அண்ணே..!
ஒரு தொடருக்கான எந்த இலக்கண வரம்புகளுக்குள்ளும் தன்னை சிறைப்படுத்திக் கொள்ளாத, ஒரு கட்டுப்பாடு அற்ற, ஒரு மூர்க்கமான, சுதந்திர சுவாசத்தை எடுத்துக்கொண்ட ஒரு எழுது கோலின் நகர்வாக போர்க்களம் புதிய ராஜபாட்டையில் செல்வதாக உணர்கிறேன். ஒரு ஊடகப் போராளியின் வலி மிகுந்த இருண்ட பக்கங்கள் வழியாக இந்த சமூகத்திற்கு மிகப்பெரிய வரலாற்று ஒளிக்கற்றை ஆவணம் கிடைக்கச் செய்து இருக்கிறீர்கள்...!
ஒருசேர யோசித்துப் பார்த்தால் போர்க்களத்துக்குள் எத்தனை விதமான வெளிப்பாட்டு யுக்தி மற்றும் விசய அடுக்குகள் இருக்கிறது என்பதை எண்ணி மாள முடியவில்லை என்பதுதான் நிஜம்.
போயஸ் கார்டனின் அந்தரங்க கடிதங்கள், ஆழ்மனது அரசியல் சபதங்கள், பழுவேட்டரையரின் பழிவாங்கும் படலங்கள் போன்றவற்றினை முச்சந்திக்கு கொண்டு வந்த அம்பலங்கள்... விசிறி அடிக்கப்பட்ட நக்கீரன் வழக்கு கோப்புகளின் அரிதார பூச்சுகளும் அம்மணங்களும், காவல் ஆவணங்களும்... என நக்கீரனின் நாலைந்து இதழ்களுக்கு மேல் மூச்சுத் திணறிவிட்டது.
கிழிபடாத காவல்துறை முகத்தை தேடிப் பார்க்கவேண்டி இருக்கிறது உங்கள் வரலாற்றில்...!
இந்த இதழில், வீரப்பன் கோர்ட்டில் கந்தவேலு கூரிய பார்வையோடு உற்று நோக்க வேண்டிய ஒரு சமூக நாவல் சித்தரிப்பு போன்றது. ஒரு முழு திரைப்படம் பார்த்து உணர்ந்த உண்மையின் காந்தலை இந்த விசாரணை உள்ளடக்கு வாசிப்பவனுக்குள் ஏற்படுத்தி இருப்பது உண்மை.
போர்க்களம் நெடுகிலும் உங்களின் முள்பாதங்களின் நகர்வுகளும், வழிந்தோடும் குருதித்துளிகளும் விமர்சன விளக்கம் பெறுவதென்பது அத்தனை எளிதானதாக இல்லை.!
ஒட்டுமொத்தத்தில் கானக காவியமாக வாழ்ந்திருக்கிறான் வீரப்பன். அவனுக்குள் மரணிக்காத கதைகள் ஏராளம்... ஏராளம் என்பது மட்டும் தெரிகிறது.
இந்த இதழ் வெளிப்பாடு அதன் சிறிய துளி....
வாழ்த்துக்கள் அண்ணே!
-ஜெகாதா, எழுத்தாளர்
(122) ஒரு ஊடகப் போராளியின் வலி!
பக்தவச்சலம்...
இளமைக்கே உரிய துடிப்புடன், எதையாவது சாதிக்க வேண்டும் என்கிற வேகத்தில் காட்டுக்குச் சென்ற பக்தவச்சலம் மீது வீரப்பனின் சந்தேகப் பார்வை விழுந்த தால் நேரக்கூடாத விபரீதம் நிகழ்ந்திருப்பதை சூழ்நிலை கள் உணர்த்துகின்றன. விவேகமற்ற வேகத்தின் விளைவு மிகக்கொடுமை யானது.
"ராஜதந்திரம்' என்ற பெயரில் காவல்துறை இன்பார்மர்களைப் பயன் படுத்துகிறது. வீரப்பனோ, இன்பார்மர்களை கொன்று வீசுகிறார். இன்பார்மர்களாக பொறியில் சிக்குபவர்கள் எந்த விபரமும் தெரியாத அப்பாவி மலைக்கிராம மக்கள்தான். வீரப்பன் மீது நடவடிக்கை என்ற பெயரில் அப்பாவிகள் பலியாகும் அவலம் மீண்டும் தொடர்கிறது.
வீரப்பன் தரப்பிலிருந்து வந்த ஆடியோ...
இந்த ஆடியோ கேசட்டின் தொடக்கத்தில் இன்னொரு பயங்கரமும் பதிவு செய்யப்பட்டி ருக்கிறது. ஒரு இளைஞன் மரணத்தின் வாசலில் நிற்பதுபோல் பயம் கலந்த குரலில் பேசுகிறார்.
