தூத்துக்குடியில் போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியானதாக அரசு தரப்பில் அறிவிக்கப் பட்டது. ஆனால் போலீசின் மூர்க்கத் தனத்தால் பரத்ராஜ் என்னும் பரோல் கைதி பலியானார். அவரின் மரணத்தை தற்கொலையாக்கும் வேலைகளில் இப்போது வேகம் எடுத்துள்ளது தூத்துக்குடி போலீஸ்.
பரத்ராஜின் தாய் எஸ்தரும் அண்ணன் ஜெயக்குமாரும் நம்மிடம், ""சார் நான் பரோல் கைதி, வீட்டைவிட்டு எங்கயும் போகல சார்னு கையெடுத்துக் கும்பிட்டு கதறுனவனை காட்டுமிராண்டித்தனமா அடிச்சு, உயிர்த்தலத்துல ஏறி மிதிச்சாவ. அப்புறம் சவுத் ஸ்டேஷனுக்கு தூக்கிட்டுப் போயி, அங்க எஸ்.ஐ நம்பிராஜன், வேலாயுதம் அப்புறம் பத்து பதினஞ்சு போலீசு எல்லாம் சேர்த்து அடிச்ச துல கால் எலும்பு ஒடஞ்சு போச்சுய்யா. அங்க சர்ச் வாரண் டோட குற்றவியல் தலைமை நீதிபதிகிட்ட எல்லாத்தையும் சொல்லிருக்கான். பெறவு பேராவூரணி சப்-ஜெயில்ல அடைச்சு வச்சிருந்துட்டு, அதுக்குப் பெறவு தான் பாளையங்கோட்டை ஜெயிலுக்கு கொண்டு போயிருக்காங்க. அங்க சூப்பிரண்டும் வார்டனும் சேர்ந்து அடிச்சதுல 30-ஆம் தேதி செத்
தூத்துக்குடியில் போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியானதாக அரசு தரப்பில் அறிவிக்கப் பட்டது. ஆனால் போலீசின் மூர்க்கத் தனத்தால் பரத்ராஜ் என்னும் பரோல் கைதி பலியானார். அவரின் மரணத்தை தற்கொலையாக்கும் வேலைகளில் இப்போது வேகம் எடுத்துள்ளது தூத்துக்குடி போலீஸ்.
பரத்ராஜின் தாய் எஸ்தரும் அண்ணன் ஜெயக்குமாரும் நம்மிடம், ""சார் நான் பரோல் கைதி, வீட்டைவிட்டு எங்கயும் போகல சார்னு கையெடுத்துக் கும்பிட்டு கதறுனவனை காட்டுமிராண்டித்தனமா அடிச்சு, உயிர்த்தலத்துல ஏறி மிதிச்சாவ. அப்புறம் சவுத் ஸ்டேஷனுக்கு தூக்கிட்டுப் போயி, அங்க எஸ்.ஐ நம்பிராஜன், வேலாயுதம் அப்புறம் பத்து பதினஞ்சு போலீசு எல்லாம் சேர்த்து அடிச்ச துல கால் எலும்பு ஒடஞ்சு போச்சுய்யா. அங்க சர்ச் வாரண் டோட குற்றவியல் தலைமை நீதிபதிகிட்ட எல்லாத்தையும் சொல்லிருக்கான். பெறவு பேராவூரணி சப்-ஜெயில்ல அடைச்சு வச்சிருந்துட்டு, அதுக்குப் பெறவு தான் பாளையங்கோட்டை ஜெயிலுக்கு கொண்டு போயிருக்காங்க. அங்க சூப்பிரண்டும் வார்டனும் சேர்ந்து அடிச்சதுல 30-ஆம் தேதி செத்துட்டான். எங்களுக்கு தகவல் வந்து பதறியடிச்சு போய் கேட்டப்ப, "மன உளைச்சலால கழுத்துல துண்டை மாட்டி தற்கொலை பண்ணிக்கிட்டான்'னு சூப்பிரண்டு சொன்னாருய்யா. நாங்க பாடிய வாங்காம கோர்ட்டுக்குப் போனதால, போலீசு எங்களை மிரட்டிக்கிட்டிருக்கு'' என்றனர் பீதி விலகாமல்.
இதற்கிடையே தூத்துக்குடி புறநகரான புதுக்கோட்டை, முத்தையாபுரம், சிப்காட், வடக்கு, தெற்கு, மத்தியபாக போலீஸ் ஸ்டேஷன்களில் 244 கலவர வழக்குகளை பதிவு செய்து, அப்பாவிகளைத் தூக்கும் காரியத்தில் இறங்கியுள்ளது போலீஸ்.
துப்பாக்கிச் சூட்டின் போது, ஆம்புலன்ஸ் மூலம் பல உயிர்களைக் காப்பாற்றிய வாழ்வுரிமைக் கட்சியின் கிதர்பிஸ்மியின் வீட்டிற்கு, கடந்த 13-ஆம் தேதி பின்னிரவு 1:30 மணிக்குச் சென்ற ஸ்பெஷல் டீம் போலீசார், பிஸ்மி வீட்டின் முன்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா மீது துணியைப் போட்டு மூடிவிட்டு, வீட்டிற்குள் புகுந்து பிஸ்மியைத் தூக்கிக் கொண்டு தென் பாகம் காவல் நிலையத்திற்குச் சென்றுள்ளனர்.
