"ஹலோ தலைவரே, நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்கும் அத்தனை வேட்பாளர்களும் வேட்புமனுவைத் தாக்கல் செய்துட்டாங்க.''”
"ஆமாம்பா, வேட்பு மனுத் தாக்கலுக்கு 27ஆம் தேதி கடைசி நாள் என்பதால், ஆரம்பத்தில் அசட்டை காட் டிய வேட்பாளர் களும் அன் னைக்கு விறு விறுப்பு காட்டி யிருக்காக. மத்த படி அரசியல் கட்சிகளின் நில வரம் எப்படி இருக்கு?''”
"சொல்றேங்க தலைவரே, அனைத்துக்கட்சிகளின் வேட்பாளர்களும் வேட்புமனுவைத் தாக்கல் செய்த நிலையில், எல்லாத்தரப்பிலும் பஞ்சாயத்துகளுக்கு குறைவு இல்லை. குறிப்பாக, தமிழக முதல்வரும் தி.மு.க. தலைவருமான ஸ்டாலினுக்கே, ஏகப்பட்ட பஞ்சாயத்துக்கள் வருதாம். பெரும்பாலும், இன்னும் தேர்தல் செலவுக்கு அமைச்சர் பணம் கொடுக்கவில்லை. மா.செ.க்களும் மந்திரிகளும் எங்களை மதிப்பதில்லை, பிரச்சாரத்துக்கு எங்களை அழைப்பதில்லை என்ற ரீதியிலேயே புகார்கள் வருகிறதாம். அதேபோல் கூட்டணிக் கட்சிகள் தரப்பில் இருந்தும், உங்க ஆளுங்க ஒத்துழைப்பு தருவதில்லை என்பது போன்ற வருத்தங்கள் தெரிவிக்கப்படுகிறதாம். இதில், தானே சரிசெய்ய வேண்டிய பிரச்சினைகளை சம்மந்தப்பட்டவர் களுடன் பேசி சரிசெய்யும் அவர், மற்றவைகளை அமைச்சர்களிடம் சொல்லி, விசாரிக்கச் சொல்கிறாராம். சிலருக்கு அவரிடமிருந்து கடுமையான டோஸும் விழுகிறதாம்.''”
"இதேபோல் அத்தனை தொகுதிகளின் நிலவரம் குறித்தும் மாநில உளவுத்துறை முதல்வருக்கு தினசரி ரிப்போர்ட் கொடுக்கிறதாமே?''”
"ஆமாங்க தலைவரே, அந்த ரிப்போர்ட்டில் நிறைய நெகட்டிவ் தகவல்கள்தான் இருக்கிறதாம். குறிப்பாக, தி.மு.க. போட்டியிடும் தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகள் விறுவிறுப்பாகக் களமிறங்கினாலும், கூட்டணிக் கட்சிகள் களமிறங்கும் தொகுதிகளில், சக கூட்டணிக் கட்சிகளே அனுசரணையாக நடப்பதில்லை யாம். உதாரணத்துக்குச் சொல்லணும்னா, தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் கடலூர் தொகுதியில், டாக்டர் விஷ்ணுபிரசாத் களத்தில் இருக்கிறார். அவர் பா.ம.க. அன்புமணியின் மைத்துனர். அதனால் விஷ்ணுவை காங்கிரஸ்காரராகப் பார்க்காமல், அன்புமணியின் உறவினராகவே பார்த்து, விடுதலைச் சிறுத்தைகள் ஓரம்கட்டுகிறார்களாம். அவர்களில் பெரும்பாலானோர், பக்கத்துத் தொகுதியான சிதம் பரத்தில் போட்டியிடும் தங்கள் தலைவரான திருமாவளவனுக்குத் தேர்தல் பணிசெய்ய சென்று விட்டார்களாம். இது காங்கிரஸ் தரப்பை அதிரவைத் திருக்கிறதாம். இந்த விவகாரம் ஸ்டாலின் பார்வைக்கு உளவுத் துறையால் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. எனவே இதுபோன்ற பிரச்சினைகளையும் ஸ்டாலின் சரிசெய்து வருகிறாராம்.''”
