அரசின் திட்டங்கள் மக்களுக்கு செல்வதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று சமீபத்தில் நடந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தினார் முதல்வர் ஸ்டாலின். திட்டங்கள் முடங்கி விடாமல் விரைவுபடுத்த வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.
தி.மு.க. அரசு பொறுப்பேற்றவுடன் சில முக்கியத் துறைகளின் பெயர்கள் மாற்றியமைக்கப்பட்டன. அதில், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் என்பதை தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என்று மாற்றியமைத்தார் முதல்வர் ஸ்டாலின். அடித்தட்டு மக்களின் வாழ்விடங்களை மேம்படுத்து வதை உறுதி செய்வதற்காகவே இந்த பெயரைச் சூட்டினார்.
இந்த வாரியத்தின் சார்பில் சென்னை உள்பட, தமிழகத்தில் சுமார் 600 கோடி ரூபாய் மதிப்பிலான குடியிருப்புத் திட்டங்கள் கட்டப்பட்டு வருகின்றன.
இந்த ப்ராஜெக்ட்டில் சுமார் 150 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் கடந்த 3 மாதங்களாக தேங்கிக் கிடக்க, அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள், குடிசைவாசிகள் என மூன்று தரப்பிலும் அதிருப்திகள் அதிகர
அரசின் திட்டங்கள் மக்களுக்கு செல்வதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று சமீபத்தில் நடந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தினார் முதல்வர் ஸ்டாலின். திட்டங்கள் முடங்கி விடாமல் விரைவுபடுத்த வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.
தி.மு.க. அரசு பொறுப்பேற்றவுடன் சில முக்கியத் துறைகளின் பெயர்கள் மாற்றியமைக்கப்பட்டன. அதில், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் என்பதை தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என்று மாற்றியமைத்தார் முதல்வர் ஸ்டாலின். அடித்தட்டு மக்களின் வாழ்விடங்களை மேம்படுத்து வதை உறுதி செய்வதற்காகவே இந்த பெயரைச் சூட்டினார்.
இந்த வாரியத்தின் சார்பில் சென்னை உள்பட, தமிழகத்தில் சுமார் 600 கோடி ரூபாய் மதிப்பிலான குடியிருப்புத் திட்டங்கள் கட்டப்பட்டு வருகின்றன.
இந்த ப்ராஜெக்ட்டில் சுமார் 150 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் கடந்த 3 மாதங்களாக தேங்கிக் கிடக்க, அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள், குடிசைவாசிகள் என மூன்று தரப்பிலும் அதிருப்திகள் அதிகரித்திருப்பதால் விவகாரம் பூதாகரமாகி வருகிறது.
இதுகுறித்து வாரியத்தின் அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, "முந்தைய எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியின் இறுதியில் தொடங்கப்பட்ட குடியிருப்புத் திட்டங்கள் தி.மு.க. ஆட்சியில் கட்டப் பட்டு வருகின்றன. இந்த திட்டப் பணிகள் முடிய முடிய அதற்குரிய நிதி ரிலீஸ் செய்யப்பட்டு வந்தது. அதிலும் சில பாரபட் சங்கள் நடந்தன.
அதாவது, பெரிய காண்ட் ராக்டர்கள் செய் யும் பணிகளுக்கு உடனடியாக பணம் ரிலீ ஸாகும். சிறிய காண்ட்ராக்டர் களுக்கோ, பணத்தை வாங்கு வதற்குள் காண்ட்ராக்டர்களுக்கு நாக்கு தள்ளி விடும்.
இது ஒருபுறமிருக்க, முடித்த பணிகளுக்கு அதிகப்படியான தொகையைக் கேட்பதாக குற்றம் சாட்டி, பணத்தை ரிலீஸ் செய் யாமல் முடக்கி வைத்திருக்கிறார் வாரியத்தின் நிர்வாக இயக்குநர் கோவிந்தராவ் ஐ.ஏ.எஸ்.! இதனால், காண்ட்ராக்டர்கள் அதிர்ச்சியடைய, தங்களின் அசோசியேசன் மீட்டிங்கை கூட்டி ஆலோசித்தனர்.
நிர்வாக இயக்குநர் கோவிந்தராவை சந்தித்து விளக்க மாகக் கடிதம் கொடுத்துள்ளனர். தவறுகளுக்கு நாங்கள் காரண மல்ல; திட்டமதிப்பீடுகளைத் தயாரித்த அதிகாரிகள்தான் என்பதை ஆதாரப்பூர்வமாக விளக்கியிருக்கிறார்கள் ஒப்பந்ததாரர்கள்.
