இந்த உலகத்தில் வாழும் ஒவ்வொரு உயிரினமும் தன்னை ஒரு தனித்துவத் துடனேயே பார்க்கின் றன. அதற்கு ஒரு தேசமோ, ஒரு இனமோ, ஒரு மொழியோ, ஒரு மனிதனோ விதி விலக்கல்ல.
உலகத்தில் உள்ள எல்லா நாட்டி லும் பொதுவாக ஏதோ சில பிரச்சினை கள் இருக்கின்றன. அதற்கு தீர்வுகளும் காணப் பட்டிருக்கின்றன. ஆனால் சமூக பிரச்சினையில் சாதிய தீண்டாமையில் மற்ற நாடுகளை விட இந்தியா தனித்துவமாக இருக்கிறது என்பது நமக்கு அவமானமே. அப்பேற்பட்ட ’தனித்துவமான’ இந்தியாவில் இந்த சாதிய தீண்டாமை பிரச் சினையை கத்தியின்றி கலவர மின்றி ஒரு சொட்டு ரத்தமின்றி ஒரு இன்னுயிர் இரையாகாமல், எந்த கலவரமும் இல்லாமல், வெறும் கலகக்குரலாய் மட்டுமே இருந்து ரத்தமும் சதையுமாக இருந்துகொண்டே ஒரு மனித நேய மானுட புரட்சியை செய்து முடித்து தமிழ்நாட்டு மக்களிடையே ஒரு தனித்துவ மான தலைவனாக தனித்து நிற்கிறார் தந்தை பெரியார்.
கணிதவியலில் கோளத் துக்கு எண்ணற்ற ஆரங்கள் உள் ளன. அதுபோல் இந்த உலகத் தில் பெரியார் ஒரு கோளம் என்றோ உலகம் என்றோ வைத்துக்கொண்டால், அதற்கு லட்சக்கணக்கான பார்வை களும், எண்ணங்களும் இருக் கும். என்னுடைய பார்வையில் பெரியாரைப் பற்றி அறிந்ததை யும் ஆராய்ந்ததையும் தெரிந்ததையும் தெளிந்ததை யும் சொல்ல விழைகிறேன்.
பெரியாரை மட்டும் ஏன் தமிழ்நாட்டு மக்கள் இவ்வளவு கொண்டாடுகிறார்கள்? அவர் அப்படி என்ன செய்துவிட்டார் இந்த சமூகத்துக்கு? இந்த தமிழ்நாட்டுக்கு என்ன திட்டங்கள் கொடுத்தார்? இந்த மக்களுக்கு என்ன தியாகங்கள் செய்தார்? இன்னும் பல பல கேள்விகள். இதற்கெல்லாம் பதில் இல்லையா? இதிலெல்லாம் உண்மையில்லையா? என்றால் பதில் உண்டு. உண்மை உண்டு.
பெரியார் பொது வாழ்க்கைக்கு வந்த காலமென்ன? அப்பொழுது இங்கு என்னென்ன பிரச்சினைகள் இருந்தன. அவர் காலத்தில் வாழ்ந்த சமகாலத் தலைவர்கள் யார் யார் என்று பார
இந்த உலகத்தில் வாழும் ஒவ்வொரு உயிரினமும் தன்னை ஒரு தனித்துவத் துடனேயே பார்க்கின் றன. அதற்கு ஒரு தேசமோ, ஒரு இனமோ, ஒரு மொழியோ, ஒரு மனிதனோ விதி விலக்கல்ல.
உலகத்தில் உள்ள எல்லா நாட்டி லும் பொதுவாக ஏதோ சில பிரச்சினை கள் இருக்கின்றன. அதற்கு தீர்வுகளும் காணப் பட்டிருக்கின்றன. ஆனால் சமூக பிரச்சினையில் சாதிய தீண்டாமையில் மற்ற நாடுகளை விட இந்தியா தனித்துவமாக இருக்கிறது என்பது நமக்கு அவமானமே. அப்பேற்பட்ட ’தனித்துவமான’ இந்தியாவில் இந்த சாதிய தீண்டாமை பிரச் சினையை கத்தியின்றி கலவர மின்றி ஒரு சொட்டு ரத்தமின்றி ஒரு இன்னுயிர் இரையாகாமல், எந்த கலவரமும் இல்லாமல், வெறும் கலகக்குரலாய் மட்டுமே இருந்து ரத்தமும் சதையுமாக இருந்துகொண்டே ஒரு மனித நேய மானுட புரட்சியை செய்து முடித்து தமிழ்நாட்டு மக்களிடையே ஒரு தனித்துவ மான தலைவனாக தனித்து நிற்கிறார் தந்தை பெரியார்.
