porkalam

அல்லிராணிகளுக்கு அரணாக இருந்த தேவாரம்!

Advertisment

இத்தனை பேரு செத்ததுக்கும் முக்கிய காரணம் ஜெயலலிதா நடத்துன குளியல்தான்.

மகாமகம் அன்னிக்கு ஏற்பட்ட சாவுக்கு 3 விதமான விளக்கங்கள அரசு சார்புல கொடுத்தாங்க.

Advertisment

பாங்கூர் தர்மசாலா கிரில் கேட் பெயர்ந்து விழுந்ததுனால சாவு ஏற்பட்டுச்சு...

விஸ்வ ஹிந்து பரிஷத் உணவுப்பொட்டலங்கள பக்தர்கள் மேல தூக்கி வீசுனதுனால ஏற்பட்ட நெரிசலும் சாவுக்கு ஒரு காரணம்...

சுவரு இடிஞ்சு விழுந்ததுனால உண்டான பலிகள்...னு

மாறி, மாறி மந்திரிகள விட்டும், அதிகாரிகள விட்டும் கூச்சமே இல்லாம ஜெ. அரசு பொய் அறிக்கைகள விட்டுச்சு.

தேவாரம் பேட்டி கொடுத்தார். "பாங்கூர் தர்மசாலா சத்திரத்தில் அதிகம் பேர் குழுமி இருந்தார்கள். அந்த கட்டடம் இடிந்து விழுந்ததில் நிறையபேர் இறந்து போனார்கள்' என்று.

மகாமகம் நடைபெறும் நாட்களில் குளக்கரையில் உள்ள வீடுகளில் யாரும் அனுமதிக்கப்படுவதில்லை. வெளியில் உள்ள இடங்களில் இருப்பார்கள். பாங்கூர் தர்மசாலா சத்திரத்தில் சுமார் மூன்றடி உயரமுள்ள கைப்பிடி காம்பவுண்டு சுவரும் அதில் ஸ்டீல் ராடு பொருத்திய தடுப்பும் இருந்தது. அந்த தடுப்பு மட்டுமே கூட்ட நெரிசலில் உடைந்தது. காம்பவண்டு சுவர் இடிந்து விழவில்லை. தேவாரம் கட்டடமே இடிந்து விழுந்ததாகவும், அதனால் பல உயிர்கள் போனதாகவும் பேட்டி கொடுத்தார். நான்கு வீதிகளிலும் (வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு) மிதிபட்டு இறந்தவர்கள், குற்றுயிரும் குலையுயிருமா பெரியாஸ்பத்திரிக்கு கொண்டு சென்று இறந்தவர்கள் என 108 பேர் இறந்ததாகச் சொன்னார்கள். குடந்தையைச் சேர்ந்தவர்கள், வெளியூரிலிருந்து வந்தவர்கள் எல்லாம் இதில் அடக்கம். அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் மகாமகக் குளம் அருகில் உள்ள மாதுளம்பேட்டை தெற்கு வள்ளுவர் தெருவைச் சேர்ந்தவங்க.

பல தரப்புலயும் விசாரிச்ச வகையிலயும் சம்பவத்தன்னிக்கு நாம நேர்ல கண்ணால பாத்ததையும் வச்சு சொல்றதுனா...

""புள்ளக் குட்டிகளோட வந்தவங்கள குளத்துலயும் நிக்க விடாம, கரையைச் சுத்தி வேறு பாதையிலயும் போகவிடாம ஜெ. கிளம்பிப் போற வரைக்கும் மூச்சுத் திணற வச்சதே காவல்துறைதான். அடிக்கடி வயர்லெஸ்ல பேசி, "ஜெயலலிதா பக்கம் மக்கள் நெருங்க முடியாதபடிக்கு கவனமா இருங்க'ன்னு ஐ.ஜி. தேவாரம்தான் காவல்துறைய உசுப்பிவிட்டவரு.

