு.க. அரசுக்கு எதிராக வரிந்துகட்டும் ஒன்றிய அரசு, தமிழக அரசு உள்ளிட்ட, மாநில அரசுகளின் அதிகாரத்தைப் பறிக்கும் அடுத்த பாய்ச்சலையும் நடத்தியிருக்கிறது. அதாவது, மாநிலங்களில் மத்திய அரசின் கல்விக்கூடங்களான சி.பி.எஸ்.சி. பள்ளிக்கூடங் கள் தொடங்கப்பட வேண்டுமானால், சம்பந்தப்பட்ட மாநில அரசின் தடையில்லாச் சான்றிதழை உரியவர் கள் பெற்றாக வேண்டும். மாநில அரசு இந்த சான்றித ழை வழங்கினால்தான் சி.பி.எஸ்.சி. பள்ளிகளைத் தொடங்க முடியும் என்ற நிலை இதுவரை இருந்தது. தற்போது மாநில அரசுகளின் இந்த அதிகாரத் தையும் ஒன்றிய அரசு பறித்திருக்கிறது. இனி மாநிலங்களில் சி.பி.எஸ்.சி. பள்ளிகள் தொடங்க நினைப்பவர்கள், மாநில அரசுகளின் தடை யில்லா சான்றிதழைப் பெறத் தேவையில்லை என்று உத்தரவிட்டிருக்கிறது. இப்படி மாநில அரசுகளின் அதிகாரப் பறிப்பை மோடி அரசு தெனாவெட்டாகச் செய்திருக்கிறது. இது மாநில அரசுகளைக் கொந்தளிக்க வைத்திருக்கிறது. எனவே அரசியல் தலைவர்களும், கல்வியாளர்களும் மத்திய அரசின் இந்த போக்கினைக் கடுமையாகக் கண்டித்து வருகிறார்கள்.''’’

""எடப்பாடியை ஒருவர் கனவிலும் மிரட்டிவருகிறார் என்கிறார்களே?''’’

eps

""மதுரை கணேசன் என்ற பெயரைக் கேட்டால் எடப்பாடி இப்போது வியர்த்துப்போய் விடுகிறாராம். இந்த கணேசன் 74-ல் இருந்தே அ.தி.மு.க.வில் இருப்பவர். இவர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தேர்தல் கமிஷனில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். அதில், கட்சியின் பொதுச்செயலாளரை அடிப்படை உறுப்பினர்கள்தான் தேர்ந்தெடுக்கவேண்டும். இந்த விதியை எவராலும் மாற்ற முடியாது. அப்படிப்பட்ட விதியை எடப்பாடியும், ஓ.பி.எஸ்.ஸும் சேர்ந்து திருத்தியிருக்கிறார்கள். இது செல்லாது. இதன்படி எடப்பாடி பொதுச்செயலாளராக பதவியில் நீடிக்கவும் முடியாது என்று குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவைத் தேர்தல் ஆணையம் தற்போது சீரிய சாகக் கையில் எடுத்திருக்கிறதாம். அதனால் இப்போது அந்த மதுரை கணேசனை சமாதானப்படுத்த, அவரது வீட்டிற்கு அ.தி.மு.க. கரைவேட்டிகள் படையெடுத்து வருகிறார்களாம். ஆனால் கணேசனோ, யார் என்ன சொன்னாலும் நான் கேட்கமாட்டேன். கட்சியின் சட்ட திட்டத்தை நான் காப்பாற்றியே தீருவேன் என்றபடி வரிந்துகட்டி நிற்கிறாராம்.''’’

""எடப்பாடியின் மகன் மிதுன் தேர்தலில் களமிறங்க விருக்கிறார் என்கிறார்களே?''’’

