ருத்துவர்கள், பொது மக்கள் கண்முன்னே சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சயன்டிபிக் ஆபீஸராகப் பணிபுரி யும் நபர்மீது நடந்த கொலைவெறித் தாக்குதல் சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த கோபி என்பவர் ஸ்டான்லி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைப் பிரிவில் பணிபுரியும் லேப் டெக்னீசியன் சங்கர் என்பவர் மீது குற்றச்சாட்டுகளைக் கூறியுள்ளார். சங்கர், ஆய்வு அறிக்கையை கொடுப் பதற்காக பொதுமக்களிடம் லஞ்சம் கேட்டதாகவும், காவல்துறைக்கு ஏற்றவாறு அறிக்கையை மாற்றியமைக்க பல லட்சம் வசூல் செய்வதாகவும், இதனைத் தட்டிக் கேட்டபோது பணம் கொடுத்தால்தான் அறிக் கையைக் கொடுக்கமுடியும். இந்த பணம் எனக்கு மட்டும் இல்லை டீன், ஆர்.எம்.ஓ., டி.எம்.இ. வரையிலும் சென்று சேர்கிறது. அதனால், நீங்க எங்க வேண்டுமானாலும் போய் சொல்லுங்க என மிரட்டியுள் ளாராம். இதனையடுத்து கோபி, புகார் ஒன்றை 06.03.2023 தேதி அன்று அரசு ஸ்டான்லி மருத்துவமனை முதல்வருக்கு அனுப்பிவைத்துள்ளார்.

stanley

Advertisment

அந்த புகாரின்படி 15.03.2023 தேதி அன்று காலை 11.40 மணிக்கு அங்கு பணிபுரியும் சிலரிடம் விசாரணை நடைபெற்றது. அதில் சயின்டிபிக் ஆபீசர் லோகநாதனிடம் விசாரித்துள்ள னர். இந்த விசாரணையில் லோகநாதன், பேராசிரியர்களின் உத்தரவின் பெயரிலே தான் பணிபுரிந்து வருவதாகவும், பிரேதப் பரிசோதனை சான்றிதழ் வழங் குவதில் காலதாமதம் ஏற்படுவதையும், அதற்கான பதிவேடு பராமரிக்கப் படுவதில்லை என எடுத்துரைத்தபோதும், அதில் தலை யிடக்கூடாது என மருத்துவத் துறை தலைவர் பால சுப்பிரமணியன் தெரிவித்துவிட்டார். சட்டவிரோதமாக வசூலித்த தொகையை மருத்துவக் கல்வி நிதி என்கிற பெயரில் இத்துறையில் 7.40 லட்சம் வரை பாதுகாத்து வைக் கப்பட்டிருந்தது. அந்த நிதி திருடுபோனதால் வண்ணாரப் பேட்டை காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருந்தனர். திருடனுக்குத் தேள்கொட்டியதுபோல், சட்டவிரோதமாக வசூலித்த தொகை என்பதால் புகாரில் முழுத்தொகையை யும் குறிப்பிடாமல் 1.65 லட்சம் மட்டுமே குறிப்பிட்டிருந் தனர். இந்த பணம் எங்கிருந்து வந்தது என போலீஸ் விசா ரிக்கத் தொடங்க, எங்கு சிக்கலில் மாட்டிக்கொள்வோமோ என்ற அச்சத்தில் பேராசிரியர் பணம் கிடைத்துவிட்டதாக வழக்கைத் திரும்பப் பெற்றுக்கொண்டார்.

விசாரணையில் லோகநாதனிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு உண்மையை உடைத்துப் பதில் சொன்னார். தனிப்பட்ட ஒருவரால் மட்டுமே அரசு அலுவலகத்தில் சட்டத்திற்குப் புறம்பாக செயல்பட முடியாது. ரல் (ம்ல்) 78/2019 வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தந்த தீர்ப்பில் 14 உத்தரவுகளைப் பிறப்பித்தனர். இந்த வழக்கில் நீதிமன்ற விசாரணையின்போது லோகநாதனும் உதவி செய்திருந்தார். இந்த 14 உத்தரவுகள் பின்பற்றப்பட் டால் மருத்துவக் கல்வி மருத்துவமனையில் பல்வேறு முறைகேடுகளைத் தடுக்கமுடியும் என்கிறார் லோகநாதன்.