பாங்கூர் தர்மசாலா கம்பி கேட்டுல ஏகப்பட்ட மக்கள் தொங்கிக்கிட்டு கீழ இறங்க முடியாம தவிச்சாங்க. நூத்துக்கணக்கான பெண் பக்தர்கள் தங்களோட தாலியக் காப்பாத்த போராடிக்கிட்டிருந்த நேரத்துல...

குளிச்சு முடிச்ச ஜெயலலிதாவுக்கு அழகு திருநாவுக்கரசு 44 பவுன அன்பளிப்பா கொடுத்தாரு. அத ரொம்ப சந்தோஷமா வாங்கிக்கிட்டுத்தான் கிளம்புனாரு தங்கத் தலைவி.

அவ்வளவுதான்... இப்பவாவது குளத்துல குளிக்கலாமேங்கிற ஆசையில மக்கள் கூட்டம் நகர ஆரம்பிக்க... இடம் இருந்தாத்தான நகர முடியும்... ஒருத்தருக்கொருத்தரு பிதுக்கித் தள்ளிட்டு குளத்துல இறங்க முயற்சி பண்ண... போலீஸ் பிடிச்சுத் தள்ள... தர்மசாலா கேட் சரிய... கூட்டம் நாலாபக்கமும் ஓட, யார் யாரை மிதிக்கிறாங்கன்னு கூட தெரியாம சிதறி ஓட ஆரம்பிச்ச மக்கள போலீúஸôட லத்தி பதம் பார்க்க... குளத்துல குளிச்சிக்கிட்டிருந்த மக்கள் கரையில இருந்து குளத்துல இறங்குன மக்கள நெருக்கி நசுக்க... அதனால நெறைய பேரு மூச்சுத்திணறி தண்ணியிலயே மயக்கம் போட்டு விழுந்தாங்க. கரையிலயும் கூட்ட நெரிசல்ல மிதிபட்டு பக்தர்கள் செத்து விழுந்தாங்க. இது தெரியாம மக்கள் தங்களோட உசுர காப்பாத்திக்கணும்னு பிணத்து மேலயே ஓடுன சோக சம்பவமும் நடந்துச்சு. காயம்பட்டவங்களோட அய்யோ... அம்மாங்கிற முனகல் சத்தம் எல்லா பக்கமும் கேட்டது.

உண்மை நிலை இப்படியிருக்க... அரசாங்கமோ பிரச்சினைய திசை திருப்பப் பாத்தது.

எல்லா குடும்பங்களையும் வீடியோ எடுத்த லோக்கல் வீடியோகிராபர மிரட்டி, கேசட்டுகள காவல்துறை பிடுங்கிருச்சு. அதுமட்டுமில்லாம, மகாமக குளத்துக்கு வடக்கு கரையில ஒரு வீடு இடிஞ்சுபோனதா அரசாங்கம் சொல்லுது. அந்த வீட்டு ஓனர போலீஸ் மிரட்டி, வெற்றுப் பேப்பர்ல கையெழுத்து வாங்கியிருக்கு. போலீúஸôட மிரட்டலுக்குப் பயந்து உயிரைக் காப்பாத்திக்கணும்னா உண்மையச் சொல்லக்கூடாதுன்னு தலைமறைவாயிட்டாரு.

இவ்வளவு கூத்துகளுக்கும் மத்தியில மகாமகத்துக்கு முதல்நாள் ராத்திரியே ஜெ. படம் போட்ட பிளாஸ்டிக் பையில சாதத்த அடைச்சு மக்கள் மேல தூக்கி வீசியிருக்காங்க.

நம்மளப் பொறுத்தவரைக்குக்கும் இந்த கொடிய சாவுகளுக்கெல்லாம் காரணம்.... "ஜெ. குளிக்க வந்ததுதான். அதை மறைக்கிறதுனால தாலி இழந்த பெண்களயும், குடம் உடைச்ச குடும்பங்களயும் யாராலயும் திருப்திப்படுத்தவே முடியாது.