"தேர்தல் தொடர்பாக எடப்பாடி ஸ்பெஷல் டார்கெட்டெல்லாம் வைத்திருக்கிறாரே?''”
"இந்தத் தேர்தலில் 200 கோடி ரூபாய் வரை வாரி இறைக்க, டார்கெட் வைத்திருக்கிறாராம் எடப்பாடி. கொஞ்சம் அடித்து ஆடினால் 8 தொகுதிகளில் கரையேற முடியும் என்று அவர் நம்புகிறாராம். குறிப்பாக கோவை, திருப்பூர், ஈரோடு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், நாமக்கல், திருச்சி, நீலகிரி ஆகிய தொகுதிகளில் இலைக்கு வாய்ப்பு இருப்பதாக அவர் கணக்குப்போட்டு வைத்திருக்கிறாராம். அதிலும்,
"ஹலோ தலைவரே, நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்கும் அத்தனை வேட்பாளர்களும் வேட்புமனுவைத் தாக்கல் செய்துட்டாங்க.''”
"ஆமாம்பா, வேட்பு மனுத் தாக்கலுக்கு 27ஆம் தேதி கடைசி நாள் என்பதால், ஆரம்பத்தில் அசட்டை காட் டிய வேட்பாளர் களும் அன் னைக்கு விறு விறுப்பு காட்டி யிருக்காக. மத்த படி அரசியல் கட்சிகளின் நில வரம் எப்படி இருக்கு?''”
"சொல்றேங்க தலைவரே, அனைத்துக்கட்சிகளின் வேட்பாளர்களும் வேட்புமனுவைத் தாக்கல் செய்த நிலையில், எல்லாத்தரப்பிலும் பஞ்சாயத்துகளுக்கு குறைவு இல்லை. குறிப்பாக, தமிழக முதல்வரும் தி.மு.க. தலைவருமான ஸ்டாலினுக்கே, ஏகப்பட்ட பஞ்சாயத்துக்கள் வருதாம். பெரும்பாலும், இன்னும் தேர்தல் செலவுக்கு அமைச்சர் பணம் கொடுக்கவில்லை. மா.செ.க்களும் மந்திரிகளும் எங்களை மதிப்பதில்லை, பிரச்சாரத்துக்கு எங்களை அழைப்பதில்லை என்ற ரீதியிலேயே புகார்கள் வருகிறதாம். அதேபோல் கூட்டணிக் கட்சிகள் தரப்பில் இருந்தும், உங்க ஆளுங்க ஒத்துழைப்பு தருவதில்லை என்பது போன்ற வருத்தங்கள் தெரிவிக்கப்படுகிறதாம். இதில், தானே சரிசெய்ய வேண்டிய பிரச்சினைகளை சம்மந்தப்பட்டவர் களுடன் பேசி சரிசெய்யும் அவர், மற்றவைகளை அமைச்சர்களிடம் சொல்லி, விசாரிக்கச் சொல்கிறாராம். சிலருக்கு அவரிடமிருந்து கடுமையான டோஸும் விழுகிறதாம்.''”
"இதேபோல் அத்தனை தொகுதிகளின் நிலவரம் குறித்தும் மாநில உளவுத்துறை முதல்வருக்கு தினசரி ரிப்போர்ட் கொடுக்கிறதாமே?''”
