"பி.ஜே.பி.யை வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தோற்கடிப்போம்! இந்தியா கூட்டணியை ஆதரிப்போம்!' என்ற மையக்கருத்தினை அடிப்படையாக வைத்து மக்கள் அதிகாரம் சார்பில், தமிழ்நாடு மற்றும் புதுவை ஆகிய இரண்டு மாநிலங்களைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகள் இணைந்து கடந்த 7ஆம் தேதி, திருச்சி புத்தூர் நான்கு சாலையில் ஒரு மாபெரும் மாநாடு நடந்தது. முன்னதாக, திருச்சி உறையூர் பகுதியிலிருந்து புறப்பட்ட பேரணியில், 'பாசிச பி.ஜே.பி.யை தோற்கடிப்போம்!' என்ற முழக்கத்துடன் பேரணி நடைபெற்றது.

இந்த மாநாட்டுக்கு மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில பொருளாளர் காளியப்பன் தலைமை தாங்கினார். புரட்சிகர மாணவர் இளை ஞர் முன்னணியின் மாநில பொதுச் செயலாளர் அன்பு, மக்கள் கலை இலக்கியக் கழக மாநில பொதுச்செயலாளர் கோவன், விவசாயிகள் விடுதலை முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் கம்பம் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

tt

இந்த மாநாட்டில், மூத்த கம்யூனிஸ்ட் தலை வர் கோபட் காந்தி, வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவன், தி.மு.க. தலைமைக்கழக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், ம.ம.க. தலைவர் ஜவாஹிருல்லா, இந்திய கம்யூனிஸ்ட் வீரபாண்டியன், காங்கிரஸ் கட்சியின் திருச்சி வேலுச்சாமி உள்ளிட்ட பல்வேறு கட்சியைச் சேர்ந்த, அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்துகொண்டு, இந்தியா கூட்டணிக்கு ஆதர வாகத் தங்கள் கருத்துக்களை எடுத்துரைத்தனர். தமிழகத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலிலோ, தேர்தலிலோ தங்களது பங் களிப்பை வழங்காத மக்கள் அதிகாரம் உள் ளிட்ட இடதுசாரி அமைப்புகள், தங்களுடைய கொள்கையில் சிறிய மாற்றத்தை ஏற்படுத்தி முதன்முதலாக, இந்தியா கூட்டணியை ஆதரிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை மக்களுக்கு கொண்டுசெல்லும் வகையில் இந்த மாநாட்டை நடத்தியுள்ளனர். இந்த மாநாட்டில், இஸ்லாமி யர்களின் மீதான வன்முறை தாக்குதல்கள், அத்து மீறல்கள் போன்றவை நடக்காமல் இருக்க நாம் இந்தியா கூட்டணியை ஆதரிக்க வேண்டும். இந்தியாவின் மதச்சார்பின்மை, சமத்துவம், சமூக நீதி, இந்தியாவின் பன்முகத்தன்மையை சிதைத்து, மத வழி தேசியத்தை, வன்முறை, கலவரம், படு கொலைகள் மூலம் கட்டமைக்க முயலும் ஆர்.எஸ்.எஸ்., வி.எச்.பி., பஜ்ரங்தள் போன்ற அமைப்பு களைத் தடை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை, இந்த மாநாட்டின் வாயிலாகத் தமிழகம் முழுவதும் கொண்டுசேர்த்துள்ளனர்.

மூத்த கம்பயூனிஸ்ட் தலைவர் கோபட் காந்தி, "கார்ப்பரேட் நிறுவனங்கள் மூலம் பிராமணியம் நம்மை ஆண்டு வருகிறது. அவற்றைத் தடுத்தால்தான் நம் ஜனநாயகம் நிலைநிறுத்தப்படும்.'' என்றார். மக்கள் அதிகாரத்தின் இந்த முயற்சி, தமிழகம் மற்றும் புதுச்சேரியிலுள்ள பொதுமக்களிடம், ஏன் பி.ஜே.பி.யை எதிர்க்க வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்தி அணி திரட்டியுள்ளது.

-துரை.மகேஷ்