நட்புக்கு இலக்கணமாக, அரசர்கள் காலத்தில் கோப் பெருஞ்சோழன் -பிசிராந்தை யார் நட்பினைச் சொல்வார் கள். அதேபோல் தற்கால, தமிழக அரசியலில் நல்லதொரு நட்புக்கு இலக்கணமாக கலைஞர் -பேராசிரியரின் நட்பை உதாரணமாகக் காட்டுவார்கள். ஒரு கட்சியின் தலைவர் -பொதுச்செயலாளர் என்பதைத் தாண்டி இருவருக்கு மான புரிதல் காரணமாக கட்சியின் வெற்றி தோல்விகளி லும், இக்கட்டான சூழல்களிலும் ஒருவருக்கொருவர் ஆதரவாக நட்பாகக் கட்சியை வழி நடத்தியதை மாற்றுக்கட்சியின ரும் வியந்து பார்த்ததுண்டு. கலைஞரும், பேராசிரியரும் மறைந்தாலும், அவர்களின் கொள்கைப்பிடிப்பும், நட்பும், பலருக்கும் பாடமாக விளங்கு கிறது.
பேராசிரியர் க.அன்பழ கனின் நூற்றாண்டு நிறைவு விழா, மிகச்சிறப்பாக தி.மு.க.வின ராலும், தமிழக அரசாலும் கொண்டாடப்பட்டது. பேரா சிரியரின் நூற்றாண்டு நிறைவு விழாவினையொட்டி, தி.மு.க. சார்பில், தமிழ்நாடு முழுவதும் 100 பொதுக்கூட்டங்கள் நடத்து வது என முடிவு செய்யப்பட் டது. அதன்படி, தமிழ்நாடு முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு, நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
கடந்த 17ஆம் தேதி, சனிக்கிழமை, அண்ணா அறிவாலயத்தில், பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு விழா சிறப்பு கவியரங்கம் நடந்தது. "இனமானம் காத்த தமிழ் வானம்' என்னும் தலைப்பில் இந்த கவியரங்கத்திற்கு கவிஞர் வைரமுத்து தலைமை தாங்கி னார். பாடலாசிரியர்களான விவேகா, கபிலன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு கவிதை பாடி னார்கள். கவியரங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
18-ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை மாலையில், சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார் பில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சிகளின் தலை வர்கள் கலந்து கொள்ளும், பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம், சென்னை வேப்பேரி பெரியார் திடலில் நடைபெற்றது. நிகழ்ச்சியில், முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், பேராசிரியர் நூற்றாண்டு நினைவு சிறப் பிதழை அமைச்சர் துரை முருகன் வெளியிட, தி.க. தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பெற்றுக்கொண்டார்.
"கலைஞர், பேராசிரியரைப் போல நண்பர்களை அரசியலில் பார்ப்பது என்பது மிக, மிக அரிது'' என்று பேராசிரியருக்கு புகழாரம் சூட்டிய முதல்வர், "பேராசிரியரை தமது அண்ண னாக மதித்துப் போற்றியவர் கலைஞர். "முதலில் நான் மனிதன், இரண்டாவது நான் அன்பழகன், மூன்றாவது நான் சுயமரியாதைக் காரன், நான்காவது நான் அண்ணாவின் தம்பி, ஐந்தாவது கலைஞரின் தோழன்' என்று சொல்லி இறுதிவரை வாழ்ந்தவர் பேராசிரியர். 6-வது நான் உரிமையோடு கூற விரும்புவது, அவர் எனது பெரியப்பா'' என்று நெகிழ்ச்சியோடு பேசிய முதல் வர்... தமிழக அரசு சார்பிலும், தி.மு.க. சார்பிலும் பேராசிரி யருக்கு பெருமை சேர்க்கும் விதமாக செய்துள்ளவற்றை விரிவாக எடுத்துரைத்தார்.
"பேராசிரியர் நூற்றாண்டு விழாவையொட்டி சென்னை நந்தனத்தில் உள்ள ஒருங் கிணைந்த நிதித்துறை வளாகத் திலே மார்பளவு சிலையை திறந்து வைத்தோம். 11 அரசு அலுவலகங்கள் இயங்கிவரக் கூடிய அந்த வளாகத்திற்கு "பேராசிரியர் அன்பழகன் மாளிகை' என்று பெயர் சூட்டியிருக்கிறோம். பேராசிரி யர் படைத்துள்ள நூல்களை நாட்டுடமையாக்கி, அந்த நூல்களுக்கான உரிமைத் தொகையை முழுமையாக பேராசிரியர் குடும்பத்துக்கு வழங்கியிருக்கிறோம். பேராசிரியருக்கு நிரந்தரப் புகழ் சேர்க்கும் வகையில், 7,500 கோடி ரூபாய் மதிப்பில், பேரா சிரியர் பள்ளி மேம்பாட்டுத் திட்டம் தொடங்கப்பட்டுள் ளது. 16-ஆம் தேதி, தமிழகம் முழுவதும் நூற்றாண்டு விழாவை தி.மு.க. சார்பில், இதுவரை வரலாற்றில் இல்லாத அளவுக்கு 100 பொதுக்கூட் டங்களை நடத்தி முடித்திருக் கிறோம்'' என்றார்.