கணிதவியலில் கோளத் துக்கு எண்ணற்ற ஆரங்கள் உள் ளன. அதுபோல் இந்த உலகத் தில் பெரியார் ஒரு கோளம் என்றோ உலகம் என்றோ வைத்துக்கொண்டால், அதற்கு லட்சக்கணக்கான பார்வை களும், எண்ணங்களும் இருக் கும். என்னுடைய பார்வையில் பெரியாரைப் பற்றி அறிந்ததை யும் ஆராய்ந்ததையும் தெரிந்ததையும் தெளிந்ததை யும் சொல்ல விழைகிறேன்.
பெரியாரை மட்டும் ஏன் தமிழ்நாட்டு மக்கள் இவ்வளவு கொண்டாடுகிறார்கள்? அவர் அப்படி என்ன செய்துவிட்டார் இந்த சமூகத்துக்கு? இந்த தமிழ்நாட்டுக்கு என்ன திட்டங்கள் கொடுத்தார்? இந்த மக்களுக்கு என்ன தியாகங்கள் செய்தார்? இன்னும் பல பல கேள்விகள். இதற்கெல்லாம் பதில் இல்லையா? இதிலெல்லாம் உண்மையில்லையா? என்றால் பதில் உண்டு. உண்மை உண்டு.
பெரியார் பொது வாழ்க்கைக்கு வந்த காலமென்ன? அப்பொழுது இங்கு என்னென்ன பிரச்சினைகள் இருந்தன. அவர் காலத்தில் வாழ்ந்த சமகாலத் தலைவர்கள் யார் யார் என்று பார்த்தோமேயானால், முழுக்க முழுக்க வைதீகக் குடும்பத்தில் பிறந்த பெரியார், ஆரம்பகாலம் தொட்டு அதே வைதீக வாழ்க்கை முறைகளைப் பின்பற்றியே வந்தார். பெரும் சுகபோக வாழ்க்கையில் இருந்த பெரியார் தனது தந்தையா ரின் வற்புறுத்தலின் பேரின் சிறிதுகாலம் துறவறம் செல்ல நிர்பந்திக்கப்படுகிறார். பெரியார் காசிக்குச் செல்கிறார். அங்கு வைதீக பார்ப்பனியத்தின் கயமையையும், அதன் தில்லுமுல்லு திருவுதாளங்களையும், திருட்டுத்தனங்களையும் கண்டு இயல்பாகக் கேள்விகளைக் கேட்கிறார். பெரியார் இங்குள்ளவற்றைக் கேள்வி கேட்காதவரைக்கும் எதுவும் பிரச்சினையில்லை.
ஒரு கேள்விக்கு பதில் கேட்க, அதுக்கு முறையான பதில் இல்லாதபோது அதற்கான விளைவுகள் அந்த சமூகத்தில் நடந்தேறுவது இயல் பானதே. அதுதான் ஈரோடு வேங்கடப்ப ராமசாமி நாயக்கர் பெரியாராக மாறிய தருண மாகிறது.
பொதுவாக மனிதன் தன் வாழ்வில் தனக்கு தெரியாத எல்லா குழப்பமான விஷ யங்களையும் ஓரமாக வைத்து யோசித்துக் கொண்டிருப்பான். தினசரி வேலைகளைப் பார்த்தாலும் அந்த கேள்விகளும், அந்த ஆராய்ச்சி புத்தியும் அவ்வப்போது யோசித்துக்கொண்டும், விடை தேடிக் கொண்டுமே இருக்கும். அதற்கான விடை கிடைத்துவிட்டால் அதிலிருந்து அவனுடைய மொத்த வாழ்க்கையின் போக்கையும் மாற்றக்கூடிய ஒரு விளைவாக அந்த பகுத்தறிவு ஆராய்ச்சி அமையும். இதுதான் மனித நாகரிகத்தின் வரலாறாகவும் இருக்கிறது. இதுதான் பெரியாரின் வாழ்விலும் நிகழ்ந்தது. ஒரு கேள்வி கேட்டு, அதில் சரியான பதில் கிடைக்காததால் அதிலிருந்து தனது ஒட்டுமொத்த வாழ்க்கையையும் கேள்விக்கு உட்படுத்துகிறார். விளைவு, சமூகம் அதிர்ந்தது.