""அ.தி.மு.க., வரும் சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. வுடன் கூட்டணி வைக்கப்போகிறதா? அல்லது நடிகர் விஜய்யின் த.வெ.க.வுடன் கூட்டணி வைக்கப்போகிறதா? என்ற விவாதம் பரவலாக நடந்துவருகிறது.இது பற்றி முடிவெடுக்கப்போகிறவர் மட்டுமல்லாமல், இப்போது அ.தி.மு.க.வையே வழிநடத்துகிறவர் எடப்பாடியின் மகன் மிதுன்தான் என்கிறார்கள். மிதுன் இந்தமுறை, தானே நேரடியாக காங்கேயம் தொகுதியில் போட்டியிட விரும்புகிறாராம். கடந்தமுறை எடப்பாடியே கவுண்டர் சமூக மக்கள் அதிகமுள்ள இந்தக் காங்கேயத்தில் போட்டியிட நினைத்து, கடைசி நேரத்தில் மாற்றிக் கொண்டாராம். இந்தமுறை எடப்பாடியின் மகன் மிதுனுக்காக இந்தத் தொகுதி ஒதுக்கப்படவிருக் கிறதாம்.''’’

""ஆதவ்வின் கைக்கு நடிகர் விஜய் கட்சியின் ரகசியங்கள் சென்றிருப்பதாக செய்திகள் வருகிறதே?''’’

""தனது த.வெ.க.வின் பொதுக்குழுவைக் கூட்டி சட்டமன்றத் தேர்தல் குறித்து ஆலோசனையை மேற்கொள்ள இருக்கிறார் நடிகர் விஜய். இந்த நிலையில், த.வெ.க.விற்கு உறுப்பினர்களை டிஜிட்டலில் சேர்க்க, புதிய ஆப் ஒன்று அறிமுகம் செய்யப் பட்டிருக்கிறது. அதன் வழியாக உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், அந்த செயலியை உருவாக்கிய நபருக்கு, கொடுக்க வேண்டிய தொகையை முழுமையாகக் கொடுக்காமல் இழுத்தடித்து வந்திருக்கிறார்கள். தற்போது மீதித் தொகையை கொடுக்கிறோம் என்று சம்மந்தப்பட்ட நபரை அழைத்த புஸ்ஸி ஆனந்த், அவரை ஆதவ் அர்ஜுனாவிடம் அழைத்துச்சென்றிருக்கிறார். ஆதவ்வும் அந்த நபரிடம், செயலி தொடர்பான அனைத்துத் தகவல்களையும் என்னிடம் கொடுத்துவிட்டு மீதித் தொகையைப் பெற்றுக்கொள் என்று தகவல்களை வாங்கிக் கொண்டாராம். கட்சித் தலைமையிடம் இருக்க வேண்டிய, இந்தத் தகவல்களை ஆதவ்விடம் ஒப்படைத் திருப்பது கட்சி நிர்வாகிகளிடம் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.''’’

""ஈஷா மைய மகா சிவராத்திரி உற்சவத்தை ’பண டீலிங் உத்சவ்’ என்கிறார்களே?''’’

dd

""அதற்குக் காரணம் இருக்குங்க தலைவரே, ஒரே ஒரு உதாரணத்தை மட்டும் சொல்றேன். கர்நாடக மாநில அரசியல் புள்ளியான காங்கிரஸ் சிவகுமார், நிறைய ஃபைனான்ஸியல் விவகாரங்களில் தொடர்புடையவர். இவர், சில வருடங்களுக்கு முன் தற்கொலை செய்துகொண்ட ’காபி டே’ நிறுவன அதிபர் சித்தார்த்தாவுக்கு மிக நெருக்க மானவர். இந்த சிவகுமாரை நிழலான பண விவகாரங்களில் இருந்து காப்பாற்றுகிறவர் ஜக்கி வாசுதேவ்தான் என்கிறார்கள். அதனால் சிவகுமார், ஈஷாவின் மகா சிவராத்தியில் தவறாமல் கலந்துகொள்கிறாராம். ஜக்கியின் மகா சிவராத்திரியும் கூட பண டீலிங்குகளை நடத்தும் உற்சவமாகவே பார்க்கப்படுகிறது என்றும் சொல்கிறார்கள்.''’’

