"ஹலோ தலைவரே, அ.தி.மு.க. பொதுக்குழு 15 ஆம் தேதி வாக்கில் கூடப் போகுது.''”
"ஆமாம்பா, ஆனால் அதில் எதிர்பார்த்த அளவுக்கு சுவாரஸ்யம் இருக்காது போலிருக்கே?''”
"ஆமாங்க தலைவரே, சட்டமன்றக் கூட்டம் வரும் 10-ஆம் தேதிவரை நீடிக்கிறது. அது முடிந்ததும், பொதுக்குழுவைக் கூட்ட அ.தி.மு.க. முடிவெடுத்திருக்கு. ஓ.பி.எஸ். மற்றும் எடப்பாடி ஆகியோரின் கட்சிப் பதவிகளில் இப்போதைக்கு எந்தவித மாற்றமும் இருக்காது என்பதால் இந்தப் பொதுக்குழு கூட்டத்தில், பெரிதாக எந்தவிதமான காரசாரமும் இருக்காதுன்னு தெரியுது. ஆரம்பத்தில் பொதுக்குழுவில் தன் வித்தையைக் காட்டி, ஓ.பி.எஸ்.சை ஓரம்கட்டிவிட்டு, கட்சியின் பொதுச் செயலாளர் நாற்காலியில் உட்கார்ந்துவிட வேண்டும் என்று திட்டமிட்டிருந்தார் எடப்பாடி. ஆனால், தனக்கு ஜூன், ஜூலை வரை நேரம் சரியில்லை என்று ஜோதிடர்கள் சொல்லிவிட்டதால், அவர் சைலண்ட் மோடில் இருக்கிறார்.''”
"ஆமாம்பா, கொடநாடு வழக்கும் அவரது தூக்கத்தை துரத்திக்கிட்டு இருக்குதே?''”
"உண்மைதாங்க தலைவரே, கொடநாடு விவகாரத்தில் தொடர்புடைய தனது ஆட்களை, தனது பிடியிலேயே வைத்துக்கொண்டு அவர்களுக்கு வேண்டியதை எல்லாம் எடப் பாடி செய்துவருகிறார். அந்த வகையில், சம்பவத்தில் தொடர்புடைய சஜீவனுக்கு, கட்சியின் வர்த்தகப்பிரிவுச் செயலாளர் பொறுப்பை அவர் கொடுத்தார். அதேபோல் எல்லா வகையிலும் அந்த விவகாரத்தில் உறுதுணையாக இருந்த சேலம் இளங்கோவனை, பவரில் இருந்தபோதே பதவி கொடுத்து அழகு பார்த்த அவர், இப்போது தனது சேலம் புறநகர் மா.செ. பதவியையும் அவருக்காக விட்டுக்கொடுத்து இருக்கிறார். கொடநாடு விசாரணை டீமோ, சட்டமன்றம் முடியும் வரை சஜீவன், இளங்கோவன் ஆகியோர் மீது அதிரடி நடவடிக்கை எடுக்கவேண்டாம் என்று நிதானிக்கிறதாம். அதற்கப்புறம் அவர்கள் மீது நடவடிக்கை பாயும் என்கிறது காக்கிகள் தரப்பு.''”
"மாஜி மந்திரி வேலுமணியும் இதில் சிக்குகிறாராமே?''”
"ஆமாங்க தலைவரே, கொட நாடு க்ரைமை நடத்தி விட்டு குற்றவாளிகள் தப்பியபோது, அவர்களை கூடலூர் செக்போஸ்ட் டில் போலீஸ் டீம் ஒன்று மடக்கி இருக்கிறது. அப்போது, உடனடியாக வந்த உத்தரவின் அடிப்படையில் சஜீவனின் தம்பியான சுனிலும், முன்னாள் அமைச்சர் மில்லரின் சகோதரர் ஒருவரும் சேர்ந்து, அவர்களை போலீஸிடம் இருந்து விடுவித்திருக்கிறார்கள். அப்படி விடுவிக்கப்பட்ட அவர்களை, நேராக வேலுமணி தரப்பைச் சேர்ந்த ஒருவரின் குடோனில் பாதுகாப்பாகத் தங்கவைத்து உபசரித்தார்களாம். எனவே இவர்களை விசாரிக்கும் அதிகாரிகள், வேலுமணியையும் விசாரணைப் பட்டியலுக்குக் கொண்டு வந்திருக்கிறார்களாம்.''”
