பென்னிங்டன் நூலகம்! சர்ச்சையில் 100 கோடி சொத்து!

ss

விருதுநகர் மாவட்டத்தையே ஆட்சி செய்யும் ஆட்சியர் ஜெயசீலன், ஸ்ரீவில்லிபுத்தூர் - பென்னிங்டன் நூலகத்தின் தலைவராக இருந்தும், அதன் நிர்வாகத்தை நிர்வகிக்க நேரடியான உரிமை கிடையாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேநேரத் தில், எந்த நோக்கத்திற்காக பென்னிங்டன் கமிட்டி உருவாக்கப்பட்டதோ, அந்த நோக்கம் சிதையாமல் செயல்படுவதை உறுதி செய்யவேண்டிய தார்மீக பொறுப்பு, கமிட்டியின் பதவிவழித் தலைவரான மாவட்ட ஆட்சியருக்கு உள்ளது என்பதை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.

என்ன விவகாரம் இது?

சென்னை கன்னிமாரா நூலகத்துக்கு அடுத்த இடத்தில் உள்ள பழமையான நூலகம் இது. 1875ல் ஆங்கிலேய கலெக்டர் பென்னிங்டனின் முயற்சி யால் நிறுவப்பட்டதால், அவரது பெயரிலேயே இயங்கி வருகிறது. இந்நூலகத்தை நிர்வகிப்பதற்கு பென்னிங்டன் மார்க்கெட் கட்டடங்கள் கட்டியும், அதனை நிர்வகிக்க பென்னிங்டன் கமிட்டி அமைத்தும், ஸ்ரீவில்லிபுத்தூர் பொதுமக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டது. 11 பேர் கொண்ட குழுவால் நிர்வகிக்கப்படும் பென்னிங்டன் நூலகம், 150-வது ஆண்டு விழாவைக் கொண்டாடிவரும் நிலையில் சர்ச்சைக்குள் சிக்கியிருக்கிறது. "யார் அப்பன் வீட்டு சொத்து' என்று போஸ்டர் ஒட்டி சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர். பல நூறு கோடி மதிப்புள்ள பென்னிங்டன் நூலகச் சொத்துகளை தமிழக அரசே காப்பாற்று என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளது.

''

இந்நிலையில், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன், "பென்னிங்டன் கமிட்டிக்கு பாத்தியப் பட்ட பல சொத்துகள் மற்றும் அதனால் வரக்கூடிய வருமானம், மேற்படி வருமானத்திலிருந்து கமிட்டியின் நோக்கங்களுக்காக செலவிடப் பட்டவைகள் என அனைத்த

விருதுநகர் மாவட்டத்தையே ஆட்சி செய்யும் ஆட்சியர் ஜெயசீலன், ஸ்ரீவில்லிபுத்தூர் - பென்னிங்டன் நூலகத்தின் தலைவராக இருந்தும், அதன் நிர்வாகத்தை நிர்வகிக்க நேரடியான உரிமை கிடையாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேநேரத் தில், எந்த நோக்கத்திற்காக பென்னிங்டன் கமிட்டி உருவாக்கப்பட்டதோ, அந்த நோக்கம் சிதையாமல் செயல்படுவதை உறுதி செய்யவேண்டிய தார்மீக பொறுப்பு, கமிட்டியின் பதவிவழித் தலைவரான மாவட்ட ஆட்சியருக்கு உள்ளது என்பதை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.

என்ன விவகாரம் இது?

சென்னை கன்னிமாரா நூலகத்துக்கு அடுத்த இடத்தில் உள்ள பழமையான நூலகம் இது. 1875ல் ஆங்கிலேய கலெக்டர் பென்னிங்டனின் முயற்சி யால் நிறுவப்பட்டதால், அவரது பெயரிலேயே இயங்கி வருகிறது. இந்நூலகத்தை நிர்வகிப்பதற்கு பென்னிங்டன் மார்க்கெட் கட்டடங்கள் கட்டியும், அதனை நிர்வகிக்க பென்னிங்டன் கமிட்டி அமைத்தும், ஸ்ரீவில்லிபுத்தூர் பொதுமக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டது. 11 பேர் கொண்ட குழுவால் நிர்வகிக்கப்படும் பென்னிங்டன் நூலகம், 150-வது ஆண்டு விழாவைக் கொண்டாடிவரும் நிலையில் சர்ச்சைக்குள் சிக்கியிருக்கிறது. "யார் அப்பன் வீட்டு சொத்து' என்று போஸ்டர் ஒட்டி சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர். பல நூறு கோடி மதிப்புள்ள பென்னிங்டன் நூலகச் சொத்துகளை தமிழக அரசே காப்பாற்று என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளது.