"ஆமாங்க தலைவரே, அந்த ரிப்போர்ட்டில் நிறைய நெகட்டிவ் தகவல்கள்தான் இருக்கிறதாம். குறிப்பாக, தி.மு.க. போட்டியிடும் தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகள் விறுவிறுப்பாகக் களமிறங்கினாலும், கூட்டணிக் கட்சிகள் களமிறங்கும் தொகுதிகளில், சக கூட்டணிக் கட்சிகளே அனுசரணையாக நடப்பதில்லை யாம். உதாரணத்துக்குச் சொல்லணும்னா, தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் கடலூர் தொகுதியில், டாக்டர் விஷ்ணுபிரசாத் களத்தில் இருக்கிறார். அவர் பா.ம.க. அன்புமணியின் மைத்துனர். அதனால் விஷ்ணுவை காங்கிரஸ்காரராகப் பார்க்காமல், அன்புமணியின் உறவினராகவே பார்த்து, விடுதலைச் சிறுத்தைகள் ஓரம்கட்டுகிறார்களாம். அவர்களில் பெரும்பாலானோர், பக்கத்துத் தொகுதியான சிதம் பரத்தில் போட்டியிடும் தங்கள் தலைவரான திருமாவளவனுக்குத் தேர்தல் பணிசெய்ய சென்று விட்டார்களாம். இது காங்கிரஸ் தரப்பை அதிரவைத் திருக்கிறதாம். இந்த விவகாரம் ஸ்டாலின் பார்வைக்கு உளவுத் துறையால் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. எனவே இதுபோன்ற பிரச்சினைகளையும் ஸ்டாலின் சரிசெய்து வருகிறாராம்.''”
"தேர்தல் தொடர்பாக எடப்பாடி ஸ்பெஷல் டார்கெட்டெல்லாம் வைத்திருக்கிறாரே?''”
"இந்தத் தேர்தலில் 200 கோடி ரூபாய் வரை வாரி இறைக்க, டார்கெட் வைத்திருக்கிறாராம் எடப்பாடி. கொஞ்சம் அடித்து ஆடினால் 8 தொகுதிகளில் கரையேற முடியும் என்று அவர் நம்புகிறாராம். குறிப்பாக கோவை, திருப்பூர், ஈரோடு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், நாமக்கல், திருச்சி, நீலகிரி ஆகிய தொகுதிகளில் இலைக்கு வாய்ப்பு இருப்பதாக அவர் கணக்குப்போட்டு வைத்திருக்கிறாராம். அதிலும், குறிப்பாக கோவையில் போட்டியிடும் பா.ஜ.க. நபர் டெபாஸிட் கூட வாங்கக்கூடாது என்று தங்கள் கட்சி நிர்வாகிகளிடம் அறிவுறுத்தியிருக்கிறாராம் எடப்பாடி. அதேபோல் ராமநாதபுரத்தில் களமிறங்கிய, ஓ.பி.எஸ்.ஸும், தேனியில் களமிறங்கிய டி.டி.வி. தினகரனும் ஜெயித்துவிடக்கூடாது என்பதற்காக அங்குள்ள நிர்வாகிகளை அழைத்துப் பேசியிருக்கிறாராம் எடப்பாடி. அவர்களிடம், அங்கே தி.மு.க. ஜெயிப்பதற்கான உள்ளடி வேலைகளில் நீங்கள் இறங்கினாலும் பரவா யில்லை, எக்காரணம் கொண்டும் அங்கே அந்த ரெண்டுபேரும் ஜெயித்துவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று முடுக்கிவிட்டிருக்கிறாராம்.''”
"அண்மைக்காலமாக காங்கிரஸ் தரப்பில் சசிகாந்த் செந்திலின் பெயர் அதிகம் அடிபடுகிறதே?''”
"மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளராக வழக்கறிஞர் சுதா நிறுத்தப்பட்டிருக்கிறார். இவர் ராகுல்காந்தியின் நடைபயணம் முழுவதிலும் விடாமல் கலந்துகொண்டவராம். இவரைப் பரித்துரைத்திருப்பது ராகுலுக்கு நெருக்கமான வரும் திருவள்ளூர் காங்கிரஸ் வேட்பாளருமான சசிகாந்த் செந்தில்தானாம். இந்த சசிகாந்த் சிறந்த புள்ளியியல் நிபுணர் என்கிறார்கள். இவர் போட்டுத் தந்த ஃபார்முலா, கர்நாடகா வில் எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்ததாம். அதேபோல் ராஜஸ்தானில் இவர் வகுத்துக் கொடுத்த ஃபார்முலாவில், அங்குள்ள சிலரைச் சுட்டிக்காட்டி, அவர்களுக்கு சீட் கொடுக்கவேண்டாம் என்று குறிப்பிட்டிருந்தாராம். அதை மீறி சீட் கொடுத்த தால்தான் அங்கே காங்கிரஸ் வெற்றிபெறாமல் போனதாம். இப்படிப்பட்ட சசிகாந்த் சொன்னதால்தான் நம்பிக்கையோடு சுதாவின் பெயரை மயிலாடுதுறைக்கு டிக் அடித்தாராம் ராகுல். காங்கிரஸில் இந்த சசிகாந்த் செந்திலின் வளர்ச்சியை விரும்பாத ப.சி. தரப்பு, இவருக்கு எதிராக சிலமுறை காய் நகர்த்தியும், சசிகாந்தை ஒன்றும் செய்ய முடியவில்லையாம். காங்கிரஸின் செயல் தலைவராகவே வந்திருக்க வேண்டியவர் சசிகாந்த் என்று சத்தியமூர்த்திபவன் தரப்பே சொல்கிறது.''”
