கட்சிக்குள் ஒருத்தருக்கு ஒருத்தர் காலைவாருவது வழக்கம்தான். வேலூர் தி.மு.க.வில் அது வாட்ஸ்-அப் போர்வரை சென்றிருக்கிறது.
உள்கட்சிப் பிரச்சனையை பேசித் தீர்த்துக்கிட்டு ஸ்டாலின் நடத்தும் கள ஆய்வுக்குப் போனால் நல்லதுன்னு நெனச்சு ஒரு கூட்டத்தைப் போட்டா, அந்தக் கூட்டமே ரணகளமா மாறிப்போயிருக்கு. அதுவும் தி.மு.க.வின் முதன்மைச் செயலாளர் துரைமுருகன் முன்னிலையிலேயே.
கள ஆய்வில் இதன் எதிரொலி கடுமையா இருக்கும்னு சொல்றாங்க. அப்படி என்னதான் நடந்தது?
வேலூர் மத்திய மாவட்ட தி.மு.க. பொது உறுப்பினர்கள் கலந்துரையாடல் கூட்டம் காட்பாடி அடுத்த லத்தேரியில் பிப்ரவரி 16-ந் தேதி நடைபெற்றது. "கட்சியின் கிளைச்செயலாளர் முதல் மாவட்ட நிர்வாகிகள் வரை அனைவரும் கூட்டத்துக்கு வரவேண்டும்' என மத்திய மாவட்டச் செயலாளர் நந்தகுமார் எம்.எல்.ஏ. அழைத்திருந்தார். மட்டன் பிரியாணி, சிக்கன் ப்ரை, ம
கட்சிக்குள் ஒருத்தருக்கு ஒருத்தர் காலைவாருவது வழக்கம்தான். வேலூர் தி.மு.க.வில் அது வாட்ஸ்-அப் போர்வரை சென்றிருக்கிறது.
உள்கட்சிப் பிரச்சனையை பேசித் தீர்த்துக்கிட்டு ஸ்டாலின் நடத்தும் கள ஆய்வுக்குப் போனால் நல்லதுன்னு நெனச்சு ஒரு கூட்டத்தைப் போட்டா, அந்தக் கூட்டமே ரணகளமா மாறிப்போயிருக்கு. அதுவும் தி.மு.க.வின் முதன்மைச் செயலாளர் துரைமுருகன் முன்னிலையிலேயே.
கள ஆய்வில் இதன் எதிரொலி கடுமையா இருக்கும்னு சொல்றாங்க. அப்படி என்னதான் நடந்தது?
வேலூர் மத்திய மாவட்ட தி.மு.க. பொது உறுப்பினர்கள் கலந்துரையாடல் கூட்டம் காட்பாடி அடுத்த லத்தேரியில் பிப்ரவரி 16-ந் தேதி நடைபெற்றது. "கட்சியின் கிளைச்செயலாளர் முதல் மாவட்ட நிர்வாகிகள் வரை அனைவரும் கூட்டத்துக்கு வரவேண்டும்' என மத்திய மாவட்டச் செயலாளர் நந்தகுமார் எம்.எல்.ஏ. அழைத்திருந்தார். மட்டன் பிரியாணி, சிக்கன் ப்ரை, மீன் என மதிய விருந்தையும் தடபுடலாக ஏற்பாடு செய்திருந்தார்.
சிறப்பு அழைப்பாளராக கட்சியின் முதன்மைச் செயலாளர் துரைமுருகன் வந்திருந்தார். மாநகர செயலாளர் கார்த்தி எம்.எல்.ஏ., எக்ஸ் எம்.பி. முகமதுசகி உட்பட மாவட்ட நிர்வாகிகள் மேடையில் இருந்தனர்.
தொடக்கத்தில் எல்லோரும் சம்பிரதாயமாக பேசினார்கள். குடியாத்தத்தை சேர்ந்த மத்திய மாவட்ட இலக்கிய அணி துணை செயலாளர் பாரி பேசியபோதுதான் பிரச்சனை வெடித்தது.