உதாரணத்திற்கு, சென்னை யில் குடிசைகளை அகற்றிவிட்டு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படுகிறது. இதற்காக திட்ட மதிப்பீடு வரைபடம் தயாரிக் கிறார்கள் வாரியத்தின் இன்ஜினி யர்கள். அப்போது, குறிப்பிட்ட இடத்தில் மண் பரிசோதனை செய்யப்பட்டு பவுண்டேஷன் (அஸ்திவாரம்) வொர்க்கிற்காக 10 அடி தோண்டினால் போதும் என தீர்மானித்து, அதற்கேற்ப திட்ட மதிப்பீட்டையும் முடிவு செய்கிறார்கள் இன்ஜினியர்கள். இதனை ஆய்வு செய்யும் மேலதி காரிகளும் ஒப்புதலளிக்கிறார்கள்.
அதன்பிறகு டெண்டர் எடுத்த நிறுவனம் தனது பணி களை துவங்கும் போது, மண் ணின் தன்மையில் மாற்றம் இருக்கிறது என்று சொல்லி. 14 அடியாக போடச் சொல்கிறார் கள் இன்ஜினியர்கள். இப்படி, ஒவ்வொரு கட்டத்திலும் கூடுத லாக செய்யப்பட்ட பணிகளுக் கான பில் தொகையை நிர்வாக இயக்குநரே ஏற்க மறுக்கிறார். ரிலீஸ் செய்ய மறுக்கிறது வாரியம்.
இதனைத் தெளிவுபடுத்த வேண்டிய இன்ஜினியர்களோ, நிர்வாக இயக்குநரிடம் அதனைச் சொல்லாமல் மூடி மறைக் கிறார்கள். சொன்னால் தங்களின் தவறுகள் அம்பலமாகி தங்களின் வேலைக்கு ஆபத்து வந்துவிடுமோ என பயப்படுகிறார்கள். செய்த வேலைக்கான பணத்தை ரிலீஸ் செய்யாத நிலையில், குடியிருப்பு கள் கட்டும் பல்வேறு பணிகளை நிறுத்தி வைத்துவிட்டனர் காண்ட்ராக்டர்கள். நிறுத்தி வைக்கப்பட்ட பணிகளின் மதிப்பு சுமார் 150 கோடி இருக்கும். திட்டங்கள் முடங்கிக் கிடப்ப தால் குடிசைவாசிகள் கொந் தளிப்பில் இருக்கிறார்கள்”என்று சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்த நிலையில், இப் பிரச்சனைகள் குறித்து துறையின் அமைச்சர் தாமோ. அன்பரச னின் கவனத்துக்கு காண்ட்ராக் டர்கள் எடுத்துச் சென்றனர். திட் டப் பணிகளில் மாற்றம் நிகழ்வது இயல்பானது தான் என்பதை புரிந்து கொண்ட அமைச்சர் தாமோ.அன்பரசன், இதுகுறித்து நிர்வாக இயக்குநர் கோவிந்தரா விடம் பேசியுள்ளார். ஆனாலும், பிரச்சனை தீரவில்லை.
இப்பிரச்சனைகள் குறித்து நிர்வாக இயக்குநர் கோவிந்த ராவிடம் நாம் பேசியபோது, "திட்டங்களில் பிரச்சனையே இல்லை என நான் சொல்ல வில்லை. ஒவ்வொரு திட்டத்திலும் ஒவ்வொருவிதமான நடைமுறை சிக்கல்கள் இருக்கிறது. அதையெல்லாம் ஒவ்வொன்றாக ஆராய்ந்து சரி பண்ணி வருகிறோம். பல பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இதற்காக ஒருங்கிணைந்த கூட்டம் நடத்தப்பட்டு, பிரச்சனைகள் தீர்த்து வைக்கப்பட்டுள்ளன. இதனால் திட்டங்கள் முடங்க வும் இல்லை. முடக்கப்படவும் இல்லை. சிக்கல்கள் உள்ள திட்டங்களுக்கு தீர்வுகண்டி ருப்பதுடன் அதற்குரிய தொகையும் ரிலீஸ் செய்திருக் கிறோம். சில ப்ராஜெக்ட்டு களில் பிரச்சனை இருக்கிறது. விரைவில் அதுவும் சரியாகி விடும். அடித்தட்டு மக்களின் சிரமங்களை அரசு புரிந்து வைத்திருப்பதால், மக்களுக்கு உரிய காலத்தில் குடியிருப்புகளை ஒதுக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம்" என்கிறார்.
குடியிருப்புத் திட்டம் முடங்கிக் கிடக்கும் பகுதி களில் மக்கள் அதிருப்தி யடைந்து வருவதால் இப்பிரச்சனையில் தலையிட்டு அரசு உடனடி தீர்வுகாண வேண்டும் என்பதே அதிகாரி களின் குரலாக இருக்கிறது.