"ஐ.ஜி. காளிமுத்து அவர்களுக்கு, நான் பக்தவச்சலம் பேசுறேன். வீரப்பனும் அவனது ஆட்களும் என்னைப் பிடிச்சு வச்சிருக்காங்க. அவங்க எவ்வளவு காசு கேட்கிறாங் களோ அதைக் கொடுத்து என்னை மீட்டுக்கிட்டுப் போங்க. உங்க திட்டங் கள் எல்லாம் வீரப்பன் அண்ணனுக்குத் தெரிஞ்சு போச்சு. உலகமே அழிஞ்சா லும் அண்ணனை நீங்க பிடிக்க முடியாது. அதனால அவங்க கேட்கிற கோரிக்கையை கொடுத்திடுங்க. அவங்க கேட்கிற காசும், கோரிக்கையும் தரலைன்னா என்னை கொலை செய்துடுவாங்க. போலீஸ் இன்பார்ம ராக, கான்ஸ்டபிளாக இருக்கும் நான் வீரப்பன் பிடியிலே இருக்கேன். காசும், கோரிக்கையும் கொடுத்து என்னை மீட்டுட்டுப் போங்க...''
சிறிது நேர இடைவெளிக்குப் பின் மீண்டும் அதே குரல்.
அன்புள்ள அப்பா, அம்மாவுக்கு... பக்தவச்சலம் ந/ர்.ரத்னம், 545, சுக்ரவார் பேட்டை வீதி, காந்தி பார்க், கோவை (போன்:471752) என்ற விலாசத்தில் உள்ள என்னை வீரப்பன் அண்ணன் பிடிச்சு வச்சிருக்காரு. அவரு என்ன கேட்கிறாரோ, அதைக் கொடுத்து என்னை மீட்டுட்டுப் போகும்படி கேட்டுக்கொள்கிறேன். இன்னொரு விலாசம் பி.பி.சி. பிராஞ்ச் ஆபீஸ், பொள்ளாச்சி மெயின் ரோடு, ஆத்துப்பாலம்.
இதோடு ஆடியோ முடிந்தது.
அடுத்ததா வந்த ஆடியோ...
இப்ப இந்த ஆடியúô கேஸட் எல்லாம் எப்படி வந்துச்சுன்னு கேட்டுறாதீங்க. அத சொல்லணும்னா, அது ஒரு பெரிய கதையா நீளும். "போர்க்கள'த்துக்கு தேவை இல்லாதது. அதனால்தான் சட்... சட்...னு விஷயத்துக்குப் போறேன்.
வீரப்பன் தரப்பிலிருந்து நமக்கு வந்த அந்த ஆடியோ கேஸட்டை டேப் ரெக்கார்டரில் செலுத்தி பிளே பட்டனை அழுத்தினோம். கொஞ்சநேரம் சத்தமே இல்லை. இந்த கேஸட் மூலம் வீரப்பன் என்ன குண்டு போடப்போகிறா ரோங்கிற பதைப்புடன் டேப் ரெக்கார்டரையே பாத்தேன். கேஸட் பேசத் தொடங்கிச்சு.
பி.பி.சி. நிருபர் பக்தவச்சலம் பேசுகிறேன், வணக்கம்! எல்லோரும் நலமா? உங்களைச் சந்தித்தபோது, உங்கள் பிரச்சினை பற்றி பேசினேன். நீங்கள் ஒரு மாதம் பொறுக்கச் சொன்னீங்க. நானும் சரின்னு சொன்னேன். நீங்க செல்லுலார் ஃபோன் வேணும்னு சொன்னீங்க. நானும் கொண்டு வரேன்னு சொல்லிட்டுப் புறப்பட்டேன். நான் கொண்டுவந்தபோது, உங்களைப் பார்க்க முடியாது, நீங்கள் சீட்டு கொடுத்து விடுவீர்கள். அப்போதுதான் பார்க்க முடியும்னு சொன்னார்கள். ஆறுமாதமாகி விட்டது. என்னென்னமோ நடந்துவிட்டது.
அதற்குப் பிறகு, மாதையனை சந்தித்த பிறகுதான் எனக்குத் தெரியவந்தது. நீங்கள் என் மேல சந்தேகப்படுவதாகத் தெரிந்தது. அண்ணே, எனக்கு 22 வயசு ஆகிறது. பி.ஏ. பட்டதாரி. பத்திரிகையில் வேலை பார்த்து வருகின்றேன். உங்களைப் பார்த்தபோது நான் சொன்னேன்... "உங்களைப் பார்ப்பதுதான் என் லட்சியம். உங்களைப் பேட்டி எடுக்க வேண்டும். உங்களுக்கு உதவி செய்ய வேண்டும், அதன்மூலம் நான் பயனடைய வேண்டும் என நினைத்தேன். என்மேல் சந்தேகப்படலாமா? உங்களைப் பார்க்க வேண்டுமென்று நினைத்து இரண்டு வருடம் கஷ்டப்பட்டு பார்த்தேன்.