''

இந்நிலையில், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன், "பென்னிங்டன் கமிட்டிக்கு பாத்தியப் பட்ட பல சொத்துகள் மற்றும் அதனால் வரக்கூடிய வருமானம், மேற்படி வருமானத்திலிருந்து கமிட்டியின் நோக்கங்களுக்காக செலவிடப் பட்டவைகள் என அனைத்தும் இக்கமிட்டி நிர்வாகத்தினரால் நிர்வாகம் செய்யப்பட்டு வரு கிறது. இதனிடையே கமிட்டியின் நோக்கங்களைச் செயல்படுத்துவதில் மிகப்பெரிய தொய்வு இருப்பதாகவே கமிட்டி யின் தற்போதைய செயல்பாடுகளால் தெரியவருகிறது. இதனால், கமிட்டி நிர்வாகத்தினருக்கும் உறுப்பினர்களுக்கும் தலைவராக இருக்கக்கூடிய மாவட்ட ஆட்சியருக்கும் பொதுவெளியிலும் பொதுமக்களிடத்திலும் அவப்பெயரும் களங்கமும் ஏற்பட்டுள்ளது. இதனால், கமிட்டியின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்பது அவசியமாகிறது. எனவே, ஆண்டுவாரி யான 20 ஆண்டுகளுக்கு வரவு செலவு அறிக்கையினை பொதுமக்கள் அனைவரும் அறிந்துகொள்ளத்தக்க வகையில் வெள்ளை அறிக்கையாக இரண்டு வார காலத்திற்குள் வெளியிட்டு, பென்னிங்டன் கமிட்டியின் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்திட வேண்டும்'’ என பென்னிங் டன் கமிட்டியினருக்கு கடந்த 22ஆம் தேதி கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பென்னிங்டன் கமிட்டியின் துணைத் தலைவர் முத்து பட்டரிடம் பேசினோம்... "லைப்ரரி யையும் ரெண்டு ஸ்கூலையும் பென்னிங்டன் கமிட்டி சிறப்பா நடத்திக்கிட்டிருக்கு. 150 வருஷத்துக்கு முன்னாலயே, கமிட்டி விஷயத்துல அரசாங்கம் தலையிடக்கூடாதுன்னு கலெக்டர் பென்னிங்டன் முடிவு பண்ணி, ‘பைலா’ தெளிவா எழுதிட்டாரு. நூலகம் முறையா செயல் படுறதுக்கு நிலம் வாங்கி, கடைகள் கட்டி, வாட கைக்கு விட்டு, அதுல வர்ற வருமானத்துல நடத்துங் கன்னு பக்காவா ஏற்பாடு பண்ணிட்டாரு. இப்ப 241 கடைகள் இருக்கு. வாடகை எல்லாம் ஆன்லைன் மூலம் செலுத்துறாங்க. பதவி வழித் தலைவர்ங்கிற முறைல மாவட்ட கலெக்டர் மீட்டிங்கில் கலந்து கொள்ளலாம். ஆனா.. அவருக்கு ஓட்டுரிமை கிடையாது. உள்விவகாரத்துலயும் தலையிடக்கூடாது. பென்னிங்டன் கமிட்டியை, அரசாங்கத்தின் அனுமதியுடன் ஸ்ரீவில்லிபுத்தூர் வாழ் மக்கள்தான் நடத்தமுடியும். வருஷா வருஷம் 10 லட்ச ரூபாய்க்கு புத்தகம் வாங்கிப் போட்டுட்டு இருக்கோம். மாணவர்களுக்கு என்னென்ன ஹெல்ப் பண்ணனுமோ, அத்தனையும் பண்ணுறோம். மாணவர்கள் படிக்கிறதுக்கு எந்தெந்த புத்தகங்கள் தேவையா இருக்கோ, உடனே ஆர்டர் பண்ணி சென்னையிலிருந்து வாங்கிக் கொடுக்குறோம். பென்னிங்டன் லைப்ரரியில சுமார் 1 லட்சம் புத்தகங்கள் இருக்கு. நூற்றுக்கணக்கான மாணவிகள் உள்ள படிச்சிட்டு இருக்காங்க. குரூப் தேர்வுகளுக்கு படிக்கிறாங்க. கணக்கு வழக்கு, ஆடிட்டர் ரிப்போர்ட் எல்லாம் கரெக்டா இருக்கு. கலெக்டர் கேட்ட வெள்ளை அறிக்கையை சமர்ப்பிக்கிறதுல தவறு எதுவும் கிடையாது. ஆனா.. இந்த பிரச் சனைல வெள்ளை அறிக்கை சமர்ப்பிக்க முடியாதுன்னு கோர்ட்ல வக்கீல் ஸ்டே வாங்கிட்டாரு. எனக்கு 70 வயசு ஆயிருச்சு. கலெக்டரை எதிர்க்க முடியாது. டார்ச்சரை எல்லாம் தாங்க முடியாது. நான் ராஜி னாமா பண்ணுறதுக்கு எவ்வளவு நேரமாகும். ஆனாலும்.. ஊர் பொதுச் சொத்தை காப்பாத்த ணும், மக்களுக்கு அது பயன்பட ணும்னு பொறுப்புல இருந்து விலகாம இருக்கேன். சமூக அந்தஸ்து உள்ளவங்கதான் கமிட்டில இருக்காங்க. ஊதியம் வாங்காத கவுரவ பதவி இது. மீட்டிங்ல காபி வேணும்னா குடிக்கலாம். லேட் ஆச்சுன்னா டிபன் கொடுப்பாங்க. அவ்வ ளவுதான். கமிட்டில வரவு செலவு கணக்கு எல்லாம் வாசிப் பாங்க. பத்தாயிரம் ரூபாய்க்கு மேற்பட்ட செலவினங்களை அனுமதி பெற்றே செலவு பண்ணுறோம். விதிமுறைகளின் படியே கமிட்டி செயல்படுது. மற்றபடி கமிட்டில இருக்கிற யாரும் எந்தத் தவறும் பண்ண முடியாது''’என்றார்.

