லியோ' படம் முடிந்து அதன் ‘பர்ஸ்ட் லுக்’ போஸ்டர் பாடல் வெளியீடு என நடிகர் விஜய்யின் பிறந்தநாள் தமிழ்நாடு முழுவதும் நள்ளிரவு பன்னிரண்டு மணி தொடங்கி பெருமளவில் கொண்டாடப்பட்டது. “விரைவில் அரசியலுக்கு வரப்போகிறேன்” என்கிற அறி விப்பை லியோ படம் வெளிவருவதற்கு முன்பு நடிகர் விஜய் அறிவிக்க உள்ளார் என்பதால் அவரின் இந்த பிறந்தநாளை பத்திரிகை விளம்பரங்கள், விழாக்கள், சமூக வலைத்தளக் கொண்டாட்டங்கள் என தூள் கிளப்பினார்கள் விஜய் ரசிகர்கள்.
இந்த கொண்டாட்டங்கள் அமர்க்களமாக நடக்க வேண்டும் என விஜய் ரசிகர் மன்றத் தலைவர் புஸ்ஸி ஆனந்த் மெனக்கெட்டார். இரவு முழுவதும் விழித்திருந்து இந்த கொண்டாட்டங்களை சமூக வலைத் தளங்கள் மூலமாக ‘லைவ்வாகப் பார்த்துக்கொண்டு இருந்தார் விஜய் என்கிறார்கள் அவருக்கு நெருக்க மானவர்கள்.
யார் இந்த புஸ்ஸி ஆனந்த்?
‘புதுவை மாநில காங்கிரஸ் கட்சி’ என புதுச்சேரி கண்ணன் துவங்கிய கட்சியில் ‘புஸ்ஸி’ தெரு என பிரெஞ்சுக்காரர்களால் அழைக்கப்பட்ட வெறும் ஐயாயிரம் ஓட்டுக்கள் அடங்கிய சட்டமன்றத் தொகுதியில் 2500 வாக்குகள் வாங்கி 2006 ஆம் ஆண்டு ஜெயித்து, அதே தொகுதியில் மீண்டும் இரண்டு முறை தோற்றவர்தான் இந்த புஸ்ஸி ஆனந்த். சாதாரண விறகுக் கடை முதலாளியான இவர் இன்று, “"விஜய் தமிழ்நாட்டுக்கு முதல்வர், நான் புதுவைக்கு முதல்வர்'’என பேசி வருகிறார்.
முன்னாள் எம்.எல்.ஏ. .என்ற அந்தஸ்தில் விஜய் ரசிகர் மன்றத்தின் சாதாரணக் கிளையின் தலைவராக இருந்த இவருக்கு தமிழ்நாடு முழுக்க விஜய் ரசிகர் மன்றத் தலைவராக விஜய்யின் அப்பா எஸ்.ஏ. சந்திரசேகர் பதவி கொடுத்தார். விஜய்யின் சித்தப்பா புதுவையில் எல்லப்பிள்ளை சாவடி என்கிற இடத்தில் குடியிருந்தார். அடிக்கடி வேளாங்கண்ணி மாதாகோயிலுக்குப் போகும் விஜய்யும் அவரது குடும்பத்தினரும் புதுவையில் உள்ள சித்தப்பாவை சந்திக்க வரும்போது புஸ்ஸி ஆனந்துக்குப் பழக்கமானார் கள். இந்த புஸ்ஸி ஆனந்த் மீது பல வில்லங்கமான புகார்கள் உள்ளது.
புஸ்ஸி தெருவில் உள்ள தனியார் வங்கியின் முன்பு படுத்திருந்த ரிக்சாக்காரர் ஒருவர் இறந்து விட்டார். அவரது பிணத்தை அந்த கட்டிடத் திற்குள் போட்டு புஸ்ஸி ஆனந்த் பிரச்னை செய்ய அந்தக் கட்டட உரிமை யாளர் புஸ்ஸி ஆனந்துக்கே மிகக் குறைந்த விலையில் அந்த சொத்தை விற்றுவிட்டார். இதுபோல புதுவை முழுவதும் குடியிருக்கும் பிரான்ஸ் நாட்டவர்களின் வில்லங்கமான சொத்துக் களை கபளீகரம் செய்வது புஸ்ஸி ஆனந்தின் ஸ்டைல் என இவரைப் பற்றி சொல்கிறார்கள் புதுவை வாசிகள். புஸ்ஸி ஆனந்த் பற்றி பல பத்திரிகைகளில் வில்லங்கமான புகார்கள் செய்திகளாகவும் வந்துள்ளது.
