ஞ்சாவூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்றது பேராவூரணி முடப்புளிக்காடு நீலகண்டபுரம் 'ஏந்தல் நீலகண்டபிள்ளையார்' கோயில். பேராவூரணியைச் சுற்றியுள்ள சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராம மக்களின் இஷ்டதெய்வம். டெல்டா மாவட்ட அரசியல்வாதிகள் அடிக்கடி வந்துசெல்லும் கோயில். தேர்தல் காலங்களில் நீலகண்ட விநாயகரை வணங்கிய பிறகே தங்கள் முதல் பிரச்சாரத்தை தொடங்குவார்கள்.

நீலகண்ட விநாயகர் கோயிலில் சித்ரா பவுர்ணமி திருவிழா பிரபலம். இந்த கோயிலுக்கு தேரோட்ட நாளில் தள்ளி விலக்கமுடியாத அளவில் லட்சக்கணக்கில் பக்தர்கள் கூட்டம் இருக்கும். இந்த ஆண்டு சித்ராபவுர்ணமி திருவிழா மே 3ஆம் தேதி தொடங்கி 14ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்கான அழைப்பிதழை அறநிலையத்துறை வெளி யிட்டுள்ள நிலையில், 10 ஆண்டுகளாக மூடிக்கிடக்கும் புதிய வைரத்தேர் ஓட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டம் நடத்த பக்தர்கள் வரவேண்டும் என்று அ.தி.மு.க. முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் ஆதனூர் ஆனந்தன் முகநூல் மூலம் அழைப்புக் கொடுத்துள்ளார்.

dd

ஆதனூர் ஆனந்தனிடம் ஏன் இந்த போராட்டம் என்று கேட்டபோது, "பேராவூரணி முடப்புளிக்காடு நீலகண்ட பிள்ளையார் கோயில் மிக பிரசித்திபெற்றது துளசேந்திர மகாராஜாவின் அமைச்சருடைய தீராத நோயை தீர்த்துவைத்தது இந்த குளமும் நீலகண்ட பிள்ளையாரும் என்பது நம்பிக்கை. இந்த கோயிலுக்கு புதிய வைரத் தேர் செய்ய வேண்டும் என்ற பக்தர்களின் கோரிக்கையை யடுத்து 2014-2015ல் அறநிலையத்துறை அனுமதியுடன், பக்தர்களின் நிதியுதவியில் சுமார் 35 டன் எடையுள்ள புதிய வைரத்தேர் செய்யப்பட்டது. அந்த தேரை இன்றுவரை ஓட்டாமல் 10 ஆண்டுகளாக மூடி வைத்துவிட்டு பழைய தேரையே இழுக்கின்றனர். புதிய தேரை இழுக்கவேண்டும் என்பதை வலியுறுத்தித்தான் பக்தர்களை போராட அழைத்திருக்கிறேன். அறநிலையத்துறை உடனே தலையிட்டு தடைகளைத் தகர்த்து புதிய தேரை இழுக்க வழிவகை செய்யவேண்டும்''’ என்றார்.

இதுகுறித்து விவரமறிந்த பக்தர்கள் நம்மிடம், “"பழைய தேர் நிலங்களில் ஓடிவந்தது. ஆனால் புதிய தேர் எடை அதிகமென்பதால், தார்ச்சாலை அல்லது காங் கிரீட் சாலை இருந்தால்தான் ஓட்ட முடியும். ஆனால் தேரோடும் வீதிக்கான நிலங்கள் தனியார் நிலம் என்பதால் நிரந்தர சாலை அமைக்கமுடியவில்லை. அதனால் நில உரிமையாளர் களிடம் பேசி நிலத்தை கோயிலுக்கு வாங்க வேண்டும். கடந்த காலங்களில் அதற்கான முயற்சிகள் நடந்து, நிலத்திற்கான விலையும் பேசி முடியப்போகும் நிலையில் ஒரு இளைஞரின் அவசரப் பேச்சால் பேச்சு வார்த்தை நின்றுபோனது. மீண்டும் நில உரிமையாளர்களிடம் பேசி நிலத்தை வாங்கி பலமான சாலை அமைத்தால்தான் தேர் ஓட்டமுடியும். அதேபோல கோயில் அமைந்துள்ள முடப்புளிக்காடு கிராமத்தினர் எங்கள் கிராமத்தினருக்கும் அறங்காவலர் குழுவில் இடம்கொடுக்கவேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்துள்ளனர். என்னை வெற்றிபெற வைத்தால் புதிய தேர் ஓட நடவடிக்கை எடுப்பேன் என்று தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் தேர்தல் வாக்குறுதி கொடுத்தார். அவருக்கான காலமும் முடியப்போகுது. புதிய தேர் ஓடல. திருவாரூர் தேர் ஓட நடவடிக்கை எடுத்தார் கலைஞ.ர் பேராவூரணி புதிய தேர் ஓட நடவடிக்கை எடுப்பாரா கலைஞரின் மகன் ஸ்டாலின்?'' என்ற கேள்வி யையும் முன்வைக்கின்றனர்.

Advertisment

ss

கோயில் அறநிலையத் துறை நிர்வாகத்தினரோ, “"புதிய தேர் ஓட வலுவான சாலை வேண்டும். தனியார் நிலத்தில் அந்தச் சாலை அமைக்க முடியாது. விரைவில் புதிய தேர் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்''’என்றனர்.

பேராவூரணி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் நம்மிடம், "தேர் ஓட யாரும் தடையாக இல்லை. ஆனால் புதிய தேருக்கு இரும்புச் சக்கரங்கள் என்பதால் வலுவான காங்கிரீட் சாலை போடணும். சாலை அமைத்துவிட்டால் நாங்கள் மறுபடி நிலத்தை பயன்படுத்தமுடியாது என்கிறார்கள் நில உரிமையாளர்கள். அதனால் அந்த நிலங்களை வாங்கும் முயற்சிகளும் பேச்சுவார்த்தைகளும் நடக்கிறது. விரைவில் அதற்கான தீர்வு கிடைக்கும். இந்த வருடம் மே 11-ஆம் தேதி தேரோட்டம் நடக்கிறது. அதனால் இந்த வருடம் புதிய தேரை ஓட்ட முடியாது. நிலம் கிடைத்துவிட்டால் உடனே காங்கிரீட் சாலையமைக்க, எனது சட்டமன்ற உறுப்பினர் நிதியிலும், பேரூராட்சி நிதியிலும் சாலைக்காக ஒவ்வொரு வருடமும் ஒதுக்கி, பிறகு வேறு பணிகளுக்கு மாற்றிவருகிறோம். இந்தப் பிரச்சினை சுமுகமாக முடிந்து புதிய தேர் ஓட... அறங்காவலர் குழுவும், நில உரிமையாளர்களும் மனது வைக்கவேண்டும். உடன்பாடு ஏற்பட்டால் அடுத்த சில வாரங்களில் சாலையமைத்து தேர் வெள்ளோட்டம் விட்டு அடுத்த சித்ராபவுர்ணமியில் புதிய தேர் ஓட்டலாம்''” என்றார்.

Advertisment