"ஹலோ தலைவரே, ராகுல்காந்தி அகில இந்தியத் தலைவரா, தமிழ்நாட்டுத் தலைவரான்னு மக்கள் நினைக்கிற அளவுக்கு நம் மாநிலத்தின் மீது அக்கறை செலுத்துறாரே?''”
"ஆமாம்பா.. முதல்வர் ஸ்டாலினோட ’"உங்களில் ஒருவன்'’ வெளியீட்டு விழா நிகழ்ச்சிகளை கவனிச்சப்ப அப்படித்தான் இருந்தது.''”
"தலைவரே... சத்தியமூர்த்தி பவனை அகில இந்திய நிர்வாகிகள் கண்டுக்கிறதில்லைன்னு இங்குள்ள காங்கிரசார் குமுறும் நிலையில், ராகுலின் 30 நிமிட சத்தியமூர்த்தி பவன் விசிட் புது உற்சாகத்தைத் தமிழக காங்கிரஸ் கட்சிக்குத் தந்திருக்கு. பவனில் மேடை அமைக்கப்பட்டு ராகுலுக்கு சிறப்பான வரவேற்பும் கொடுக்கப்பட்டது. மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி பேசி முடித்ததும் ராகுல் பேசினார். அவரது ஆங்கில உரையை மொழிபெயர்க்க யாரையும் ஏற்பாடு செய்யலை. இதுபற்றி ராகுல் கேட்க, "ஆங் கிலத்திலேயே பேசுங்கள். எல்லோருக்கும் புரியும்'னு மேடையில் இருந்த தலைவர்கள் சொன் னாங்க. மேடைக்கு கீழே இருந்த தொண்டர் களோ, தமிழில் மொழிபெயர்ப்பு வேணும்னு குரல் கொடுத் தாங்க. இதனால் தலைவர்களை கோபமாக முறைத்த ராகுல், ஜெயக்குமார் எம்.பி.யை அழைத்து, தனது உரையை மொழிபெயர்க்க வச்சி நிலைமையை சமாளித்தார்.''”
"இதைக்கூடவா இங்குள்ள நிர்வாகிகள் கவனிக்கமாட்டாங்க?''”
"தமிழகத் தலைவர்கள் மீதிருந்த கோபத்தை, கட்சியின் மேலிடப் பார்வையாளரான தினேஷ் குண்டுராவிடம் கொட்டித் தீர்த்துவிட்டார் ராகுல். தமிழின் பெருமையை நாடாளுமன்றத் தில் பேசுகிறேன். ஸ்டாலின் விழாவிலும் பேசு கிறேன். காங்கிரஸ் அலுவலகத்தில் ஆங்கிலத் தில் மட்டுமே பேசிவிட்டுச் சென்றால் என்னை எப்படி மதிப்பிடுவார்கள்? தமிழகத்தில் கட்சியை எப்படி நடத்துகிறீர்கள்னு எனக்குப் புரிந்துவிட்டதுன்னு அவர் டோஸ் விட... அழகிரி உட்பட எல்லோரும் அப்-செட் ஆயிட்டாங்க. அதனால், இங்கே காங்கிரஸ் தலைவர் மாற்றம் விரைவில் நடக்கும்னு டாக் அடிபடுது. அப்படி அழகிரி மாற்றப்பட்டால் செல்லக்குமார் எம்.பி.க்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்றும் சொல்கிறார்கள்.''”
"தி.மு.க,. கூட்டணிக் கட்சிகளின் உள்ளாட்சிப் பதவிப் போராட்டம் 3-ந் தேதி வரை தொடர்ந்ததே?''”