புஸ்ஸி ஆனந்த்தின் மாமா பாண்டிச்சேரியில் எஸ்.பி.யாக இருந்த விஜயகுமார். இவர் இப்பொழுது புதுவை பா.ஜ.க. அரசில் பொதுப் பணித்துறை அமைச்ச ராக இருக்கும் நமச்சிவாயத் துக்கு மிகவும் நெருக்கம். நமச்சிவா யம் மூலம் பா.ஜ.க.வின் தலைவர்களில் ஒருவரான அமித்ஷா, புஸ்ஸி ஆனந் துக்கு பழக்க மாகிறார். எம். எல்.ஏ.வாக இருந்த காலத்தி லிருந்து புதுவை முதல்வர் ரெங்க சாமிக்கு மிகவும் நெருக்கமாகச் செயல்பட்டு வரு பவர் புஸ்ஸி ஆனந்த். ஒருபக்கம் ரெங்கசாமி, இன்னொரு பக்கம் நமச்சிவாயம், முழு நேர விஜய் ரசிகர் மன்றம், இது தவிர ரியல் எஸ்டேட், பைனான்ஸ் எனப் பிசியாக இருக் கும் புஸ்ஸி ஆனந்தே விஜய்யின் அனைத்து அசைவுகளையும் முடிவு செய்கிறார்.
“இவரைப் பார்க்காமல் எந்தத் தயாரிப்பாள ரும் விஜய்யைப் பார்த்துவிட முடியாது. புஸ்ஸி ஆனந்த் மந்திரவாதிகளை வைத்து எனது மகனை என்னிடமிருந்து பிரித்து விட்டார்” என விஜய்யின் அம்மாவும் அப்பாவும் புலம்பும் அளவிற்கு விஜய்யிடம் செல்வாக்குப் பெற்றவர்.
சமீபத்தில் நடந்த மாணவர்களுக்கு பரிசளிக் கும் விழாவில் புஸ்ஸி ஆனந்த் தனக்கு வேண்டப் பட்ட மாணவர்களை கொண்டுவந்து புகுத்திவிட்ட தாக விஜய் ரசிகர் மன்றத்தினர் குற்றம்சாட்டுகின் றார்கள். ரெங்கசாமி பலமுறை விஜய்யை அவரது வீட்டில் சந்தித்திருக்கிறார். காமராஜரைப் பற்றி விஜய்க்கு சொல்லிக் கொடுத்தது ரெங்கசாமிதான். அதே நேரத்தில் நமச்சிவாயம் மூலமாக புஸ்ஸி ஆனந்த் பா.ஜ.க. தலைவர்களிடம் பேசி வருகிறார்.
2026-ல் அரசியலுக்கு வரும் விஜய் தி.மு.க.வுக்கு சாதகமாக விழும் இளைஞர் வாக்கு களை பிரிப்பார், அதன் மூலம் அ.தி.மு.க. கூட்டணி வெற்றிபெறும் என பா.ஜ.க. தலைமை போட்டி ருக்கும் அரசியல் கணக்குதான் விஜய்யின் அரசியல் பிரவேசத்துக்கான பிள்ளையார் சுழியாக அமைந்துள்ளது. அதற்காக ஒரு பெரிய விழாவை தொகுதிவாரியாக நடத்திய விஜய் ஒவ்வொரு ஊரிலும் உள்ள பூத் கமிட்டி உறுப்பினர்களோடு பல மணிநேரம் தனியாகப் பேசியுள்ளார்.
விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை விவகாரங் களில் முன்னணி சினிமா நடிகை திரிஷா சம்பந்தப் பட “அதைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம்” என விஜய் தள்ளி வைத்துள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் விஜய்யின் தீவிர அரசியல் பிரவேசம் பற்றி விளக்குகிறார்கள்.
விஜய்யின் அரசியல் நடவடிக்கைகளை ஆதரித்து பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையும் கருத்துத் தெரிவித்துள்ளார். இவையெல்லாம் பார்த்தால், பா.ஜ.க.வின் அரசியல் காய் நகர்த்தல்களில் முன்பு ரஜினியைப் பயன்படுத்தியது போல் இப்பொழுது விஜய்யைப் பயன்படுத்த திட்டமிடுகிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது” என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
“விஜய் பெரியாரைப் பற்றியும் அம்பேத் கரைப் பற்றியும் புகழ்ந்து பேசுகிறார். அது அவரது தனிப்பட்ட கருத்து. அரசியல் நகர்வுகளில் பா.ஜ.க.வின் கைப்பாவையாகவே விஜய் நகர்வார் என்கிறது” புஸ்ஸி ஆனந்துக்கு நெருக்கமான வட்டாரங்கள்.