"சரிப்பா, கோவை தொகுதி பா.ஜ.க.வினரிடம் சலசலப்பு அதிகமா தெரியுதே?''”
"அங்கே போட்டியிடும் அக்கட்சியின் பிரமுகர், ஓட்டுக்குப் பணம் கொடுக்க மாட்டேன் என உதார் விட்டுக் கொண்டிருக்கிறாராம். தாமரைத் தொண்டர்களோ, ஓட்டுக்கு பணம் கொடுக்கிற விசயமெல்லாம் இருக்கட்டும், முதல்ல ஓடியாடி வேலை பார்க்கிற எங்களுக்கு தேர்தல் செலவுக்கான பணத்தைக் கொடுங்கள். இல்லையேல் நாங்கள் நடையைக் கட்டுகிறோம் என்று சம்பந்தப்பட்ட நபரிடமே முகத்தில் அடித்தாற் போல் சொல்லிவிட்டார்களாம். இதைக்கேட்டு அந்த நபர், திகைத்துப் போய்விட்டாராம். அதேசமயம் அங்கே களமிறங்கியுள்ள தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் தேர்தல் செலவில் ஏகத்துக்கும் தாராளம் காட்டு கின்றனவாம். இதற்கிடையே அந்த பா.ஜ.க. நபர், தேர்தலை சாக்காக்கி பெரிய பெரிய தொழி லதிபர்களிடம் ஏகத்துக்கும் ஒரு பக்கம் வசூலித்து வந்தாலும், கட்சி மேலிடத்தில், நான் பணம் இல்லாமல் திண்டாடுகிறேன். முதற்கட்டமாக "50 சி'யையாவது அனுப்பி வையுங்கள் என்று அவர்களைப் பிடித்துத் தொங்குகிறாராம். மேலும் தி.மு.க. மேலிடம் முக்கிய புள்ளிகள்ட்ட பேசி சரிபண்ணிட்டேன். அதனால அவங்க அடக்கி வாசிப்பாங்க, நாம ஈஸியா ஜெயிச்சிரலாம் என சொல்லிவருகிறாராம். அதற்குத் தகுந்தாற்போல தி.மு.க.வும் தேர்தல் வேலையில இன்னும் வேகம் காட்டல.''”
"தென்சென்னையிலும் அவர்கள் தரப்பில் இதேபோன்ற குற்றச்சாட்டுகள் வருதே?''
"ஆமாங்க தலைவரே, தென்சென்னை தி.மு.க. வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை எதிர்த்து, முன்னாள் ஆளுநராகிவிட்ட, தமிழிசை சௌந் தர்ராஜன் களமிறங்கியிருக் கிறார். அவர் திருவான்மியூர் ராமச்சந்திரா கன்வென்சன் ஹாலில் நடந்த, கட்சியின் செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசும்போது, தேர்தலுக்கு அதிக நாட்கள் இல்லை. நம்முடைய வெற்றி நரேந்திர மோடியின் வெற்றிக்குச் சமம். அதற்காக கண் துஞ்சாமல் காசு பணம் எதிர்பார்க்காமல் வேலை பாருங்கள். டீ, காபி செலவுகூட காசு கேட்காமல், நீங்கள் அர்ப்பணிப்புடன் தேர்தல் பணி செய்ய வேண்டும்’என்றெல்லாம் சொல்ல... "டீ, காபி செலவுக்கே காசு தரமாட்டீங்களா?' என அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியடைந்துவிட்டார்களாம்.''”
