ஆளும்கட்சிக்கு எதிராகப் போராடும் எதிர்க்கட்சி பிர முகரின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து கேக் வெட்டிக் கொண்டாடிய தி.மு.க. சேர்மன் கள், நிர்வாகிகளால் அதிர்ந்து போய் இருக்கிறார்கள் தி.மு.க. நிர்வாகிகள்.
வேலூர் மாவட்டம், குடி யாத்தம் ஒன்றியக்குழு கவுன் சிலராக இருப்பவர் அ.தி.மு.க. பிரமுகர் இமகிரிபாபு. இவரது மனைவி மம்தா.
ராஜகுப்பம் ஊராட்சி மன்ற தலைவராகவும், குடியாத்தம் ஒன்றியம் ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்புத் தலைவராகவும் உள்ளார். கடந்த மே 17-ஆம் தேதி இமகிரிபாபுவின் பிறந்தநாளை குடியாத்தம் ஊராட்சி ஒன்றிய அலுவலக மன்ற கூட்ட அரங்கத்தில், குடி யாத்தம் ஒன்றியக்குழு தலைவ ரான தி.மு.க. ஒ.செ. சத்தி யானந்தம், குடியாத்தம் நகரமன்ற சேர்மன் தி.மு.க. சௌந்தர்ராஜன், தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் அரசு உட்பட பல முக்கிய நிர்வாகிகள் தேடிவந்து கேக் வெட்டிக் கொண்டாடினர்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய ஆளும்கட்சி கவுன்சிலர்கள் சிலர், "ஒன்றியத்தில் 31 கவுன்சிலர்கள். அதில் 20 பேர் தி.மு.க. எங்கள் கட்சியில் சேர்மன் பதவிக்கு போட்டியிருந்ததால் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் ஆதரவோடு வடக்கு ஒ.செ. சத்தியானந்தம் சேர்மனானார். அதற்குப் பிரதிபலனாக வைஸ்சேர்மன் பதவி அ.தி.மு.க.வுக்கு விட்டுத்தரப் பட்டது.
ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு தலைவர் பதவியை இமகிரிபாபுவின் மனைவி மம்தாவுக்குத் தந்தனர். தி.மு.க. கிழக்கு ஒ.செ. நத்தம் பிரதீஷ், தனது மனைவி ராஜேஸ்வரி உட்பட கிழக்கு ஒன்றியத்திலுள்ள 7 கவுன்சிலர்களை சத்தியானந்தம் சேர்மனாக்க ஓட்டுப்போடவைத்தார். நீங்க சேர்மனாக நான்தான் முக்கிய காரணம் எனச்சொல்லி சேர்மனை டம்மியாக்கிய நத்தம் பிரதீஷ், ஒன்றியத்தில் பல வேலைகளைச் செய்தார், அலுவலகத்திலும் அதிகாரம் செய்தார்.
15-வது நிதிக்குழுவில் 3.5 கோடி ரூபாய் நிதி வந்தது. அதனை கவுன்சிலர்களுக்கு பிரித்துத் தராமல் அந்த நிதிக்கான வேலை களை சேர்மன், ஒ.செ. நத்தம் பிரதீஷ் இருவர் மட்டுமே பிரிச்சி எடுத்துக்கிட்டாங்க. அந்த வேலைக்கு 11 சதவீத கமிஷன் வாங்கியவங்க, கவுன்சிலர்களுக்கு பங்கும் தரவில்லை.
அதேபோல், ஒலக்காசி, கொத்தக்குப்பம், செட்டிக்குப்பம், போஜலாபுரம் கிராமங்களில் விளிம்புநிலை மக்கள் அதிகம் வாழும் பகுதியை மேம்படுத்த 1 கோடி அரசு நிதி வந்தது.
இந்த வேலைக்கான டெண்டர்களில் கவுன்சிலர்களுக்கு ஆதரவான காண்ட்ராக் டர்கள் டெண்டர் போட்டாங்க. ஊராட்சி மன்ற தலைவர்களும் டெண்டர் போட்டாங்க. ஒன்றியக்குழு நிதியில் நடக்கும் திட்டத்துக்கு நீங்க எப்படி டெண்டர் போடலாம்னு கேட்ட துக்கு, என்.ஆர்.ஜி. எஸ். திட்டத்தில் செம்பேடு, போஜனாபுரம், வளத்தூர், அகரம்சேரி, கூத்தம்பாக்கம் கிராமங்களில் பள்ளிக் கட்டடம் கட்டு வதற்கு 45 லட்சம் நிதி வந்தது.