"தமிழக பா.ஜ.க.விற்கு புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டிருக்கிறார்களே?''
"ஆமாங்க தலைவரே, நிர்வாகிகள் பட்டியல் ஏற்கனவே ரெடியாயிடிச்சி. அதை சில மாதங்களாக நிலுவையில் வைத்திருந்த பா.ஜ.க.வின் தேசியத் தலைமை, அந்த நிர்வாகிகள் பட்டியலுக்கு ஒருவழியாக ஒப்புதல் கொடுத்திருக்கிறது. அதன்படி மாநில துணைத் தலைவர்களாக 11 பேர், மாநில பொதுச்செயலாளர்களாக 5 பேர், மாநில செயலாளர்களாக 13 பேர் மற்றும் மாநில அணிச் செயலாளர்கள், செய்தி, தொடர் பாளர்கள், தலைமை அலுவலகப் பொறுப் பாளர்கள், மாவட்டத் தலைவர்கள் என நிர்வாகிகளின் நீளமான பட்டியலை ரிலீஸ் செய்திருக்கிறார் அக்கட்சியின் மாநிலத் தலைவரான அண்ணாமலை. ஏற்கனவே மாநிலப் பொறுப்பில் இருந்த பலருக்கும் மறுபடியும் வாய்ப்பு தரப்பட்டிருக்கிறது. நம்ம நக்கீரனில் இது சம்பந்தமா தனி கட்டுரை வந்திருக்கு.''”
"வன்னியர்களை பா.ஜ.க. கையில் எடுக்கப்போகுதுன்னு ரெண்டு மாதங்களுக்கு முன்பு நாம் பேசிக்கிட்டபடிதானே, நிர்வாகிகள் நியமனத்திலும் நடந்திருக்கு?''”
"ஆமாங்க தலைவரே, மாநில நிர்வாகிகள் பட்டியலில் வன்னியர் சமூகத்திற்குக் கணிசமான எண்ணிக்கையில் பதவிகள் கொடுக்கப் பட்டிருக்கு. பா.ஜ.க.வின் பிற்படுத்தப்பட்ட சமூக அணியின் தலைவராக வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த சாய் சுரேஷ் நியமிக்கப் பட்டு இருக்கிறார். அந்த சாய் சுரேஷோ, "தி.மு.க.தான் சமுக நீதிக்கான கட்சி என்பது போல் இங்கே ஒரு பிம்பம் உருவாக்கப் பட்டிருக்கு. ஆனால், உண்மையில் பா.ஜ.க.தான் சமூக நீதிக்கான கட்சி'ன்னு பதவி கிடைத்த ஜோரில் உணர்ச்சிவசப்பட்டுச் சொல்கிறார். அதேபோல் தேர்தலுக்கு முன் பா.ஜ.க.வில் இணைந்த சென்னையின் முன்னாள் மேய ரான கராத்தே தியாகராஜன் மாநில செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். மேலும், தென்சென்னை மாவட்ட பா.ஜ.க. பொறுப்பாளர் பதவியும் அவருக்குக் கொடுக்கப்பட்டிருக்கு.''”
"தி.மு.க.வின் உட்கட்சித் தேர்தல் அறிவிப்பு, தி.மு.க.வினரையே அதிர்ச்சி அடையவச்சிருக்கே?''”
"உண்மைதாங்க தலைவரே, தி.மு.க.வில் உள்கட்சி தேர்தல் நடந்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சி களிலும் இருக்கும் வார்டுகளின் எண்ணிக்கை அடிப்படையில் கழகத் தேர்தல் நடக்கும் என்று, தி.மு.க. பொதுச்செயலாளரான துரை முருகன் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு தி.மு.க. உடன்பிறப்புகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கு. நம்மிடம் பேசிய சென்னை மாவட்ட பகுதிச் செயலாளர்கள், இங்கு மட்டும் 200 வார்டுகள் இருக்கின்றன. அமைப்பு ரீதியாக தி.மு.க.வில் ஒரு வார்டுக்கு 2 என 400 வட்டச் செயலாளர்கள் இருக் காங்க. இந்த நிலையில், 200 வார்டுகளின் அடிப் படையில் கழகத் தேர்தல் நடக்கும்னு அறிவிக்கப் பட்டிருப்பதால், மீதம் இருக்கும் 200 வட்டச் செயலாளர்களின் பதவி பறிபோகும். அதோடு அவர்களோடு, செயல்பட்ட நிர்வாகிகளும் பதவி இழப் பாங்கன்னு ஆதங்கப்படறாங்க.''”
