பார்வை!-நடிகர் ஜீவா
இவ்விதழின் கட்டுரைகள்
சென்றவார இதழ்கள்
Next Story
இளம் அமைச்சர்; உதயநிதியின் துறை குறித்து நடிகர் ஜீவா
நடிகர் ஜீவா திருவண்ணாமலையில் நடந்த ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியை துவக்கி வைத்தார். இப்போட்டித் தொடரை தமிழ்நாடு தடகள சங்கம் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட தடகள சங்கம் இரண்டும் இணைந்து நடத்துகின்றன. இதில், 28 மாநிலங்களைச் சேர்ந்த, ஆயிரத்துக்கும் மேற்பட்ட தடகள வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
இந்நிகழ்விற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தமிழ்நாடு விளையாட்டுத்துறை சிறப்பாக உள்ளது. தமிழகத்தில் இருந்து கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளில் மிகக் குறைவாகத்தான் ஆட்கள் சேருவார்கள். நான் நினைக்கிறேன், இளம் அமைச்சர் அத்துறையை ஏற்று நடத்துகிறபோது உண்மையாகவே சிறப்பாக உள்ளது. இணைய உலகம் வந்ததில் இருந்து இங்கிருக்கும் அனைத்தும் சிறியதாக மாறிவிட்டது.
திறமையானவர்களை கண்டறிவது மிக எளிதான விஷயமாக உள்ளது. சிலர் விளையாட்டு நிகழ்வுகளையும் போட்டிகளையும் ஏற்று நடத்துகிறார்கள். நம்மால் முடிந்த அளவிற்கு நாம் உறுதுணையாக இருக்க முடியும். வரும் ஒலிம்பிக், ஏசியன் போட்டிகளிலும் தமிழகத்தில் இருந்து செல்லும் வீரர்களின் மத்தியில் சிறப்பான ஆட்டம் வெளிப்படும். நிச்சயமாக இந்தியா உலக விளையாட்டு வீரர்களுக்கு மிக முக்கியமான போட்டியாக இருக்கும்.
விளையாட்டு வீரர்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். நன்றாக சாப்பிட வேண்டும். கைப்பேசிகளில் அதிக நேரம் செலவிடக்கூடாது. தற்போதைய இளைஞர்களுக்கு சொல்லும் அளவிற்கு எதுவும் இல்லை. அவர்களே அவர்களுக்கான ஆலோசனைகளை கொடுத்துக் கொள்கிறார்கள். நேர்மறையான சிந்தனையில் அவர்கள் இருக்க வேண்டும். தமிழ்நாட்டையும் இந்தியாவையும் பெரிய அளவில் உலகில் காட்ட வேண்டும்.” என்றார்.
Next Story
“நாங்க கைத்தட்டலுக்கு ஏங்குற ஜாதி” - நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் ஜீவா
தமிழ் கலை டாட் காம் (tamilkalai.com) எனும் செயலி அறிமுக விழாவில் நடிகர் ஜீவா கலந்து கொண்டார். இந்நிகழ்வில் பேசிய நடிகர் ஜீவா, “கலைஞர்களுக்கு சாதி, மதம் இல்லை என்று சொல்வார்கள். ஜிப்ஸி படத்தில் நடித்ததால் இந்தியா முழுவதும் பயணம் செய்யக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. அந்த பயணத்தில் அனைத்து நாட்டுப்புறக் கலைஞர்களையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்தியா முழுவதும் பல்வேறு மொழிகள் உள்ளன. ஆனால் கலைக்கு மட்டும் தான் மொழிகள் இல்லை.
இன்றைய வேகமான உலகில் இன்று ஒரு படம் எடுத்து நாளை அதை ரிலீஸ் செய்ய முடியும். இம்மாதிரியான உலகத்தில் மறைந்து போன கலைகள் மீண்டும் வருகிறது என்று நினைக்கும் பொழுது மிக சந்தோசமாக இருக்கிறது. இச்செயலியில் முதலில் முன்பதிவு செய்வது நானாகத்தான் இருப்பேன். எனது கடந்த ஏழு முதல் எட்டு ஆண்டுகளின் ஈமெயில்களை எடுத்துப் பார்த்தால் நாம் ஏன் இந்த செயலிகளை தொடங்க முயற்சிக்க கூடாது என்பது போல் இருக்கும். ஆனால் அடுத்தடுத்த படப்பிடிப்புகளில் அதை மறந்துவிடுவோம். இம்முயற்சியை நீங்கள் எடுத்தது மிக சந்தோஷம்
நான் டிஷ்யூம் படத்தில் ஒரு டயலாக் சொல்லி இருப்பேன். ‘நாங்கள் கைத்தட்டலுக்கு ஏங்குற ஜாதி’ என்ற மாதிரி ஒரு வசனம் வரும். இன்று இங்கு இருக்கிற கலைஞர்கள் மிக அற்புதமாக தங்கள் நிகழ்ச்சிகளை நடத்தினார்கள். அவர்களுக்கு பெரிய கரகோஷத்தை கொடுத்தாக வேண்டும். அவர்களது அடுத்தகட்ட வளர்ச்சி என்பது இன்றைக்கு சினிமா, யூடியூப், மேடை நிகழ்ச்சிகளிலும் வெளிநாட்டு நிகழ்ச்சிகள் போன்றவற்றிலும் கலந்துகொள்ள வேண்டும். இது மாதிரியான கலைஞர்களை அடுத்தகட்ட இடத்திற்கு கொண்டு போக வேண்டும். இம்மாதிரியான கலைஞர்களுக்கு நிச்சயமாக நானே ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து அமெரிக்காவிலோ அல்லது லண்டனிலோ இம்மாதிரியான நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்ய வேண்டும்” என்று கூறினார்.