சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள வும், வெற்றியை உறுதி செய்யவும் தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட பிரதான கட்சிகளில் தேர்தல் பணிகள் வேகமெடுத்திருக்கும் சூழலில், தேர்தல் வியூக வகுப்பாளர்களை நியமிக்கும் கனமான ஆலோசனைகளும் நடந்துகொண்டி ருக்கின்றன.
நவீன தொழில்நுட்பம் எல்லா துறைகளி லும் தாக்கத்தை ஏற்படுத்திவரும் சூழலில், அரசியலையும் ஆக்ரமித்திருக்கிறது தொழில் நுட்பம். அதனால், பிரச்சாரம், பேச்சு, களப் பணிகள் மட்டுமே தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்பதால் முந்தைய தேர்தலைப் போல வியூக வகுப்பாளர்களை தேடத் தொடங்கியிருக்கின்றன அரசியல் கட்சிகள்.
சீக்ரெட்டாக நடந்து கொண்டிருக்கும் இந்த ஆலோசனை கள் குறித்து தி.மு.க., அ.தி.மு.க., த.வெ.க. தரப்பில் விசாரித்த போது ஏகப்பட்ட தகவல்கள்.
தி.மு.க.:
முதன்முதலாக 2016 சட்டமன்றத் தேர்தலில்தான் தேர்தல் வியூக வகுப்பாளர் என்கிற கான்செப்ட்டிற்குள் நுழைந்தது தி.மு.க. அப்போது தி.மு.க.வின் தேர்தல் வியூக வகுப்பாள ராக கர்நாடகாவை சேர்ந்த சுனில் கணுகோலு நியமிக்கப் பட்டார். இவருடைய வியூக வகுப்பு மற்றும் ஆலோசனை களின்படியே அந்த தேர்தலை எதிர்கொண்டது தி.மு.க.. ஆனால், அந்த தேர்தலில் தி.மு.க. தோற் றுப்போனது. சுனிலால் தி.மு.க.வை ஜெயிக்க வைக்க முடியவில்லை. இதனால் தி.மு.க.வை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் 2019-ல் இணைந்தார். அப்போது நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 40-க்கு 39 இடங்களை கைப்பற்றியது.
2021 சட்டமன்றத் தேர்தலுக்கு ஒரு வருடத்துக்கு முன்பு, தேர்தல் வியூக வகுப்பாளர் நியமிப்பது பற்றி கட்சி தலைமையில் ஆலோ சனை நடந்தபோது, "சுனிலை மீண்டும் பயன்படுத்துவது சரியாக இருக்காது. அவரை வைத்து ரிஸ்க் எடுக்க வேண்டாம். 2014-ல் மோடியை பிரதமராக்கிய பீகாரைச் சேர்ந்த ஐ-பேக் நிறுவனத்தின் பிரசாந்த் கிஷோரை (பி.கே.) ஹையர் பண்ணலாம்'” என்று முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் சொன்ன யோசனையை ஏற்றார் ஸ்டாலின். இதனைத் தொடர்ந்து, பிரசாந்த் கிஷோரிடம் சபரீசன் பேச்சுவார்த்தை நடத்த, ஐ-பேக்குடன் அக்ரி மெண்ட் போட்டுக் கொண்டது தி.மு.க. தலைமை.
அப்போது, ‘’"பிரசாந்த் கிஷோர் தலைமையில் இணைந்து நீங்கள் செயல்படலாம்' என்று தி.மு.க. தலைமை சொன்னதில் அதிருப்தி யடைந்த சுனில், தி.மு.க. வின் யோசனையை ஏற்க மறுத்து விலகிப்போனார். அதேசமயம், தி.மு.க.வுக்காக "பென்' எனும் அமைப்பைத் தொடங்கியிருந்தார் சபரீசன். அந்த அமைப்புதான், 2021-ல் பிரசாந்த் கிஷோரை முழுமையாக இயக்கியது.
பிரசாந்த் கிஷோரின் வியூகத்தில் 2021 தேர்தலை சந்தித்த தி.மு.க., பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைப் பிடித்தது. முதல்வரானார் ஸ்டாலின். தி.மு.க.வுடன் காண்ட்ராக்ட் முடிந்ததும் வடக்கே போய்விட்டார் பிரசாந்த் கிஷோர். இந்த நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் இணைந்து ராகுல்காந்தியின் தேர்தல் வியூக வகுப்பாளர்களில் ஒருவரானார் சுனில் கணுக்கோலு.
