மதவெறி ஆயுதங்களை எதிர்த்து நிற்கும் பேனா! -ஜி.ஆர். நூல் வெளியீட்டு விழா!

gr

மது நக்கீரன் இதழில் சி.பி.ஐ.எம்.மின் அரசியல் தலைமைக் குழு உறுப் பினரும் எழுத்தாளருமான ஜி.ராமகிருஷ்ணன் எழுதி தொடராக வந்த ‘"மகாத்மா மண்ணில் மதவெறி' நூல் வெளியீட்டு விழா’ ஜூலை 1, 2022 அன்று தி.நகர் சர்.பிட்டி தியாகராயர் அரங்கில் நடைபெற்றது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த இவ்விழாவுக்கு மாவட்டச் செயலாளர் தீ.சந்துரு தலைமை தாங்கினார். விழா வுக்கு வந்தவர்களை மாவட்டத் தலைவர் எம்.ஆர்.சுரேஷ் வரவேற்புரையளித்தார்.

நூலை சி.பி.ஐ.-எம்.மின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் வெளியிட நக்கீரன் ஆசிரியர் நக்கீரன் கோபால் பெற்றுக் கொண்டார். கோவிட் தொற்று காரணமாக விழாவுக்கு வரவியலாத நிலையில் மகாத்மாவின் நான்காவது மகன்வழிப் பேரனாகிய கோபாலகிருஷ்ண காந்தி, வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார். அது விழா மேடையில் வாசிக்கப்பட்டது. “"மதவெறியில் முஸ்லிம் மதவெறி, இந்து மதவெறி என்று கிடையாது. வன்முறை என்றால் வன்முறைதான். அத்தகைய சமயங்களில் விரைந்து செயல்பட்டு மதவெறி பரவாது தடுத்த

மது நக்கீரன் இதழில் சி.பி.ஐ.எம்.மின் அரசியல் தலைமைக் குழு உறுப் பினரும் எழுத்தாளருமான ஜி.ராமகிருஷ்ணன் எழுதி தொடராக வந்த ‘"மகாத்மா மண்ணில் மதவெறி' நூல் வெளியீட்டு விழா’ ஜூலை 1, 2022 அன்று தி.நகர் சர்.பிட்டி தியாகராயர் அரங்கில் நடைபெற்றது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த இவ்விழாவுக்கு மாவட்டச் செயலாளர் தீ.சந்துரு தலைமை தாங்கினார். விழா வுக்கு வந்தவர்களை மாவட்டத் தலைவர் எம்.ஆர்.சுரேஷ் வரவேற்புரையளித்தார்.

நூலை சி.பி.ஐ.-எம்.மின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் வெளியிட நக்கீரன் ஆசிரியர் நக்கீரன் கோபால் பெற்றுக் கொண்டார். கோவிட் தொற்று காரணமாக விழாவுக்கு வரவியலாத நிலையில் மகாத்மாவின் நான்காவது மகன்வழிப் பேரனாகிய கோபாலகிருஷ்ண காந்தி, வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார். அது விழா மேடையில் வாசிக்கப்பட்டது. “"மதவெறியில் முஸ்லிம் மதவெறி, இந்து மதவெறி என்று கிடையாது. வன்முறை என்றால் வன்முறைதான். அத்தகைய சமயங்களில் விரைந்து செயல்பட்டு மதவெறி பரவாது தடுத்திட இந்திய மக்களாகிய நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்''’என குறிப் பிட்டிருந்தார்.

நூலை வெளியிட்டுப் பேசிய கே.பாலகிருஷ்ணன், "ஏற்கெனவே சில மாதங்களுக்கு முன் டெல்லியில் நடைபெற்ற விவசாயிகளின் வீரம்செறிந்த போராட்டத்தைப் பற்றி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களில் ஒருவரான சி.மகேந்திரன், நக்கீரன் இதழில் தொடராக எழுதி, அதன் புத்தக வெளியீட்டு விழா நடந்தது. அந்தப் புத்தகத்தை வெளியிட்ட பெருமையும் நக்கீரன் கோபாலையே சேரும்.

gr

"மகாத்மா மண்ணில் மதவெறி'’என்னும் சிந்திக்கக் கடினமான தலைப்பில் புத்தகம் வெளியிடுவது மிகுந்த தைரியமான காரியம். இத்தகைய தொடரை எல்லோராலும் வெளியிட முடியாது. கட்டுரை போராடித்ததென்றால் பத்திரிகை நட்டம் ஏற்படுமே என்றுதான் பத்திரிகை உரிமையாளர்கள் நினைப்பார்கள். சமூகத்துக்கு பலனளிப்பதைப் பற்றி பெரிய கவலைப்படமாட்டார்கள்.

ஆனால் நக்கீரன் ஆசிரியர், இந்தத் தொடரை வியாபாரமாகப் பார்க்காமல், சித்தாந்தப் போராட்டமாகப் பார்த்து வெளியிட்டி ருக்கிறார். அறிவை வியாபாரம் செய்வது வேறு, அறிவை விதைப்பது என்பது வேறு. நக்கீரன் கோபால் அறிவை விதைத்திருக்கிறார். நாடிருக்கும் சூழ்நிலையில் சமூகம் மகாத்மாவை மறுவாசிப்புக்கு உட்படுத்த வேண்டிய தேவையை உணர்ந்து இந்த நூலை எழுதியிருக்கிறார் ஜி.ராமகிருஷ்ணன்''’என்று குறிப்பிட்டார்.

