தமிழகத்தில் ஒருபக்கம் கள்ளச்சாராய ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரம் காட்டப்பட்டாலும் மற்றொரு பக்கம் டாஸ்மாக் விற்பனையை அதிகரிக்க டாஸ்மாக் விற்பனையாளர்கள், பார் நடத்தும் உரிமையாளர்கள், 24 மணி நேரமும் மது விற்பனையை நிறுத்தாமல் ஓட்ட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் சுமார் 4,500க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் செயல்படு கின்றன. அதேபோல் 300க்கும் மேற்பட்ட எலைட் மதுபானக் கடைகள் இயங்கிவருகின்றன. இவைபோக தனியார் ரிக்ரியேஷன் க்ளப் என்ற பெயரிலான எக2 மதுபான விடுதிகள் தனி. இவற்றையும் அரசியல் செல்வாக்குள்ளவர்கள் தான் நடத்துகிறார்கள். இதிலும் போலி சரக்கு கள் மற்றும் 24 மணிநேரமும் செயல்படுகிறது. சமீபகாலமாக நடுத்தர வர்க்கத்தினர் பெரும்பாலும் இந்த எலைட் மதுபானக் கடைகளுக்கு செல்வதையே விரும்புகின்ற னர். நாள்தோறும் தினக்கூலிகளாக பணி யாற்றக்கூடிய உடல் உழைப்பு தொழி லாளர்கள் மட்டும்தான் டாஸ்மாக் கடைகளுக்கு வருகின்றனர். அதிலும் டாஸ்மாக் கடைகளோடு சேர்ந்த பார்களும் இயங்கி வருவதால், பகல் 12 மணியிலிருந்து இரவு 10 மணி வரை டாஸ்மாக் மூலம் மது விற்பனை நடைபெற்று வருகிறது. இரவு 10 மணிக்கு பிறகு மறுநாள் மதியம் 12 மணி வரை டாஸ்மாக் மூடப்பட்டபோதும் பாரில் மது விற்பனை நடைபெறுகிறது. அரசு குறிப்பிட் டுள்ள அந்த நேரத்தில் ஒரு சாதாரண டாஸ்மாக் கடையில் 2 லட்சத்திற்கு மது விற்பனை நடைபெறுகிறது. அதேபோல் பாரில், அரசால் குறிப்பிடப்படாத நேரத்தில், சட்டவிரோதமாக விற்கப்படும் மது வ
தமிழகத்தில் ஒருபக்கம் கள்ளச்சாராய ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரம் காட்டப்பட்டாலும் மற்றொரு பக்கம் டாஸ்மாக் விற்பனையை அதிகரிக்க டாஸ்மாக் விற்பனையாளர்கள், பார் நடத்தும் உரிமையாளர்கள், 24 மணி நேரமும் மது விற்பனையை நிறுத்தாமல் ஓட்ட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் சுமார் 4,500க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் செயல்படு கின்றன. அதேபோல் 300க்கும் மேற்பட்ட எலைட் மதுபானக் கடைகள் இயங்கிவருகின்றன. இவைபோக தனியார் ரிக்ரியேஷன் க்ளப் என்ற பெயரிலான எக2 மதுபான விடுதிகள் தனி. இவற்றையும் அரசியல் செல்வாக்குள்ளவர்கள் தான் நடத்துகிறார்கள். இதிலும் போலி சரக்கு கள் மற்றும் 24 மணிநேரமும் செயல்படுகிறது. சமீபகாலமாக நடுத்தர வர்க்கத்தினர் பெரும்பாலும் இந்த எலைட் மதுபானக் கடைகளுக்கு செல்வதையே விரும்புகின்ற னர். நாள்தோறும் தினக்கூலிகளாக பணி யாற்றக்கூடிய உடல் உழைப்பு தொழி லாளர்கள் மட்டும்தான் டாஸ்மாக் கடைகளுக்கு வருகின்றனர். அதிலும் டாஸ்மாக் கடைகளோடு சேர்ந்த பார்களும் இயங்கி வருவதால், பகல் 12 மணியிலிருந்து இரவு 10 மணி வரை டாஸ்மாக் மூலம் மது விற்பனை நடைபெற்று வருகிறது. இரவு 10 மணிக்கு பிறகு மறுநாள் மதியம் 12 மணி வரை டாஸ்மாக் மூடப்பட்டபோதும் பாரில் மது விற்பனை நடைபெறுகிறது. அரசு குறிப்பிட் டுள்ள அந்த நேரத்தில் ஒரு சாதாரண டாஸ்மாக் கடையில் 2 லட்சத்திற்கு மது விற்பனை நடைபெறுகிறது. அதேபோல் பாரில், அரசால் குறிப்பிடப்படாத நேரத்தில், சட்டவிரோதமாக விற்கப்படும் மது விற்பனை குறைந்தபட்சம் 10 ஆயிரத்திற்கு நடைபெறுகிறது.