"உண்மைதாங்க தலைவரே, தமிழகத்தின் 21 மாநகராட்சிகளிலும் தி.மு.க. தனிப் பெரும்பான்மையுடன் ஜெயித்திருப்பதால், மேயர் பதவிகள் முழுவதும் தி.மு.க.வினருக்கே என்கிற முடிவை தி.மு.க. எடுத்திருக்கு. ஆனாலும் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸும் வி.சி.க.வும் மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளை எங்க ளுக்கும் கொடுங்கள் என்று ஸ்டாலினிடம் வலியுறுத்தி னர். அதனால் இது குறித்து விவாதிக்க, அமைச்சர்கள் நேரு, வேலு மற்றும் ஆ.ராசா ஆகிய மூவர் குழுவை அமைத்தார் ஸ்டாலின். இந்தக் குழுவோ, மாநக ராட்சிகள் தொடர்பான எந்தப் பதவியையும் கேட்காதீர்கள் என்றது. கூட்டணிக் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்திய தால் பதவிப் பங்கீட்டில் தி.மு.க. போராடி சமாளித்தது. காங்கிரசுக்கு 1 மேயர், 2 துணை மேயர், 6 நகராட்சி சேர்மன் கிடைத்தது. ம.தி. மு.க., வி.சி.க., சி.பி.எம்., சி.பி.ஐ.க்கு தலா 1 துணை மேயர் பதவி பங்கிடப்பட்டது. நகராட் சித் தலைவர், துணைத்தலைவர், பேரூராட்சிப் பதவிகளிலும் பங்கீடு தரப்பட்டது.''’
"அமைச்சரவை கூட இருக்குதே?''”
"உள்ளாட்சித் தேர்தல் முடிந்து புதியவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டதைத் தொடர்ந்து, அமைச்சரவைக் கூட்டத்தை 5-ந் தேதி கூட்டியிருக்கிறார் ஸ்டாலின். வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்வதற்கான தேதி இதில் முடிவு செய்யப்பட இருக்கிறது. தவிர, பட்ஜெட்டில் அறிவிக்கப் போகும் சில திட்டங்களுக்கு அமைச்சரவை யின் ஒப்புதலையும் முதல்வர் பெற இருக்கிறார். கொடுத்த வாக்குறுதிகளை ஸ்டாலின் நிறைவேற்றுவார் என்கிற நம்பிக்கையில்தான் உள்ளாட்சியில் தி.மு.க.வுக்கு அமோக வெற்றியை தந்திருக்கிறார்கள் மக்கள். அதனால் பெண்கள் அதிகம் எதிர்பார்க்கும் இல்லத்தரசிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டம் குறித்த அறிவிப்பு, விரைவில் வெளியாகலாம்னு எதிர்பார்க்கப்படுது. அதேபோல், உள்ளாட்சிகளில் கிராம சபை மற்றும் ஏரியா சபை அமைப்பது குறித்த விவாதமும் அமைச்சரவையில் இருக்கும்னு பேச்சு அடிபடுது.''”
"அமைச்சர் ஒருவரைப் பற்றி சீனியர் அமைச்சர்கள் சிலர் ஆதங்கத்தில் இருக்காங்களாமே?”
"சென்னையைச் சேர்ந்த அமைச்சர் ஒருவரின் மகனும், அ.தி.மு.க.வில் சமீபத்தில் இறந்த தலைவரோட மச்சான் மகனும் சேர்ந்து கட்டுமான நிறுவனத்தைத் தொடங்கி இருக் காங்களாம். அமைச்சரோட செல்வாக்கால் அரசு டெண்டர்களை எடுப்பதில் இந்த நிறுவனம் முனைப்பு காட்டுதாம்.”
"காவல்துறையிலும் சலசலப்பு கேட்குதே?''”
"ஆமாங்க தலைவரே, ஏ.டி.ஜி.பி. அமல்ராஜ், காவலர்கள் பயிற்சித் துறையையும், சிறப்பு அதிரடி நடவடிக்கைகளுக்கான துறையையும் ஒருசேர கவனித்துவருகிறார். இவரை இன்னும் பவர்ஃபுல் இடத்தில் அமரவைப்பதற்காக, காய்கள் நகர்த்தப்படுகிற தாம். அதாவது, சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. தாமரைக்கண்ணன் அக்டோபர் மாதம் ஓய்வு பெற இருக்கிறார். அதேபோல் ஏ.டி.ஜி.பி. ரவியும் மே மாதம் ஓய்வுபெறப் போகிறார். அதனால், அமல்ராஜை மே மாதம், ரவியால் காலியாகும் பதவியில் அமரவைத்துவிட்டு, அக்டோபர் மாதம் காலியாக இருக்கும் தாமரைக்கண்ணனின் நாற்காலியில் அடுத்து அமல்ராஜை அமரவைக்கப் போகிறார்களாம். இதெல்லாம் ஒருவித பாசத்தோட நடக்குதுன்னு விமர்சனம் வருது.''”
