parvai

வ்வளவு நெருக்கடிகளையும் தானே தாங்கிக்கொண்டு, அடக்குமுறைக்கு அஞ்சாமல், கொண்ட கொள்கையில் உறுதியாக, பத்திரிகை ஜனநாயகத்தின் நான்காவது தூண் பத்திரிகை என்பதை இன்றளவும் நிரூபித்துக்கொண்டிருக்கும் ஒரே பத்திரிகை நக்கீரன் மட்டுமே!

Advertisment

"நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே' என்ற சொல்லுக்கு இம்மியளவும் குறை இல்லாமல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு, சந்தனக் கடத்தல் வீரப்பன் விவகாரம், சாமியார் நித்தியானந்தா அட்டூழியங்கள், ராம்குமார் விஷயத்தில் நடந்த உண்மை நிலவரங்கள், காவிரி விஷயத்தில் உண்மை நிலை, பாசிச அடிமை அரசின் அதிகாரத்துவ போக்கு, காவல்துறையின் அடக்குமுறை, தமிழக அழிவுத் திட்டங்களுக்கு எதிராக தொடர் சாட்டையடி, மது ஒழிப்பு போராட்டங்கள், அரசு அதிகாரிகளின் ஊழல், விவசாயிகள் படும் அவலம் உட்பட எண்ணற்ற மக்கள் பிரச்சினைகளை துணிச்சலோடு எழுதி, பேனாவின் வலிமையை உலகுக்கு உணர்த்திய இதழ் நக்கீரன். எத்தனையோ பொய் வழக்குகள் போட்டபோதும் துளியும் அஞ்சாமல் சட்டரீதியாக அந்த வழக்குகளை எதிர்கொண்ட இதழ்.

2018, ஏப்ரல் 17-19 இதழ்:

"சத்துணவு முட்டையில் ரூ.1100 கோடி ஊழல்' கட்டுரையை வாசித்தபோது, புரையோடிய ஊழலின் கொடூரம் புரிந்தது. இவர்களையெல்லாம் திருத்தவே முடியாதா?

Advertisment

சுவையாய் பேசுகிறவர்கள் சட்டெனப் பேச்சை முடித்துக்கொள்வார்கள். அதைப்போல சமூகத்தில் நடந்தேறிய அரசியல் நிகழ்வுகளை தன் விமர்சனப் பார்வையால் அலசினார் கஸ்தூரி. வாசகர்கள் கொடிபிடித்த "சோத்துக் கட்சி'யை அதற்குள் ஏன் கலைத்தார் என்கிற ஓர் எதிர்பார்ப்பை எல்லாரிடமும் உருவாக்கிவிட்டார்.

"தேசத்தின் அவமானம்...' செய்தி, அந்தக் குழந்தையை என் கண்ணுக்குள் நிறுத்தியது.

---------------------------------------------------

வாசகர் கடிதங்கள்

ஆதாயத்துக்கான துதி!

ரஜினியைப் பற்றி கமலிடமும், கமலைப் பற்றி ரஜினியிடமும் வஞ்சப்புகழ்ச்சி பாடுகிறார் ஐசரிகணேஷ். கல்வி நிறுவனம் நடத்துகிறவர்... அரசியல் ஆதாயத்துக்காக ஏன் இந்த துதி பாடுற வேலை?

-ஆர்.சிவராமன், ஆத்தூர்.

பந்தயப்பொருளான வாரியம்!

நமக்கான காவிரி மேலாண்மை வாரியத்தை கர்நாடக தேர்தல் விளையாட்டுக்கு ஒரு பந்தயப் பொருளாக்கியிருக்கிறார் மோடி. இது, தமிழக விவசாயிகள் பிரச்சினையில் இருக்கும் அக்கறையை விட கட்சி வளர்ப்புப் பணியில் இருக்கும் அவரின் அலாதிப் பிரியத்தையே பிரதானமாக வெளிப்படுத்துகிறது.

-ஜோ.மணி, தூத்துக்குடி