இது மட்டுமல்லாமல் பாரில் விற்பனை செய்யப்படும் வாட்டர் பாட்டில், பிளாஸ்டிக் டம்ளர் மற்ற இதர உணவு தின்பண்டங்கள், அசைவ உணவுகள் என நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. இது ஒவ்வொரு கடைக்கும், பாருக்கும் வித்தியாசப் படும். அதேபோல், பாரில் மது விற்பனை செய்வதற்கு என்று பீட் போலீசுக்கு மாமூல், அந்த ஏரியாவிலுள்ள கட்சிக்காரர்களுக்கு தனி யாக கவனிப்பு, உணவுப் பாதுகாப்புத் துறைக்கு கவனிப்பு, மதுவிலக்கு பிரிவு காவல்துறைக்கு கவனிப்பு, பாருக்கான மாத வாடகை, பணியாளர்களுக்கான சம்பளம் என்று அந்த பார் இயங்கினாலும், இயங்காவிட்டாலும் ஒவ்வொரு மாதமும் கட்டாயம் கொடுக்க வேண்டிய நிலை உள்ளது.
தி.மு.க. அரசு பொறுப்பேற்றவுடன் டாஸ்மாக் விற்பனை அதிகரித்துள்ளது. தமிழ் நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி வகித்த காலம் வரை டாஸ்மாக் மிகச் சிறப்பாக செயல்பட்டதோடு, டாஸ்மாக் கடை களில் பாட்டிலுக்கு 5 ரூபாய் கூடுதலாகப் பெறப் பட்டது. அதேபோல் டாஸ்மாக்கிலிருந்து கிடைக்கும் வருமானத்தில் அரசு கஜானாவிற்கு சென்றது போக, மீதம் கூடுதலாக வரும் வரு மானத்தில் அந்தந்த மாவட்டத்தில் அதற்கென தனியாக நபர்கள் நியமிக்கப்பட்டு, மாவட்டங் களில் உள்ள ஆளுங்கட்சி பிரமுகர்களுக்கு அந்த பணம் கொண்டு சேர்க்கப்பட்டது. அவர்கள், கட்சியிலுள்ள முக்கிய நிர்வாகிகள், கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் என அவர்களின் பதவிக்கு தகுந்தாற்போல் ஒவ்வொரு மாதமும் சரியாகப் பிரித்துக் கொடுக்கப்பட்டு வந்தது.
கடந்த 2023, ஜூன் மாதம் இத்துறையின் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, மோசடி வழக்கு மற்றும் சட்டவிரோத பணப் பரிமாற்றம் உள்ளிட்ட வழக்குகளில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அன்று முதல், சரியாக செயல்பட்டுவந்த மதுவிலக்குத் துறை கொஞ்சம் பின்னடைவை சந்திக்க ஆரம்பித்தது. மேலும், செந்தில் பாலாஜிக்கு எப்படியும் ஜாமீன் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் அவர் இலாகா இல்லாத அமைச்சராக பொறுப்பு வகித்து வந்தார். பின்னர் அமைச்சர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டார். இருந்தபோதும் அவருக்கு இன்றுவரை ஜாமீன் வழங்கப்படவில்லை.