ss

சேவை நோக்குடன் செயல்படும் பென்னிங்டன் கமிட்டியினருக்கு அப்படி யென்ன டார்ச்சர்?’ என அந்நூலக வட்டாரத்தில் விசாரித்தபோது பெயர் குறிப்பிட வேண்டாம் என்ற நிபந்தனையுடன் பேசினார்கள். “ஆண்டாள் அருள்பாலிக்கிறது திருக்கோயில்னா.. பென்னிங்டன் லைப்ரரி அறிவுக்கோயில். இது ஊருக்கே தெரியும். கமிட்டியை டிஸ்டர்ப் பண்ணுறவங்க நோக்கமே வேற. மொத்தம் உள்ள 241 கடைகள்ல காய்கறி மார்க்கெட், பூ மார்க்கெட் இருக்கிற 175 கடைகளை ஓல்ட் பில்டிங்னு சொல்றாங்க. கட்டி 90 வருஷம் ஆச்சு. இடிக்க ணும்னு உத்தரவு போட்டாங்க. உண்மை நிலவரம் என்னன்னா.. அந்தக் காலத்துல கடுக்கா தண்ணி, கருப்பட்டி எல்லாம் மிக்ஸ் பண்ணி கட்டுனதுனால, கட்டிடத்தோட உறுதித்தன்மை அப்படியே இருக்கு. இங்க இருக்கிற சப்-ரெஜிஸ்டர் ஆபீஸ் பில்டிங் கட்டி 100 வருஷமாச்சு. மதுரை நாயக்கர் மகால் கட்டி 389 வருஷமாச்சு. இன்னும் உறுதியா இருக்குன்னா, அரண் மனையா இருந்தாலும் சரி.. மார்க்கெட் கட்டடமா இருந்தாலும் சரி.. அந்தக் கால கட்டுமானத்துல அப்படியொரு தரம் இருந்திருக்கு.

