ராங்கால்- மோடியை மிரட்டும் பார்லிமெண்ட் வாஸ்து! சி.பி.ஐ. மீதே புகார்! -பரபரக்கும் உள்துறை, தமிழக காங்கிரசிஸ் தலைவர் கலாட்டா!

ff

"ஹலோ தலைவரே, புதிய நாடாளு மன்றக் கட்டிடத்தை பிரதமர் மோடி இன்னும் ஏன் மூடி வச்சிருக்கார்ங்கிற கேள்வி இப்ப பரவலாக எழுந்திருக்கு?''’

"ஆமாம்பா, திறப்பு விழாவையே நடத்திய பிறகும் அதில் ஏன் நாடாளுமன்றக் கூட்டத்தை நடத்த மோடி தயங்கறார்?''”

"இதே கேள்வி எல்லோருக்குமே இருக்குங்க தலைவரே. ஏன்னா இந்த புதிய நாடாளுமன்றக் கட்டடத்தைத் திறப்பதில் அதிக அவசரத்தைக் காட்டினார் மோடி. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரை, இதில் நடத்தும் நோக்கத்தில் தான் திறப்பு விழாவுக்கு மோடி அவசரப்படுறார்னு அப்ப அவர் தரப்பு சொன்னது. அதற்கு ஏற்ப, கடந்த மே மாதம் 29 ஆம் தேதியே அதன் திறப்பு விழாவும் நடந்து முடிந்தது. இருந்தும், புதிய நாடாளுமன் றக் கட்டடத்தில் மழைக்கால கூட்டத்தொடரை நடத்தாமல், பழைய நாடாளுமன்றக் கட்டடத்திலேயே அதை நடத்தி முடித்திருக்கிறார் மோடி. இப்ப என்னடான்னா, அந்தப் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தைப் பார்வையிட, பா.ஜ.க. எம்.பி.க்களையே மோடி அரசு அனுமதிக்க மறுக்குதாம்.''”

modi

"அப்படி என்ன ரகசியம் அங்கே காக்கப்படுது?''’

"இதுகுறித்து பிரதமர் அலுவலகத் தரப்பிலேயே விசாரித்தபோது, ’அனைத்து சாஸ்திர சம்பிரதாயங்களையும் கடைபிடிச்சிதான் பிரதமர் அந்தப் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தைக் கட்டித் திறந்தார். ஆனால், அதைத் திறந்ததில் இருந்தே எல்லாமே ஏடாகூடமா நடக்குது. பிரதமர் மோடியும் பா.ஜ.க.வும் எடுக்கும் எந்த முயற்சியிலும் வெற்றி கிடைப்பதில்லை. குறிப்பாக கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. படுதோல்வி கண்டது. மணிப்பூரில் மூண்ட கலவரம் மோடியின் பெயரை ரிப்பேர் ஆக்கிவிட்டது. அதோடு நாட்டில் சில எதிர்பாராத விபத்துகள் அரங்கேறி பயமுறுத்துது. அதனால், இந்த புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின் கட்டமைப்பில் வாஸ்துக் குறைபாடு இருப்பதாக வாஸ்து நிபுணர் கள் சிலர், மோடியிடம் சொல்லியிருக்கிறார்கள். அதை நிவர்த்தி செய்யலைன்னா அரசியல் ரீதியாக மோடிக்கு தொடர் தோல்விகள் ஏற்படும் என்றும் பீதியை ஏற்படுத்தியிருக்கிறார்கள். அதனால், அங்கே சில கட்டடங்களை இடித்துவிட்டு, புதிதாக சில கட்டுமானப் பணிகளை ரகசியமாகச் செய்கிறார்.’ என்கிறார்கள். வாஸ்துதான் இப்ப மோடியைப் பாடாய்ப்படுத்துகிறதாம்.''”

rr

"சரிப்பா, மத்திய அரசின் புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ. மீது, மத்திய ஊழல் கண்காணிப்பகமே புகார் தெரிவித்திருக்கிறதே?''”