இந்த நூல் குறித்த கருத்துரை வழங்கிய நமது நக்கீரன் ஆசிரியர், "2002 குஜராத் கலவரத்தில் 2000 பேர் இறந்ததாகச் செய்தி. குஜராத் கலவரம் குறித்த இந்த வழக்கில் சமீபத்தில் தீர்ப்பு வந்தது. இந்த கலவரத்தில் இறந்தவர்களை எல்லாம் யாருமே கொல்லலை,… தங்களைத் தாங்கேளே அழிச்சுக்கிட்டாங்க.… யாருமே குற்றம் செய்யாம கொலைகள் நடந்திருக்கு. இத்தகைய மண்ணில்தான் நாம் வாழ்கிறோம். இந்த மண்ணில்தான் வாழப்போகிறோம்''’என்று மனம் கசந்தவர், “"ஹிட்லர் பாதையில் ஒன்றிய ஆட்சி எப்படி நடைபோடுகிறது என்பதை, தன் பாணியில் ஜி.ராமகிருஷ்ணன் நூலில் சொல்லாமல் சொல்லியிருக்கிறார். ஆர்.ஆர்.எஸ். விரைவில் நூற்றாண்டு விழா கொண்டாடப் போகிறார்கள். இந்தக் குறிக்கோளுக்கு தடையாக அமைபவை இதுபோன்ற நூல்கள். எனவே இதுபோன்ற எத்தனை நூல்களை ஜி.ஆர். அவர்கள் எழுதினாலும் அதைக் கொண்டுவர நக்கீரன் தயாராக இருக்கிறது''’என உற்சாகத்துடன் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், “"இதை நூலாக வாசித்தபோது எனக்கு ஏற்பட்ட முதல் அனுபவம் என்ன தெரியுமா? இடதுசாரிகள் மகாத்மா காந்தியைக் கொண்டாடத் தொடங்கியிருக்கிறார்களே என்ற மகிழ்ச்சிதான். இதில் 25 கட்டுரைகள் இருக்கின்றன. அவற்றின் வழியாக ஏன் காந்தி இன்று தேவைப்படுகிறார் என்பதை விளக்குகிறார். காந்தியிடமிருந்து நமக்குக் கிடைக்கவேண்டியது ஏதாவது இருக்குமென்றால், வெளிச்சத்தை நோக்கிய பயணம்தான். இப்போதிருக்கும் சூழலில் ஜி.ஆரின். நூல் தமிழகத்துக்கு மட்டுமல்ல,… இந்தியச் சூழலுக்கே மிகவும் தேவையான நூல்''’என்று அடையாளம் காட்டினார்..

அவரைத் தொடர்ந்து பேசவந்த காங்கிரஸ் தலைவரும், சிறுபான்மை நல ஆணையத் தலைவருமான பீட்டர் அல்போன்ஸ், "வரலாற்றை மக்கள் மறந்துகொண்டே இருப் பார்கள். வரலாற்று ஆசிரியர் களுடைய கடமை மக்களுக்கு அதை மீண்டும் நினைவூட்டிக் கொண்டே இருப்பதுதான். அதனால் எத்தனை புத்தகங்கள் வந்தாலும் புத்தகங்கள் செய்ய வேண்டிய பணிகள் தீர்ந்து விடுவதில்லை என எமர்சன் சொல்கிறார். மகாத்மா மண்ணில் மதவெறி தொடரை வெளி யிட்ட, நக்கீரன் ஆசிரியரைப் பாராட்டவேண்டும்''’என பேசியமர்ந்தார்.

நிறைவாக ஏற்புரையாற்றிய ஜி.ராமகிருஷ்ணன், “"இத்தகைய நூலொன்றை எழுதவேண்டும் என மறைந்த பத்திரிகையாளர் ஜவஹர் சொன்னார். என்னால் முடியாது என்று தயங்கினேன். உங்களால் முடியும் என்று ஊக்கப்படுத்தினார். பின் எழுத முடிவுசெய்தபோது, நாலைந்து தலைப்புகளை ஆலோசித்து "மகாத்மா மண்ணில் மதவெறி' என்ற தலைப்பை முடிவு செய் தோம். பதிப்புரைக்கு நக்கீரன் ஆசிரியர், "மதவாதத்தை வெடித் துச் சிதற வைக்கும் கந்தகம்' என பொருத்தமாக தலைப்பிட்டி ருந்தார். இன்றும் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வுக்கு அச்சுறுத்தலாக இருப்பது மகாத்மா காந்திதான். அதனால் மதவெறிக்கு எதிரான போராட்டத்தில் உயிர்நீத்த மகாத்மா உள்ளிட்ட தியாகிகளுக் குச் நூலைச் சமர்ப்பித்தோம்'' என்று குறிப்பிட்டார்.

nkn060722
இதையும் படியுங்கள்
Subscribe