ந்த பெட்ரோல் குண்டும் அதன் பின்னணி விவகாரங்களும், தமிழக பா.ஜ.க. தலைமையை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. திருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளராக அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க.வின் மாநில வர்த்தகர் அணியின் துணைத் தலைவராகவுள்ள தணிகைவேல் போட்டியிட்டார். கடந்த 2020-ஆம் ஆண்டுதான் இவர் பா.ஜ.க.வில் இணைந்தார்.

p

அரசியல் நுணுக்கங்கள் அறிந்து மாநிலத் தலைவர் முருகன் வரை பலரையும் திருப்திப்படுத்தும் வகையில் நடந்துகொண்டார். அவரது திடீர் அரசியல் வளர்ச்சியை ஆச்சரியமாகப் பார்த்து திருவண்ணாமலை தி.மு.க., அ.ம.மு.க., ம.தி.மு.க.வில் இருந்து சிலர் பா.ஜ.க.வுக்குச் சென்றனர். அப்போது தி.மு.க.வில் இருந்து பா.ஜ.க.வுக்குச் சென்றவர் அருணை ஆனந்தன். ரியல் எஸ்டேட், கட்டுமான நிறுவனம் நடத்துபவருக்கு பா.ஜ.க.வில் மாவட்ட துணைத்தலைவர் பதவி வாங்கித் தந்தார் தணிகைவேல். பா.ஜ.க. வேட்பாளராக தணிகைவேல் அறிவிக்கப்பட்டதும், அருணை ஆனந்தன், பொதுச்செயலாளர் சிவசங்கரன், செல்பாபு உட்பட சிலர் களப்பணியாற்றினார்கள். இந்நிலையில்தான் அருணை ஆனந்தன் வீடு மீது பெட்ரோல் வெடிகுண்டு வீசப்பட்டுள்ளது.

அவரிடம் பேசியபோது, "தேர்தல் செலவு, தனிப்பட்ட செலவு, கட்சித் தலைவர் வர்றார் உடனே பணம் வேணும், ஒருமணி நேரத்தில் வேணும், காலையில் வேண்டும், இரண்டு நாளில் தந்துவிடுகிறேன் என வாட்ஸ்அப் காலில் கேட்பார் தணிகைவேல். நானும் 3 லட்சம், 5 லட்சம் என 28 லட்ச ரூபாய் தந்திருந்தேன். என்னிடம் பணம் இல்லாத போது, நண்பர்களிடமும் வாங்கித் தந்தேன். திருப்பிக் கேட்ட போது, ராங் காகப் பேசத் துவங்கினார். பண விவகாரத்தில் அவரிடம் நாணயமில்லாததால் அவரிடமிருந்து விலகினேன். தேர்தலின்போது தணிகைவேல் பற்றி பல நிர்வாகிகளும் அறிந்துகொண்டு அவரிடமிருந்து விலகினார்கள். அவர்கள் என்னிடம் பேசுவார்கள். இதை அவரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

Advertisment

கடந்த 27-ஆம் தேதி விடியற்காலை 2 மணிக்கு மூன்றுபேர் வந்து என் வீட்டுக் கதவை டமார், டமாரெனத் தட்டினார்கள். என்னவென பார்த்தபோது... என் நெஞ்சில் கைவைத்து கீழே தள்ளிவிட்டவர்கள், "அண்ணனிடம் பணமா கேட்கற, கொன்னுடுவோம்' என மிரட்டிவிட்டு பெட்ரோல் குண்டு வீசிவிட்டுச் சென்றார்கள். நல்லவேளையாக அது வெடிக்கவில்லை'' என்றார்.

p

அருகில் உள்ள ஒரு கட்டிடத்தில் இருந்த சி.சி.டி.வி. கேமராவை போலீசார் ஆய்வு செய்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த மூவர், ஆனந்தனை அடிப்பதும் பெட்ரோல் குண்டு வீசியதும் உறுதியானது. அதில் மாவட்ட இளைஞரணிச் செயலாளர் அஜித்குமார், ஆணாய் பிறந்தான் சதிஷ்குமார் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த வழக்கில் ஏ3 பாபு, ஏ4 பா.ஜ.க. வேட்பாளர் தணிகைவேல் இருவரையும் காவல்துறை தேடிவருகிறது.

