குடிமராமத்து திட்டத்தில் குதறப்பட்ட குளங்கள்! அவல நிலையில் டெல்டா!

pond

டை பட்டாளத்துடன் சென்று, அர்ச்சனை செய்து மலர் தூவி, மேட்டூர் அணையிலிருந்து பாசனத்துக்காக முதலமைச்சர் எடப்பாடியால் திறந்துவிட்ட தண்ணீர், கடைமடைப் பகுதியை கண்டடையுமுன், கால்வாசி தண்ணீர் கடலில் சங்கமித்துவிட்டது.

கடைமடை பகுதிகளுக்குச் செல்லும் கிளைக் கால்வாய்களும் குளைக்கால்களும் தூர்வாரப்படாமல் மேடுதட்டிப் போயிருப்பதுதான் காரணம்.

pond

மேட்டூர் அணை நிரம்பிய மகிழ்ச்சியை முழுமையாக கொண்டாட முடியவில்லை டெல்டா விவசாயிகளால். அரசுக்கு ஒரு பைசா செலவில்லாமல் ஏரி குளங்களை தூர்வார அருமையான திட்டம் என்று முதல்வர் எடப்பாடியும், அமைச்சர்களும் கூறிக்கொண்ட குடிமராமத்து திட்டத்தால், குளங்களும் ஏரிகளும் கந்தரகோலமாக குதறப்பட்டதுதான் மிச்சம் என்கிறது நக்கீரன் நடத்திய ஆய்வு.

"ஏரிகள் குளங்களில் உள்ள வண்டல் மண்ணை எடுத்து விவசாய நிலங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்' என்று முதல்வர் எடப்பாடி கடந்த ஆண்டு உத்தரவிட்டார். அவருடைய அறிவிப்பால், ஒருபைசா செலவில்லாமல் குளங்கள் தூர்வாரப்பட்டதாகவும் இனி ஏரி குளங்களில் நீர் நிறைந்து நி

டை பட்டாளத்துடன் சென்று, அர்ச்சனை செய்து மலர் தூவி, மேட்டூர் அணையிலிருந்து பாசனத்துக்காக முதலமைச்சர் எடப்பாடியால் திறந்துவிட்ட தண்ணீர், கடைமடைப் பகுதியை கண்டடையுமுன், கால்வாசி தண்ணீர் கடலில் சங்கமித்துவிட்டது.

கடைமடை பகுதிகளுக்குச் செல்லும் கிளைக் கால்வாய்களும் குளைக்கால்களும் தூர்வாரப்படாமல் மேடுதட்டிப் போயிருப்பதுதான் காரணம்.

pond

மேட்டூர் அணை நிரம்பிய மகிழ்ச்சியை முழுமையாக கொண்டாட முடியவில்லை டெல்டா விவசாயிகளால். அரசுக்கு ஒரு பைசா செலவில்லாமல் ஏரி குளங்களை தூர்வார அருமையான திட்டம் என்று முதல்வர் எடப்பாடியும், அமைச்சர்களும் கூறிக்கொண்ட குடிமராமத்து திட்டத்தால், குளங்களும் ஏரிகளும் கந்தரகோலமாக குதறப்பட்டதுதான் மிச்சம் என்கிறது நக்கீரன் நடத்திய ஆய்வு.

"ஏரிகள் குளங்களில் உள்ள வண்டல் மண்ணை எடுத்து விவசாய நிலங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்' என்று முதல்வர் எடப்பாடி கடந்த ஆண்டு உத்தரவிட்டார். அவருடைய அறிவிப்பால், ஒருபைசா செலவில்லாமல் குளங்கள் தூர்வாரப்பட்டதாகவும் இனி ஏரி குளங்களில் நீர் நிறைந்து நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்றும் அவரே மேடையில் பேசி கைதட்டு வாங்கிக்கொண்டார்.

ஆனால் நடந்ததோ வேறு. முதல்வர் அறிவிப்பு வெளியானதும், அ.தி.மு.க.வினர் அவரவர் சொந்த கிராமங்களில் உள்ள குளங்களில் மணலைத் திருடி குதறியெடுத்துவிட்டனர். அதுமட்டுமின்றி, கடந்த ஆண்டு மராமத்துப் பணிகளுக்காக அரசு ஒதுக்கிய நிதியையும் அதிகாரிகளுடன் இணைந்து கொள்ளையடித்துவிட்டனர் என்று டெல்டா விவசாயிகளின் குரலை ஏற்கெனவே நக்கீரன் எதிரொலித்திருந்தது.

இந்நிலையில், "மராமத்துப் பணிகளில் முறைகேடுகளைத் தடுக்க, மாவட்ட ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் அடங்கிய குழுக்கள் அமைத்து தூர்வாரப்படும் என 328 கோடி ரூபாயை எடப்பாடி ஒதுக்கீடு செய்தார். 20 சதவிகித பணிகள்கூட நடக்காத நிலையில் தண்ணீரும் திறக்கப்பட்டுவிட்டது. ஆகவே, கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் குளறுபடி செய்துட்டாங்க' என்று குமுறுகிறார்கள் டெல்டா விவசாயிகள்.