stanley

Advertisment

இந்த சூழ்நிலையில்தான் தங்களைப் பற்றி போட்டுக் கொடுத்த லோகநாதனை, ஆட்களை வைத்து ஸ்டான்லி மருத்துவமனை வளாகத்திலே தாக்கியுள்ளனர். கோபியின் புகாரைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையின்போது, தான் கேட்கும் ஆவணங்களைக் கொடுத்தால் பிரேதப் பரிசோதனையில் நடைபெறும் முறைகேடுகளை நிரூபிக்கமுடியும் என லோகநாதன் தெரிவித்திருந்தார். ஆனால் லோகநாதன் கேட்டிருந்த ஆவணங்கள் காலாவதியாகிவிட்டதாகவும் அது கைவசமில்லை என மருத்துவத் துறை தலைவர் பாலசுப்பிரமணியன் சொல்லியுள்ளாராம். "இதுபோன்ற ஆவணங்களுக்கு காலாவதியே இல்லை. தற்கொலை போன்ற வழக்குகளுக்கே குறைந்த பட்சம் 20 வருடங்களாவது ஆவணங்களைப் பேண வேண்டும்'' என்கிறார்கள் அத்துறை சார்ந்தவர்கள்.

முருகன் என்பவர் வாங்கிய கடனைக் கொடுக்காத காரணத்தால் அவரை தீ வைத்து கொலைசெய்ய முயற்சி செய்துள்ளனர். மதுரை உயர்நீதிமன்றத்தில் அருண் சாமி நாதன் இதுதொடர்பாக பொதுநலவழக்கு தொடுத்திருந் தார். அதில் பாதிக்கப்பட்ட நபரை காரைக்குடி, சிவகங்கை, மதுரை ஆகிய பெரிய மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்றும் அங்கு மருத்துவர்கள் இல்லாததால் அலைக் கழிக்கப்பட்டு உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் இறந்துபோனார்.

வருகைப் பதிவேட்டில் மருத்துவர் கள் வந்துள்ளதாகவும், ஆனால் உண்மை யில் அவர்கள் பணியில் இல்லாததால் சிகிச்சை கொடுக்காத காரணத்தால் அவர் இறந்துபோனார் என்பதுதான் முக்கிய குற்றச்சாட்டு. இதையடுத்து மருத்துவர் களின் வருகைப் பதிவேடு மற்றும் பிரேதப் பரிசோதனைகளில் நடைபெறும் முறை கேடுகள் குறித்து விரிவான அறிக்கை தரு மாறு லோகநாதனுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதன்படி மூன்று மருத்துவ மனைகளிலும் ஆவணங்களைப் பெற்றதில், மருத்துவர்கள் பணிக்கு வராமலே வந்த தைப் போன்று மோசடி செய்திருந்தனர். மேலும், அந்த மூன்று மருத்துவமனைகளி லும் வேறு பிரேதப் பரிசோதனைகள் செய்ததாக மருத்துவர்கள் காட்டி, அதன் மூலம் மருத்துவமனைக்கு வந்ததாக காட்ட முயன்றிருந்தனர். ஒரே பிரேதப் பரி சோதனை அறிக்கையை வைத்து, பிரேதப் பரிசோதனை செய்யாமலே செய்ததாக இறந்தவர்களின் பெயரை மட்டும் மாற்றம் செய்து கட் காபி பேஸ்ட் முறையில் பிரேதப் பரிசோதனை அறிக்கைகள் கொடுக்கப் பட்டிருந்ததைக் கண்டறிந்து நீதிமன்றத் துக்குத் தெரிவித்தார் லோகநாதன்.