"இதுக்கே இப்படியா? மா.செ.க்களின் எண்ணிக்கையையும் தி.மு.க. குறைக்கப் போகுதேப்பா?''”
"உண்மைதாங்க தலைவரே, தி.மு.க.வில் அமைப்பு ரீதியாக 77 மா.செ.க்கள் இப்போது இருக்கிறார்கள். இந்த எண்ணிக்கையையும் குறைக்கப் போகிறதாம் அறிவாலயம். அதோடு, இளைஞர் அணிக்கு ஒத்துழைக்கும் வகையில் 50 வயதுக்குட்பட்ட நபர்களாகப் பார்த்து புதிய மா.செ.க்களாக நியமிக்கப்போவதாகவும் தெரிகிறது. இந்த நிலையில் உட்கட்சிப் பதவிகளை மையமாக வைத்து இப்போதே பண விளையாட்டும் தொடங்கிவிட்டதாம். இது தொடர்பாக இப்போதே அறிவாலயத்தில் புகார்கள் குவியத் தொடங்கிவிட்டது. இருந்தும் அதனை ஆராய்ந்து தவறு செய்துள்ள தேர்தல் பொறுப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பது எதுவும் இல்லைன்னு பலரும் ஆதங்கப்பட றாங்க. இந்த உட்கட்சித் தேர்தலில் மாநகராட்சிப் பகுதிகளில் பதவியை இழக்க இருக்கும் நிர்வாகிகள், எங்கள் எதிர்காலமே அவ்வளவுதானா? என்று இன்னொரு பக்கம் கதிகலங்கிப் புலம்புகிறார்கள்.''”
"ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம் இருக்கும் போலிருக்கே?''”
"தமிழக அரசின் ஐ.ஏ.எஸ். பணியிடங்கள் சில காலியாக இருக்கின்றன. அதேசமயம், ஒரே ஐ.ஏ.எஸ். அதிகாரியிடம் ஒன்றுக்கு மேற்பட்ட துறைகள் கூடுதல் பொறுப்பாக இருக்கின்றன. ஏனவே, காலிப் பணியிடங்களை நிரப்பவும், ஐ.ஏ.எஸ். அதிகாரியிடம் கூடுதலாக இருக்கும் துறைகளை எடுத்து, அவற்றுக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமிக்கவும் ஆலோசிக்கப் பட்டிருக்கு. இதற்காக அண்மையில் கோட்டை யில் விவாதக் கூட்டம் நடந்திருக்கிறது. சட்டமன்ற கூட்டத் தொடர் 10-ந்தேதி முடிவடைந்ததும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம் மற்றும் இடமாற்றம் தொடர்பான பெரிய லிஸ்ட் ரிலீஸ் ஆகும் என்கிற டாக் கோட்டையில் எதிரொலிக்கிறது. பவர்ஃபுல் போஸ்டிங்கை பிடிக்க நீலாங்கரை மையத்தை இப்போதே அதிகாரிகள் பலரும் மூவ் பண்ணிக்கொண்டு இருக்கிறார்கள்.''”
"தூத்துக்குடி மாவட்டத்தில் தொடங்கப்பட்ட ராக்கெட் ஏவுதளத்துக்கான வேலைகள் திடீர் வேகம் எடுத்திருக்கே?''”
