"ஹலோ தலைவரே, அறிவா லயத்தையே திகைக்க வைத்த தி.மு.க.வின் மா.செ.க்கள் தேர்தல் ஒருவழியா முடிஞ்சிருக்கு.''”
"ஆமாம்பா, எந்த முறையும் இல்லாத அளவுக்கு இந்தமுறை தேர்தலில் உள்ளடிக் குழப்பங்கள் இருந்ததே?''”
"உண்மைதாங்க தலைவரே, தி.மு.க. வை பொறுத்தவரை, நிர்வாக வசதிக்காக 72 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு இருக்கிறது. இதில் பெரும்பாலான மாவட்டங்களில் போட்டியின்றி சமா தான முறையில் மா.செ.க்கள் தேர்வு செய்யப்பட்டு பட்டியலும் வெளியிடப் பட்டிருக்கு. பிரச்சனைகளும் போட்டி களும் அதிகரித்த மாவட்டங்களை, தி.மு.க. தலைமையால் நியமிக்கப்பட்ட அமைச்சர் கே.என்.நேரு, ஆ.ராசா தலைமையிலான உயர்மட்டக் குழு, சமாதானம் பேசி சிக்கல்களை நீக்கி இருக்குது. இதையும் தாண்டி, சில மாவட்டங்களில் பிரச்சனை வெளிப்படையாகவே வெடித்து பட்டியலை வெளியிடுவதற்கு முன் அறிவாலயத் தைப் பதட்டப்படுத்தியது. குறிப்பாக, தென்காசி, மதுரை ஆகிய மாவட்டங்களில் கடும் போட்டியும் அதனால் பிரச்சனைகளும் வெடிக்க, அவற்றையும் சரிசெய்யும் முயற்சிகள் கடைசி நேரத்தில் நடந்தது.''”
"மதுரை விவகாரம் உள்ளபடியே தி.மு.க.வினரைத் திகைக்க வச்சுதே?''”
"ஆமாங்க தலைவரே, மதுரை மாநகரில் 2 மா.செ.க் கள் இருந்ததை, ஒரே மா.செ. என்று ஆக்கியது கட்சித் தலைமை. இதையடுத்து, மதுரை மாநகரைத் தனது கட்டுப் பாட்டில் வைத்துக்கொள்ள அமைச்சர்களான மூர்த்தியும் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனும் கடும் யுத்தத்தில் குதிச் சாங்க. இதற்காக, தனது நண்பரான எம்.எல்.ஏ. தளபதியை மா.செ. போட்டியில் களமிறக்கினார் மூர்த்தி. அதேசமயம், தனது ஆதரவாளரான இளைஞரணி மாநில துணைச் செயலாளர் அதிலை செந்திலை மனுத்தாக்கல் செய்ய வைத்தார் பி.டி.ஆர்.தியாகராஜன். இதைத் தொடர்ந்து இரு தரப்புமே, தங்கள் ஆதரவில் போட்டியிடும் நபர்களைத்தான் மா.செ.வாகத் தேர்வு செய்யணும்னு கட்சியின் உயர்மட்ட குழுவுக்கு அழுத்தம் கொடுத்துச்சு. பி.டி.ஆர். ஆளான அதிலை செந்திலுக்கு சபரீசனும் ஆதரவு தெரிவிச்சதால் போட்டி தீவிரமா இருந்துச்சு.''”
"இக்கட்டான நிலைதான்...''”
"ஆமாங்க தலைவரே, தங்கள் ஆதரவாளரைத்தான் மா.செ.வாக்கணும்னு அமைச்சர்களான மூர்த்தியும், பழனிவேல் தியாகராஜனும் பிடிவாதம் பிடித்ததால், அந்த பஞ்சாயத்து கட்சித் தலைவரான ஸ்டாலினிடமே போயிருக்கு. அவர் மூர்த்தி யிடம் விசாரிக்க, மூர்த்தியோ, மாவட்டத்திலுள்ள நிர்வாகி களின் ஒட்ட
"ஹலோ தலைவரே, அறிவா லயத்தையே திகைக்க வைத்த தி.மு.க.வின் மா.செ.க்கள் தேர்தல் ஒருவழியா முடிஞ்சிருக்கு.''”
"ஆமாம்பா, எந்த முறையும் இல்லாத அளவுக்கு இந்தமுறை தேர்தலில் உள்ளடிக் குழப்பங்கள் இருந்ததே?''”