நடந்த கொடுமைகளுக்கு காரணம் குளத்தோட ஒரு பகுதி முழுக்க ஜெ.வுக்கு ஒதுக்குனதுதான். மக்கள வேற பாதையில போகவிடாம காவல்துறையே நெரிசல அதிகப்படுத்துனதும் அதுக்கு ஒரு காரணம்.

ஜெ. மகாமக புனித குளியல். குளிக்கிறதுக்கு, உலகத்துல எங்கயாச்சும் இப்படி ஒரு கண்றாவிய பாத்திருக்க மாட்டீங்க. பொம்பளைங்கனா வந்தமா... குளிச்சிட்டுப் போனமான்னுதான இருப்பாங்க. இங்கதான் மகாராணி குளியல் மாதிரி ஜே..ன்னு நடந்துச்சு. அதுக்கு அடையாளமா தேவாரம் துப்பாக்கியால ரெண்டு தடவ வானத்த நோக்கி சுட்டாரு.

இதப் புரிஞ்சுக்காம மக்கள் பதட்டமா சிதறி ஓடுனாங்க. இதுவும் மகாமக குழப்பத்துக்கு ஒரு முக்கியமான காரணம்.

பொதுவா நம்ம ஊருலயோ, தெருவையோ வச்சுக்கங்க... ஒரு வீட்டுல துக்கம் நடந்துச்சுன்னா, யாரும் உலை வைக்கமாட்டாங்க. எல்லா வீடும் எழவு வீடுபோல சோகத்துல இருக்கும்...

மகாமகத்துல நடந்த உயிர் இழப்புகளக் கூட சென்னைக்கு வந்த பிறகுதான், அவரு (ஜெ.) செவிக்கு எட்ட வச்சாங்களாம். தேவாரத்தின் துப்பாக்கி முழக்கமோ, ஒலிபெருக்கிகள்ல ஒயாம ஒலிச்சுக்கிட்டிருந்த வர்ணனைகளோ அவர் காதுக்கு எட்டவே இல்ல...!

ஜெனரல் டயர்ங்கிறவன் ஜாலியன் வாலாபாக்குல நம்ம இந்திய மக்கள கொன்னு குவிச்சான். ஆயிரக்கணக்கான உயிர் அன்னிக்கு பலியாச்சு. ஆனால் மகாமகத்துல நூத்துக்கு கீழதான் சாவு எண்ணிக்கைன்னு அப்ப இருந்த அரசாங்கம் அறிவிச்சது.

இந்த வரலாற தமிழக ஐ.பி.யில ஜாயின்ட் டைரக்டரா இருந்த வட்சன் படிச்சிருப்பாரு போல. அவருக்கு மனசு உறுத்துனதுனால ""மகாமகச் சாவுக்கு காரணம் ஜெயலலிதாதான். அரசு சாவு எண்ணிக்கைய ரொம்பவே குறைச்சுச் சொல்றாங்க''ன்னு புகைப்பட ஆதாரங்களோட டெல்லிக்கு அனுப்பி வச்சுட்டு, உண்மைய சொல்லிட்டோம்னு அவர் நிம்மதிப் பெருமூச்சு விட்டாரு. அதுக்குள்ள அந்த செய்தி ஜெ. காதுக்குப் போக..., உடனே மோகன்தாஸ கான்டாக்ட்பண்ணி, அவரு டெல்லிக்கு போய் அங்க இருந்த ஐ.பி.எஸ். அதிகாரிய சந்திச்சு, "மகாமகச் சாவுக்கு முக்கியமான காரணம் விஸ்வ ஹிந்து பரிசத் ஆளுங்கதான். அவங்க உணவுப் பொட்டலங்கள வீசுனதாலதான் இத்தன இழப்புகளும்'னு ரிப்போர்ட்ட மாத்தி எழுதி, ஐ.பி. தலைமைக்குப் அனுப்பி வச்சாங்க..

ஆங்... இப்ப கதைக்கு வர்றேன்.