"ஆமாங்க தலைவரே, இந்திய புலனாய்வு மற்றும் விசாரணை அமைப்புகளில் ஒன்றான சி.பி.ஐ.யை, மோடி அரசாங்கம் எதிர்க்கட்சி களை ஒடுக்குவதற்குத்தான் அதிகம் பயன்படுத்துகிறது எ

"ஹலோ தலைவரே, புதிய நாடாளு மன்றக் கட்டிடத்தை பிரதமர் மோடி இன்னும் ஏன் மூடி வச்சிருக்கார்ங்கிற கேள்வி இப்ப பரவலாக எழுந்திருக்கு?''’

"ஆமாம்பா, திறப்பு விழாவையே நடத்திய பிறகும் அதில் ஏன் நாடாளுமன்றக் கூட்டத்தை நடத்த மோடி தயங்கறார்?''”

"இதே கேள்வி எல்லோருக்குமே இருக்குங்க தலைவரே. ஏன்னா இந்த புதிய நாடாளுமன்றக் கட்டடத்தைத் திறப்பதில் அதிக அவசரத்தைக் காட்டினார் மோடி. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரை, இதில் நடத்தும் நோக்கத்தில் தான் திறப்பு விழாவுக்கு மோடி அவசரப்படுறார்னு அப்ப அவர் தரப்பு சொன்னது. அதற்கு ஏற்ப, கடந்த மே மாதம் 29 ஆம் தேதியே அதன் திறப்பு விழாவும் நடந்து முடிந்தது. இருந்தும், புதிய நாடாளுமன் றக் கட்டடத்தில் மழைக்கால கூட்டத்தொடரை நடத்தாமல், பழைய நாடாளுமன்றக் கட்டடத்திலேயே அதை நடத்தி முடித்திருக்கிறார் மோடி. இப்ப என்னடான்னா, அந்தப் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தைப் பார்வையிட, பா.ஜ.க. எம்.பி.க்களையே மோடி அரசு அனுமதிக்க மறுக்குதாம்.''”

modi

"அப்படி என்ன ரகசியம் அங்கே காக்கப்படுது?''’

"இதுகுறித்து பிரதமர் அலுவலகத் தரப்பிலேயே விசாரித்தபோது, ’அனைத்து சாஸ்திர சம்பிரதாயங்களையும் கடைபிடிச்சிதான் பிரதமர் அந்தப் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தைக் கட்டித் திறந்தார். ஆனால், அதைத் திறந்ததில் இருந்தே எல்லாமே ஏடாகூடமா நடக்குது. பிரதமர் மோடியும் பா.ஜ.க.வும் எடுக்கும் எந்த முயற்சியிலும் வெற்றி கிடைப்பதில்லை. குறிப்பாக கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. படுதோல்வி கண்டது. மணிப்பூரில் மூண்ட கலவரம் மோடியின் பெயரை ரிப்பேர் ஆக்கிவிட்டது. அதோடு நாட்டில் சில எதிர்பாராத விபத்துகள் அரங்கேறி பயமுறுத்துது. அதனால், இந்த புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின் கட்டமைப்பில் வாஸ்துக் குறைபாடு இருப்பதாக வாஸ்து நிபுணர் கள் சிலர், மோடியிடம் சொல்லியிருக்கிறார்கள். அதை நிவர்த்தி செய்யலைன்னா அரசியல் ரீதியாக மோடிக்கு தொடர் தோல்விகள் ஏற்படும் என்றும் பீதியை ஏற்படுத்தியிருக்கிறார்கள். அதனால், அங்கே சில கட்டடங்களை இடித்துவிட்டு, புதிதாக சில கட்டுமானப் பணிகளை ரகசியமாகச் செய்கிறார்.’ என்கிறார்கள். வாஸ்துதான் இப்ப மோடியைப் பாடாய்ப்படுத்துகிறதாம்.''”

rr

"சரிப்பா, மத்திய அரசின் புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ. மீது, மத்திய ஊழல் கண்காணிப்பகமே புகார் தெரிவித்திருக்கிறதே?''”