""குடியாத்தம் நகரத்துக்கு பொறுப்பாளர்கள் நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை இதுவரை நிறைவேற்றவில்லை. இப்படியிருந்தால், நகராட்சி தேர்தலில் நகர்மன்றத்தை எப்படி கைப்பற்றப் போகிறோம்? இந்த இயக்கத்தை அண்ணாவும் கலைஞரும் கோடிகளை கொண்டு வந்து நடத்தவில்லை, துரைமுருகனின் செயல்பாடுகளால்தான் மக்கள் அவர் பின்னால் இருக்கிறார்கள். தி.மு.க.வின் சாதனைகளை மக்களிடம் சொல்ல நாம் தயாராக இல்லை. சட்டமன்றத்தில் ஒரு குற்றவாளியின் படத்தை திறக்கிறார்கள், இதை மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்க தெருமுனை பிரச்சார கூட்டம்கூட நடத்த யோக்கியதை இல்லாமல் இருக்கிறோம். இந்த மாவட்டத்தில் கூட்டங்களே நடப்பதில்லை. நகர ஒன்றிய, கிளைச்செயலாளர்கள் எல்லாம் மா.செவுக்கு சால்வை போட்டுவிட்டு கட்சி நடப்பதாக ஏமாற்றுகிறார்கள்'' என்று பொங்கித் தீர்த்துவிட்டார்.
அவர் பேசும்போது சிலர் "பேசாதே' என்று கூச்சல் போட்டார்கள். ஆனால் துரைமுருகன், "அவரை பேசவிடுங்கள்' என்றார். தொண்டர்களும் பேசும்படி குரல் எழுப்பினார்கள். அதைத்தொடர்ந்து பேசிய அவர்..
""உண்மைகளைப் பேசுகிறவர்களை அடக்குவதால்தான் அறிவாலயத்தில் புகார்ப் பெட்டி வைக்கும்படி வந்திருக்கிறது. நாம் சரியாக பணியாற்றியிருந்தால் இன்றைக்கு துரைமுருகன், காந்தி, நந்தகுமார் எல்லோரும் மந்திரிகளாக இருந்திருப்பார்கள்''’என்றார்.
அவருடைய பேச்சுக்கு பலத்த ஆதரவு இருந்தது. முடிவாகப் பேசிய துரைமுருகன் தனது தொகுதியில் நடந்த கட்சிக் கூட்டமே சரியாக நடக்கவில்லை என்று வருத்தத்தை வெளிப்படுத்தினார். பரிமாறப்பட்ட கருத்துகளுக்கு அவர் சரியாக பதில் சொல்லாமல் தவிர்த்தார்.
கூட்டம் முடிந்ததும் தி.மு.க.வின் வாட்ஸ்அப் குழுக்களில் கடுமையான வாக்குவாதம் தொடங்கியது. இந்தச் சண்டை இப்போது துரைமுருகன், காந்தி ஆகியோர் முன்னிலையில் நிற்கிறது.
இந்தச் சண்டைகளுக்கு காரணம் என்னவென்று கட்சி முன்னோடிகளிடம் விசாரித்தபோது,…
""கட்சியின் நிர்வாகத்துக்காக வேலூர் மாவட்டத்தை கிழக்கு, மத்திய, மேற்கு என மூன்றாக பிரித்தார்கள். கிழக்கு மா.செவாக இராணிப்பேட்டை காந்தியும், மத்திய மா.செவாக நந்தகுமாரும், மேற்கு மா.செ.வாக முத்தமிழ்ச்செல்வியும் இருக்காங்க. இந்த 3 மாவட்டங்களில் மத்திய மாவட்டம் தான் பெரியது. மத்திய மாவட்டத்திற்குள்தான் மாவட்ட தலைநகரும், மாநகராட்சியுமான வேலூர் வருகிறது. நந்தகுமாரை, துரைமுருகன்தான் வளர்த்துவிட்டார். ஆனால், துரைமுருகனுக்கும் காந்திக்கும் இடையே பேலன்ஸ் செய்துகொண்டிருந்தார். தன் மகன் கதிர்ஆனந்த்துக்கு பெற நினைத்த மத்திய மா.செ. பதவி நந்தகுமாருக்குச் சென்றதும் துரைமுருகனும் மாறிவிட்டார்'' என்கிறார்கள்.
நந்தகுமார் மீது பலவிதமான புகார்கள் கூறப்பட்டாலும், தனது மாவட்டத்துக்குள் துரைமுருகன் மற்றும் காந்தி ஆதரவாளர்களை ஓரம்கட்டுகிறார் என்ற புகார்தான் முக்கியமாக கூறப்படுகிறது. ஆலோசனைக் கூட்டத்துக்கு காந்தியின் பெயரைப் போட்டிருந்தும் அவர் வராமல் தவிர்த்ததற்கு இதுவே காரணம் என்று சொல்கிறார்கள், நந்தகுமார் மீதான அதிருப்தியில்.
கூட்டத்தில் பிரச்சினை வெடிக்க முக்கிய காரணம்...? அதுவும் முதன்மைச் செயலாளர் முன்னிலையிலேயே இப்படி நடக்கும் அளவுக்கு சென்றுள்ளது.
-து. ராஜா