சத்யம் டி.வி. முக்தார் அண்ணன்ட்ட, வால்டர் தேவாரம் ஒரு பேட்டி குடுத்தாரு. அதப்பத்திதான் பேசிக்கிட்டிருந்தோம். முடிவா அதுல அண்ணன் முக்தார், தேவாரத்துக்கிட்ட...

""ஒரு காவல்துறை அதிகாரி நேர்மையா இருக்க முடியுமா, இன்றைய காலத்துல?''ன்னு பளிச் கேள்விய போடுறாரு...

அதுக்கு பளார்னு ஒரு பதிலச் சொல்றாரு தேவாரம்.

""நாங்க யாராவது நேர்மை இல்லைன்னு சொன்னா, அவன கொண்டாங்க... அவன வச்சுக்கிறேன்'ங்கிற கணக்கா பதில்...

"ஏன்ய்யா இப்ப எதுக்கு இந்தக் கேள்வியயும் பதிலையும் 3-வது வாட்டியா சொல்ற'ன்னு உங்களுக்கு கேள்வி வரும்... அதுக்காகத்தான், இந்த "மகாமகம்' -1992ல நடந்த அல்லி ராணிகளோட குளியல்... அதுக்கு பாதுகாப்பு அரணா இருந்தவரு நம்ம தேவாரம். பாதுகாப்புக்குப் போனா அந்த வேலைய கச்சிதமா முடிச்சா நாம ஏன் பேசப்போறோம். இவரு பம்மாத்துக்கு ஜெயலலிதாம்மா குளிக்கப் போறாங்க... முதல் குடம் தண்ணிய அவங்க தலையில ஊத்தப் போறாங்கோய்னு... சொல்லியிருந்தாக்கூட இத்தன எழவு விழுந்திருக்காது. தான்தான் துப்பாக்கி புலின்னு காட்ட மேல பாத்து 2 தடவ சுட்டதுல எத்தனச் சாவு. அத்தனையும் வெளிவராம மறைச்சதும் இல்லாம அந்தம்மாவ இத்தனைக்குப் பெறகும் பூப்போல ஹெலிகாப்டர்ல அனுப்புனதும் நம்மாளுதான்.

முக்தார் அண்ணன்ட்ட "நாங்க நேர்மை இல்லைன்னு சொன்னா... அவன கொண்டா'ன்னாருல்ல. மகாமகக் கொடுமை நடந்தது எந்தவித நேர்மை? அவரையே கேப்போம்... சொல்லுங்க தேவாரம் சார்...

இவரு, நான் ரொம்ப நேர்மையானவன்னு பொய் சொல்லுவாருங்கிறதுக்கு அவரே, அவர் எழுதி இப்ப தமிழ்நாடு அரசு போலீஸ் கேன்டீன்ல பகுமானமா விக்குதுல்ல அந்தப் புத்தகத்துல 482-ஆம் பக்கத்துல 16-ஆவது பாயிண்டா...

""ஆமா நான் நேர்மை தவறிட்டேன். மனசாட்சிக்கு உண்மையா இல்லாம போயிட்டேன்''னு 32 வருஷம் கழிச்சு பாவமன்னிப்பு கேட்டுருக்காரு... அத படிங்க!

""நான் எனது தவறுகளை ஒப்புக்கொள்ளாவிட்டால் எனது மனசாட்சிக்கு உண்மையானவனாக இருக்க முடியாது. எனது முதல் மிகப் பெருந்தவறு 1992ல் கும்பகோணத்தில் நடந்த மகாமகத் திருவிழாவில் 40 பக்தர்கள் நெரிசலில் இறந்துபோனது. நான் காவல்துறை கூடுதல் இயக்குநராக இருந்தேன். அதனால் அங்கு பாதுகாப்புக்கு முதலமைச்சரின் பாதுகாப்பு உட்பட அனைத்துக்கும் நானே பொறுப்பு. அதனால் அங்கு நடந்த சோக நிகழ்ச்சிக்கு முழுப்பொறுப்பும் நானே ஏற்றுக்கொள்கிறேன்''

(புழுதி பறக்கும்)