"ஆமாங்க தலைவரே, இந்திய புலனாய்வு மற்றும் விசாரணை அமைப்புகளில் ஒன்றான சி.பி.ஐ.யை, மோடி அரசாங்கம் எதிர்க்கட்சி களை ஒடுக்குவதற்குத்தான் அதிகம் பயன்படுத்துகிறது என்கிற குற்றச்சாட்டு பரவலாக இருக்கிறது. இந்த நிலையில் அந்த சி.பி.ஐ. மீதே குற்றச்சாட்டைச் சுமத்தியிருக் கிறது மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணை யம். அதாவது, கடந்த சில வருடங்களில் சி.பி.ஐ. விசாரித்த 6,841 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன என்று குறைபட்டுக் கொண்டி ருக்கும் இந்த ஆணையம், சி.பி.ஐ.யில் பணி யாற்றும் குரூப் ஏ -அதிகாரிகள் மீது 54 வழக்குகளும், குரூப் பி - அதிகாரிகள் மீது 19 வழக்குகளும் நிலுவையில் இருக்கின்றன என்று உள்துறை அமைச்சகத்துக்கு ரிப்போர்ட் அனுப்பி, பலத்த பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறதாம். இதன் மூலம். அரசு அதிகாரிகள், எதிர்க்கட்சித் தலைவர் கள் மீதெல்லாம் பாயும் சி.பி.ஐ. அதிகாரிகள், யோக்கிய சிகாமணிகளாக இல்லை என்பது வெளிச்சமாகியிருக்கிறது என்கிறார்கள் பலரும்.''”

"சரி தமிழ்நாட்டு விவகாரத்தைப் பார்க்கலாம். அமைச்சர் எ.வ.வேலு நிகழ்ச்சிக்கு வன்னியர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்களே?''”

"ஆமாங்க தலைவரே, அமைச்சர் வேலு தங்கள் விழாவுக்கு வரக்கூடாதுன்னு, வன்னியர் சங்கத்தினர் தடுத்துள்ளனர். என்ன நடந்ததுன்னா... திருவண்ணாமலை மாவட்ட வன்னியர் குல சத்திரியர் வல்லாள மகாராஜா மடாலய சங்கத் துக்கு என அங்கே இரண்டு திருமண மண்டபங்கள் உட்பட 200 கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் இருக்கின்றன. அந்த மடாலய சங்கத் தலைவராக தி.மு.க. தெற்கு மாவட்ட அவைத்தலைவரான முன்னாள் எம்.பி.வேணுகோபால் பொறுப்பு வகிக்கிறார். அந்த வகையில், அரசுப் பள்ளியில் பயிலும் வன்னியர் சமூக மாணவ-மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழா ஆகஸ்ட் 27ஆம் தேதி நடைபெறுவதாக ஏற்பாடானது. இதற்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவும், துணை சபாநாயகர் பிச்சாண்டியும் அழைக்கப் பட்டிருந்தனர்.இந்த நிலையில்தான் திடீர்ன்னு, அமைச்சர் வேலு விழாவுக்கு வந்தால் கறுப்புக் கொடி காட்டுவோம்னு வன்னியர் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அதனால் அந்த விழாவையே ரத்து பண்ணிட்டாங்க.''”

"அமைச்சருக்கு எதற்காக இந்த எதிர்ப் பாம்?''”

"இது பற்றி வன்னியர் சங்கத் தரப்பிலே விசாரித்தபோது, "நாயுடுமங்களத்தில் 30 ஆண்டுகளுக்கு முன்பு வன்னியர்களின் அடை யாளமான அக்னி குண்டம் அமைக்கப்பட்டது என்றும், பேருந்து நிறுத்தம் கட்டப்போகிறோம் என சில மாதங்களுக்கு முன்பு அதிகாரிகள் அதனை இடித்தார்கள், அதை அமைச்சர் கண்டுகொள்ள வில்லை என்றும், அந்த அக்னிக் குண்டம் இப்போ தும் தாலுகா அலுவலகத்தில் மூடி வைக்கப்பட் டுள்ளதாம். தங்கள் சமுதாயத்துக்கு எதிராக செயல்பட்டவர் என்பதால் அமைச்சர் வேலுவின் வருகையை எதிர்த்தோம்' என்கிறார்கள்.''”