"உண்மைதாங்க தலைவரே, தி.மு.க. வை பொறுத்தவரை, நிர்வாக வசதிக்காக 72 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு இருக்கிறது. இதில் பெரும்பாலான மாவட்டங்களில் போட்டியின்றி சமா தான முறையில் மா.செ.க்கள் தேர்வு செய்யப்பட்டு பட்டியலும் வெளியிடப் பட்டிருக்கு. பிரச்சனைகளும் போட்டி களும் அதிகரித்த மாவட்டங்களை, தி.மு.க. தலைமையால் நியமிக்கப்பட்ட அமைச்சர் கே.என்.நேரு, ஆ.ராசா தலைமையிலான உயர்மட்டக் குழு, சமாதானம் பேசி சிக்கல்களை நீக்கி இருக்குது. இதையும் தாண்டி, சில மாவட்டங்களில் பிரச்சனை வெளிப்படையாகவே வெடித்து பட்டியலை வெளியிடுவதற்கு முன் அறிவாலயத் தைப் பதட்டப்படுத்தியது. குறிப்பாக, தென்காசி, மதுரை ஆகிய மாவட்டங்களில் கடும் போட்டியும் அதனால் பிரச்சனைகளும் வெடிக்க, அவற்றையும் சரிசெய்யும் முயற்சிகள் கடைசி நேரத்தில் நடந்தது.''”
"மதுரை விவகாரம் உள்ளபடியே தி.மு.க.வினரைத் திகைக்க வச்சுதே?''”
"ஆமாங்க தலைவரே, மதுரை மாநகரில் 2 மா.செ.க் கள் இருந்ததை, ஒரே மா.செ. என்று ஆக்கியது கட்சித் தலைமை. இதையடுத்து, மதுரை மாநகரைத் தனது கட்டுப் பாட்டில் வைத்துக்கொள்ள அமைச்சர்களான மூர்த்தியும் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனும் கடும் யுத்தத்தில் குதிச் சாங்க. இதற்காக, தனது நண்பரான எம்.எல்.ஏ. தளபதியை மா.செ. போட்டியில் களமிறக்கினார் மூர்த்தி. அதேசமயம், தனது ஆதரவாளரான இளைஞரணி மாநில துணைச் செயலாளர் அதிலை செந்திலை மனுத்தாக்கல் செய்ய வைத்தார் பி.டி.ஆர்.தியாகராஜன். இதைத் தொடர்ந்து இரு தரப்புமே, தங்கள் ஆதரவில் போட்டியிடும் நபர்களைத்தான் மா.செ.வாகத் தேர்வு செய்யணும்னு கட்சியின் உயர்மட்ட குழுவுக்கு அழுத்தம் கொடுத்துச்சு. பி.டி.ஆர். ஆளான அதிலை செந்திலுக்கு சபரீசனும் ஆதரவு தெரிவிச்சதால் போட்டி தீவிரமா இருந்துச்சு.''”
"இக்கட்டான நிலைதான்...''”
"ஆமாங்க தலைவரே, தங்கள் ஆதரவாளரைத்தான் மா.செ.வாக்கணும்னு அமைச்சர்களான மூர்த்தியும், பழனிவேல் தியாகராஜனும் பிடிவாதம் பிடித்ததால், அந்த பஞ்சாயத்து கட்சித் தலைவரான ஸ்டாலினிடமே போயிருக்கு. அவர் மூர்த்தி யிடம் விசாரிக்க, மூர்த்தியோ, மாவட்டத்திலுள்ள நிர்வாகி களின் ஒட்டுமொத்த ஆதர வும் எம்.எல்.ஏ. தளபதிக்கு தான் இருக்குது. அதனால் அவரை விட்டுக்கொடுத் தால், மாவட்ட நிர்வாகிகள் அதிருப்தி அடைவாங்க. அது வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும்னு சொல்லியிருக்கார். எதிர்த் தரப்பையும் ஸ்டாலின் விசா ரித்துவிட்டு, அவர் என்ன செய்யலாம்னு யோசிக்க ஆரம்பிச்சார். இந்த நிலை யில், ரெண்டு தரப்புமே, கட்சி நிர்வாகிகளின் ஆதர வைப் பெற, கரன்ஸிக் கட்டுகளை இறைத்து, மாவட்டத்திலுள்ள வட்டம், பகுதி உள்ளிட்ட நிர் வாகிகளின் ஆதரவைப்பெற களமிறங்குச்சு. ஓட்டல் களில் விருந்து, அது இதுன்னு, தவிடுவிட்டாங்க.''”
"கடைசியில் மதுரை மாநகர் மா.செ.வா தளபதி அறிவிக்கப்பட்டிருக்காரே?''”
