ஆபரேஷனை தொடங்கிய ராகுல்! -எதிர்க்கட்சிகள் கை கொடுக்குமா?

raghul

"நாங்கள் பாண்டவர்கள்.. பா.ஜ.க.வினர் கௌரவர்கள்' என குருஷேத்ர யுத்தத்தை தொடங்கியிருக்கிறார் ராகுல் காந்தி. அகில இந்திய காங்கிரஸின் தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதையடுத்து காங்கிரசின் 3 நாள் மாநாட்டை டெல்லியில் பிரம்மாண்டமாக நடத்தி, அதில் அவர் ஆற்றிய உரை, இந்திய அரசியல் களத்தைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

raghul

மாநாட்டுக்கு சிலநாட்கள் முன்பாக சோனியா தனது இல்லத்தில் 23 கட்சிகளின் தலைவர்களுக்கு விருந்து வைத்து கலந்தாலோ சித்தபோது பலரும்,’""இடைத்தேர்தல்களில் தோல்வியடையும் பா.ஜ.க. பொதுத்தேர்தல் களில் மட்டும் வெற்றி பெறுவதால் மின்னணு வாக்கு இயந்திரத்தின் மீதான நம்பகத்தன்மை கேள்விக்குறியாக இருக்கிறது. மோடி கொடுத்த எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. பணமதிப்பிழப்பு விவகாரத்தில் பலரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அப்படியிருந்தும் பா.ஜ.க. ஜெயிப்பது தொடராமல் தடுக்க வேண்டுமென் றால், தேசிய கட்சிகளையும் மாநில கட்சிகளையும் ஒருங் கிணைத்து ஒரு வலுவான கூட்டணியை உருவாக்குவதுதான் சரிய

"நாங்கள் பாண்டவர்கள்.. பா.ஜ.க.வினர் கௌரவர்கள்' என குருஷேத்ர யுத்தத்தை தொடங்கியிருக்கிறார் ராகுல் காந்தி. அகில இந்திய காங்கிரஸின் தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதையடுத்து காங்கிரசின் 3 நாள் மாநாட்டை டெல்லியில் பிரம்மாண்டமாக நடத்தி, அதில் அவர் ஆற்றிய உரை, இந்திய அரசியல் களத்தைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

raghul

மாநாட்டுக்கு சிலநாட்கள் முன்பாக சோனியா தனது இல்லத்தில் 23 கட்சிகளின் தலைவர்களுக்கு விருந்து வைத்து கலந்தாலோ சித்தபோது பலரும்,’""இடைத்தேர்தல்களில் தோல்வியடையும் பா.ஜ.க. பொதுத்தேர்தல் களில் மட்டும் வெற்றி பெறுவதால் மின்னணு வாக்கு இயந்திரத்தின் மீதான நம்பகத்தன்மை கேள்விக்குறியாக இருக்கிறது. மோடி கொடுத்த எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. பணமதிப்பிழப்பு விவகாரத்தில் பலரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அப்படியிருந்தும் பா.ஜ.க. ஜெயிப்பது தொடராமல் தடுக்க வேண்டுமென் றால், தேசிய கட்சிகளையும் மாநில கட்சிகளையும் ஒருங் கிணைத்து ஒரு வலுவான கூட்டணியை உருவாக்குவதுதான் சரியாக இருக்கும். அதற்கு காங்கிரஸ் சில தியாகங்களை யும் செய்யவேண்டும்''’என்பதை வெளிப்படுத்தினர். இதுதான் காங்கிரஸ் மாநாட்டில் எதிரொலித்துள்ளது.

கட்சியின் மூத்த தலைவர்கள், மாநில முதல்வர்கள், மாநில தலைவர்கள் உள்பட 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முக்கியப் பொறுப்பாளர்களுடன் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ், அவாமி லீக் பங்களாதேஷ், நேபாளி காங்கிரஸ், இலங்கையின் ஐக்கிய தேசிய கட்சி ஆகியவற்றின் பிரதிநிதிகளும் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர்.

மாநாட்டின் ஏற்பாடுகளை ராகுலின் விருப்பப்படி கச்சிதமாக செய்து முடித்திருந்தார் பிரியங்கா. மேடையில் தலைவர்கள் யாரும் அமரவில்லை. தொண்டர்களோடு தொண்டர்களாகவே அமர்ந்திருந்தனர். பேசுவதற்கு அழைக்கப்பட்டவர்கள் மட்டுமே பிரம்மாண்ட மேடை மீது ஏறி பேசிவிட்டு கீழே இறங்கி மீண்டும் தங்கள் இருக்கையில் அமர்ந்துகொண்டனர். "ராகுல்-பிரியங்கா வின் புதிய யுக்தி இது!' என நம்மிடம் பகிர்ந்துகொண்ட னர் மாநாட்டில் கலந்துகொண்ட தமிழக காங்கிரஸார்.