"விரைவில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் டிரான்ஸ்பர் மேளா நடக்கப்போகுதே?''”
"ஆமாங்க தலைவரே, சரியாகச் செயல் படாத ஐ.ஏ.எஸ். அதிகாரிகளையும் அமைச்சர் களுடன் முரண்பட்டு மோதல் போக்கைக் கடைப்பிடிக்கும் துறைச் செயலாளர்களையும் மாற்றும் முடிவை ஆட்சித் தலைமை எடுத்திருக்கு. அத னால் ஒரு பெரிய டிரான்ஸ்பர் பட்டி யல் ரெடியாகுது. இதில், வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமியுடன், முரண்பட்டு நிற்கும், அந்தத் துறையின் முதன்மைச் செயலா ளர் ஹித்தேஷ்குமார் மக்வானா பெயரும், பொங்கல் பரிசுப்பொருள் விவகாரத்தில் நடந்த குளறுபடிகளுக்காக நஜிமுதீன் என்ற அதிகாரியின் பெயரும் இருக்கிறதாம்.''”
"சில அதிகாரிகள், ஐ.ஏ.எஸ். அதிகாரி களுக்கே தண்ணி காட்டறாங்களே?''
"நீங்க, எங்க வர்றீங்கன்னு புரியுதுங்க தலைவரே, சென்னை பெருநகர மாநகராட்சி யில் கட்டிடங்கள் கட்டும் பிரிவின் நிர்வாகப் பொறியாளராக இருக்கும் முருகன், கடந்த 30 ஆண்டுகளாக அதே அலுவலகத்தில் நங்கூரம் போட்டு உட்கார்ந்திருக்கிறார். அண்மையில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் மாநகராட்சியின் ரிப்பன் பில்டிங்கே மூழ்கியதைப் பார்த்து, அதிர்ந்து போன மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி, பழைய பெருச்சாளிகளின் கவனமின்மையால்தான் இப்படி எல்லாம் நடந்திருக்குன்னு தெரிஞ்சிக்கிட்டார். அதனால் முருகன் உள்ளிட்ட அதிகாரிகளை உடனடியாக இடமாற்றம் செய்தார். ஆனால் முருகனோ, முதல்வரின் செயலாளர்களில் ஒருவரின் உதவியால் தனது ட்ரான்ஸ்பர் ஆர்டரை 4 நாட் களிலேயே கேன்சல் செய்துவிட்டு, பழைய சீட்டிலேயே வந்து உட்கார்ந்துவிட்டார். இதன் பின்னணியில் 5 "சி'’ வரை புழங்கியதாம்.''”
"இந்த விவகாரத்தின் அடுத்த கட்ட நகர்வுகள் பத்தி, நான் சொல்றேம்பா. கரன்ஸி மழையால், டிரான்ஸ்பர் உத்தரவை முருகன் கரைத்ததை அறிந்து ககன்தீப்சிங் பேடி, ரொம்பவே எரிச்சலாயிட்டார். இந்த சூழலில், முருகனுக்கு எதிராகத் தொடர்ந்து ஊழல் புகார்கள் வரிசை கட்டி வந்ததால், முருகனைத் தென் சென்னைப் பகுதிக்கு, இடமாறுதல் செய்ய, அதற்கான ஆர்டரை ரெடி செய்திருக்கார். இதை எப்படியோ மோப்பம் பிடித்த முருகன், பழைய பாணியில் அதே பவர்ஃபுல் அதிகாரியை அணுக, தயார் நிலையில் இருந்த அந்த டிரான்ஸ்பர் ஆர்டரும் முடக்கப் பட்டுவிட்டதாம். இதையறிந்த ககன்தீப்சிங் பேடி, நொந்து நூடுல்ஸ் ஆகிவிட்டாராம்.''’