பெரியார் தன் வாழ்நாளில் இந்த சமூகத்துக்கு என்ன செய்தாரென்று கேட்போருக்கு, ஒன்றுமில்லை என்றுதான் சங்கிகளின் கண் வழியாகப் பார்த்தால் தோன்றும். ஆனால் அவர் தான், ஒரு குற்றவுணர்வில்லாத, சுயமரியாதையுள்ள மனிதனாக வாழ நினைக்கும்பொழுது குறுக்கே வந்ததுதான் இந்த பார்ப்பனீயம். அவர் பார்ப்பனீயத்துக்கு எதிராக எழுப்பிய அத்தனை கலகங்களும் சமூகத்துக்காக அல்ல அவருக்காகவே.
பெரியார் எந்த விஷயத்திலும் நுனிப்புல் மேய்பவர் அல்ல. எது ஒன்றையும் தானே அனுபவித்து, தானே கேள்வி கேட்டு, தானே பதில் தேடி, தானே தெளிவுக்கு வரக்கூடி யவர். அவர் எடுத்த அத்தனை முடிவுகளும் அவரே ஆராய்ச்சி செய்து எடுத்த முடிவுகளே ஆகும். அவர் எடுத்த அனைத்து முடிவுகளும் அவருடைய வாழ்க்கையில் ஒரு புதிய சந்தோஷ உணர்வை கொடுக் கவே அதை இந்த சமூகத்துக்கு கொடுக்க வேண்டும் என்று நினைத்தார். முதலில் அதை சாதாரணமாகத்தான் எடுத்துக் கொண்டார். ஆனால் அன்று அந்த விடுதலை உணர்வை மக்களுக்கு கொடுக்கவிடாமல் தடுப்பதற்கு குறுக்கே வந்தவர் களே அவரின் எதிரிகளாயினர். அப்படி அன்றிலிருந்து தடுத்த வர்களும் குறுக்கே வந்தவர் களின் வாரிசுகளும்தான் இன்றுவரை அதே வேலையை செய்துகொண்டிருக்கிறார்கள்.
பெரியார் நமக்கு எதை கடத்திவிட்டு சென்றார்? ஏன் இவ்வளவு எரிச்சல் கொள்கிறது எதிர் முகாம் என்றால், பெரியார் வெறுமனே தகவல்களை மட் டுமோ அல்லது நம்பிக்கையை மட்டுமோ விட்டுச் செல்ல வில்லை. மாறாக நமக்கு தர்க்கம் செய்ய பயிற்சி கொடுத்துவிட் டுச் சென்றிருக்கிறார். சுயமாக யோசித்து வாத, விவாதங்களை செய்துகாட்டி அதில் வெல்ல தைரியத்தை விட்டுச் சென்றிருக் கிறார். இவை அனைத்தையும் நமக்கு அணு அணுவாக பயிற்சி தந்து கடத்தியிருக்கிறார். அத னால் நம்மை ஏமாற்ற சங்கி அல்ல... எந்த சொங்கி வந்தா லும் புற மண்டையில் பொளே ரென்று வாங்கிச் செல்வதைத் தவிர வேறு வழியேயில்லை தமிழ்நாட்டில். ஒரு கருத்தியல் எப்போதும் தவறுவதில்லை. ஆனால் கருத்துக்களை பின்பற்றும் மனிதர்களின் தரத்தை பொறுத்து மாறும். இங்கு சில பக்குவமற்ற, தரமில்லாத சிலர் கருத்தாளர்கள் என்ற பெயரிலும் தலைவர்கள் என்ற பெயரிலும் உலா வந்து சமூகத்தில் அவர்கள் பேசும் கருத்துகள்தான் முழுதும் நிரம்பி இருப்பது போன்ற தோரணையைக் கொடுக்க முயற்சிப்பார் கள். அதுவும் தொழில்நுட்பமும் அரசியலின் புது பரிணாமமும் ஒருங்கே மாற்றமடையும் இந்த பத்தாண்டுகளில் இப்படியொரு பிம்பத்தை ஏற்படுத்துவது எளிதானதாக இருக்கிறது. ஆனால் பொதுமக்கள் அப்படியில்லை, இவர்களை ஒரு அரசியல் ஜோக்கர்களாக பார்த்து சிரித்துவிட்டு கடந்து சென்றுவிடுகிறார்கள். எல்லா துறைகளி லும் ஒரு சுவாரஸ்யம் தேவைப்படுவது இயல்பு தானே. எப்போதும் வளர்ச்சியை மட்டும் நோக்கி போய்க்கொண்டிருக் கும் தமிழ்நாட்டு மக்கள், இப்படியாக இடையில் வரும் இந்த சில்லறை சங்கி களையும், சல்லி ஜோம்பிகளையும் அரசியல் காமெடியன் களாகப் பார்க்கிறார் கள்.