2021-ல் ஆட்சிக்குப் வந்தபிறகு 2024-ல் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொண்டது தி.மு.க.. அந்த தேர்தலின் வெற்றியை முழுக்க முழுக்க சபரீசனின் பென் அமைப்பே பார்த்துக்கொண்டது. பென்னின் வியூகத்தில் 40 தொகுதிகளையும் கைப்பற்றியது தி.மு.க. கூட்டணி.
இதற்கிடையே, 2026 தேர்தலின் வியூக வகுப்பாளராக பென் அமைப்பு செயல்பட்டுவரும் சூழலில், மீண்டும் தி.மு.க.வுக்கு வியூக வகுப்பாளராகும் முயற்சியில் குதித்தார் சுனில். ஆனால் அவரது முயற்சி பலனளிக்காததால், துணைமுதல்வர் உதயநிதியை அணுக, தனது தேர்தல் வியூக வகுப்பாளராக சுனிலை நியமித்துக்கொண்டார் உதயநிதி.
உதயநிதிக்காக இயங்கினாலும் தனது முயற்சியைக் கைவிடாத சுனில், ஒட்டுமொத்த தி.மு.க.வுக்கும் மீண்டும் தேர்தல் வியூக வகுப்பாளராகப் பணிபுரிய ரகசிய முயற்சியில் குதித்திருக்கிறார். இதனால், "2026 தேர்தலை எதிர்கொள்ள பென் அமைப்பே போதுமா? அல்லது மீண்டும் ஒருவரை ஹையர் பண்ணலாமா?' என்கிற ஆலோசனை தி.மு.க. மேலிடத்தில் தற்போது தீவிரமாகியிருக்கிறது.
அ.தி.மு.க. :
கடந்த சட்டமன்றத்தேர்தலில் (2021) பிரசாந்த் கிஷோரை தி.மு.க. எடுத்ததால் அங்கிருந்து விலகிய சுனில், அ.தி.மு.க. பக்கம் தாவுவதற்காக எடப் பாடி பழனிச்சாமியின் மகன் மிதுனிடம் பேசினார். இதனை எடப்பாடியிடம் மிதுன் விவாதிக்க, அதனை அ.தி. மு.க.வின் சீனியர்களிடம் ஆலோசித் தார் எடப்பாடி. சீனியர்கள் ஒப்புக் கொள்ளவில்லை. அதனால், எடப் பாடியை புரமோட் பண்ணுவதற்காக மட்டும் நியமித்தார் மிதுன். ஆனால், தனது ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள எடப்பாடியால் முடியவில்லை. அதேபோல, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு இடத்தைக்கூட பிடிக்கமுடியாமல் இமாலயத் தோல்வியை சந்தித்தார் எடப்பாடி.
தற்போது, 2026 சட்டமன்றத் தேர்தலில் வாஷ்-அவுட்டாகி விடக்கூடாது என்று எடப்பாடி நினைக்கிறார். அதன்படி, அ.தி. மு.க.வுக்கு தேர்தல் வியூக வகுப்பா ளர் ஒருவரை நியமிக்கும் விவா தங்கள் நடந்துகொண்டிருக்கின் றன. விவாதத்தில் கலந்துகொள்ளும் மிதுன், வியூக வகுப்பாளர் அவ சியம்வேண்டும் என்று வலியுறுத்த, சுனிலின் பெயர் அடிபட்டது.