"ஆமாங்க தலைவரே, மதுரை மாநகருக்காக மனுக்களின் பரிசீலனை அறிவாலயத்தில் நடந்தப்ப, அமைச்சர் மூர்த்தியின் ஆதரவாளரும் எம்.எல்.ஏ.வு மான தளபதிக்கு, நிர்வாகிகளின் ஆதரவு அதிகமாக வும், அதிலை செந்திலுக்கு ஆதரவு மிகமிகக் குறைவாகவும் இருந்தது. இதனால் சங்கடத்துக்கு ஆளான அதிலை செந்தில், தனது மனுவை வாபஸ் பெறலாமாங்கிற நிலைக்கு வந்துட்டாராம். கடைசியில் மதுரை மாநகர் மா.செ.வா தளபதியின் பெயர் அறிவிக்கப்பட்டது. இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை, எம்.எல்.ஏ. தளபதிக்கும் -அதிலை செந்திலுக்குமான போட்டியாக மதுரை உடன் பிறப்புகள் பார்க்கலை. மாறாக மூத்த நிர்வாகி களுக்கும் பி.டி.ஆர். தியாகராஜனுக்குமான போட்டியாகவே பார்த்தாங்க.'' ”
"தேர்தல் என்றாலே வெற்றி தோல்வி சகஜம்தானே? கட்சியின் தலைமைக்கழக நிர்வாகிகளுக்கான தேர்தல் எந்த நிலையில் இருக்குது?''”
"மா.செ.க்கள் தேர்வு செய்யப்படும்போதே, கட்சி யின் பொதுக்குழு உறுப் பினர்கள், தலைமைச் செயற் குழு உறுப்பினர்கள் ஆகி யோரும் தேர்வு செய்யப் பட்டுவிடுவார்கள். அவர் களின் பட்டியல் அதிகாரப் பூர்வமாக விரைவில் அறி விக்கப்பட இருக்கிறது. அதே போல் அக்டோபர் 9-ந் தேதி, அறிவாலயத்துக்கு பதில் சென்னை பச்சையப் பன் கல்லூரிக்கு எதிரே உள்ள செயிண்ட் ஜார்ஜ் பள்ளி கன்வெக்சன் சென்ட ரில் நடக்கும் பொதுக்குழு வில், கட்சித் தலைவர் உள் ளிட்ட தலைமைக்கழக நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப் பட இருக்கிறார்கள். இவர் களை பொதுக்குழு மற்றும் தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கணும். எனினும், தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிகளில் இப்போது இருக்கும் ஸ்டாலின், துரைமுருகன், டி.ஆர்.பாலு ஆகியோரே மீண்டும் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.''”
"கட்சியின் துணைப் பொதுச்செயலாளர்கள் தேர்தலையும் நடத்தணுமே?''”
"ஆமாங்க தலைவரே, தி.மு.க.வின் துணைப் பொதுச்செயலாளர்களாக ஐ.பெரியசாமி, அந்தியூர் செல்வராஜ், சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆ.ராசா, பொன்முடி ஆகியோர் இருந்த நிலையில், அண்மை யில் சுப்புலட்சுமி ஜெகதீசன் மட்டும் ராஜினாமா செய்திருக்கிறார். இந்த நிலையில் தலைவரின் ஒப்புத லோடு, துணைப் பொதுச்செயலாளர்கள் 5 பேரை அறிவிக்கவேண்டிய பொதுச்செயலாளர், இப்ப பொறுப்பில் இருக்கும் ஐ.பெரியசாமி, அந்தி யூர் செல்வராஜ், ஆ.ராசா, பொன்முடி ஆகிய நால்வரையும் அறிவிக்கக்கூடிய நிலைமைதான் இப்பவரை இருக்குது. சுப்புலட்சுமி ஜெகதீசன் இருந்த மகளிருக்கான இந்தப் பதவியில் கனிமொழி கருணாநிதி எம்.பி.யை நியமிக்கணும்னு மக ளிரணியினர் வலியுறுத்தறாங்க. இதற்கிடையே இந்தப் பதவியைப் பெற, என்.வி.என்.சோமு மகள் டாக்டர் கனிமொழி, ஆலடி அருணா மகள் டாக்டர் பூங்கோதை, புதுக்கோட்டை விஜயா, கவிஞர் சல்மா உள்ளிட் டோர் ஆர்வம் காட்ட றாங்க. இந்தப் பொதுக் குழுவிலேயே இளைஞ ரணி, மகளிர் அணி, மாணவர் அணி உள்ளிட்ட 20 அணிகளுக்கான மாநில செயலாளர்களும் நியமிக்கப்பட இருக் கிறார்கள். இதற்கிடையே, மா.செ. பதவியைப் பறி கொடுக்கும் சீனியர்களுக் காக, துணை அமைப்புச் செயலாளர் பதவியின் எண்ணிக்கையை அதி கரிக்கும் யோசனையும் ஸ்டாலினுக்கு இருக் கிறதாம்.''”