"பிறகு?''”
"அந்தக் கூட்டத்திலேயே மைக் பிடித்த பா.ஜ.க. மாநிலச் செயலாளரும் தேர்தல் இணை ஒருங்கிணைப்பாளருமான கராத்தே தியாகராஜன், தமிழிசைக்கு அறிவுறுத்தும்படி பேசியிருக்கார். ’"காசு பணம் இல்லாமல் தேர்தல் வேலை பார்த்ததெல்லாம் அந்த காலம். அந்த நாட்கள் எல்லாம் மலை யேறிவிட்டன. நாம் வெற்றிக் கனியைப் பறிக்க வேண்டுமானால் நிர்வாகிகளுக்கு பூஸ்ட் தேவைப் படுகிறது. பூஸ்ட் இல்லாமல் கட்சியினரிடம் வேலை வாங்குவது கஷ்டம். அதனால் அக்கா தமிழிசை, மேலிட செல்வாக்கைப் பயன்படுத்தி, வெற்றிக் கனியைப் பறிப்பதற்குத் தேவையான வெப்பன்ஸை வாங்கிக் கொடுக்கவேண்டும்'’என்று பணம் குறித்து குறியீடாகச் சொல்ல... அரங்கமே அதிரும்படி கைத்தட்டல்கள் எழுந்திருக்கு. இதைக்கேட்டு நிலைமையைப் புரிந்துகொண்ட தமிழிசை, "சரி... சரி' என்று தொண்டர்களைப் பார்த்து சிரித்தபடியே கையசைத்தாராம். இப்படிப்பட்ட கலாட்டா காட்சிகள் அங்கே அரங்கேறி வருகின்றன.''”
"நாடார் சமூகத்தினர் நடிகர் சரத் மீது ஆதங்கத்தில் இருக்கிறார்களே?''”
"பொதுவாக நாடார் சமூகத்தினர் நடிகர் சரத்குமாரை ஹீவோவாகத்தான் பார்த்து வருகிறார்கள். அப்படிப்பட்டவர் விருதுநகர் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் களமிறங்கிய தன் மனைவி நடிகை ராதிகாவுக்காக, எல்லோ ரிடமும் வளைந்து நெளிந்து குழைந்து வருவதை அவர்கள் ரசிக்க வில்லையாம். எங்க நாட்டாமை இப்ப சப்பாணியா மாறிட் டாரேன்னு அவர்கள் ஆதங்கப்படுகிறார்களாம். அவர் தன் கெட்டப்பை கம்பீரமாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்களாம். அதேபோல ராதிகா, வெயிலுக்குப் பயந்து காலையில 5 மணிக்கே பிரச்சாரத்த ஆரம்பிச்சு, சிறிதுநேரம் மட்டுமே பிரச்சாரம் பண்ணிட்டு, ஹெஸ்ட்கவுசுக்கு ரெஸ்ட் எடுக்கப் போயிடுறாராம். இங்கே அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. சார்பில் களத்தில் குதித்திருக்கும் விஜயகாந்தின் மகனான விஜய் பிரபாகரன், தன் தந்தை தொடர்பான அனு தாபத்தை ஓட்டாக மாற்றிவிடலாம் என்ற எண்ணத்தில் பரபரப்பாக ஓடியாடிக்கொண்டி ருக்கிறார். இவர்களுக்கிடையில் காங்கிரஸில் நிற்கும் சிட்டிங் எம்.பி. மாணிக்கம் தாக்கூர், தன்னைச் சுற்றிலும் அதிருப்தி அலை வீசிக் கொண்டிருப்பதால், அதை எப்படி சமாளிப்பது என்று போராடிக்கொண்டிருக்கிறாராம். இவர்களின் முட்டல் மோதலால் விருதுநகர் ஏகத்துக்கும் பரபரக்கிறது.''”
