"ஹலோ தலைவரே, பொள் ளாச்சி விவகாரத்தில் புதிய திருப்பங்கள் அரங்கேறப் போகுது.''”
"வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ. டீமிடம், தி.மு.க. அரசு வந்த பிறகு புதுவேகம் தெரியுதே?''”
"உண்மைதாங்க தலைவரே, அ.தி.மு.க. ஆட்சி இங்கே இருந்தவரை, அவர்களது டெல்லி செல்வாக்கால், பெரிதாக நடவடிக்கை எடுக்கத் தயங்கிய சி.பி.ஐ. அதிகாரிகள், ஆட்சி மாற்றத்துக் குப் பின், சுதந்திரமாக விசாரணையைத் துரிதப் படுத்தினாங்க. இந்த நிலையில், பொள்ளாச்சி வி.ஐ.பி.யின் மகன் விரைவில் சிக்குவார்னு டாக் அடிபட்டது. ஆனால், முதற்கட்டமாக இப்போது, புதிய குற்றவாளியாக, அ.தி.மு.க. ஆட்சியில் கொங்குமண்டலத்தில் சூப்பர் முதல்வராக கொடிகட்டிப் பறந்த மாஜி அமைச்சரின் அண்ணன் மகன், கைதாகப் போறார்ங்கிற செய்தி, பரபரப்பா அடிபடுது. அதற்கான வில்லங்க ஆதாரங்கள் ஏகத்துக்கும் சிக்கி இருக்குதாம். அவரைத் தூக்கிய பின்னர்தான், மெயின் வில்லன் வளைக்கப்படுவாராம்.''”
"கொடநாடு கொலை, கொள்ளை விவகாரத்திலும் புதிய குற்றவாளி ஒருவரை நோக்கி, விசாரணைக்கரம் நீளுதே?''”
"உண்மைதாங்க தலைவரே, கொடநாடு விவகாரத்தில் கைதான குற்றவாளிகளில் ஒருவரான வாளையார் மனோஜ், இப்போது கோவை சிறையில்தான் இருக்கிறார். மனோஜை அண்மை யில் விசாரணை டீம், நெருக்கிய போது, அவர் புதிய அதிரடி வாக்குமூலம் ஒன்றைக் கொடுத் திருக்கிறாராம். அதில், கொட நாட்டில் கொள்ளையடிக்கப் பட்ட ஆவணக் கட்டுகளில், வெளிநாட்டில் பவர் புள்ளி களால் வாங்கிக் குவிக்கப்பட்ட சொத்து ஆவணங்களும் இருந்ததாம். இதில் பலவற்றை, கொள்ளைச் சம்பவத்துக்குப் பின் வெளிநாடுகளுக்கு அனுப்பி, அங்கே பதுக்கி வைத்துவிட்டார்களாம். இதைச் செய்தது, முக்கிய குற்றவாளியான சஜீவனின் தம்பி சுனிலும், தற்போது கோவை சிறையிலேயே இருக்கும் அலியார் என்ற குற்றவாளியும்தான்னு மனோஜ் சொல்லியிருக்கிறார். இதைத் தொடர்ந்து, சிறையில் இருக்கும் அலியாரை விசாரிக்க இருக்கிறதாம் விசாரணை டீம்.''”
"இரண்டு வழக்கையும் பொதுமக்களும் உன்னிப்பா கவனிக்கிறாங்கப்பா...''”
"ஆமாங்க தலைவரே, வேறொரு சேதி சொல்றேன். அண்ணா சாலையில் இந்திராகாந்திக்கு சிலைவைக்க ஜி.கே. மூப்பனார், அவர் காலத்தில் முயற்சித்தார். அப்போது ஸ்பென்சருக்கு எதிரே உள்ள சந்திப்பின் நடுவில், அவருக்கு இடம் ஒதுக்கித் தரப்பட்டது. சிலைக்கான பீடமும் அமைக்கப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங் களால் அந்த முயற்சி பாதியிலேயே கைவிடப் பட்டுவிட்டது. மூப்பனார் இறப்புக்குப் பிறகு அதற்கான முயற்சியைக் காங்கிரஸ் தரப்பு எடுக்காததால், அந்த சிலை நிறுவும் திட்டம் கைவிடப்பட்டது. இந்த நிலையில், இந்திராகாந்தி சிலை அமைய இருந்த இடத்தில், போக்கு வரத்துக்கு இடையூறு இல்லாதபடி, கலைஞர் சிலையை வைக்கத் தி.மு.க. திட்டமிட்டிருக்கு. விரைவில் இதற்கான அறிவிப்பு வரலாமாம்.''”
"காங்கிரஸ் தரப்பை உளவுத்துறை குறிவச்சிருக்குதாமே?''”