"தனது நீலகிரி தொகுதிக்குச் செல்ல இருந்த ஆ.ராசாவை, இப்போதைக்குப் போகவேண்டாம்னு முதல்வர் ஸ்டாலின் பிரேக் பிடிச்சிருக்காரே?’''’
"மனுதர்மம் எப்படியெல்லாம் நம்மை இழிவாகக் குறிப்பிடுதுன்னு மேடையில் எடுத்துச் சொன்ன ஆ.ராசாவுக்கு பா.ஜ.க. உள்ளிட்ட இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பைத் தெரிவிச்சி, சூறாவளியைக் கிளப்பிக்கிட்டு இருக்குது. அவ ரைக் கொல்வோம் என்றும், நாக்கை அறுப்போம் என்றும் வீராவேசமாகச் சபதம் போட்ட இந்து அமைப்பினர் சிலர் கைதும் செய்யப்பட்டிருக் காங்க. அதோடு கோவைக்கோ, தொகுதிப் பக்கமோ அவர் வந்தால் கருப்புக்கொடி காட்டுவோம் என்றும் கொந்தளிக்கிறாங்க. இந்த நிலையில் சொந்தத் தொகுதிக்குச் செல்ல இருந்த ஆ.ராசாவுக்கு தி.மு.க.வினர், கோவை முதல் ஊட்டி வரை பிரமாண்ட வரவேற்பு கொடுக்கத் தயாரானாங்க. இதைக் கவனித்த மாநில உளவுத்துறை, ஆ.ராசாவின் நீலகிரி பயணம் தவிர்க்கப்படுவது நல்லது. சட்டம் ஒழுங்கைச் சீர்குலைக்க சிலர் சதி செய்கிறார்கள்னு முதல்வர் ஸ்டாலினுக்கு ரிப்போர்ட் கொடுத்தது. அதனால் எதற்குத் தேவையில்லாத விவகாரம்னு ராசாவின் நீலகிரிப்பயணத்தை ஒத்திவைக்கச் சொல்லிவிட்டாராம் ஸ்டாலின்.''”
"மாவட்ட ஆட்சியர் ஒருத்தரின் கலெக்ஷன் விவகாரம், கின்னஸ் சாதனையா ஆகிவிடும் போலிருக்கே?''’
"உங்க காதுக்கும் அந்தத் தகவல் வந்துடுச்சுங்களா தலைவரே, தமிழக கடலோர மாவட்டம் ஒன்றின் ஆட்சியரான அவர், இந்த தி.மு.க. ஆட்சி பதவி ஏற்ற 12-ஆவது நாள்ல, கலெக்டரா நியமிக்கப்பட்டார். பதவியில் அமர்ந்த கொஞ்ச நாள்லயே வசூல் வேட்டையை ஆரம்பிச்ச அவர், அதுக்காகவே 5 புரோக்கர்களை வைத்திருக்கிறாராம். அந்த மாவட்டத்தில் நடந்து வரும் 4 வழிச்சாலைப் பணிகள், ஏரிகளைத் தூர்வாரும் பணிகள்னு செய்துவரும் நிறுவனங்களை மிரட்டி, அவர்களிடமிருந்து கலெக்டருக்கு "3 சி'யும், புரோக்கராக செயல்படும் ஏஜெண்டுகளுக்கு "80 எல்'லும் கறக்கப் பட்டிருக்குதாம். தவிர, ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் இருந்து வரும் கோப்புகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு ரேட் பிக்ஸ் பண்ணப்பட்டு வசூலித்துவரும் கலெக்டர், அங்கே முக்கிய துறைகள் எதையும் விட்டுவைக்கலையாம்.''”
"அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கு சூடுபிடிக்குதே?''”