பென்னிங்டன் லைப்ரரியை, குறிப்பா ஊரோட இதயப் பகுதில இருக்கிற பென்னிங்டன் மார்க்கெட் கடைகளை குறிவச்சு மிகப்பெரிய சதிவலை பின்னப்பட்டிருக்கு. விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலனுக்கு அழுத்தம் தந்திருக்காங்க. அதனாலதான், பென்னிங்டன் கமிட்டியினர் அரசு இயந்திரத்தால் பந்தாடப்படுறாங்க. இதன் பின்னணியில் சுயநல அரசியல்வாதிகள் சிலர் இருக்காங்க. என்னவெல்லாம் நடந்திருக்கு தெரியுமா?''’என்று ஆதங்கப்பட்டனர்.

கமிட்டியினரால் முறைகேடுகள் நடந்தனவா? பென்னிங்டன் நூலகம் சந்தித்துவரும் சோதனை கள் என்னென்ன?

(வரும் இதழில்...)

___________________

ஸ்ரீவில்லிபுத்தூருக்கே பெருமை!

ந்நூலகத்தை ஆரம்பித்தபோது ஸ்ரீவில்லிபுத்தூரில் நூலகத்தின் சார்பில் 12 விளக்குத் தூண்களை நிறுவி, இரவில் எண்ணெய் விளக்குகளை எரியவிட்டிருந்தனர். வழக்கறிஞர்கள் பலரும் இந்நூலகத்தைத் தேடி வருகின்றனர். இங்கு மட்டுமே, 1953-ஆம் ஆண்டிலிருந்து வெளிவந்த தமிழக அரசிதழ்கள் மற்றும் அரசாணைகள் பாதுகாக்கப்படுகின்றன. சொத்து, நில ஆர்ஜிதம் குறித்த வழக்குகள் என்றால், அந்தந்த ஆண்டுகளில் தமிழக அரசின் ஆணைகளைப் படித்துத் தெரிந்துகொள்ள முடியும்.

அரிய பழமையான தமிழ் இலக்கிய நூல்களான, 1887ல் அச்சிடப்பட்ட கலித்தொகை, 1900ல் பிரசுரமான த்ருவ சரித்திர கீர்த்தனை, 1904ல் வெளிவந்த தியாகராசலீலை, 1900ல் பிரசுரமான வள்ளலார் சாஸ்திரம், 1912ல் வெளியிடப்பட்ட திருமந்திரம் போன்றவை அப்படியே பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

இங்கு ரசாயன பூச்சிப் கொல்லிகளுக்குப் பதிலாக வாசனைத் திரவியங்கள் அடங்கிய பொடி ஒன்றைத் தயாரிக்கின்றனர். பச்சை கற்பூரம், மிளகு, வசம்பு, கருஞ்சீரகம், ஓமம், லவங்கப்பட்டை, கிராம்பு ஆகியவற்றை உரிய அளவில் சேர்த்துப் பொடி தயாரித்து, துணியில் பொட்டலம் கட்டி நூல்களுக்கு மத்தியில் வைத்துவிடுவதால், பூச்சிகளால் புத்தகங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதில்லை.

சுமார் 1344 சதுர அடியில் தரை மற்றும் முதல் தளத்துடன் இயங்கும் இந்நூலகத்தில் ஆண்கள், பெண்கள், மாணவர்கள், சிறுவர்களுக்கென்று தனித்தனியாக படிக்கும் இடங்கள் உள்ளன. இந்த காலகட்டத்திலும் வாசிப்பு ஆர்வத்துடன் இந்நூலகத்துக்கு பெருமளவில் வாசகர்கள் வந்துசெல்வது, சிறிய நகரமான ஸ்ரீவில்லிபுத்தூருக்கு மேலும் பெருமை சேர்க்கிறது.

இந்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தின் கீழ் கொல்கத்தாவில் இயங்கும் தன்னாட்சி அமைப்பான ராஜாராம் மோகன்ராய் நூலக அறக்கட்டளை, சிறந்த நூலகத்திற்கான பரிசினை பென்னிங்டன் நூலகத்துக்கு வழங்கியுள்ளது.

nkn140525
இதையும் படியுங்கள்
Subscribe