இந்நிலையில், தமிழகத்திலுள்ள டாஸ்மாக் கடைகளிலிலிருந்து வரும் வருமானத்தை அனைத்து மட்டங்களுக்கும் பகிர்ந்தளிப் பதிலும் தொய்வு ஏற்பட்டுள்ளதாகக் கூறப் படுகிறது. டாஸ்மாக் கடையிலிருந்து கிடைக்கும் ஒவ்வொரு மாத வருமானத்திலிருந்து குறிப் பிட்ட அளவு, அந்தந்த மாவட்டங்களில் உள்ள அமைச்சர்களுக்கு பிரித்து வழங்கப்படுகிறது. அதேபோல் அமைச்சர்கள் இல்லாத மாவட் டங்களில் மாவட்ட செயலாளர்களுக்கு வழங் கப்பட்டு, அவர்கள் தங்கள் அடிப்பொடிகள் மூலம் பார் காசை கட்சிக்காரர்களுக்கு பிரித்து கொடுக்கிறார்கள். இந்த பார் காசுகளை மொத்த மாக வசூல் செய்து கொடுக்கும் பணிக்கென மாவட்ட வாரியாக ஒருவரை நியமித்துள்ளனர். அவர்கள் மூலம் வசூலிக்கப்பட்ட பணமே அனைத்து மட்டத்திலுள்ள அரசியல்வாதிகளுக் கும், எம்.எல்.ஏ., பகுதி செயலாளர், வட்டச் செயலாளர் மேலும் அந்தந்த ஏரியாவில் கோலோச்சும் எதிர்க்கட்சி முக்கிய புள்ளிகளுக் கும் பகிர்ந்தளிக்கப்பட்டு வழங்கப்படுகிறது. இப்படி வழங்கப்படுவதில், கட்சியில் அடிமட் டத்திலிருக்கும் சாதாரண நிர்வாகிக்கு மாதம் 2 ஆயிரம் ரூபாய் வரை கிடைத்துவந்திருக்கிறது. அந்த தொகையும் கடந்த 6 மாத காலமாக வழங்கப்படுவதில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் கள்ளச் சாராயம், குட்கா, கஞ்சா போன்ற போதை ஒழிப்பு போன்றவற்றை 2.0, 3.0 என்ற அடுத் தடுத்த கட்டத் திட்டமிடல்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தாலும், தற்போது கஞ்சாவிற்கு இளைஞர்கள் அடிமையாவது அதிகரித்துவரு கிறது. குறைந்த விலையில், கிடைக்கும் கஞ்சா வை நோக்கித்தான் தற்போது இளைஞர்கள் படையெடுக்கின்றனர். மது பானங்களின் விலை அதிகரித்திருப்பதால், அதிக விலை கொடுத்து மதுவை வாங்கி அருந்துவதால் கிடைக்கும் போதையை விட, சற்று குறைவான விலையில் கிடைக்கும் கஞ்சாவில் போதை அதிகமிருப்ப தால், தற்போது போதைக்கு அடிமையாகும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்த கஞ்சா விற்பனையைத் தடுக்க பல முயற்சிகள் எடுக்கப்பட்டாலும், அதிகாரிகளின் துணையோடு கஞ்சா விற்பனை மற்றும் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. சமீபத்தில் கூட நாகை மாவட்ட எஸ்.பி. ஹர்சிங்கின் தனிப்படை 200 கிலோ கஞ்சா மற் றும் 5 கார்களை பறிமுதல் செய்தது. அதில் நாகை மாவட்டத்தை சேர்ந்த அ.தி.மு.க. யூனியன் சேர்மன் அறிவழ கன் என்பவரை அந்த வழக்கிலிருந்து விடுவிக்கக்கோரி எஸ்.பி. யிடம் 30 லட்சம் பேரம் பேசப்பட்டு, 20 லட்சம் உடனடியாக வழங்கப் பட்டதாகக் கூறப்பட் டது. அதே சமயம், ஒரு பி.எம்.டபிள்.யு. காரை எஸ்.பி. கேட்ட தாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இன்றைய சூழ்நிலையில் குடிக்கு அடிமையாகும் பொதுமக்க ளின் எண்ணிக்கையைப் போலவே, பள்ளிக்கு செல்லும் மாண வர்கள் மட்டுமல்லாது மாணவிகளும் மதுப் பழக்கத்துக்கு அடிமையாகத் தொடங்கியுள்ளது பெற்றோர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற் படுத்தியுள்ளது. மதுப்பழக்கம் மட்டுமல்லாது, கஞ்சா போன்ற போதைப் பொருட்களுக்கும் மாணவர்கள் அடிமையாகிவருகிறார்கள். இவர்களால், பாடமெடுக்கும் ஆசிரியர்கள் வர்க்கத்துக்கும் கொலைமிரட்டல் வரை பிரச்சனைகள் ஏற்படுகின்றன. கல்லூரி மாணவர்கள் மத்தியிலும் போதைப்பழக்கம் அதிகரித்துவருகிறது. தமிழக மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக பூரண மதுவிலக்கு இருந்தாலும், தமிழகத்திலுள்ள பெரும்பாலான பெற்றோர்களின் மிகப்பெரிய கோரிக்கை கஞ்சா புழக்கம் இல்லாத, கஞ்சா போதையில்லா தமிழகத்தையும் உருவாக்க வேண்டும் என்பதாக உள்ளது. எனவே அரசாங்கம், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களைத் தடுப்பதில் தீவிர முனைப்பை காட்டி, கஞ்சா விற்பனை, கஞ்சா கடத்தல், கஞ்சா ஏற்றுமதி உள்ளிட்ட அனைத்து சட்டவிரோதச் செயல்பாடுகளையும் தடுத்து நிறுத்த வேண்டும். அதில் ஈடுபடக்கூடிய சமூக விரோதிகளையும், அவர்களுக்கும் துணைபோகும் அதிகாரிகளையும் கண்டறிந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்கள். அரசு செவி சாய்க்குமா?