ட்டைக்கடித்து மாட்டைக்கடித்து பின் மனிதனைக் கடிப்பதுபோல் பெரியார் சிலையைப் பற்றி அண்ணாமலை பேசிய பேச்சு பூமராங் ஆகி அண்ணாமலைக்கே எதிராகத் திரும்பி இருக்கிறது. அ.தி.மு.க.கூட அண்ணாமலையின் இந்தப் பேச்சைக் கண்டித்திருக்கிறது. பாபர் மசூதியை இடித்தது போல பெரியார் சிலையை இடிப்பது அவ்வளவு எளிதான செயல் அல்ல என எழுந்த கண்டனங்களால், "நான் பெரியார் சிலையை உடைப்பேன் என்று சொல்ல வில்லை''’என அண்ணாமலை தான் பேசிய பேச்சை, அவரே ஒரு தனியார் சேனலைக் கூப்பிட்டு தன் பேச்சை மாற்றித் தானே பேட்டி கொடுக்கும் நிலைக்குத் தள்ளிவிட்டது.

periyar

அண்ணாமலை குறிப்பிட்டுப் பேசிய ஸ்ரீரங்கம் கோவிலுக்குப் பக்கத்தில் அமைக்கப் பட்டுள்ள பெரியார் சிலை. அதில் “"கடவுளை கற்பித்தவன் முட்டாள்; கடவுளை பரப்புகிறவன் அயோக்கியன்; கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி'’என எழுதப்பட்டிருக்கிறது. தமிழகம் முழுவதும் உள்ள அந்த வாசகங்களை நான் அகற்றுவேன் என அண்ணாமலை சொன்னார். ஆனால் ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள பெரியார் சிலையில் “"கடவுளை மற! மனிதனை நினை! பக்தி என்பது தனிச் சொத்து! ஒழுக்கம் என்பது பொதுச் சொத்து!'” என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் கோவில் பகுதியில் இருக்கும் பெரியார் சிலையை அகற்றுவேன் என்று சொல்லிவிட்டு அந்த சிலையில் இடம்பெற்றிருக்கும் வாசகங்கள் என்று வேறு வார்ததைகள் கொண்ட பெரியா ரின் கொள்கைகளை அழிப்பேன் என அண்ணாமலை கூறியது பெரும் பரபரப்பையும், பா.ஜ.க. கட்சியின் மேல் வெறுப்பையும், அண்ணாமலையின் மீது கடும் கோபத்தையும் ஏற்படுத்தியது. தி.மு.க., அ.தி.மு.க. என கட்சி பேதம் இல்லாமல் ‘"தொட்டுப்பார்'’ என சவால்கள் அண்ணாமலையை நோக்கிப் பாய, அண்ணாமலை உடனே சட்டென்று பின்வாங்கியுள்ளார் என்கிறார்கள் பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்கள்.

இதற்கிடையே சேலத்தில் ஙநஙஊ மோசடியில் சிக்கிய முத்துராமனையும் துஷ்யந்த் யாதவையும் போலீஸ் காவலில் எடுத்திருக்கிறார்கள். 100 கோடிக்கும் மேலான அந்த மோசடியில் நமீதாவின் கணவர் சௌத்ரி நாலு கோடி ரூபாயை முத்துராமனிடம் கொடுத்து மாநில ஙநஙஊ டதஞஙஞபஒஞச ஈஞமசஈஒக தலைவர் பதவியை பெற்றிருக்கிறார். நமீதா கொடுத்த இந்தப் பணத்தில் அவருக்கு நாலு கோடி எப்படி வந்தது என நமீதாவிடம் கணக்கு கேட்டிருக்கிறார்கள் போலீசார். “ஒரு கோடி ரூபாய் பணத் திற்கு இருபது லட்சம் ரூபாய் வருமானவரி கட்ட வேண் டும். அப்படி கணக்கு போட்டால் வருமானவரி கட்டாத நமீதாவின் நாலு கோடி ரூபாய் பணமும் கணக்கில் வராத பணம். அதற்கு இரண்டரை கோடி ரூபாய் அபராதத்துடன் சேர்த்து பணம் கட்டியாக வேண்டும் என போலீசார் சொல்லியுள்ளார்கள்” என்று நமீதா அண்ணாமலையிடம் புலம்பியுள்ளார். “"விழுப்புரத்தில் நடந்த ஆர்ப்பாட் டத்தில் நான் தமிழக முதல்வரை கடுமையாக விமர்சித்துப் பேசியதால் தான் தமிழகப் போலீஸ் என்னைக் குறிவைக்கிறது''’என்று நமீதா அண்ணாமலையிடம் புலம்பி யிருக்கிறார்.

dd

Advertisment

அதற்கு அண்ணாமலை “"கவலைப்படாதே! நான் பார்த்துக் கொள்கிறேன்'' என அறுதல் சொல்லியிருக்கிறார்.

