பகோடா ஆட்சியின் கடைசி பட்ஜெட்! -ஆதாரங்களுடன் விளாசிய ப.சி.

chidambaram

p chambaram

க்கள் அளித்த வாக்கின்படி 5 ஆண்டுகாலம் ஆட்சிசெய்யும் வாய்ப்பைப் பெற்ற மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு, தனது கடைசி முழு பட்ஜெட்டை அண்மையில் தாக்கல் செய்தது. ஜனாதிபதி உரையுடன் தொடங்கிய இந்த ஆண்டுக்கான முதல் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவித்துப் பேசிய மோடியின் பேச்சின் பெரும்பகுதி காங்கிரஸ் ஆட்சிக்காலத்தின் மீது அனல் அள்ளி வீசியது. "நாட்டை சீரழித்ததே காங்கிரஸ்தான் என பிரதமர் மோடி பேசியது, நாடாளுமன்ற மரபுகளை குழிதோண்டிப் புதைக்கும் செயல்' என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிய நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த எம்.பி.யும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம், மோடி அரசின் பட்ஜெட் குறித்து 12 கேள்விகளை நாடாளுமன்றத்தில் எழுப்பினார். பா.ஜ.க.விடம் சரியான பதில் இல்லை. அதே கேள்விகளை மக்கள் மன்றத்திலும் எழுப்பத் தொடங்கியிருக்கிறார்.

இந்தியாவின் பல பகுதிகளிலும் பட்ஜெட்டை தோலுரிக்கும் பொறுப்பை ப.சி.யிடம் கொடுத்துள்ளது காங்கிரஸ் தலைமை. சென்னையிலிருந்து தனது அதிரடி ஆட்டத்தைத் தொடங்கியுள்ளார் சிதம்பரம். பிப்ரவரி 10

p chambaram

க்கள் அளித்த வாக்கின்படி 5 ஆண்டுகாலம் ஆட்சிசெய்யும் வாய்ப்பைப் பெற்ற மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு, தனது கடைசி முழு பட்ஜெட்டை அண்மையில் தாக்கல் செய்தது. ஜனாதிபதி உரையுடன் தொடங்கிய இந்த ஆண்டுக்கான முதல் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவித்துப் பேசிய மோடியின் பேச்சின் பெரும்பகுதி காங்கிரஸ் ஆட்சிக்காலத்தின் மீது அனல் அள்ளி வீசியது. "நாட்டை சீரழித்ததே காங்கிரஸ்தான் என பிரதமர் மோடி பேசியது, நாடாளுமன்ற மரபுகளை குழிதோண்டிப் புதைக்கும் செயல்' என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிய நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த எம்.பி.யும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம், மோடி அரசின் பட்ஜெட் குறித்து 12 கேள்விகளை நாடாளுமன்றத்தில் எழுப்பினார். பா.ஜ.க.விடம் சரியான பதில் இல்லை. அதே கேள்விகளை மக்கள் மன்றத்திலும் எழுப்பத் தொடங்கியிருக்கிறார்.

இந்தியாவின் பல பகுதிகளிலும் பட்ஜெட்டை தோலுரிக்கும் பொறுப்பை ப.சி.யிடம் கொடுத்துள்ளது காங்கிரஸ் தலைமை. சென்னையிலிருந்து தனது அதிரடி ஆட்டத்தைத் தொடங்கியுள்ளார் சிதம்பரம். பிப்ரவரி 10-ந் தேதி லயோலா வணிக மேலாண்மைக் கல்வி நிறுவனத்தின் மத்திய பட்ஜெட் குறித்த ஆய்வு கருத்தரங்கத்தில் பேசிய ப.சி., அன்று மாலையில் சென்னை -தியாகராயநகரில் தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவரான தனது ஆதரவாளர் கராத்தே தியாகராஜன் ஏற்பாட்டில் டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் அசத்திய பொதுக்கூட்டத்தில் 5000-க்கும் மேற்பட்டவர்கள் திரண்டிருந்தனர். ப.சிதம்பரத்தின் அரசியல் ஆளுமையை வெளிப்படுத்தும் வகையில் 15 நிமிட ஆவணப்படத்தை டிஜிட்டலில் காட்சிப்படுத்தியிருந்ததை ப.சி., திருநாவுக்கரசர் உள்ளிட்ட தலைவர்கள் ரசித்தனர். மேலும் முன்னாள் தலைவர்கள் மூவர் அழைக்கப்பட்டிருந்த நிலையில்... இளங்கோவனையும் அவரது ஆதரவாளரான குஷ்புவையும் அழைக்காமல் நக்மாவை அழைத்துவந்து மேடையேற்றியதை பரபரப்பாக விவாதித்தனர் கதர்ச் சட்டையினர். தலைமை தாங்கிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் சுருக்கமான பேச்சுடன் முடித்துக்கொண்டு ப.சிதம்பரத்திற்கு வழிவிட்டார்.