"ஆமாங்க தலைவரே, தி.மு.க. எம்.பி., கனிமொழி எடுத்துக்கொண்ட தீவிர முயற்சி யால், குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுகணைத் தளம் அமைக்கும் திட்டத்தை பிரதமர் மோடி கடந்த ஆண்டு அறிவித்திருந் தார். இதற்கான பூர்வாங்கப் பணிகள் முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் தொடங்கினாலும், அப்படியே திட்டம் தூங்க ஆரம்பிச்சிடுச்சி. தி.மு.க. ஆட்சி வந்ததும் இதற்கான பணிகள் வேகமெடுத்தது. 2,500 ஏக்கரில் அமையவிருக்கும் இத்திட்டத் திற்கு ஜூலையில் அடிக்கல் நாட்ட இருக்கிறார் மோடி. இந்த நிலையில், ஏவுகணைகளுக்கான உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழில் நிறுவனம் ஒன்றையும் தொடங்கணும்னு கனிமொழி இப்போது முயற் சித்து வருகிறார். இது நிறைவேறி னால், 25,000 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக் குமாம்.''”
"போன முறை சென்னை சிட்டி கமிஷனர் சங்கர் ஜிவால் பற்றி பேசியிருந்தோம். போலீஸ் மேலிடம் அதை அழுத்தமா மறுக்குது. அவர் இந்துத்துவா மனநிலையில் செயல்படுவார் என்பது பொய்யென்றும், கொடுத்த வேலையை சரியாகச் செய்பவரென்றும் கூறுகிறது. சிட்டியில் சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதில் முழு கவனம் செலுத்தும் கமிஷனரிடம் முதல்வர் மேலும் சில ஆலோசனைகளை சொல்லியிருக்காராம்.''
"நானும் ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்துக்கறேன். பொள் ளாச்சியில் கல்லூரி மாணவிகள் தொடங்கி குடும்பப் பெண்கள், பேராசிரியைகள், பெண் மருத்துவர்கள் என்று பலரையும் வீழ்த்தி ஆபாசப்படம் எடுத்த அந்த வில்லங்கமான விவகாரத்தை நக்கீரன்தான் ஆதாரத்தோடு அம்பலப்படுத்தியது. கடந்த ஆட்சிக் காலத்தில் பூசி மெழுகப்பட்ட இந்த வழக்கை, தி.மு.க. ஆட்சியில் இப்போது தூசி தட்டி எடுத்திருக்கிறார்கள். தங்கள் கழுத்தை இந்த விவகாரம் நெருக்கப் போகிறது என்பதை உணர்ந்துகொண்ட அந்த பொள்ளாச்சி பிரமுகர், ஜோதிடர்களின் ஆலோசனைப்படி, அண்மையில் காஞ்சிபுரம் ராமானுஜர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தியிருக்கிறார். அப்போது, முதல் குற்றவாளியான அவரது மகனையும் அழைத்துச் சென்று அவர் வழிபட்டபோது, இந்தப் புள்ளையாண்டான்தானா அப்படி செஞ்சது? என்று, அர்ச்சகர்கள் கிசுகிசுப்போடு நமட்டுச் சிரிப்பு சிரித்தார்களாம்.''
_______________
தாமரைக் கட்சியில் திருச்சி சிவா மகன்!
தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினரும் கொ.ப.செ.யுமான திருச்சி சிவாவின் மகன் சூர்யா பா.ஜ.க.வுக்கு செல்லப்போவதாக சமீபமாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவியது. இந்நிலையில் மே-8ஆம் தேதி சென்னையில் மாநில தலைவர் அண்ணாமலையை நேரில் சந்தித்து தன்னை பா.ஜ.க.வில் இணைத்துக்கொண்டார்.
"15 ஆண்டுகளாக தி.மு.க.வில் இருந்துவருகிறேன். இதுவரை எந்த அங்கீகாரமும் எனக்கு கிடைக்கவில்லை. எப்படியும் நமக்குரிய அடையாளத்தைத் தருவார்கள் என்று இதுவரை காத்திருந்தேன். கனிமொழி ஆதரவாளர் என்று முத்திரை குத்தி ஓரங்கட்டி வைத்தார்கள். அங்கீகாரம் இல்லாமல் இருப்பதைவிட கட்சியை விட்டுப் போவதேமேல் என்று முடிவெடுத்திருக்கிறேன்'' என்று அவர் தெரிவித்துள்ளார்.
-துரை.மகேஷ்