மாநாட்டில் பேசிய மூத்த தலைவர்கள் அனைவரும், மோடி அரசின் குற்றங்களையும் பொருளாதார சீரழிவு களையும், அழிக்கப்பட்டுவரும் விவசாய வாழ்வாதாரங் களையும் தலித்துகள் மற்றும் இஸ்லாமியர்கள் ஒடுக் கப்பட்டுவரும் சூழலையும் சுட்டிக்காட்டிப்பேசி, காங் கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைப்பை வலியுறுத்தினர். மாநாட்டில் நிறைவேற்றப்பட வேண்டிய அரசியல் தீர்மானங்களை மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விவரித்துப் பேசினார். இதன் தொடர்ச்சியாக, "பா.ஜ.க. அரசை அகற்ற எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்; மின்னணு வாக்குப்பதிவுக்கு பதிலாக வாக்குச்சீட்டு களை பயன்படுத்தும் முறை அமல்படுத்த வேண்டும்' என்கிற தீர்மானங்களை மாநாட்டின் ஒப்புதலோடு நிறைவேற்றினார் ராகுல்காந்தி.

congress-meet

மாநாட்டில் பேசிய ப.சிதம்பரம், ""கறுப்புப் பணத்தை ஒழிப்பதாகச் சொன்ன பணமதிப்பிழப்பு நடவடிக்கை பெரும் ஏமாற்றுவேலை. மோடியின் ஒவ்வொரு கூட்டத்துக்கும் ஏராளமாக செலவிடப் படும் பணம் எல்லாமே கறுப்புப்பணம்தான். பழைய 500, 1000 ரூபாய்களை இன்னமும் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள்''‘என ஆவேசப்பட்டார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், ""மத்திய பா.ஜ.க. அரசால் திணிக்கப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையும், அவசரம் அவசரமாக நிறைவேற்றப் பட்ட ஜி.எஸ்.டி. திட்டமும் நாட்டின் சிறுதொழில் துறையையே நிர்மூலமாக்கிவிட்டன. 12% அளவை எட்டவேண்டிய பொருளாதார வளர்ச்சி தவறான நிர்வாகத்தால் சீரழிந்துள்ளது''’என்றார்.

மாநாட்டில் பேசிய சோனியாகாந்தி, ""காங் கிரசை அழிக்க கடந்த 4 ஆண்டுகளில் அனைத்து முயற்சிகளையும் எடுத்தார் மோடி. ஆனால், காங்கிரஸ் அடிபணிந்து வீழ்ந்துவிடவில்லை. மோடியின் ஊழல்களை ஆதாரங்களுடன் நாம் அம்பலப்படுத்தி வருவதால் பா.ஜ.க. அரசு பலவீனமடைந்திருக்கிறது. மோடி அரசை வீழ்த்த நாம் எப்படிப்பட்ட தியாகத்தையும் செய்ய தயாராக இருக்க வேண்டும். அனைத்து கட்சிகளும் ஒன்றிணைவது கட்டாயம்'' என்றார் அழுத்தமாக.

இறுதியில் பேசிய ராகுல்காந்தி, ""இந்த மாநாட்டின் நோக்கமே, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள நாம் எப்படி தயாராவது? காங்கிரசை எப்படி பலப்படுத்துவது? நாட்டை சீரழித்துவரும் பா.ஜ.க. அரசை எப்படி அகற்றுவது? என்பதுதான். குறிப்பிட்ட ஒரு அமைப்பினரின் குரலாக பா.ஜ.க. இருக்கிறது. காங்கிரஸோ, இந்த நாட்டின் குரல். மோடி என்கிற பெயர், பெரும்பணக் காரர்களுக்கும் பிரதமருக்குமான நெருக்கத்தின் அடையாளமாக மாறிவிட்டது. வங்கி மோசடியில் ஈடுபட்ட மிகப்பெரிய கொள்ளையரான நீரவ்மோடிக்கு, இந்த மோடி 30 ஆயிரம் கோடி கொடுத்தார். அந்த மோடி, இந்த மோடியின் தேர்தலுக்காக பல கோடிகளை கொட்டினார். நடக்கிற குருஷேத்திர போரில், உண்மையை நிலைநாட்ட பாண்டவர் களாக காங்கிரசும், அதிகாரத்தை வைத்து செயல் படும் கௌரவர்களான பா.ஜ.க.வும் மோதுகிறது. இறுதியில் நமக்குத்தான் வெற்றிகிடைக்கும்''’’ என ஆவேசமாகப் பேசப் பேச... அரங்கம் முழுவதும் கரவோசைகளால் அதிர்ந்தன.

கவனத்தை ஈர்த்துள்ள காங்கிரஸ் மாநாட் டின் வெற்றி எதிர்க்கட்சிகளுடனான ஒருங்கிணைப் பில் இருக்கிறது. மம்தா, சந்திரசேகர் ராவ் போன்ற வர்களின் மூன்றாவதுஅணி திட்டத்தை காங்கிரஸ் எப்படி கையாளப்போகிறது என்பது மில்லியன் டாலர் கேள்வி.

-இரா.இளையசெல்வன்

Congress Annual Meet raghul gandhi
இதையும் படியுங்கள்
Subscribe