"உண்மைதாங்க தலைவரே, காங்கிரசையும் சோனியாவையும் இழிவாகப் பேசிவரும் சீமானுக்கு எதிராக காங்கிரஸ் போலீஸில் புகார் கொடுத் திருக்கு. இந்த நிலையில், "உ.பி.யில் நடந்த விவ சாயிகள் படுகொலையை கண்டிச்சி, வடசென்னை யில் போராட்டம் நடத்திய காங்கிரஸ் பிரமுகர் எம்.எஸ்.திரவியம், அதன்பின் பத்திரிகையாளர்களி டம் பேசியபோது, சீமானை ஏக வசனத்தில் எகிறிய தோடு, ’உனக்குத்தான் நாக்கு இருக்குன்னு பேசறீயா? நாங்க பேச ஆரம்பிச்சா நீ தாங்க மாட்டே! வட சென்னைக்கு நீ வந்து பார், உன்னை வெட்டாமல் விடமாட்டேன். நான் நெல்லைக் காரன். அருவாளோட வந்திருக்கேன்''னு ரொம்ப வும் ஹாட்டா எச்சரிச்சார். இதைப் பார்த்த உளவுத் துறை, சீமானை மையப்படுத்தி, காங்கிரஸ்காரர்கள் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க நினைக்கிறார்கள்னு மேலிடத்துக்கு ரிப்போர்ட் அனுப்பி, அவர்களின் மூவை கவனிக்க ஆரம்பிச்சிருக்குதாம்.''”
"தே.மு.தி.க. சைடில் புதிய பரபரப்பு தெரியுதே?''
"ஆமாங்க தலைவரே, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்தின் உடல்நலப் பிரச்சினையால், அவரால் அரசியலில் ஆக்டிவ்வா இயங்க முடியலை. இதனால் கட்சியைப் பாதுகாக்க கட்சியின் பொருளாளர் பதவியை ஏற்றுக்கொண்டு, கட்சியின் லகானைப் பிடிச்சார், பிரேமலதா. ஒரு கட்டத்தில் மகன் விஜய பிரபாகரனும் அரசியல்ல தலைகாட்டினார். அவருக்கு கட்சியின் இளைஞரணிச் செயலாளர் பதவியும் கொடுக்கப் பட்டது. தேர்தல் பிரச்சாரமெல்லாம் கூட மேற்கொண்டார். ஆனாலும், தே.மு.தி.க எதிர்பார்த்த மாதிரி வளர்ச்சி காணலை. அதனால், தி.மு.க.வோடு கூட்டணி வச்சிக்கணும்னு நினைக்கிறார் பிரேமலதா.''”
"தி.மு.க. சைடில் என்ன ரெஸ்பான்ஸ்?''”
"சித்தரஞ்சன் சாலையுடனான தொடர்புகள் மூலமா கூட்டணிக்கு முயற்சிக்கிறார் பிரேமலதா. அது ஒருபுறம் இருக்க, விஜயகாந்த்தின் மகனான விஜய பிரபாகரனோ, கட்சியின் மொத்த சுமையையும் நான் ஏற் கிறேன். கட்சியை வலிமைப்படுத்த வும், கட்சி நிர்வாகிகள் வேற பக்கம் தாவாமல் இருக்கவும், தமிழகம் முழுக்க நான் சுற்றுப் பயணம் செய்ய விரும்புறேன்னு அம்மா பிரேமலதாவிடம் வலியுறுத்தறா ராம். அதோடு, சுற்றுப்பயணத் திட் டத்தை வகுத்துக் கொடுங்கள். முதல் ரவுண்டிலேயே கட்சியில் பெரிய எழுச்சியை உண்டாக்கிக் காட்ட றேன். அதன் மூலம் 2024-ல் நடக்க இருக்கும் நாடாளுமன்றத் தேர்த லின் போது, நம்முடன் கூட்டணி வைக்க தி.மு.க.வே விரும்பும் என்றும் அவர் நம்பிக்கையோடு பேசுகிறாராம்.''
"ம்...''”
"தலைவரே, சமீபத்தில், சினிமா பி.ஆர்.ஓ..க்கள் 3 பேர், தமிழக செய்தித்துறை அமைச்சர் சாமிநாதனைச் சந்திச்சாங்க. அப்ப, பத்திரிகையாளர்களுக்கான அரசின் அங்கீகார அட்டை, தங்களுக்கும் வேண்டும்னு கோரிக்கை வச்சாங்க. அமைச்சரோ, எதன் அடிப்படையில் சினிமா பி.ஆர்.ஓ.க்களைப் பத்திரிகையாளர்களாக அங்கீகரிப்பதுன்னு கேட்க, சினிமாவும் மீடியாதானேன்னு அவங்க சொல்ல, அமைச்சர் திகைச்சிப் போயிட்டாராம். அதேபோல், தமிழக அரசு பத்திரிகையாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவித்தது.''”
"ஆமாம்ப்பா, அரசின் அக்கிர டேசன் கார்டு மற்றும் அரசின் பிரஸ் கார்டு வைத்திருப்பவர்களும் உரிய பயனைப் பெறலாம்னு அறிவிக்கப்பட்டதே?''”