மேலும், "எதையும் பேராசிரியரிடம் சொல்லிவிட்டு நிறைவேற்ற வேண்டும் என்று நினைப்பார் கலைஞர். கலைஞர் செய்தால் சரியாகத்தான் இருக் கும் என்று நினைப்பார் பேராசிரியர். "இந்த இயக்கத்தை தலைவர் கலைஞருக்குப் பிறகு வழிநடத்த தகுதியானவன் ஸ்டாலின் தான்' என முதலில் சொன்னவர் எனது பெரியப்பா பேராசிரியர். எனது அரசியல் வாழ்க்கை அவரிடம் இருந்து தான் ஆரம்பித்தது. அவர் அளித்த ஊக்கத்தின் காரண மாகத்தான் இன்று அண்ணா அறிவாலயத்தையே கட்டிக் காக்கக்கூடிய மிகப்பெரிய பொறுப்பை ஏற்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது.
கலைஞரின் ஆற்றல் ஸ்டாலினிடத்தில் தெரிகிறது என்று 30 ஆண்டுகளுக்கு முன்பே பாராட்டியவர் பேராசிரியர். வாரிசு, வாரிசு என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார்களே, வாரிசு என்ற குற்றச்சாட்டை சுமத்தியபோது கல்வெட்டு போல எனக்கு பாராட்டுப் பத்திரம் கொடுத்தவர் பேராசிரியர். கலைஞருக்கு மட்டுமல்ல, எனக்கும் ஸ்டாலின் வாரிசுதான் என்று சொன்னார். தி.மு.க.வின் செயல் தலைவராக முன் மொழிந்தவரும் பேராசிரியர்தான். தலைவர் மறைவுக்கு பின் னர் தலைவராக என்னை முன்மொழிந்ததும் எனது பெரி யப்பாதான். நான் இந்த அளவுக்கு தகுதி பெற்றவனாக இருப்ப தற்கு காரணம் பேராசிரியர்தான்'' என்று புகழாரம் சூட்டினார்.
பொதுக்கூட்டத்தில், தி.க. தலைவர் கி.வீரமணி, கே.எஸ்.அழகிரி, வைகோ, மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இ.கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், பேராசிரியர் கே.எம்.காதர்மொய்தீன், வி.சி.க. தலைவர் திருமாவளவன், எம்.எச்.ஜவாஹிருல்லா, கொங்குநாடு ஈ.ஆர்.ஈஸ்வரன், த.வா.க தலைவர் வேல்முருகன் ஆகியோர் உரையாற்றினர்.
பேராசிரியரின் 101-வது பிறந்தநாளான 19-ஆம் தேதி, திங்களன்று, முதல்வர் மு.க.ஸ்டாலின், கீழ்ப்பாக்கம் கார்டனில் உள்ள பேராசிரியரின் இல்லத்துக்கு சென்றார். வீட்டிற்கு வந்த முதல்வரை பேராசிரியரின் குடும்பத்தினர் வரவேற்றனர். அங்கு பேராசிரியரின் உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். மேலும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் கல்வி உபகரணங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். முதல்வருடன் அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
அடுத்ததாக, அண்ணா அறிவாலயத்திலுள்ள அண்ணா- கலைஞர் சிலைகள் முன்பாக வைக்கப்பட்டிருந்த பேராசிரி யரின் உருவப்படத்திற்கு மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தினார். அண்ணா அறிவாலயத்தில் பேராசிரியர் நூற்றாண்டு நிறைவு விழா நினைவாக புகைப்படக் கண்காட்சி நடந்தது. நுங்கம்பாக்கத்திலுள்ள பள்ளிக்கல்வித் துறையின் டி.பி.ஐ. வளாகத்தில் நடைபெற்ற பேராசிரியரின் நூற்றாண்டு நிறைவு விழாவில், டி.பி.ஐ. வளாகத்திற்கு "பேராசிரியர் க.அன்பழகன் கல்வி வளாகம்' என்று பெயர் சூட்டி, அதற்கான பெயர்ப் பலகையைத் திறந்துவைத்தார். மேலும், டி.பி.ஐ. வளாகத்தின் நுழைவு வாயில் எண் 2ல் கட்டப்பட்டுள்ள பேராசிரியர் நூற்றாண்டு வளைவை முதல்வர் திறந்துவைத்தார். இந்நிகழ்ச்சியில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள். எம்.எல். ஏ.க்கள், பேராசிரியரின் குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.
பேராசிரியரின் நூற்றாண்டு நிறைவு விழாவை வெகு சிறப்பாகக் கொண்டாடிய தமிழக முதல்வருக்கு பேராசிரியரின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர். பேராசிரியரின் புதல்வர் அ.அன்புச்செல்வன், முதல்வருக்கு எழுதிய நன்றிக் கடிதத்தில், "தங்கள் பெரியப்பா பேராசிரியருக்கு பல்வேறு சிறப்புகள் செய்து, நீங்கள் காட்டிய அன்பையும், பாசத்தையும் என்றைக் கும் மறவோம். உங்களுக்கு நன்றிகூற தமிழ் அகராதியில் வார்த்தைகள் தேடுகிறேன்' என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தார்.
-ஆதவன்