""பட்டியலின மற்றும் பழங்குடியினர் வாரிய விவகாரம் ஒன்றும் பரபரப்பாகி யிருக்கிறதே?''’’

""தமிழக அரசு அண்மையில் பட்டிய லின மற்றும் பழங்குடியினர் வாரியத்தின் உறுப்பினராக கோவை செல்வராசு என்பவரை நியமித்திருக்கிறது. இவர், அ.தி.மு.க. மாஜி மந்திரி வேலுமணிக்கு நெருக்கமானவராம். மேலும் பா.ஜ.க. தரப்போடும் அதிக நட்பில் இருப்பவராம். இதுகுறித்த போஸ்டர்கள் கோவை பகுதியில் அதிகமாக ஒட்டப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது. அப்படிப்பட்டவரை மேற்கண்ட வாரியத்திற்கு யார் சிபாரிசு செய்தார் என்கிற அந்தக் கேள்வி பலமாக எழுந்துள்ளது. இவரை மாவட்ட பொறுப்பு அமைச்சர் சிபாரிசு செய்ததாகவும் பேச்சு அடிபடுகிறது.''’’

""நானும் என் காதுக்கு வந்த ஒரு தகவலைப் பகிர்ந்துக்கறேன். தற்போதைய பா.ஜ.க. மாநில நிர்வாகி, தி.மு.க.வின் பொறுப்பில் இருக்கும் மூத்த அமைச்சர் கள் சிலரின் தயவை மறைமுகமாகப் பெற்று, நிறைய சம்பாதித்திருக்கிறார் என்கிற சர்ச்சைப் புயல், கமலாலயத் தரப்பிலேயே சுழன்றடிப்பதால், மீண்டும் அவருக்கு தலைவர் பதவி இருக்காது என்கிற டாக் அடிபடுகிறது. இதனால் தான் எப்போதும், தான் தி.மு.க.வுக்குத் தீவிர எதிரி என்பதுபோல் காட்டிக் கொள்ள, அவர் வீரதீர வசனங்களைப் பேசுகிறார் என்றும் கூறுகிறார்கள்.''’

__________

பெரியார் பெயரில் மருத்துவமனை!

ss

சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் தொகுதியான கொளத் தூரிலுள்ள அரசு புறநகர் மருத்துவமனை வளாகத்தில், 210 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆறு தளங்களுடன்கூடிய புதிய மருத்துவ மனைக்கு "பெரியார் அரசு மருத்துவமனை' என்று பெயர் சூட்ட தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார். இம்மருத்துவமனையின் தரைத்தளத்தில் 20 படுக்கைகள் கொண்ட தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர சிகிச்சை முனைப்பு வார்டுகள், புறநோயாளிகள் பிரிவுகள், முதல் தளத்தில் மகப்பேறு பிரிவு, அறுவை அரங்கங்கள், நவீன இரத்த வங்கி, இரண்டாம் தளத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான மருத்துவப் பிரிவுகள், மூன்றாம் தளத்தில் மகப்பேறு மற்றும் குடும்பக் கட்டுப்பாடு வார்டு, நான்காம் தளத்தில் ஆண்கள் பொது மருத்துவப் பிரிவு, ஐந்தாம் தளத்தில் இருதயவியல் பிரிவு, ஆறாம் தளத்தில் சிறப்பு சிகிச்சை வார்டுகள், புற்றுநோயியல் பிரிவு போன்ற பல்வேறு பிரிவுகளுடன் மொத்தம் 260 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. விரைவில் திறக்கப்படவுள்ள இம்மருத்துவமனையை முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியம், சேகர்பாபு உள்ளிட்டோர் கடந்த 23ஆம் தேதி பார்வையிட்டனர்.

-கீரன்

nkn260225
இதையும் படியுங்கள்
Subscribe