போலீஸ் கஸ்டடியில் முத்து ராமன் அண்ணாமலைக்கும் இந்த மோசடிக்கும் உள்ள தொடர்பு பற்றி தெளிவாக வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். “"எனக்கு ராம்விலாஸ் பாஸ்வான் மூலமாகத்தான் பா.ஜ.க. தொடர்பு ஏற்பட்டது. அவர் என்னை தெலுங்கானாவில் பொருள் சேமிப்புக் கிட்டங்கிகள் வாரியத்தின் உறுப்பினராக நியமித் தார். அதில் நல்ல வருமானம் கிடைத்தது. ஹரிநாராயணன் ராஜ்பட் என்பவர் ஙநஙஊ டதஞஙஞபஒஞச ஈஞமசஈஒக என்கிற அமைப்பை உருவாக்கினார். நான் அதைக் காப்பியடித்து மத்திய சிறுதொழில் அமைச்சர் நாராயண ரானே உதவியுடன் ஒடிசாவில் தொழில் அதிபர்கள் கூட்டத்தை நடத்தி ஏமாற்று வேலை செய்தேன். தேசியக்கொடி, அசோகச் சின்னம் ஆகியவற்றை எனது காரில் நானே செட்டப் செய்துகொண்டு அந்த அமைப்பின் தலைவர் போல உருவாக்கிக்கொண்டேன். பா.ஜ.க. மீடியா பொறுப்பாளர் ரங்கநாயக்கலு, கரு. நாகராஜன் ஆகியோர் அண்ணாமலையிடம் பேசி தமிழக பா.ஜ.க.வின் அபீசியல் லெட்டர்பேடில் நான் விளம்பரம் செய்வதற்கு அனுமதித்தார்கள். நாங்கள் சென்னை அடையாரில் உள்ள கிரவுன் பிளாசா நட்சத்திர ஹோட்ட லில் தொழிலதிபர்கள் கூட்டத்தை நடத்தினோம். அதில் நமீதாவின் கணவர் சௌத்ரி கலந்துகொண்டார். மத்திய அமைச்சர் நாராயண ரானே பெயரைப் பயன்படுத்தி நடந்த அந்த தொழிலதிபர்கள் கூட்டத்தில் தமிழகத்தின் பெரிய பத்திரிகைகளில் ரங்கநாயக்கலு ஙநஙஊ டதஞஙஞபஒஞச ஈஞமசஈஒக பற்றிய செய்தி வரவைத்தார். இவையெல்லாம் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்குத் தெரிந்தேதான் நடந்தது. ‘அண்ணாமலைக்கு பணம் தருகிறேன்’ என கோடிக்கணக்கான பணத்தை பா.ஜ.க. நிர்வாகிகள் என்னிடமிருந்து பெற்றார்கள். சென்னையைத் தொடர்ந்து மதுரை, சேலம் ஆகிய இடங்களில் கூட்டங்கள் நடத்தினோம். பலரிடம் லட்சக்கணக்கில் ஏமாற்றினோம். அதில் ஒருவர் புகார் கொடுத்துவிட்டார். நான் சிக்கிக் கொண்டேன்” என முத்துராமன் கொடுத்த கஸ்டடி வாக்குமூலத்தைத் தொடர்ந்து ஒடிசாவிலும், மத்திய அமைச்சர் ரானேவிடமும் தமிழக பா.ஜ.க. நிர்வாகிகளிடமும் விசாரணை செய்ய போலீசார் திட்டமிட்டிருக்கிறார்கள். தலைவர் அண்ணாமலையிடம் இந்த கூட்டு மோசடி பற்றி விசாரிக்க இருக்கிறார்கள் என்கிறது காவல்துறை வட்டாரங்கள்.

பெரியாரைப் பற்றிப் பேசப்போக ஏகப்பட்ட இடியாப்பச் சிக்கலில் சிக்கிக்கொண்டு ஆப்பில் மாட்டிக்கொண்ட குரங்குபோல தவிக்கிறார் அண்ணாமலை என்கிறார்கள் பா.ஜ.க. அலுவலக நிர்வாகிகள்.

Advertisment