ணக்கார முதியவர்களின் சொத்துக்களைக் குறிவைக்கும் க்ரைம்கள் தலைநகரில் மீண்டும் தலைதூக்கியிருக்கின்றன.

சென்னை -கீழ்ப்பாக்கத்தில் இருக்கிறார் மாலதி ஸ்ரீபதிராவ். இவரது தந்தையும் கேன்சர் ட்ரீட்மெண்ட் ஸ்பெஷலிஸ்ட்டுமான டாக்டர் ராமராவ், கேன்சரை குணப்படுத்தும் கதிரியக்கத்தை கண்டறிந்த விஞ்ஞானி மேரி க்யூரியின் மாணவர். மாலதியின் கணவரான ஸ்ரீபதிராவும் பிரபல டாக்டராக இருந்தவர். தந்தையையும் கணவரையும் இழந்துவிட்ட டாக்டர் மாலதிக்கு தற்போது வயது 78. இவரது குடும்பத்துக்கு சொந்தமான 18 கிரவுண்ட் (200 சென்ட்) நிலத்தை அபகரிக்கும் முயற்சியில் குதித்துள்ளனர் சென்னையின் பிரபல கிரிமினல்கள்.

oldagers

இது குறித்து நம்மிடம் பேசிய மாலதி ஸ்ரீபதிராவ், ""ஈ.சி.ஆரில் உத்தண்டியிலுள்ள எங்கள் குடும்பச் சொத்துகளை பராமரித்து வந்த எனது மகன் சுரேஷ்ராவ் கடந்த வருடம் இறந்துவிட்டார். சொத்துகளை விற்று எனது பேரன், பேத்திகளின் பெயரில் வங்கியில் டெபாசிட் செய்துடலாம்னு நினைத்தேன். கீழ்ப்பாக்கத்தில் எனது வீட்டு வளாகத்தின் ஒரு போர்ஷனில் குடியிருந்த வக்கீல் அனுராதா வாடகை தராமல் இழுத்தடித்ததால், காலி பண்ண வைத்தேன்..

Advertisment

திடீரென ஒருநாள், அவரது கணவர் மாட்டு சேகருடன் வந்த அனுராதா, "உத்தண்டி நிலத்தை விக்கப்போறீங்கன்னு கேள்விப்பட்டோம். டாகுமெண்டை கொடுங்க, வித்து தருகிறோம்'னு சொன்னாங்க. எனக்கு நம்பிக்கை இல்லைங்கிறதனால துரத்தி அடிச்சுட்டேன். இருந்தாலும் மறுநாள் ஜெராக்ஸ் பாபு என்கிற ஆளை அழைச்சிக்கிட்டு வந்து, "இவர் மிகப் பெரிய கோடீஸ்வரர். சிங்கிள் ஃபேமண்டில் செட்டில் பண்ணிடுவார். ஒரிஜினல் டாகுமெண்ட்டை கொடுங்கள், சரிபார்த்துட்டு மற்ற டீலிங்கை பேசிக்கலாம்'னு சொன்னார்கள் அனுராதாவும் மாட்டுசேகரும்.

ஓரளவு கன்வின்ஸ் ஆகி, ஒரிஜினல் டாகுமெண்ட்டை கொடுத்துவிட்டேன். இரண்டு நாள் கழிச்சி வந்தவங்க,’12 கோடிக்கு எழுதிக்கொடுக்கச் சொன்னாங்க.. 70, 80 கோடி ரூபா சொத்து அது. அதனால தர மறுத்து, டாக்குமெண்ட்டை திருப்பிக் கேட்டப்ப, "நாளைக்கு எழுதித் தந்தாகணும்'னு மிரட்டுனாங்க. பயந்து போன நான், மறுநாள், என் குடும்ப நண்பர்களை வரவழைத்து வீட்டில் இருக்கும்படி சொன்னேன். அனுராதாவும் மாட்டுசேகரும் வந்து மிரட்டுனப்ப, போலீசுக்குப் போவோம்னு சொன்னோம். அதற்கு சேகர், "போலீஸ்ட்ட என் முழுப்பேரையும் சொல்லுங்க. அப்போ தெரியும் நான் யாரு'ன்னு சொல்லிக்கிட்டே, இடுப்பில் வைத்திருந்த துப்பாக்கியை காட்ட, மிரண்டு போய்ட்டோம்.

கிரிமினல் மாட்டு சேகர், போலி டாகுமெண்ட் தயாரிக்கும் ஜெராக்ஸ்பாபு இருவரைப் பற்றியும் பிரதமர் மோடி அலுவலக உயரதிகாரிகளின் நண்பர்களாக இருக்கும் எங்கள் குடும்பத்திற்கு நெருக்கமான ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்றோம். அவர்கள் ஆலோசனைப்படி, போலீஸ் கமிஷனர் akvishwanath-commissinorஏ.கே.விஸ்வநாதனிடம் நடந்தவற்றைப் புகாராக எழுதிக் கொடுத்தேன். கமிஷனர் உத்தரவிட்டும், அண்ணாநகர் காவல்துறையினர், மாட்டு சேகருடன் சேர்ந்துகொண்டு பிரச்சனையை தள்ளிப்போட்டதால் எனக்கு பல இடங்களிலிருந்தும் மிரட்டல்கள் வந்தன.