"இந்தக் கூத்துக்கு இடையில், தி.மு.க. எம்.எல்.ஏ. ஒருவரையும் அமலாக்கத்துறை விசாரிக்கிறதே?''”

"ஆமாங்க தலைவரே, சென்னை மயிலாப்பூர் தி.மு.க. எம்.எல்.ஏ.வான மயிலை வேலு, கட்சியி லேயே கடும் எதிர்ப்பை சம்பாதித்து வருகிறார். இந்த நிலையில், ஆஸ்திரேலியா சென்றுவிட்டு சமீபத்தில் சென்னை திரும்பியிருக்கிறார் வேலு . அவரது இந்தப் பயணம் குறித்தும் அமலாக்கத் துறைக்கு சில தகவல்கள் சிலரால் கொடுக்கப் பட்டுள்ளன. குறிப்பாக, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் மயிலை வேலுவுக்குமான சில தொடர்புகள் பற்றி அந்தப் புகார்கள் விவரிக்கிற தாம். அதனால், மயிலை வேலுவின் ஆஸ்திரேலியப் பயணம் குறித்து ரகசியமாக விசாரிக்கத் தொடங்கியிருக்கின்றதாம் அமலாக்கத்துறை. கூடவே வருமான வரித்துறையும் அவரைக் கண்காணிக்கிறதாம்.''”

"தேர்தலை முன் வைத்து, தமிழக அரசிய லில் ஒரு புதிய அரசியல் கூட்டணி உருவாகப் போகிறது என்கிறார்களே?''”

"உண்மைதாங்க தலைவரே, ஓ.பி.எஸ்., டி.டி.வி.தினகரன், சசிகலா, பாரிவேந்தர், ஜான் பாண்டியன் ஆகியோர் ஒரே அணியாக இணைந்து செயல்பட இருக்கிறார்களாம். இவர்களோடு பா.ம.க.வும் தே.மு.தி.க.வும் கை கோர்க்கலாம் என்றும் கணக்கிடப்படுகிறது. இதற்கான முயற்சிகளை பா.ஜ.க. முன்னெடுத்து வருகிறதாம். இதையொட்டி, எடப்பாடியை மிரள வைக்கும் வகையில் சேலத்தில் ஒரு மாநாட்டை பா.ம.க. வுடன் இணைந்து நடத்தவும் ஓ.பி.எஸ். விரும்பு கிறாராம். இதன்மூலம் பா.ம.க. வலியுறுத்தும் வன்னி யர் சமூகத்துக்கான 10 சதவீத உள் ஒதுக்கீட்டை ஆதரிப்பதோடு, இந்த விசயத்தில் எடப்பாடியின் போக்கைக் கண்டிப்பதற்கும் இந்த மாநாடு பயன் படும் என்பது ஓ.பி.எஸ். போடும் கணக்காம்.''”

"தமிழக காங்கிரசில் அதிக சலசலப்பு தெரியுதே?''”

ff

"தலித் சமூகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. செல்வப் பெருந்தகையை தமிழக காங்கிரசின் தலைவராக நியமிக்க, அதன் டெல்லி தலைமை முடிவு செய்தது. இதற்காக அறிவிப்பும் தயாரான நிலையில் அது நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. காரணம், ராகுல்காந்திக்கு தமிழக காங்கிரஸ் எம்.பி. மானிக் தாக்கூர் எழுதிய கடிதம்தான் என்கிறார்கள். அந்தக் கடிதத்தில், செல்வப் பெருந்தகையின் ஆரம்ப கால அரசியல் தொடங்கி, அவர் மீதிருக் கும் கிரிமினல் ரெக்கார்டுகள் வரை அனைத்தும் குறிப்பிடப்பட்டிருக்கிறதாம். இது தவிர தமிழக காங்கிரசில் இருக்கும் எம்.பி.க்கள் பலரும் செல்வப் பெருந்தகையை தலைவராக நியமிக்கக்கூடாது என்று கடும் எதிர்ப்பு தெரிவித்தார்களாம். இத னால்தான் ராகுல் நிதானித்துவிட்டார் என்கிறார் கள். தமிழக அரசின் சட்டமன்ற பொதுக்கணக்கு குழு தலைவர் பொறுப்பில் இருந்தும் செல்வப் பெருந்தகையை நீக்கவேண்டும் என தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைக்கவும் காங்கிரஸ் பிரமுகர்கள் வரிந்துகட்டி வருகிறார்கள்.''”

"திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த 4 பேருக்கு வாய்ப்பு தரப்பட்டிருக்கிறதே?''”

"உண்மைதாங்க தலைவரே, திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவராக, ஏற்கெனவே இருந்த கருணாகர ரெட்டியே இப்ப மீண்டும் நியமிக்கப்பட்டு இருக்கிறார். நீண்ட நாளாக பரிசீலனையில் இருந்த அதன் 24 உறுப்பினர்களும் இப்ப நியமிக்கப்பட்டிருக்காங்க. அதில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் நான்கு பேர். இவர்களில் கிருஷ்ணமூர்த்தி வைத்தியநாதன் என்பவர் அமித்ஷா சிபாரிசில் மூன்றாவது முறையாக தன் உறுப்பினர் பதவியைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தரப்பின் சிபாரிசில் டாக்டர் சங்கரும், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி சிபாரில் டி.வி.எஸ். நிறுவனர் எம்.டி. சுதர்சனமும், தமிழக அரசின் சிபாரிசில் டாலர் பாலு என்கிற திருப்பூர் பாலசுப்ரமணியமும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த டாலர் பாலு, முதல்வர் ஸ்டாலினின் நீண்ட கால நண்பராம்.''”

"புதுக்கோட்டை ஆட்சியரைச் சுற்றி சர்ச்சை சுழன்றடிக்கிதே?''”

rr

"புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரான மெர்சி ரம்யா பதவி ஏற்ற வேகத்திலேயே கேம்ப் ஆபீஸில் உள்ள விநாயகர் சிலையை அகற்றி சர்ச்சையில் சிக்கினார். இப்போது அவர் எந்த அதிகாரிகளையும் மதிப்பதில்லை என்றும், எல்லோரையும் நிற்க வைத்தே பேசுகிறார் என்றும் சொல்கிறார்கள். குறிப்பாக, அண்மையில் நடந்த விவசாயிகள் குறை தீர்ப்புக் கூட்டத்தில் கோட்டாட்சியர் களைக் கூட தன் அருகே அமர வைக்காமல், கீழே அமர வைத்தாராம். இதேபோல் சுதந்திரதின அணிவகுப்பில் திறந்த ஜீப்பில் தன்னுடன் வந்த எஸ்.பி. வந்திதா பாண்டேவை ஒரு ஸ்டெப் தள்ளி நிற்கும்படி சொல்லி சங்கடப்படுத்தி னாராம். இதேபோல் கடந்த வாரம் கலெக்டர் சேம்பரில் நடந்த கலால் ஆய்வுக் கூட்டத்திலும் எஸ்.பி.க்கு இருக்கை போடப்படாததால், அவரது பாதுகாப்பு வீரர்கள் ஓடிப்போய் சேர் எடுத்துவந்து போட்டார்களாம். கலெக்டரின் இப்படிப்பட்ட போக்குகள், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.''”

"மதுரை காவல்துறை பெண் அதிகாரி ஒருவரை பற்றியும் சர்ச்சைகள் கிளம்புதே?''”