"ஆமாங்க தலைவரே, நேருவின் தம்பி ராமஜெயம் 2012-ல் அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் அதிகாலையில் நடைப்பயிற்சி மேற்கொண்ட நேரத்தில் கடத்தப்பட்டு, படு கொடூரமாகக் கொல்லப்பட்டார். இதில் பெரிதாக துப்பு எதுவும் கிடைக்காமல் காவல்துறை திணறிவந்த நிலையில், எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையிலான 40 பேர் கொண்ட சிறப்புப் புலனாய்வு டீம் விசாரணைக் களத்தில் இறக்கிவிடப்பட்டது. இந்த டீம் அண்மையில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கணேசன் மற்றும் புதுக்கோட்டை மாவட் டத்தைச் சேர்ந்த செந்தில்குமார் ஆகிய இருவரையும் அள்ளி வந்து விசாரித்தது. இவர்கள் ராமஜெயம் பாணியிலேயே வாக்கிங் போகும்போது கடத்திக் கொல்லப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ.வான எம்.கே.பாலனின் கொலை விவகாரத்தில் சம்பந்தப் பட்டவர்களாம். இவர் களை விசாரணைக்குப் பின் நிபந்தனையுடன் விடுவித்தபோதும், இவர்களிடம் சில முக்கிய தகவல்கள் கிடைத்ததாகச் சொல்கிறது விசா ரணைத் தரப்பு.''”
"அதுசரிப்பா, சிவாஜி பிறந்த நாளை சிறப்பாகக் கொண் டாட சிவாஜி ரசிகர்கள் வரிஞ்சி கட்டறாங்களே?''”
"அக்டோபர் 1-ஆம் தேதி நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்த நாள். இதை காங்கிரஸ் கட்சியின் கலைப்பிரிவுத் தலைவரும் சிவாஜி சமூகநலப் பேரவையின் தலைவருமான சந்திரசேகரன் தலைமையிலான, சிவாஜி ரசிகர்கள் கோலாகலமாகக் கொண்டாடறாங்க. சிவாஜிக்கு, சென்னை மெரினா காமராஜர் சாலையில் ஆளுயுர சிலை அமைத்துப் பெருமைப்படுத்தினார் கலைஞர். அதை அடுத்துவந்த ஜெயலலிதா அரசு அப்புறப்படுத்தியது. அதேசமயம், சிவாஜிக்கு அடையாறு பகுதியில் மணிமண்டபம் அமைத்த அ.தி.மு.க. அரசு, அந்தச் சிலையைக் கொண்டுபோய், அதன் உள்பகுதியில் வைத்தது. அதனால் சிவாஜி சிலையை மணிமண்டப முகப்பில் வைக்கணும்னு சிவாஜி சமூகநலப் பேரவையினர் கடந்த அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் பலமுறை கோரிக்கை வைத்து, அலுத்துப்போயிட்டாங்க.''”
"இதன் தொடர்ச்சியான செய்தியை நான் பகிர்ந்துக்கறேன். தி.மு.க. அரசு அமைந்ததும். சிவாஜி மணி மண்டபத்திற்கு வந்த ஸ்டாலினிடம், சிவாஜி சிலையை மணி மண்டப முகப்பில் வைக்கும் கோரிக்கையை அதே அமைப்பினர் வச்சாங்க. அதேபோல, சிவாஜியின் மகனான நடிகர் பிரபுவும், முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்தபோது இதே கோரிக்கையை வைத்தார். இதைத் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின், சிவாஜியின் பிறந்தநாளான அக்டோபர் 1 ஆம் தேதி, சிவாஜி மணி மண்டப வளாகத்தின் முகப்பில், புதிதாகத் தயாரான சிவாஜி சிலையைத் திறந்து வைக்கிறார். இது சிவாஜி ரசிகர்களை மிகுந்த உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கு.''”
________________
இறுதிச்சுற்று
"எடப்பாடிக்கு தாமரைப்பூ மாலை' -மதுரையில் பரபரப்பு!
தென்மாவட்டங்களில் ஓ.பி.எஸ்.ஸுக்கு செல்வாக்கு அதிகம் என்பதை முறியடித்து காண்பிக்க மதுரையில் மாலையிலும், சிவகாசியில் காலையிலும் மிகப்பெரிய அளவில் பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு செப்.’29, வியாழன் காலை, மதுரை விமானநிலையத்திற்கு வந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு “தாமரை மாலையுடன்,’திடீர் மேடை அமைத்து முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், உதயகுமார், செல்லூர் ராஜு, மணிகண்டன் மற்றும் எம்.எல்.ஏ. ராஜன்செல்லப்பா ஆகியோர் தடபுடலாக வறவேற்பு கொடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது தாமரை மாலை, வேலுடன் 1000-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் வரவேற்பு அளித்தனர் தாமரை மாலை எடப்பாடி பழனிச்சாமிக்கு அணிவித்தன் மூலம் தாங்கள் பா.ஜ.க.வின் விசுவாசிகள் என்பதை மறைமுகமாக வெளிப்படுத்தினர் என்றே சொல்லலாம்
-அண்ணல்