Advertisment

15 நாள் கழித்து, மீண்டும் கமிஷனரின் கவனத்துக்கு கொண்டுபோக, அவரது அதிரடி ஆக்ஷனில் 4 மணி நேரத்தில் ஒரிஜினல் டாகுமெண்டுகள் என்னிடம் வந்து சேர்ந்து, கிரிமினல்களிடமிருந்து என் நிலம் மீண்டது'' என விவரிக்கிறார் பயம் விலகாத மாலதி ஸ்ரீபதிராவ்.

இது குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரிடம் விசாரித்தபோது, ’’ ""வயதானவர்களின் பராமரிப்பிலும் அனாதையாகவும் கிடக்கும் சொத்துக்கள் மீது அரசியல்வாதிகளும் குறி வைப்பதால் அவர்களுக்காக களமிறங்கும் கிரிமினல்களுக்கு போலீசில் சிலரும் துணை போவதுதான் கொடுமை''‘என்கின்றனர் வேதனையுடன்.

-இளையர்

படம் : அசோக்

----------------------------------

வந்த செய்தி: திவாகரன் கட்டளைக்குப் பணிந்த அமைச்சர், திகைப்பில் போலீஸ்.

விசாரித்த உண்மை: நாகை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள சேண்டிருப்பைச் சேர்ந்த பக்கிரிசாமியின் வீட்டிலிருந்த வேப்பமரம் பக்கத்து வீட்டு பாலையாவின் வீடு மீது விழுந்துவிட்டது. இதனால் டென்ஷனான பாலையா, பக்கிரிசாமியை வீடு புகுந்து தாக்கியிருக்கிறார். தாக்கப்பட்ட பக்கிரிசாமி, மாஜி பா.ம.க. பிரமுகர் வி.ஜி.கே.மணியின் உதவியை நாட, மணியும் திவாகரன் கட்சியைச் சேர்ந்த மல்லியம் ராஜாவும் சேர்ந்து பாலையாவை புரட்டி எடுத்திருக்கிறார்கள். நடுங்கிப்போன பாலையா, குத்தாலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததும்... மணியை விட்டுவிட்டு, மல்லியம் ராஜாவை தூக்கி வந்து ஸ்டேஷனில் உட்கார வைத்துவிட்டனர். இந்த தகவல் ஜெய்ஆனந்த் மூலம் திவாகரன் காதுக்குப் போனதும், அமைச்சர் ஓ.எஸ்.மணியனைத் தொடர்புகொண்டு, "எந்தக் கேஸும் போடாம மல்லியம் ராஜாவை ரிலீஸ்பண்ணச் சொல்லவும்' என கட்டளை பறந்துள்ளது. உடனே பணிந்த மணியன், பூம்புகார் எம்.எல்.ஏ. பவுன்ராஜை ஸ்டேஷனுக்கு அனுப்பி ராஜாவை வெளியே கொண்டு வந்துள்ளார். நடந்ததை நினைத்து திகைப்பில் இருக்கிறது நாகை மாவட்ட போலீஸ்.

-செல்வகுமார்

வந்த செய்தி: இ.பி.எஸ். அ.தி.மு.க. + இந்து முன்னணி கூட்டணியால் நூற்பாலைக்கு கரண்ட் கட்.

விசாரித்த உண்மை: 1880-ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் மதுரை, தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டம் வி.கே.புரத்தில் தொடங்கப்பட்டு இன்றுவரை இயங்கி வருவது மதுரா கோட்ஸ் நூற்பாலை. மூவாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்யும் வி.கே.புரம் ஆலையின் மின்சார சப்ளையை கடந்த வாரம் திடீரென துண்டித்தனர். ஆலை தரப்பினர் காரணம் கேட்டபோது, ஆலையின் சாயக்கழிவு தாமிரபரணியில் கலந்து மாசுபடுவதாகச் சொல்லப்பட்டது. மாதம்தோறும் கட்ட வேண்டிய கப்பத் தொகையை துறைக்கும் துறையின் துரைக்கும் கட்டியும் ஏன் கரண்டை கட் பண்ணினார்கள் என யோசித்த ஆலை நிர்வாகத்திற்கு, ஃப்ளாஷ்பேக் சம்பவம் ஒன்று பளிச்சிட்டது. இந்த ஆலையின் அண்ணா தொழிற்சங்கத் தலைவராக இருப்பவர் அ.தி.மு.க. மாஜி எம்.எல்.ஏ. அம்பாசமுத்திரம் சக்திவேல் முருகன். இ.பி.எஸ்.சின் ஆதரவாளரான இவர், காண்ட்ராக்ட் லேபர்களை வைத்துக்கொண்டு இந்த ஆலையால் வருமானம் பார்த்து வந்தார். சமீபத்தில் சக்திவேல் முருகனுக்கும் ஆலை நிர்வாகத்துக்கும் உரசல் ஏற்பட்டது. அடுத்த சம்பவம், வி.கே.புரத்தில் நடந்த மாநாட்டிற்காக பெருந்தொகை கேட்டு இந்து முன்னணி நெருக்கடி கொடுத்தும் ஆலைத் தரப்பு மசியவில்லை. இதுதான் ஃப்ளாஷ்பேக். ஆனாலும் அசராத ஆலை நிர்வாகமோ, ஐகோர்ட்டின் மதுரை கிளையில் முறையிட்டு, கரண்ட் கனெக்ஷனை இரண்டேநாளில் வாங்கிவிட்டது.

-பரமசிவன்