pondகாவிரி கடைமடை பாசனக்காரர்கள் சங்கத்தலைவர் இளஞ்செழியன் நம்மிடம்,“சாகுபடி இல்லாத காலத்தில் குளங்களிலும் நீர்நிலைகளிலும் படிந்திருக்கும் வண்டல் மண்ணை வெட்டி எடுத்து கரைகளை பலப்படுத்தி, அடுத்த ஆண்டு நீர் இருப்பை அதிகரிக்க முன்னோர் வழி செய்வார்கள். முன்னோர் கடைப்பிடித்த இந்தத் திட்டத்தைத்தான் முதல்வர் பழனிச்சாமி அறிவித்தார். ஆனால், விவசாயிகளுக்குப் பதிலாக அ.தி.மு.க.வினர்தான் பலன் அடைந்தார்கள். 3 அடி ஆழம் வண்டல் மண்ணை எடுப்பதற்கு பதிலாக, 30 அடிவரை ஜே.சி.பி.யைக் கொண்டு தோண்டிவிட்டனர். டெல்டா மாவட்டங்களில் உள்ள அனைத்து கிராமங்களிலும் இதுதான் நடந்தது. சீர்காழி தாசில்தாரான பாலமுருகன், ஒவ்வொரு லேயர் மண்ணுக்கும் இவ்வளவு என்று பணம் பெற்றுக்கொண்டு மண்ணை அள்ள அனுமதி கொடுத்தார். நாங்கூர், கற்கோயில், கதிராமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள குளங்களைப் பார்த்தால் புரியும். அவ்வளவு மோசமாக குதறியிருக்கின்றனர். மணல் கொள்ளை நடத்தவே முதல்வரின் அறிவிப்பு உதவியிருக்கிறது''’என்றார்.

தஞ்சை மாவட்ட பெரு விவசாயிகளில் ஒருவரான திருஞானம் கூறுகையில், “""எப்போதுமே எங்க ஏரியாவில் தண்ணீர்ப் பஞ்சம் இருக்காது. லேசான மழை பொழிந்தாலும் நிலத்தடிநீர் உயர்ந்துவிடும். முதல்வர் அறிவிப்பைப் பயன்படுத்தி குளங்களில் மணலை அள்ளிவிட்டதால், நிலத்தடிநீர் 100 அடிக்கு கீழே போய்விட்டது, கடந்த ஆண்டு குடிமராமத்து பணிக்காக ஒதுக்கிய நிதி எங்கே போனது என்பதே புரியலை. அப்படி இருக்கும் நிலையில், இந்த ஆண்டுக்கு 328 கோடி ரூபாய் ஒதுக்கியிருக்காங்க. மிகவும் தாமதமாக அறிவித்த கையோடு தண்ணீரையும் திறந்துட்டாங்க. நிதியும் தண்ணீரோடு போகப்போகுது''’என்கிறார் வேதனையுடன்.

டெல்டா விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் செயலாளர் ஆறுபாதி கல்யாணம் கூறுகையில், “""விதிகளை மீறி 30 அடிக்கு மேல் மண் அள்ளியதை வேடிக்கை பார்த்தாங்க. நாங்கள் நடத்திய போராட்டம் எதையும் கண்டுக்கலை. அதனால கைக்கெட்டும் தூரத்தில் இருந்த நிலத்தடிநீர் படுபாதாளத்துக்கு போயிடுச்சி. உண்மை நிலை இப்படியிருக்க ஏதோ சாதனை செய்துவிட்டதாக ஆட்சியாளர்கள் உளறுவது வேதனையா இருக்கு''’என்றார் எரிச்சலாக.

விவசாய சங்கத் தலைவரும் வழக்கறிஞருமான ஜீவக்குமார் நம்மிடம், “""இந்த ஆண்டு குடிமராமத்துப் பணிகளை கண்காணிக்க 7 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைக் கொண்ட குழு அமைத்துள்ளனர். ஆய்வுசெய்ய வரும் அதிகாரிகள் அந்தந்த மாவட்ட ஆட்சியாளர்கள் அழைத்துச் செல்லும் இடங்களுக்கு மட்டுமே போறாங்க. அங்கும் விவசாயிகளை சந்தித்து குறைகளைக் கேட்பதில்லை. மத்தியக் குழு வந்தது போலவே பறந்து வந்து, பறந்து போறாங்க''’’ என்றார்.

திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவரிடம் குடிமராமத்து குறித்து கேட்டோம்...…""அரசு அறிவித்த திட்டம் சரியானது. ஆனால் அதை நடைமுறைப்படுத்தியது தவறு. கடந்த ஆண்டு மட்டும் 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் மணல், மண் கொள்ளை நடந்துள்ளது. 100 கன அடி கொண்டது ஒரு யூனிட். சாதாரணமாக ஒரு யூனிட் மண்ணின் விலை 1000 ரூபாய் என்றாலும், ஒரு குளத்தில் 30 அடி ஆழத்திற்கும் எடுத்துள்ளனர். அதன் மதிப்பு 30 லட்சம் என்று வைத்துக்கொண்டால்கூட டெல்டா மாவட்டங்களில் 15 ஆயிரத்து 327 குளங்கள், ஏரிகள் இருக்கின்றன. பெருக்கிப் பார்த்தால் எவ்வளவு தொகை என்பது புரியும். அவ்வளவையும் அதிகாரிகளும் அ.தி.மு.க.வினரும்தான் ஆட்டையப் போட்டிருக்கிறார்கள்'' என்கிறார் ஆவேசத்துடன்.

-க.செல்வகுமார்

nkn03-08-2018
இதையும் படியுங்கள்
Subscribe