மாவட்ட திட்டக்குழு தேர்தலில் சொந்தக் கட்சியினரே தி.மு.க.வின் கட்சித் தலைமை அறிவித்த வேட்பாளர்களைக் கவிழ்த்தியதுடன், மிகவும் மைனாரிட்டி வாக்குகளைக் கொண்ட அ.தி.மு.க வேட்பாளரை வெற்றிபெற வைத்திருக்கிறார்கள்.
மொத்தம் 12 மாவட்டத் திட்டக் குழு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கிற தென்காசி மாவட்டத்திற்கான திட்டக்குழு உறுப்பினர் தேர்தல் ஜூன் 26-ல் நடந்தது. இதில் மாவட்டத்தி லுள்ள மொத்த ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி களின் சேர்மன், தலைவர் போன்ற பொறுப்புகள் தி.மு.க.வினரின் வசமிருப்பதால் உள்ளாட்சி நிர்வாகங்கள் ஆளும் தி.மு.க.வின் பக்கம். அனைத்து உள்ளாட்சிகளிலுள்ள 500-க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் தி.மு.க.வினர். சுமார் 83 உறுப்பினர் கள் அ.தி.மு.க.வினர்.
தென்காசி மாவட்ட கலெக்டர் அலு வலகத்தில் நடந்த தேர்தலில் ஊரகப் பகுதிக்கான திட்டக்குழு உறுப்பினர்கள் 7 பேர் தேர்தெடுக் கப்பட வேண்டிய நிலையில், தி.மு.க.வின் தலைமை அதற்கான 7 வேட்பாளர்களை அறிவித்தது. போட்டியிட்டவர்கள் 10 பேர். கடைசிக் கட்டத்தில் 3 பேர் வராமல்போகவே தி.மு.க. கட்சி அறிவித்த வேட்பாளர்களான உதயகிருஷ்ணன், சி.சுதா, பி.சுதா, தேவி, பூங்கொடி, மைதீன் பீவி, மதிமாரிமுத்து என்று 7 பேரும் வாக்களிப்பில் வெற்றிபெற்று திட்டக்குழு உறுப்பினர்களானார் கள்.
நகர்ப்புற பகுதிக்கான தேர்தலில் போட்டியிட கட்சி சார்பில் சுந்தரமகாலிங்கம், கே.என்.வி. சுப்பையா, பொன்செல் வன், சாக்ரடீஸ் உள்ளிட்ட 5 பேர்கள் வேட்பாளராக அறிவிக்கப்பட்டனர். நகர்ப்புற திட்டக்குழு உறுப்பினர் பதவிக்கு கடும் போட்டி. கட்சி அறிவித்த வேட்பாளர்களை எதிர்த்து தி.மு.க.வினரே போட்டியில் நின்று விறுவிறுப்பாக வாக்காளர்களிடம் வாக்கு சேகரித்தனர். போட்டியிட்ட 14 பேரில் 83 வாக்கு கள் பலத்தைக் கொண்ட அ.தி.மு.க.வின் சுரண்டை ந.செ.வும் கவுன்சிலருமான சக்திவேலும் ஒருவர்.
போட்டி கடுமை என்பதால் வாக்கு சேகரிப் பிலும் அனல் பறந்தது. இறுதியில் கடையநல்லூர் முருகன், சங்கரன்கோவிலின் கௌசல்யா, சிவகிரி உலகேஸ்வரி உள்ளிட்ட தி.மு.க.வைச் சேர்ந்த மூன்று பேர், காங்கிரசின் வாசுதேவநல்லூரைச் சேர்ந்த சரவணன் என்று தி.மு.க. கூட்டணியில் 4 பேரும், சுரண்டையைச் சேர்ந்த அ.தி.மு.க.வின் சக்திவேலும் தேர்தலில் வெற்றிபெற்று திட்டக்குழு உறுப்பினரானார்கள்.
சுரண்டையில் மட்டும் அ.தி.மு.க. உறுப்பினர் வெற்றிபெற்றது பற்றி, தன் அடையாளத்தை குறிப்பிடவேண்டாமெனப் பேசிய ஆளும் கட்சி பிரமுகர், "வெறும் 83 வாக்குகள் பலத்தைக் கொண்ட அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர் 257 வாக்குகள் பெற்று வெற்றியை எட்டினார்னா பணம் எப்படி வேலை செஞ்சிருக்குன்னு பார்த்துக்கங்க'' என வேதனையைக் கொட்டினார்.
- பி.சிவன்
படங்கள்: ப.இராம்குமார்