"ஆமாங்க தலைவரே, மதுரை மாவட்ட சி.பி.சி.ஐ.டி. பிரிவில் டி.எஸ்.பி.யாக இருப்பவர் வினோதினி. இவர் ஏற்கெனவே ஒரு வழக்கில் பொய்யான நபர்களை நீதிமன்றத்தில் சரண்டர் செய்ததாக ஒரு ஆடியோ உரையாடல் சமூக வலைத்தளங்களில் பரவி, பரபரப்பை ஏற்படுத்தி யது. இந்த நிலையில் இவர் அண்மையில் ஒரு ’டிக்டாக்’ நபர் மீது கோபமாகி, அவரைத் தீவிரமாகத் தேடினாராம். ஒரு இன்ஸ்பெக்டர் வீட்டில் அந்த நபர் பதுங்கியிருந்த நிலையில், அவரைக் கண்டுபிடித்து அழைத்துச்சென்று, கடுமையாகத் தாக்கி அவரை அனுப்பிவைத்ததாக ஒரு தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்து வருகிறது.''”

"அதானி குழுமம் பற்றி மின்வாரியத் தரப்பில் பரபரப்பான தகவல்கள் கசியுதே?''”

"பிரபல தொழில் நிறுவனமான அதானி, இப்போது தமிழகத்தில் ஒரு பெரும் திட்டத்தை அரங்கேற்ற முனைகிறதாம். தனக்குச் சொந்தமான எண்ணூர் துறை முகத்தை விரிவுபடுத்த எண்ணும் அதானி குழுமம், அந்தப் பகுதியில் இருக்கும் எண்ணூர் அனல் மின் நிலையத்தின் சில பகுதிகளை அகற்றி, இடத்தை ஆக்கிரமிக்க நினைக்கிறதாம். இதற்காக 800 கோடி ரூபாய் திட்டம் ஒன்றுடன் தமிழக அரசை அது தீவிரமாக அணுகி வருகிறதாம். இதற்காக அமைச்சர் உதயநிதியையும் பா.ஜ.க. தலைவர்கள் மூலம் அது தொடர்புகொண்டும் எதுவும் பலிக்கவில்லையாம். தி.மு.க. அரசு, அதானியின் இந்தத் திட்டத்திற்குத் தனது இசைவைத் தெரிவிக்காமல் பிடிவாதமாக இருக்கிறது என்கிறார்கள்.''’

"ஒரு மணல் பிசினஸ் அதிபர் தாராளம் காட்டி கட்சிகளை வளைக்கிறாராமே?''”

"இப்படி ஒரு செய்தி, மணல் பிசினசில் கொடிகட்டிப் பறக்கும் கரிகாலனைப் பற்றி பரவலாகப் பரவி இருக்கிறது. எந்தக்கட்சியினர் அணுகினாலும், பாரபட்சமின்றி அவர் தாராளம் காட்டுகிறாராம். அண்மையில் இவர் தனது பிறந்தநாளை நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தடபுடலாகக் கொண்டாடினார். இதில் திரைப்பிரபலங்களும் கூட கலந்துகொண்டு அவருக்கு ஆளுயர மாலை அணிவித்துப் பூரித்தனர். இது தொடர்பான வீடியோ, இப்போது சமூக வலைத்தளங்களில் உலாவந்து பலரையும் வாயைப் பிளக்க வைத்திருக்கிறது. இவரது முதலீடுகள் லண்டன், துபாய் போன்ற நாடுகளில் குவிகிறதாம். இந்த கரிகாலன் அமைச்சர் துரைமுருகனுக்கு நெருக்கமானவர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.''

rr

"நானும் என் காதுக்கு வந்த தகவல் ஒன்றைப் பகிர்ந்துக்கறேன். விடுதலைப்புலிகள் இயக்கம் அமைதியடைந்துவிட்டதாக கருதப்பட்டுவரும் நிலையில், அந்த இயக்கம் இன்னும் உயிர்ப்புடன் இயங்கிவருவதாக ஒன்றிய அரசின் உளவுத்துறை, ஒரு அணுகுண்டைப் போட்டு அதிர வைத்திருக்கிறது. மேலும் அந்த இயக்கத்தின் கணக்கிலிருந்து பெரிய தொகை ஒன்று, தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பிரமுகருக்குக் கைமாறிய தாகவும் மேலிடத்துக்கு ரிப்போர்ட் அனுப்பியிருக்கிற தாம்.''

nkn300823
இதையும் படியுங்கள்
Subscribe