அப்போது, சுனில் நம்பிக் கைக்குரியவரில்லை, செண்டி மெண்டாக அவர் ராசியில்லாதவர் என்று அழுத்தமாக சொல்லப்பட, சுனிலின் பெயர் அடிக்கப்பட்டு, வேறு யாரை அழைக்கலாம் என்கிற ஆலோசனை நடந்தபோது, பிரசாந்த் கிஷோர் பெயர் முன் மொழியப்பட்டிருக்கிறது. ஆனால் அவரோ, பீகாரில் தனியாக அர சியல் கட்சி துவக்கி நடத்திவருவ தால் அவரை நியமிப்பது சரியாக வராது என்றிருக்கிறார் மிதுன். அதனால் அவரது பெயரும் அடிக்கப்பட்டது. இந்த நிலையில், அ.தி.மு.க. வின் தேர்தல் வியூக வகுப்பாளராக ரிஷி, ராபின் சாக்கோ, பார்த்திபன் ஆகிய 3 நபர்களின் பெயர்கள் எடப்பாடியிடம் சொல்லப்பட்டி ருக்கிறது. இதில், ஐ-பேக்கின் தலைமைப் பொறுப்பிலிருந்து பிரசாந்த் கிஷோர் விலகியதை அடுத்து, அந்த நிறுவனம் தற்போது ரிஷி என்பவரின் தலைமையில் இயங்கி வருகிறது.
அதேபோல, ஐ-பேக்கிடமிருந்தும், பிரசாந்த் கிஷோரிடமிருந்தும் பிரிந்து மும்பையில் ஷோ டைம் எனும் தேர்தல் வியூக நிறுவனத்தை நடத்தி வருகிறார் ராபின் சாக்கோ. அடுத்து, தி.மு.க.வின் பென் அமைப்பில் 10 ஆண்டு காலம் மீடியா ஹெட்டாக பணியாற்றி தற்போது லவ்டு அண்ட் க்ளியர் பிரைவேட் லிமிடெட் எனும் பெயரில் தேர்தல் வியூக பிராண்டிங் ஏஜென்சியை நடத்தி வருகிறார் பார்த்திபன். மேற்கண்ட மூன்று நபர்களைப் பற்றிய விபரங்கள்தான் எடப்பாடியிடம் சொல்லப்பட்டு ஆலோசனை நடந்துவருகிறது.
விஜய்யின் த.வெ.க.:
அரசியல் கட்சியைத் துவக்கி 2026-ல் ஆட்சியைப் பிடிக்கத் தீவிரமாகியிருக்கும் நடிகர் விஜய், தனது கட்சியின் தேர்தல் வியூக வகுப்பாளராக ஜான் ஆரோக்கியசாமியை நியமித்திருக்கிறார். ஆர்ப்பாட்டமில்லாத வியூக வகுப்பாளரான ஜான் ஆரோக்கியசாமி, 2016-ல் பா.ம.க.வின் தலைவர் டாக்டர் அன்புமணிக்காக தேர்தல் வியூகம் வகுத்தவர். மாற்றம் முன்னேற் றம் அன்புமணி, எனும் கான்செப்ட் இவ ருடையதுதான். அரசியல் ஆளுமைகளுக்கான ப்ராண்டிங் செய்வதில் வல்லவர். த.வெ.க. கட்சித் துவக்கியதிலிருந்து அதன் கொள்கைகளை வகுத்ததுவரை ஜானின் பங்களிப்பு 100 சதவீதம். இவரை முழுமையாக விஜய் நம்புவதால், ஜானுக்கு எதிரான அரசியலைக் கையாண்டு வருகிறார் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த்.
இந்த நிலையில், 2026 தேர்தலை எதிர்கொள்ள ஜான் ஆரோக்கியசாமி மட்டுமே போதாது; இன்னொருவரையும் ஹையர் பண்ண வேண்டும் என்று விஜய்யிடம் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த வலியுறுத்தலில், தி.மு.க.வின் பென் அமைப்பிலிருந்த பார்த்திபன் பெயரை அ.தி.மு.க. பரிசீலிக்கிறது என விஜய்யிடம் சொல்ல, யார் அந்த பார்த்திபன்? என கேட்டுள்ளார் விஜய். அவர் பற்றிய குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.
இப்படி தி.மு.க., அ.தி.மு.க., த.வெ.க. கட்சிகள் தேர்தல் வியூக வகுப்பாளர்கள் தொடர்பான ஆலோசனைகளை நடத்திக் கொண்டிருக்கும் நிலையில், பா.ம.க., தே.மு.தி.க. கட்சிகளும் வியூக வகுப்பாளர் கான்செப்டில் குதிக்க நேரம் பார்த்து வருகின்றன. 2026 தேர்தல் களம் என்பது வியூக வகுப்பாளர்களின் தேர்தல் களமாக சூடு பிடிக்கும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.