stanley

தமிழ்நாடு மெடிக்கல் கோட் விதி 621-ன்படி, பிரேதப் பரிசோதனை சான்றிதழ் அன்றைக்கே வழங்கப்பட வேண்டும். தேசிய மனித உரிமை ஆணை யம் தந்துள்ள பிரேதப் பரிசோதனை சான்றுக்கான படிவத்தையே பயன் படுத்தவேண்டும். அரசு மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பயோ மெட்ரிக் வருகைப் பதிவேடு மூலமாகவே மாத ஊதியம் தரப்பட வேண்டும். இறந்தவரின் உறவினர், நண் பர்கள் யார் கேட்டாலும் பிரேதப் பரிசோதனையை வீடியோ எடுத்துத் தரவேண்டும். அதேபோல பிரேதப் பரிசோதனை செய்யும் இடத்தில் உள்ளே யும் வெளியிலும் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப் பட்டு 24 மணிநேரமும் இயங்கவேண்டும். இந்த அனைத்துத் தகவல்களையும் மருத்துவமனை வளாகத்தில் அறிவிப்புப் பலகையில் எழுதிவைக்க வேண்டும். இந்த 621 விதியை கண்டிப்பாகப் பின்பற்றுமாறு சுகாதாரத்துறைச் செயலாளர் அனைத்து மருத்துவமனைகளுக்கும் சுற்றறிக்கை வழங்கவேண்டும் என ஒரு உத்தரவை உயர்நீதி மன்றம் பிறப்பித்தது.

இந்த உத்தரவுகளை நடமுறைப்படுத்தும் விதமாக மெட்லிபர் என்ற சாஃப்ட்வேர் ஹரியானா மாநிலத்தில் பயன்படுத்துவதைப்போல, சரியான சாஃப்ட்வேர் முலம் பிரேதப் பரிசோதனை சான்று, விபத்து பதிவேடு, போக்சோ சான்று, இதர சட்ட மருத்துவச் சான்றிதழ்களை உடனுக்குடன் தேசிய தகவல் மையத்திற்கு ஆன்லைன் வழியாக பதிவேற் றம் செய்யவேண்டும். இதனால் சம்பந்தப்பட்ட கீழமை நீதிமன்றங்கள், வழக்கறிஞர்கள், புலனாய்வு அதிகாரிகள், பிரேதப் பரிசோதனை மருத்துவர்கள், அவசர சிகிச்சை மருத்துவர்கள் தங்களுக்கென வழங்கப்பட்டுள்ள தனிப்பட்ட பாஸ்வேர்ட் மூலம் அவரவர் இடத்திலிருந்து அன்றைக்கே அந்தந்த சான்றுகளைப் பெற்றுக்கொள்ளமுடியும். ஊழல் நடப்பதும் தடுக்கப்படும் எனக் கருதியே உயர் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்திருந்தது.

இந்த உத்தரவுகள் எதையும் பின்பற்றவில்லை என வழக்கறிஞர் அருண் சாமிநாதன் 2022-ல் உயர்நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடுத் திருந்தார். அரசுத் தரப்பில், அதில் பல உத்தரவுகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந் தது. தமிழகத்தில் உள்ள சென்னை ஸ்டான்லி மருத்துவமனை கல்லூரி உட்பட 23 அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஆதார் அடிப்படையிலான பயோ மெட்ரிக் வருகைப் பதிவேடு இணைக்கப்படவில்லை, மேலும் மருத்துவர்கள் வேலைக்கு வருவதே உறுதிசெய்யப்படாதநிலையில் தொடர்ந்து முறைகேடுகள் நடை பெறுவதற்கு ஏதுவாக உள்ளது. அந்த வகையில் தற்போது ஸ்டான்லி மருத்துவமனையில் ஊழல் சம்பந்த மான விசாரணைக் குழுவில், ஊழலில் தொடர்புடைய மருத்துவர்களே இடம்பெற்றிருப்பதனால் உண்மை வெளிவருவது கேள்விக்குறியே என்கிறார்கள் மாற்றங்களை எதிர்பார்க்கும் நபர்கள்.

இதுகுறித்து ஸ்டான்லி மருத்துவமனை முதல்வர் பாலாஜியிடம் கேட்டபோது பேச மறுத்துவிட்டார்.

மருத்துவக் கல்வி இயக்குனர் சாந்திமலரிடம் கேட்டபோது, “"இது தொடர்பான விசாரணை சென்றுகொண்டிருக்கிறது. நிச்சயம் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்''” என்றார்.

நீதிமன்ற உத்தரவுகள் பின்பற்றப்படாததும், பிரேதப் பரிசோதனை அறிக்கையின் மீது புகார் எழுந்திருப்பதும் ஸ்டான்லி மருத்துவமனையை சந்தேகக் கண்ணோட்டத்தோடு பார்க்க வகை செய்திருக்கிறது.