பெரியாரை எதிர்ப்பவர்கள் பார்ப் பனீயவாதிகள் மட்டு மல்ல, அவ்வப்போது காலந்தோறும் தோன்றி மறையும் சில போலி தமிழ்த் தேசிய வாதிகளுமேதான். ஆனால் பெரியார் காலத்தில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்கள், தமிழ்ப் போராளிகள் பெரும்பாலும் பெரியாரின் பக்கமே நின்றிருக் கிறார்கள் என்பதே வரலாறு. இன்றளவும் தமிழ்த் தேசியம் என்ற பெயரில் பார்ப்பனீயத்தின் பின்னால் நின்றுகொண்டு தமிழர்களுக்கு கேடு செய்கிறார்கள்.
எதற்கு இந்த திராவிட ஒவ்வாமை? பெரியார் தமிழர்களுக்கு எதிரானவரா? என்று பார்த்தால்... உண்மை அதுவல்ல. "இந்த தமி ழினத்தை சமமாக நடத்தக்கூடிய எவன் வந்தா லும் அவன் பின்னாடி நிற்பதே நமது கடமை' என்று பேசினார். நமது இனத்தை ரெண்டாந்தர மக்களாக இந்த பார்ப்பனீயம் இம்மண்ணில் நம்மை பார்த்தபோது, அதன் அடியாழத்தை வேரறுத்தவர் பெரியார். ஆனால் அவர் வேறு மாநிலத்தவர் என்கிற எடுபடாத வார்த்தை யைச் சொல்லிச் சொல்லி தோற்றுப்போய் நிற்கிறார்கள்.
உண்மையில் இவர்களுக்கு பிரச்சினை திராவிடம் என்ற கருத்தியல் இல்லை. பெரியார் பேசிய பெண்ணுரிமையால் பாதிக்கப்பட்டது குடும்ப அமைப்பில் இருந்த சில ஆண் சுரண்டல் வாதிகளும்தான். காலப்போக்கில் பெரியார் பேசிய கருத்துகள் பெண்களிடம் எடுபடவே, சுரண்டிக் கொழுத்து தின்றுகொண்டிருந்த சில ஆண்கள் பெரியாரை எதிரியாகவே பார்த்தார் கள். எளிதாக சொல்லவேண்டுமானால் வீட்டு வேலைகளில் பெண்கள் பேசிய உரிமைகள்தான் பார்ப்பனீயத்தை ஆதரிக்கும் ஆண்களுக்கு எரிச்ச லாக இருந்தது. அவர்கள் வெளியில் தெரியாமல் கலாச்சாரம், பண்பாடு என்கிற பெயரில் இன்றள வும் கணிசமாக சமுதாயத்தில் பெரியாரை பிடிக் காத எதிரிகளாகத் திரிந்து கொண்டிருக்கிறார்கள்.
பெரியார் பேசும் கருத்துக்களை சிலபேரால் செரிமானம் செய்துகொள்ளவே முடியவில்லை. அன்றிலிருந்து இன்றுவரை நிலைமை அதுதான். இப்போது பாராளுமன்றத்தில் தமிழர்கள் நாகரிகமற்றவர்கள் என்று பேசி, பின் அதேவேகத்தில் மன்னிப்பும் கேட்ட ஒன்றிய அமைச்சர் பிரதானுக்கு ஆதரவாக பேசிய நிர்மலா சீதாராமன்... சம்பந்தமேயில்லாமல் "எதற்கு நீங்கள் பெரியாருக்கு மாலை மரியாதை செலுத்தி இவ்வளவு கொண்டாடுகிறீர்கள்?' என்று புலம்பியிருக்கிறார். ஆக, ஒன்றியத்தில் இருக்கும் பார்ப்பனீயத்துக்கு தமிழ்நாட்டிற்கு நிதி கேட்டாலோ, நீதி கேட்டாலோ கடுப்பாகிறது. மற்ற மாநிலங்கள் மாதிரி அடங்கிப் போகாமல் தமிழ்நாட்டின் நடைமுறை வேறுமாதிரியாக இருக்கிறது. அந்த வேறுமாதிரியை நமக்கு கற்றுத்தந்த பெரியாரை கண்டால் அவர்களுக்கு எப்போதுமே பேரிடி தான்.
ஆக ஒருகாலத்தில் தமிழ்நாட்டிற்கு மட்டும் சவாலாக இருந்த பெரியார், இன்று ஒட்டுமொத்த ஒன்றியத்திற்கும் தலைவலியாக மாறி நிற்கிறார். இதே நிலைமை இந்தியா கடந்து நீடித்தால் அவர் உலக அரங்கிலும் அநியாய அக்கிரமங் களுக்கும் எதிரான சம்மட்டியாக இருப்பார் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.