விறுவிறுப்பை எட்டி யிருக்கிறது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல். ஏற் கெனவே காங்கிரஸுக்கு ஒதுக் கப்பட்ட தொகுதி என்ற அடிப்படையில், மீண்டும் காங் கிரஸுக்கே இத்தொகுதியை விட்டுக்கொடுத்திருக்கிறது தி.மு.க. இத்தொகுதியில் ஈ.வி. கே.எஸ்.இளங்கோவன் குடும்பத் திலிருந்து ஒருவர் போட்டியிட்டால் சரியாக இருக்குமென்று தி.மு.க. தலைமை கருதியது.
இந்நிலையில், கடந்த 22ஆம் தேதி காலையில் நடைப் பயிற்சி மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின், இளங்கோவன் வீட்டிற்கும் சென்றார். அப் போது, "கட்சித் தலைமையிடம் எனது இளைய மகனுக்கு வாய்ப்பு கேட்டுள்ளேன்'' என்று ஸ்டாலினிடம் தெரிவித்திருக் கிறார் இளங்கோவன். அதற்கு ஸ்டாலின், "உங்க கட்சிக்கு கொடுத்து விட்டோம். தி.மு.க. நிர்வாகிகள் களப்பணியில் இறங்கி விட்டார்கள். வெற்றி பெறுங்கள்'' என்று கூறிவிட்டு வந்துள்ளார். அடுத்து, காங்கிரஸ் தலைமையிடம் "அது முக்கியத் துவம் வாய்ந்த தொகுதி. அங்கு நாங்கள் போட்டியிடாமல் காங்கிரஸுக்கு கொடுத்திருக் கிறோம் என்றால், அதன் பெரு மையை உணருங்கள், அதற்கு தகுந்தாற்போல் வேட்பாளரை அறிவிப்பதுதான் சிறந்தது'' என்று கூறியிருக்கிறார். அதை யடுத்து, இளங்கோவ னைத் தொடர்பு கொண்ட காங்கிரஸ் தலைமை, "நீங்கள் நிற்பது தான் சரியாக இருக்கும். உங்களையே வேட்பாளராக அறிவிக்கிறோம்'' என்றுகூறி, அதி காரப்பூர்வமாக இளங்கோவனை அறிவித்திருக்கிறார்கள். ஆக, கலைஞர் மகனின் வியூகம் வொர்க்-அவுட் ஆகியுள்ளது
மறுபுறம் அ.தி.மு.க. அணி யில், ஏற்கெனவே போட்டியிட்ட த.மா.கா, இம்முறை எடப்பாடி அணியினரின் வேண்டுகோளை ஏற்று, அ.தி.மு.க.வே களமிறங்க ஒப்புக்கொண்டது. அதையடுத்து, அ.தி.மு.க.வே போட்டியிடு மென்று எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் அறிவித்தார்கள். அ.தி. மு.க.வில் முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் போட்டியிடு வாரென்பதும் ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதற்கிடையே ஓ.பி.எஸ். அணி யினரும் தங்கள் சார்பாக வேட் பாளரைக் களமிறக்கப்போவதாக அறிவித்து தலைவலியை ஏற் படுத்தியுள்ளனர். அதையடுத்து, இரு அணியினரும் தனித்தனியே பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை யை நேரில் சந்தித்து ஆதரவு கேட்டனர். அதோடு, ஈரோடு கிழக்கு தொகுதியில் பா.ஜ.க. போட்டியிட்டால் ஆதரவு கொடுப்போமென்று ஓ.பி.எஸ். அறிவித்தது அ.தி.மு.க.வினரிடையே கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற் கிடையே, இரட்டை இலை சின்னம் கிடைக்குமா? முடக்கப் படுமா? என்ற பட்டிமன்றம் ஒரு புறமும், பா.ஜ.க.வும் கள மிறங்குமா? என்ற குழப்பம் ஒருபுறமுமாக அ.தி.மு.க. அணியில் இழுபறி தொடர்கிறது.
தி.மு.க.விலோ, கடந்த 20ஆம் தேதி வாக்குச்சாவடி முக வர்கள் கூட்டத்தைக் கூட்டிய தோடு, பூத் கமிட்டி கூட்டத் தையும் நடத்திவிட்டு, 21ஆம் தேதியே நிர்வாகிகளோடு வாக் குச் சேகரிக்கக் கிளம்பிவிட்டார் ஈரோடு மாவட்டச் செயலாள ரும் அமைச்சருமான சு.முத்து சாமி. முத்துசாமி, கே.என்.நேரு, செந்தில்பாலாஜி உள்ளிட்ட 13 அமைச்சர்களும், கோவை, திருப்பூர், நீலகிரி, சேலம், கள்ளக் குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல் மாவட்டங் களைச்சேர்ந்த 18 மா.செ.க்களும் மொத்தமாகக் களமிறக்கப் பட்டுள்ளனர். இத்தொகுதியை மீண்டும் கைப்பற்றுவதை கவுரவப் பிரச்சனையாகக் கருதி தி.மு.க. பம்பரமாகச் சுழலத் தொடங்கியதால் இத்தொகுதியில் அனலடிக்கத் தொடங்கிவிட்டது.