ஆங்கிலேயர்கள் இந்த நாட்டைவிட்டு வெளியேறினாலும், அவர்களின் சட்ட திட்டங்கள் வெளியேறவில்லை. சமீபத்தில் ஒரு காவலர் பயிற்சிப் பள்ளியில் காவலர் ஒருவரைச் சந்தித்தபோது… ஆங்கிலேயர் களின் அதிகார போதையும் பிடிவாதமும் இன்றைய அதிகாரிகளிடமும் தொடர்வதை நம்மிடம் சுட்டிக்காட்டிப் பேசினார்.
அவர்களில் சிலர் நம்மிடம், "தமிழ்நாட்டில் காவலர்கள் பயிற்சிப் பள்ளி என்று சொல்லப்படும் 14 பட்டாலியன்கள் இருக்கு. அதுல ஒரு வருடத்திற்கு பல ஆயிரம் வீரர்கள் பயிற்சிபெற்று வெளி யே வருகின்றனர்
ஆங்கிலேயர்கள் இந்த நாட்டைவிட்டு வெளியேறினாலும், அவர்களின் சட்ட திட்டங்கள் வெளியேறவில்லை. சமீபத்தில் ஒரு காவலர் பயிற்சிப் பள்ளியில் காவலர் ஒருவரைச் சந்தித்தபோது… ஆங்கிலேயர் களின் அதிகார போதையும் பிடிவாதமும் இன்றைய அதிகாரிகளிடமும் தொடர்வதை நம்மிடம் சுட்டிக்காட்டிப் பேசினார்.
அவர்களில் சிலர் நம்மிடம், "தமிழ்நாட்டில் காவலர்கள் பயிற்சிப் பள்ளி என்று சொல்லப்படும் 14 பட்டாலியன்கள் இருக்கு. அதுல ஒரு வருடத்திற்கு பல ஆயிரம் வீரர்கள் பயிற்சிபெற்று வெளி யே வருகின்றனர். வெளியே வருபவர்களில் ஒரு குழு பட்டாலியன்கள் உள்ளேயும், மற்றொரு குழு ஆயுதப்படை யிலும், மற்றொரு குழு காவல் நிலையங்களுக்கும் என்று பிரித்து அனுப்பப்படுவார்கள். இதில் பட்டாலியனில் பணி யாற்றும் காவலர்கள் கட்டாயம் 3 வருடம் வேலை பார்க்க வேண்டும். அதன்பின் அங்கி ருந்து ஆயுதப் படைக்கு மாற்றப்படுவார்கள். அதன்பின் அங்கிருந்து உள்ளூர் காவல் நிலையங்களுக்கு அனுப்பப்படு வார்கள்.
இப்போது பிரச்சனையே பட்டாலியனில் பணியாற்றக்கூடி யவர்களுக்குத்தான். இங்கு பணியாற்றும் காவலர்கள் மிகவும் அவசரமான காலங்களில், குறிப்பாக கலவரம் ஏற்படும் காலங்களில் மட்டும்தான் பயிற்சி மையங்களிலிருந்து வெளியே வருவார்கள். மற்ற காலங்களில் உள்ளேயே பணியாற்ற வேண்டி யதுதான் இவர்களுக்குக் கொடுக் கப்பட்ட பணி.
அவசரத் தேவைக்காக விடுமுறை கேட்டால் அதிகாரி கள் கொடுப்பதில்லை. அந்த விடுமுறையை வாங்க 1 வாரம் அலையணும். அப்பவும் கொடுக்க மாட்டாங்க. வேறுவழியில்லாம அதிகாரிகளிடம் சொல்லாமல் லீவு போட்டா அதுக்கு தண்ட னை கொடுப்பாங்க. அந்த தண்ட னை அதிகாரிகள் தங்களுடைய இஷ்டத்திற்கு அவர்கள் எத்தனை வருடம் நினைக்கிறார்களோ அத்தனை வருடமும் இதே பயிற்சிப் பள்ளியில்தான் பணி யாற்ற வேண்டும் என தண்டனை யளித்துவிடுவார்கள். தமிழகம் முழுக்க உள்ள 14 பட்டாலியன்களில் இதுபோல் சுமார் 700 பேர், அதிகாரிகளால் தண்டனை பெற்று 3 வருடத்தில் பணியை முடித்து வெளியே செல்ல வேண்டியவர்கள், 10 வருட காலமாக பணியாற்றியபடி இருக்கின்றனர்.
இதுவே பெரிய மன உளைச்சலா இருக்கு. பலர் வேலையே வேண்டாம் என்று எழுதிக் கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள். பலர் மன உளைச்சலால் தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இதுக்கெல் லாம் எப்போதுதான் தீர்வு வரும் என்று தெரியவில்லை'' என்று புலம்புகிறார்கள்.
ஆயுதப் படையில் பணி யாற்றி தண்டனைபெற்ற உள்ளூர் காவல் நிலையத்தில் வேலைக்கு மாற்றி அனுப்புறாங்க. ஆனா எங்களுக்கு தண்டனை கொடுத் தாலும் அதே பட்டாலியனுக்கு உள்ளேயேதான் என்பதால் எங்களால் தாங்கமுடியவில்லை” என்று தங்களுடைய குமுறலை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இதற்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு தான் ஒரு நல்ல தீர்வு கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.