பத்திரிகைகளில், டி.வி.களில் வெளியான போராட்டப் படங்களை வைத்து "ஆள் தூக்கும்' வேலையை எடப்பாடி அரசு செய்து கொண்டிருக்கிறது.
""கலவரம் நடந்த 22-ந் தேதிக்கு முந்தைய 17-ந்தேதி இரவிலேயே நான், என் கணவர் பொன்ராஜ், குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் திருப்பதிக்கு சுற்றுலா சென் றோம். சுற்றுலா முடிந்த பிறகு தூத்துக்குடிக் குத் திரும்ப பேருந்து வசதி இல்லாததால் ஒவ்வொரு ஊராக மாறி திருநெல்வேலி வந்து... அங்கிருந்தும் பேருந்து கிடைக்காததால் தனியார் வாகனத்தில் 23-ம் தேதி தூத்துக் குடிக்கு வந்து சேர்ந்தோம். மறுநாள் ஊர்ல ஒரு கடை திறக்கலை. இருந்தாலும் சாப்பாட்டிற்கு ஏதாவது செய்தாகனும்ல.. "நீ சோற்றை வடி..! தயிர், பால் பாக்கெட் கிடைத்தா வாங்கி வர்றேன்'னு சொல்லிவிட்டுப் போனார். போகிற வழியில் அவருக்கு தெரிந்த நண்பர் களுடன் பேசிக்கொண்டிருந்ததை தினசரி பத்திரிகையாளர் ஒருவர் புகைப்படமாக பதிவு செய்திருக்கின்றார். எப்படியோ அந்தப் போட்டோ மறுநாள் தினசரி பேப்பரில் வந்திருக்கு. இந்த விவரம்கூட அவருக்கோ எங்களுக்கோ தெரியாது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1:40க்கு வீட்டின் கேட்டை உடைத்து வந்த ஸ்பெஷல் டீம் போலீசார் என் வீட்டுக்காரரை இழுத்துக்கொண்டு போனாங்க..! எதற்காக..? என்னன்னு கூட சொல்லவில்லை.. நாங்களும் அத்தனை போலீஸ் ஸ்டேஷனுக்கும் தேடிப் போக ஆயுதப்படை அலு வலகத்தில் வைத்திருத் தாங்க.. அதன்பின் தென் பாகம் போலீஸ் ஸ்டேஷ னுக்குக் கொண்டு வந் தாங்க..! யாரிடமும் பேச விடலை.. இருப்பினும் வழக்கறிஞரை வைத்துக் கேட்கையில் பஸ்ஸை உடைச்சு தீ வைச்ச வழக் கில் சேர்த்ததாக சொல்றாங்க.. அதற்கு ஆதாரமாக தினசரி பேப்பரில் வந்த போட்டோவையும் காண்பிக் கிறாங்க.. அந்த போட்டோவில் அவர் சும்மா நிற்பது மாதிரி தானே இருக்கு.. போலீசுல கணக்குக் காட்டுறதுக்காக அப்பாவியான எம் புருஷனை கூட்டிட்டுப் போய் பாளையங்கோட்டை சிறையிலடைத்தது எந்த வகையில் நியாயம்..?'' என்று வேதனையுடன் சொன்னார் பிரை யண்ட் நகர் பொன்லெட்சுமி.
வழக்கிற்கு சம்பந்தமில்லாத அப்பாவி களை தொந்தரவு செய்யக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவிட்டதைக் காற்றில் பறக்கவிட்டு, நீதிமன்றத்தையே அவமானப் படுத்துகிறது எடப்பாடி அரசு.
-பரமசிவன், நாகேந்திரன்
_____________________
நான் ஸ்டெர்லைட்டுக்கு எதிரானவன்!
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்பட்டுள்ள தீங்குகளைச் சுட்டிக்காட்டி, தொழிற்சாலையை மூடவும், தொழிற்சாலையை விரிவாக்கம் செய்வதை தடை செய்யக் கோரியும், 29-01-2018 அன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளேன். மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் 26-03-2018 அன்று, மீண்டும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளேன். அம்மா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது, இந்த ஆலையை மூட உத்தரவிட்டவுடன், சட்டமன்றத்தில் மக்களின் சார்பில் நன்றி தெரிவித்தேன். நிலைமை இவ்வாறிருக்க, ஜூன் 13-15 தேதியிட்ட "நக்கீரன்' இதழில், துப்பாக்கிச் சூட்டிற்கு உத்தர விட்ட வருவாய்த்துறை அதிகாரிகள், எனது தூண்டுதலின் பேரிலேயே உத்தரவிட்டார்கள் என்கிற அடிப்படை ஆதாரமற்ற செய்தி வெளியாகியுள்ளது. மாவட்டத்தில் நடக்கும் அரசியல் சதியால் என் பெயரை களங்கப்படுத்தும் நோக்கத் துடன் வெளியான செய்திக்கு எனது ஆட்சேபணையையும் கண்ட னத்தையும் தெரிவித் துக் கொள்கிறேன்.
-எஸ்.பி.சண்முகநாதன்
சட்டமன்ற உறுப்பினர், ஸ்ரீவைகுண்டம்