"ஆமாங்க தலைவரே, பத்திரிகை யாளர்களுக்கு கொரோனா நிதியாக தலா ரூ 5 ஆயிரம் ரூபாய் வழங்குவதாக அறிவித்து, அதற்கான பணியை, செய்தித்துறை அதிகாரிகள் வசம் ஒப்ப டைத்தனர். ஆனால், அந்த அதிகாரி களோ அக்கிரடேசன் கார்டு வைத் திருக்கும் பத்திரிகையாளர்களுக்கு மட்டும் அந்தத் தொகையைக் கொடுத்துவிட்டு, ப்ரஸ் பாஸ் வைத்திருக்கும் பத்திரிகையாளர் களுக்கு ’அல்வா’ கொடுத்து விட்ட னர். இதுகுறித் தும் அமைச்சர் சாமிநாதனின் கவனத்துக்கு சிலர் கொண்டு சென்றும், நடவடிக்கை எடுக்கப்படு மான்னு பத்திரிகையாளர்கள் காத்திருக்காங்க. செய்தித் துறையின் இயக்குநராக இருக்கும் ஜெயசீலன் ஐ.ஏ.எஸ். சின், தன்னிச்சையான அடாவடி செயல்கள், செய்தித் துறையை டேமேஜ் பண்ணிக்கிட்டு இருக்குதாம்.''”
"சி.பி.எம். கட்சியில் சில அதிரடி மாறுதல்கள் நடந்திருக்கே?''
"உண்மைதாங்க தலைவரே, பதவிக்கு வருபவர்களின் வயது எல்லையை தற்போது அக்கட்சி வரையறுத்திருக்கு. அதன்படி, கட்சியின் மாவட்டக் குழுவில் 70 வயதுக்கு மேற் பட்டவர்கள் இடம்பெற முடியாதாம். அதேபோல், மாநிலக் குழுவில் 72 வயதுக்கு மேற்பட்டவர்களால் நுழைய முடியா தாம். மேலும் மத்திய குழுவிலும், கட்சியின் பொலிட் பீரோவிலும் 75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இடமில்லை யாம். அதோடு இளைஞர்களுக்கு கட்சிப் பதவிகளில் முக்கியத் துவம் கொடுக்கும் திட்டமும் சி.பி.எம்.மில் தொடங்கி வைக்கப்பட்டிருக்கு. இதன்படி 19 வயதே ஆன மிருதுளா சிவசங்கர் என்ற இளம்பெண், மத்திய சென்னை மாவட்ட குழு உறுப்பினராக ஆக்கப்பட்டிருக்கிறார். அதேபோல் கட்சி யின் மத்தியக் கமிட்டிக்கு இப்போதுள்ள தலைவர்களான டி.கே.சௌந்தர்ராஜன், ஜி.ராமகிருஷ்ணன், ஏ.சௌந்தர்ராஜன் ஆகியோர் செல்ல முடியாதபடி சுவர் எழுந்திருக்கிறது.''”
"சென்னை மாநகராட்சி வாகனப் பராமரிப்பு விவகாரத் தில் முறைகேடுகள் நடந்திருப்பதா சர்ச்சைகள் கிளம்புதே?''”
"ஆமாங்க தலைவரே, சென்னை மாநகராட்சி எல்லைக்குள், வாகனங்களைப் பராமரிக்கும் காண்ட்ராக்ட் அண்மையில் 1.18 கோடிக்கு டெண்டர் மூலம் விடப்பட்டது. டெண்டர் விதிப்படி, ஒன்றுக்கு ஒன்று தொடர்பு இல்லாத நிறுவனங்கள் மட்டும்தான் கலந்துக்கணும். ஆனால், இந்த டெண்டரில் "பெஸ்ட் அண்ட் பாஸ்ட் மெட்டல்'ங்கிற நிறுவனமும், ’ஈராய்ஸ் மோட்டார்ஸ்’ என்ற நிறுவனமும் ஃபைனலில் மோத, கடைசியில், "பெஸ்ட் அண்ட் பாஸ்ட்' நிறுவனத்துக்குதான், காண்ட்ராக்ட் ஒதுக்கப்பட்டது. இதில், கவனிக்க வேண்டிய விசயம் என்னன்னா, இந்த இரண்டு நிறுவனமும் சுதாகர், ராதாகிருஷ்ணன் என்பவர்களால் நடத்தப்படும், ஒரே நிறுவனத்தின் இருவேறு வடிவங்களாம். இருந்தும் காண்ட்ராக்ட் கிடைத்ததற்குக் காரணம், துறை அமைச்சர் தரப்புக்கு நெருக்கமானவர்கள் என்பதுதான்னு காண்ட்ராக்ட் நிலவரம் அறிந்தவர்கள் சொல்றாங்க.''”
’"நான் ஒரு முக்கியமான தகவலைச் செல்றேன். பாலியல் வழக்கில் சிறையில் இருக்கும் சிவசங்கர் பாபா, அங்கே சுகபோகமாவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறாராம். தனக்கு இதற்கு மேல் எந்தத் தொல்லையும் வராது என்றும் அவர் சக கைதிகளிடம் சொல்லி வருகிறாராம். இவரை விசாரித்த விசாரணை அதிகாரி ஒருவர், தற்போது தன் மனைவி பெயரில் 2 கிரவுண்ட் நிலம் வாங்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.''”