Advertisment

இதுகுறித்து தணிகைவேல் கருத்தறிய நாம் தொடர்புகொண்டபோது, நமது லைனை எடுக்கவில்லை. பா.ஜ.க. மாவட்ட தலைவர் ஜீவானந்தத்திடம் கேட்ட போது, "தேர்தலுக்கு முன்பே கொடுக்கல்-வாங்கல், தேர்தலின்போது கருத்து முரண்பாடு என பிரச்சினை ஏற்பட்டுள்ளது, அதன் தொடர்ச்சியாகத்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதுபற்றி மாநிலத் தலைமைக்கு தகவல் கூறியுள்ளோம், அவர்கள் விசாரிக்கிறார்கள்'' என்றார்.

பா.ஜ.க. முக்கிய நிர்வாகிகள் சிலர் நம்மிடம், "தணிகைவேல் சீட்டிங் நபர் என்பதை நக்கீரன் தான் முதன்முதலாக வெளிச்சமிட்டுக் காட்டியது. அவருக்கு சீட் தரக்கூடாது என பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில்... மாநில தலைவர் முருகன் மூலம் சீட் வாங்கினார். வங்கி மோசடியில் சி.பி.ஐ. வழக்கு உள்ளதற்கான ஆதாரங்கள், வேட்புமனுவில் ஏகப்பட்ட குளறுபடியாக இருந்ததைப் பார்த்த மண்டல பொறுப்பாளர் கே.டி.ராகவன், "நீயே போட்டியில் இருந்து விலகிடு' என சத்தம் போட்டார். மனுவைத் தாக்கல் செய்துவிட்டு வேட்பாளர் தலை மறைவாகிவிட்டார். இதெல்லாம் அ.தி.மு.க. தலைமைக்குத் தெரிந்து, தங்கள் கட்சியின் சார்பில் அதிகாரபூர்வமாக ஒருவரை வேட்புமனுத் தாக்கல் செய்யவைத்தது. மனு பரிசீலனையின்போது தணிகைவேலுக்கு தி.மு.க. தரப்பிலும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அதனால் வேட்புமனு ஏற்கப்பட்டது.

வேட்பாளரைப் பற்றி தேர்தல் வேலைக்கு வந்த பிற மாநில ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. பிரமுகர்களின் ரிப்போர்ட்டால் தேர்தல் செலவுக்கான தொகையை வேட்பாளரிடம் தரவில்லை. பிரச்சாரத்துக்கு வரவிருந்த தேசிய தலைவர்கள் வருகையும் ரத்து செய்யப்பட்டது. மாநில நிர்வாகிகளும் இந்த தொகுதியை கண்டுகொள்ள வில்லை. மற்ற தொகுதிகள்போல எங்கள் கட்சியில் இங்கே ஓட்டுக்குப் பணம் தரவில்லை. தி.மு.க. வேட்பாளர் வேலுவிடம் தணிகைவேல் சரண்ட ராகிவிட்டதாகவும் பேச்சு. பிரச் சினைக்குரியவரான தணிகைவேலை, முருகன் இவ்வளவு தீவிரமாக சப்போர்ட் செய்ய என்ன காரணம் என்பது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விசாரணை நடத்துகிறது டெல்லி தலைமை.

வாக்கு எண்ணிக்கை முடிந்த பின் பா.ஜ.க.வில் இவ்விவகாரம் பெரியதாக வெடிக்கும், தணிகைவேல் மீதுள்ள வழக்குகள் தூசு தட்டப்படலாம். சி.பி.ஐ. வழக்கில் ‘கடிவாளம்’ போட வாய்ப்புள்ளது'' என்கிறார்கள்.

படங்கள் - எம்.ஆர்.விவேகானந்தன்

b