காங்கிரஸ் கட்சியினர் மட்டுமின்றி, மத்திய பட்ஜெட்டால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் பலரும் ப.சி. என்ன சொல்கிறார் என்பதைக் கேட்க ஆர்வமாக வந்திருந்தனர். கருத்தரங்கிலும் பொதுக்கூட்டத்திலும் ப.சி., முன்வைத்த வாதங்கள் பா.ஜ.க அரசை நோக்கிய கணைகளாக சீறின.

tnagar

வேலை வாய்ப்பு: 70 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கியிருப்பதாக பா.ஜ.க. சொல்கிறது. ஆனால், அது சர்வதேச தொழிலாளர் அமைப்பு சொல்லும் விதிகளுக்குட்பட்ட வேலைகள் அல்ல. நிரந்தர வேலைகளை உருவாக்காமல், தற்காலிக வேலைகளைத்தான் சிறிய அளவில் உருவாக்கியுள்ளனர். வேலை வாய்ப்பு அலுவலகங்களில் 100 பேர் பதிவு செய்திருந்தால் 2 பேருக்கு மட்டுமே வேலை கிடைக்கிறது. இளைஞர்களை பகோடா விற்கச் சொல்வது இந்நாட்டின் இளைய சமுதாயத்தை அவமதிப்பதாகும். காங்கிரஸ் அரசின் திட்டங்கள் காரணமாக 2014-15 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.5 சதவீதம் உயர்ந்திருந்தது. தொழிலாளர்களின் வருங்கால வைப்புநிதி நிறுவனத்தில் 24 லட்சம் பேர் அந்தாண்டில் உறுப்பினர்களாக இருந்தனர் என்றால், அவ்வளவு பேர் வேலைவாய்ப்பை பெற்றிருந்தனர் என அர்த்தம். 2015-16 நிதியாண்டில் 8.2 சதவீதமாக வளர்ச்சி பெற்றிருக்கும்போது 27 லட்சம் பேரும், 2016-17-ல் வளர்ச்சி 7.1 ஆக சரிவை சந்தித்தபோதும் 75 லட்சம் பேரும், 2017-18-ல் 6.5 சதவீதமாக வீழ்ச்சியடைந்த நிலையிலும் 70 லட்சம் பேரும் வேலைவாய்ப்பை பெற்றதாகச் சொல்கிறது மோடி சர்க்காரின் பட்ஜெட். ஆனால் அதற்கான ஆதாரத்தை காட்டுங்கள் என்றால், காட்ட மறுக்கிறார்கள்.

தொழில்-முதலீடு: ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் பெரிய நிறுவனங்கள் தொழில் தொடங்கினால் 1000 பேருக்கு வேலை உருவாகும். ஆனால், அதே ஆயிரம் கோடி ரூபாயில் சிறு-குறு-நடுத்தரத் தொழில்களைத் தொடங்கினால் அதைவிட அதிகளவில் ஏராளமான வேலைவாய்ப்பு உருவாகும். மோடி அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் நூற்றுக்கணக்கான சிறு-குறு தொழில்கள் மூடப்பட்டுவிட்டன.

விவசாயம்: விவசாயத்தைப் பொறுத்தவரை கடந்த 4 ஆண்டுகளாக விவசாயிகளின் கூலி மற்றும் உற்பத்தி பொருளுக்கான விலை அப்படியே உள்ளது. விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை 50 சதவீதம் அதிகரிக்க உள்ளதாக சொல்லும் மோடி அரசு, அதற்கான திட்டத்தை தெளிவாக அறிவிக்கவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் குறைந்தபட்ச ஆதார விலை, 2 மடங்காக அதிகரிக்கப்பட்டது.

மருத்துவம்: ஏழைகளுக்கான மருத்துவ வசதி -காப்பீட்டுத் திட்டம் பற்றி பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தாலும் அதற்குரிய நிதி ஒதுக்கப்படவில்லை.

பொருளாதார-நிதி நிலவரம்: உலகப் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் சீனா 6.5% பொருளாதார வளர்ச்சி அடைந்து, 5 மடங்கு உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்துள்ளது. நம் நாட்டு பட்ஜெட்டில் வளர்ச்சிக்கு எதுவும் இல்லாததால், பொருளாதார வளர்ச்சி 6% தான் இருக்கும். வருவாய்ப் பற்றாக்குறையாலும் நிதிப் பற்றாக்குறை அதிகரிப்பதாலும் பொருளாதாரம் வளராது. பணவீக்கம்தான் அதிகரிக்கும். பண மதிப்பிழப்பாலும், ஜி.எஸ்.டி வரி விதிப்பாலும் இந்திய பொருளாதாரத்தையே நிர்மூலமாக்கிவிட்டார்கள்.

மோடி சர்க்காருக்கு அரசியல் செய்ய தெரியுமே தவிர, இந்திய பொருளாதாரம் குறித்து அறிவு ஜீரோதான். அடுத்தமுறை இவர்கள் பட்ஜெட் தாக்கல் செய்யப்போவதில்லை. மக்களிடத்தில் மிக வலிமையான மனப்புரட்சி உருவாகியிருக்கிறது. குஜராத்தில் 150 இடங்களைப் பிடிப்போம் என்றார் மோடி. 90 இடங்களைத்தான் பிடித்தார்கள். இனி வரும் ஒவ்வொரு தேர்தலிலும் பா.ஜ.க.வுக்கு மரண அடி கிடைக்கும் என விளாசினார் ப.சி.

-இரா.இளையசெல்வன்

P chidambaram
இதையும் படியுங்கள்
Subscribe