இதில் டெண்டர் எடுத் தவர்களிடம் 11 சதவிதம் கமிஷன் வாங்கிட்டாங்க சேர்மன் சத்தியானந்தமும், ஒ.செ. பிரதீஷும். இது சரியா? அதனால்தான் நாங்க இதில் டெண்டர் போடறோம்னு சொன்னாங்க. இதனால் ஒன்றியக்குழு கவுன்சிலர்கள் - ஊராட்சி மன்ற தலைவர் களுக்கு இடையே பிரச்சனை உருவாச்சி.
இதுபற்றி மா.செ. நந்தகுமார் எம்.எல். ஏ.விடம் கவுன்சிலர்கள் முறையிட்டபோது, நத்தம் பிரதீஷ் ஒன்றியக்குழு அலுவலகத் துக்கே போகக்கூடாதுன்னு சொல்லிட்டார்.
இதில் கோபமான பிரதீஷ், ஒன்றியக்குழு கவுன்சிலர்கள், சேர்மனுக்கு எதிராக அ.தி.மு.க. கவுன்சிலர் இமகிரிபாபு மூலமாக, ஊராட்சி மன்ற தலைவர்களைத் தூண்டிவிட்டுருக்கார். இருவரும் ஒரே சாதி என்பதால் அந்த சாதி பாசத்தில் ஒன்றிய சேர்மனுக்கு, கவுன்சிலர் களுக்கு, தி.மு.க.வுக்கு எதிராக போராட்டம் நடத்த முடிவுசெய்து கூட்டம் போட்டு ஆலோசிக்கிறார்.
அப்படிப்பட்டவரின் பிறந்த நாளுக்கு, முக்கிய நிர்வாகிகள் எல்லாம் நேரில் வந்து சால்வை அணிவித்து கேக் வெட்டி ஊட்டிவிட்ட போட்டோ வெளியே வந்து ருக்கு. யாரை எதிர்த்துப் போராட ஆலோசிக்கிறாங் களோ அவரே நேரில்வந்து வாழ்த்து சொல்றார். கேட்டால், அவரை சமாதானம் செய்யப் போனேன்னு சொல்றார்''’என்றார்கள்.
மற்றொரு நிர்வாகியோ, “"குடியாத்தம் ஒன்றியம் கட்சி நிர்வாகத்துக்காக நான்காக பிரித்து நிர்வாகிகள் நியமிச்சிருக்கு. கிழக்கு நத்தம் பிரதீஷ், மேற்கு கல்லூர் ரவி, தெற்கு அன்பரசு, வடக்கு சத்தியானந்தம் ஒ.செ. பதவியில் இருக்காங்க. ஒ.செ. பிரதீஷ், தெற்கு ஒ.செ. அன்பரசுவை தன் வீட்டு வேலைகளைச் செய்யவைப்பதை கேள்விகேட்ட ஒன்றிய துணைச்செயலாளர் பிச்சாண்டியை மிரட்டினார்கள்.
சேர்மன் சத்தியானந்தமும் கிளைச்செயலாளர் களை மதிப்பதில்லை. தொகுதி எம்.எல்.ஏ. அமுலுவை சாதிரீதியாக இவர்கள் ஒதுக்குவது போன்றவற்றால் ஊரல் அரங்கம், அலங்கா நல்லூர், மேல்ஆலத்தூர், ஒலக்காசி, ஆத்துவாரம் பட்டி, சிருவாங்கி, பத்து, மருத்துவாரம்பட்டி, விண்ணமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் உட்பட தீவிரமான தொண்டர்கள் பா.ஜ.க., நாம் தமிழர் கட்சி, அ.தி.மு.க.வுக்கு போயிட்டாங்க.
ஆளும் கட்சியிலிருந்து, எதிர்க்கட்சிகளுக்கு கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் போறது வேதனையா இருக்கு''” என்றார்கள்.
இதுகுறித்து சேர்மன் சத்தியானந்தத்திடம் கேட்டபோது, "எல்லாமே தவறான தகவல். ஊராட்சிமன்றத் தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டம் நடந்திருக்கு அப்போது பாபுக்கு பிறந்தநாள்னு வாட்ஸ்ஆப்ல வந்த தகவலைப் பார்த்துட்டு எல்லாம் வாழ்த்து சொன்னது''” என்றார். ஒ.செ. நத்தம் பிரதீஷை தொடர்புகொண்டபோது, நமது லைனை எடுக்கவில்லை.
விழித்துக்கொள்ளுமா தி.மு.க. தலைமை?