டிகை சாந்தினி கொடுத்த பாலியல் புகாரில், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மணிகண்டன் பெங்களூருவில் கைது செய்யப்பட்டார். நீதி மன்ற உத்தரவின்படி அவர் சைதாப்பேட்டை சிறையில் அடைக்கப் பட்டுள்ளார்.

"எந்த நாளா இருந்தாலும் விடமாட் டார்லி மாஜி மந்திரியிடம் சிக்கிய நடி கையின் அலறல்' என்ற தலைப்பில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனிடம் நடிகை சாந்தினி சிக்கியது குறித்தும், அவரால் நடிகைக்கு ஏற்பட்ட தொல்லைகள் குறித்தும் ஜூன் 9-11 நக்கீரன் இதழில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்நிலையில் தன் மீதான புகாரில் சாட்சியங்கள், நில வரங்கள் சிக்கலாகி வருவதை யறிந்த அமைச்சர் முன்ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்தார். அவரது முன்ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டதையடுத்து அமைச்சர் தலைமறைவானார்.

nn

Advertisment

நடிகை சாந்தினி, மே 28-ஆம் தேதி கமிஷனர் அலுவலகத்தில் அளித்த தனது புகார் மனுவில், தன்னை திருமணம் செய்துகொள்வ தாகக் கூறி கணவன்லி மனைவி போல வாழ்ந்த நிலையில், மணிகண்டன் மூன்று முறை கருக்கலைப்பு செய்யவைத்தார். திருமணம் செய்ய வற்புறுத்திய போது கொலைமிரட்டல் விடுத்ததாகவும், தனது அந்தரங்கப் படங்களை வெளியிட்டுவிடுவதாகவும் மிரட்டியதாகக் கொடுத்த புகாரின் பேரில் அடை யாறு அனைத்து மகளிர் போலீசார் விசாரணை செய்தனர். கற்பழிப்பு உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்யப் பட்டது.

மாஜிஸ்திரேட் முன்னிலையில் நடிகை சாந்தினி ரகசிய வாக்கு மூலம் அளித்ததையடுத்து, சாந்தினிக்கு சிகிச்சையளித்த மருத்துவர் மற்றும் சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். அதில் கருக்கலைப்பு செய்யப்பட்டது உண்மை எனத் தெரிந்த நிலையில் ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டன.

தலைமறைவான முன்னாள் அமைச்சர் மணிகண்டனைத் தேடுவதற்கு நான்கு தனிப் படைகள் அமைக்கப்பட்டன. நண்பர்கள் உதவியுடன் பெங்களூரு எலெக்ட்ரானிக் சிட்டியருகே கெப்பகோடியி லுள்ள தனியார் ஹோட்டலில் அவர் மறைந்திருந்தார். மணி கண்டனின் போன் சிக்னல் மூலம் அவரது மறைவிடத்தை அறிந்த நிலையில், தனிப்படை போலீசார் பெங்களூருவுக்கே சென்று அவரைக் கைது செய்தனர்.

Advertisment

ஜூன் 20லிஆம் தேதி சென்னை அழைத்துவரப்பட்ட மணிகண்டனிடம், அடையாறு காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பெரும்பாலான கேள்விகளுக்கு மணிகண்டன் பதிலளிக்காததால் 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். மணிகண்டன் தலைமறைவாக இருக்க உதவியதாக அவரது உதவியாளர்கள் பிரியன் மற்றும் இளங்கோவனிடமும் விசாரணை முடிந்த நிலையில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்செய்து, சிறையில் அடைக்கப்பட்டார்.

அமைச்சகப் பணிகளைவிட அல்வா கொடுப்பதில் ஆர்வம்காட்டிய அமைச்சர், தற்போது கம்பியெண்ணிக் கொண்டிருக்கிறார்.