Skip to main content

காவிரி! பொங்கிய தமிழகம்!

Published on 04/04/2018 | Edited on 05/04/2018
"ஸ்கீம்'’என்ற வார்த்தை காவிரி மேலாண்மை வாரியம் என்பதை மட்டும் குறிக்காது’’ என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு, தனது தீர்ப்பு குறித்து விளக்கியிருந்தாலும் எங்களின் போராட்டத் தீயை அணைத்துவிட முடியாது என்பதை நிரூபித்திருக்கிறது தமிழகம். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்ற... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

விளையாட்டு மைதானமாக மாறிய வீராணம் ஏரி!! விவசாயிகள் கண்ணீர்

Published on 06/07/2018 | Edited on 06/07/2018

கடலுார் மாவட்ட டெல்டா பாசன பகுதி விவசாயிகளின் உயிர் நாடியாகவிளங்கிய வீராணம் ஏரி 

தற்போது விளையாட்டு மைதானமாக மாறியுள்ளது.

காட்டுமன்னார்கோவில் அருகே உள்ளது வீராணம் ஏரி. விவசாயிகளின் உயிர்நாடியாக விளங்கும் இந்த ஏரி மூலம் 70  ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட விளைநிலங்கள் பாசனம் பெற்று வருகிறது. மேலும், சென்னை மாநகர மக்களின்தாகத்தையும் 

தீர்த்து வருகிறது.

LAKE

 

 

 

கடந்த 4 ஆண்டுகளாக சரியான மழை இல்லாததால் ஏரியில் தண்ணீர் மிகவும் குறைவாக இருந்தது வந்தது. கடந்த 5. மாதங்களுக்கு முன்பு வரை அவ்வபோது பெய்யும் மழையால் ஏரியில் சில பள்ளமான இடங்களில் தண்ணீர் இருந்து வந்தது. அதன் பிறகு கடுமையான வறட்சி மற்றும் மேட்டூர் அணையில்போதிய அளவு தண்ணீர் இல்லாததால், பாசனத்திற்கு தண்ணீர் திறக்கவில்லை. அதனால்  தற்போதைக்கு வீராணத்திற்கு தண்ணீர் வருவதற்கான வாய்ப்பு இல்லை. எப்பழுதும் தண்ணீர் நிரம்பி கடல் போல் காட்சி அளிக்கும் வீராணம் ஏரி, தற்போது தண்ணீர் வரத்தின்றி  வரண்ட நிலமாக உள்ளது அதனால் காட்டுமன்னார்கோயில், லால்பேட்டை பகுதியை சேர்ந்த இளைஞர்கள்கால்பந்து, கைப்பந்து மற்றும் கிரிக்கெட் விளையாட்டுகளை தினமும் விளையாடி வருகிறார்கள்.

LAKE


காவிரிடெல்டாவின் கடைமடைபகுதி விவசாயிகளின் உயிர் நாடியாக இருந்து இந்த பகுதி மக்களின் வாழ்வாதரத்தை காத்து வந்த இந்த ஏரி விளையாட்டு மைதானமாக மாறி விளையாட்டு போட்டிகள் நடைபெறுவதை சாலையில் செல்லும் போது பார்த்து செல்லும் சில விவசாயிகள் கண்ணீர் கலங்கியவாறே செல்வதை ஒரு மணி நேரம் இந்த இந்த ஏரிகரை சாலையில் அமர்ந்து பார்த்தால் தெரியும்.

மேலும் மழைகாலங்களில் ஏரியில் சேமித்து வைக்கப்படும் தண்ணீரை இந்த பகுதியில் உள்ள விவசாய தேவைக்கு பிறகே சென்னை குடிநீருக்கு அனுப்பவேண்டும். பொதுப்பணித்துறை அதிகாரிகளோ சென்னைக்கு குடிநீர் அனுப்புவதற்காக மட்டுமே செயல்படுத்துகிறார்கள் என்று வீராணம் ஏரி பாசன விவசயிகள் சங்க தலைவர் பாலு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மாதவன், மாவட்டதுணைச்செயலாளர் ராமச்சந்திரன் உள்ளிட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.  

Next Story

தன் தோல்வியை மறைக்க தி.மு.க. மீது குறை கூறுவதா? - துரைமுருகன்

Published on 12/06/2018 | Edited on 12/06/2018

தன் தோல்வியை மறைக்க தி.மு.க. மீது குறை கூறுவதை நிறுத்திவிட்டு, காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தின் மூலம் உடனடியாக காவிரி நீரைப் பெற முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க. முதன்மைச் செயலாளர் துரைமுருகன் வலியுறுத்தியுள்ளார். 
 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  

குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12 ஆம் தேதியன்று தண்ணீர் திறந்து விட இயலாது என்று கூறியதோடு மட்டுமல்லாமல், ஏதோ அதிமுக ஆட்சியில் மட்டுமே ஜூன் 12 தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை நேற்றைய தினம் சட்டமன்றத்தில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பேசினார். திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி இருந்த காலங்களில் எல்லாம் சட்டப் போராட்டத்தையும் நடத்தியிருக்கிறோம். கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் தண்ணீரை பெற்றிருக்கிறோம். இது போன்ற தெளிவான தீர்ப்பு உச்சநீதிமன்றத்தில் இல்லாத காலத்திலும் கூட தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த போது கர்நாடகத்தில் யார் முதலமைச்சராக இருந்தாலும் அவர்களுடன் நல்லுறவு பேணி, பேச்சுவார்த்தை நடத்தி தமிழக விவசாயிகளின் நலனை காப்பதில் மிகுந்த அக்கறை காட்டியிருக்கிறார். மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட்டுள்ளார். ஆனால் இப்போது நீண்ட விளக்கத்தைக் கொடுத்துள்ள முதலமைச்சர் அதிமுக ஆட்சியில் இரு வருடங்கள் ஜூன் 6 மற்றும் 12 தேதிகளில் மேட்டூர் அணை திறந்து விடப்பட்டுள்ளதாக கூறியிருக்கிறார். அதற்கு முன்பு இருந்த கழக ஆட்சி காவிரி நீரை உரிய முறையில் பெற்று மேட்டூர் அணையில் தேக்கி வைத்ததால் மட்டுமே 12.6.2001 மற்றும் 6.6.2011 ஆகிய காலங்களில் குறித்த காலத்தில் அணை திறந்து விட முடிந்தது என்பதை ஏதோ முதலமைச்சர் வசதியாக மறந்து விட்டார்.


 

Chief Minister should take action to get Cauvery water


 

ஆனால் இன்றைக்கு நிலை அவ்வாறு இல்லை. 16.2.2018 அன்று காவிரியின் தமிழக உரிமையை நிலைநாட்டி உச்சநீதிமன்றம் தெளிவாக தீர்ப்பு அளித்து விட்டது. அதன் படி காவிரி வரைவு திட்டத்தை உருவாக்காமல், காவிரி மேலாண்மை வாரியத்தையும் அமைக்காமல் மத்திய அரசும்- அதிமுக அரசும் கைகோர்த்து 91 நாட்கள் வீண் காலதாமதத்தை உருவாக்கியதை காவிரி டெல்டா விவசாயிகளும், தமிழக மக்களும் மறக்கவில்லை. அது மட்டுமின்றி 18.5.2018 அன்று காவிரி வரைவுத் திட்டத்தையும் இறுதி செய்து ஜூன் 1 ஆம் தேதிக்குள் காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தை அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், 22 நாட்கள் கடந்த பிறகும் இன்று வரை காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையம் உருவாக்கப்படவில்லை. இந்த தாமதத்திற்கு மத்திய அரசு நேரடிக் காரணம் என்றால், தஞ்சை விவசாயிகளின் நிலை குறித்து கிஞ்சிற்றும் கவலைப்படாமல் உறங்கிக் கொண்டிருக்கும் அதிமுக அரசும் முக்கியக் காரணம் என்பதை மாண்புமிகு முதலமைச்சர் முழுமையாக மூடி மறைக்க முயற்சித்துள்ளார். அது தமிழக விவசாயிகள் மத்தியில் எடுபடாது. காவிரி ஆணையத்திற்கு முழு அதிகாரம் இருக்கிறது என்று வாதிட்டுக் கொண்டிருக்கும் அதிமுக அரசு, உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பு வெளிவந்ததிலிருந்து கடந்த 113 நாட்களில் ஆக்கபூர்வமான, அழுத்தம் தரக்கூடிய செயல்களில் ஈடுபட்டிருந்தால் இந்நேரம் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டிருக்கும். ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையை திறப்பதில் எந்த தடையும் இருந்திருக்காது. அதை கோட்டை விட்ட மாண்புமிகு முதலமைச்சர் தி.மு.க.வை குறை கூறுவதில் காட்டும் அக்கறையை, மத்திய பா.ஜ.க. அரசுக்கு அழுத்தம் கொடுப்பதிலோ, உச்சநீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பின் அடிப்படையில் தண்ணீரை திறக்க வைப்பதிலோ எவ்வித முயற்சியும் எடுக்க இயலவில்லை. மத்திய பா.ஜ.க. அரசை எதிர்த்துப் பேச முடியாத தன் இயலாமையை “மேட்டூர் அணையை ஜூன் 12 ஆம் தேதி திறக்க இயலாது” என்ற வடிவத்தில் நேற்றைய தினம் அவையில் அறிவித்திருக்கிறார்.
 

ஆகவே உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி அமைக்கப்படும் காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தின் மூலம் 113 நாட்களாக காவிரி நீரைப் பெறாமல் வேடிக்கை பார்த்து விட்டு இன்றைக்கு மேட்டூர் அணையை ஜூன் 12 ஆம் தேதி திறக்க முடியாது என்று முதலமைச்சர் கூறுவது உள்ளபடியே மன வேதனையளிக்கிறது. தன் தோல்வியை மறைக்க தி.மு.க. மீது குறை கூறி திசை திருப்ப முனைவது அதை விட வேதனை தருகிறது. ஆகவே விவசாயிகளின் நலனில் அரசியல் செய்வதை நிறுத்தி விட்டு, காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தின் மூலம் உடனடியாக காவிரி நீரைப் பெற மாண்புமிகு முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மத்திய அரசுக்கு அதற்கு தேவையான அழுத்தத்தை கொடுக்க முன் வர வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.