நீங்கள் என் தந்தை மாதிரி. ஒரு மகன் தன் தந்தையைக் காட்டிக் கொடுப்பானா? ஒரு தமிழ்த்தாய் வயிற்றில் பிறந்த நான் உங்களுக்குத் துரோகம் செய்வேனா? அதிருக்கட்டும். அப்புறம், நீங்கள் சரணடைய வேண்டாம். அதில் சூழ்ச்சி இருக்கிறது. உங்களை அழிக்கத் திட்டமிட்டிருக் கிறார்கள். உங்களை நான் சந்தித்த பிறகு இரண்டு முறை டெல்லி சென்றிருந்தேன். எங்கள் அலு வலகத்தில் உள்ள உயரதிகாரிகள் சொன்னார்கள். இறுதியாக உங்கள் கோரிக்கையை ஜனாதிபதி யிடம் கொடுப்போம். அவர் உங்களுக்கு ஒரு நல்ல முடிவை எடுக்கட்டும் என்று சொன்னார்கள். அதனால், அப்பா நீங்கள் என்னை உடனே அழைத்துப் பேசவேண்டும். பாதுகாப்பு கருதி உங்கள் பெயரை குறிப்பிடவில்லை. மற்றபடி நேரில், உங்கள் அழைப்புக்கு காத்திருக்கும் அன்பு மகன், பக்தவச்சலம். நன்றி! அப்பா, தீபாவளிக்கு முன்பே பேசியதால் பட்டாசு வெடிச் சத்தத்தாலும், போக்குவரத்து இடையூறு காரணத்தினாலும் இடையே சில தடங்கல்கள் ஏற்பட்டுள்ளது. மன்னிக்கவும்... நன்றி! வணக்கம்!
பக்தவச்சலத்தை ஏன் சுட நேர்ந்தது என்பதற்கும் இந்த கேஸட்டில் வீரப்பன் வழக்கம் போலவே விளக்கமும் வியாக்யானமும் கொடுத்திருக்கிறார்.
கந்தவேலு, பாய், பக்தவச்சலம் இந்த மூவரும் போலீஸ்காரர்களை அழைத்துக்கொண்டு காட்டுக்குள் வந்ததை, ஒளிந்திருந்து தன் கண்ணாலேயே பார்த்ததாகச் சொல்லும் வீரப்பன், கடுமையாக பக்தவச்சலத்தை அடித்து, உதைத்து விசாரித்திருக்கிறார். தன் விசாரணை குறித்து இப்படிச் சொல்கிறார் வீரப்பன்...
"எதுக்குடா வந்தே? உண்மையைச் சொல்றான்னு பட்டை கௌப்பினேங்க. உண்மை யை பூராவும் சொல்டான்னேன். என்னை காளிமுத்து டி.ஐ.ஜி.தான் அனுப்புனாப்படி... இன்னும் போலீஸ்காரனா ஆகலை. இனிமேதான் ஆகப்போறேன். உங்ககிட்ட மாட்டிக்கிட்டேன். எனக்கு ரெண்டாயிரம் ரூபா சம்பளம் கொடுக்கு றாங்க. இப்படி எல்லாத்தையும் ஒப்புக்கிட்டான்''
என்கிற வீரப்பன், தொடர்ந்து...
"முன்னாடி அவனுங்களுக்கு சாப்பாடு போட்டு சந்தோஷமா வச்சிருந்தேன். உப்பிட்ட வரை உள்ளளவு நினைனு பெரியவங்க சொல் வாங்க. தாயோளிங்க... உப்பிட்டவனையே கழுத்தறுக்க வந்தா... நான் சும்மாயிருப்பனா? போலீஸ்னு தெரிஞ்சும் சும்மாயிருக்க முடியுமா? அதான் பக்தவத்சலத்தை சுட்டுக் கெடாசிட்டேன்''
-என தான் செய்த ஈவு, இரக்கமற்ற படுகொலைக்கு நியாயமும் கற்பிக்கிறார்.
கேசட் கடைசியில் எனக்குப் பேசியிருக்கார் வீரப்பன்.
"ஆசிரியரே... உங்க சத்தியத்தை மீறிட் டேன். அதை கேன்சல் பண்ணிடுங்க. இனிமே இங்கு நிறைய துப்பாக்கிக் குண்டு வெடிக்கும்'' என்றும், தான் எடுத்துவிட்ட நிலையை அழுத்தமாகத் தெளிவாக்குகிறார்.
அது என்ன சத்தியம்...? எதுக்காக குடுத்தது...?
(புழுதி பறக்கும்)