"பா.ஜ.க. மீது பிராமண சமூகத்தினருக்கும் அதிருப்தி என்கிறார்களே?''”
"தங்கள் ஒட்டுமொத்த சமூகமும் பா.ஜ.க.வை ஆதரித்துவரும் நிலையிலும், தங்கள் சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்குக் கூட பா.ஜ.க. சீட் தரவில்லை என்கிற ஆதங்கம் பிராமணர்களுக்கு அதிகம் இருக்கிறதாம். அதனால் அவர்கள் பா.ஜ.க. மீது வெறுப்பில் இருக்கிறார்களாம். இந்த சமூகத்தைச் சேர்ந்தவரான ஹெச்.ராஜா தென்சென்னையில் சீட் கேட்டும், ’உளறுவாயருக்கு பதவி ஆசையா?’ என்றபடி அவரை பா.ஜ.க.வின் மாநிலப் பொறுப் பில் இருக்கும் நபர் நிராகரித்துவிட்டாராம். இந்தநிலையில் தென் சென்னையை தமிழிசை கேட்ச் பண்ணிவிட்டார். இதேபோல் தங்கள் சமூகத்திற்கு தேர்தலில் பா.ஜ.க. தலைமை, சிறிதும் பிரதிநிதித்துவம் தரவில்லை என்கிற ஆதங்கம் கொங்கு பகுதியில் இருக்கும் நாயுடு சமூகத்தினருக்கும் இருக்கிறதாம். ஓட்டுக் கேட்டு பா.ஜ.க.வினர் வரும்போது எங்க கச்சேரியை நாங்க வச்சிக்கிறோம் என்று அவர்கள் கோபத்தில் குமுறுகிறார்களாம்.''”
"தேர்தல் நேரத்திலும் ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகள், இங்கே எங்கு பார்த்தாலும் சுற்றித் திரிகிறதே?''”
"வருமானவரித்துறை, அமலாக்கத்துறை, வருவாய் புலனாய்வுத்துறை ஆகிய துறைகளுக்கு மோடியும் அமித்ஷாவும் ஒரு அசைன் மெண்ட்டைக் கொடுத்திருக்கிறார்களாம். அதாவது, தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் தரப்பில் நடக்கும் பணப் பரிவத்தனைகள் மற்றும் தேர்தல் செலவுகளை கண்காணிப்பதோடு, இவர்கள் யாரேனும் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்தால், அதையும் வீடியோ ஆதாரத்தோடு பதிவு செய்யவேண்டும் என்பதுதான் அந்த அசைன்மென்ட்டாம். அதேபோல் லிமிட்டுக்கு மேல் தேர்தல் செலவு செய்கிறார்களா என்பதையும் அவர்கள் கவனிக்க வேண்டுமாம். இப்படி எதிர்க்கட்சிகளை கண்காணிக்க மட்டுமே இந்த விசாரணை அமைப்புகளை அவர்கள் களமிறக்கியதால், கொளுத்தும் வெயிலிலும் இந்த அமைப்புகளின் அதிகாரிகள் பரிதாபமாக அலைந்து திரிந்துகொண்டிருக்கிறார்கள். லிமிட்டுக்கு மேல் செலவு செய்யும் எதிர்க்கட்சி வேட்பாளர்கள் பற்றிய ஆதாரம் கிடைத்தால் அவர்களைத் தகுதி நீக்கம் செய்வதற்கு முயலவேண்டும் என்பதும் அந்த பிரகஸ்பதிகள் போட்டு வைத்திருக்கும் திட்டமாம்.''”
"தனக்கு எதிராக அமலாக்கத்துறையினர் போட்டுள்ள வழக்கிலிருந்து விடுவிக்கக்கோரி செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் சமீபத்தில் நிறைவடைந்துவிட்டதாமே''
"ஆமாம்பா... இந்த வழக்கில், சென்னை முதல் அமர்வு நீதிமன்றம் 28-ந் தேதி தீர்ப்பு வழங்க முடிவு செய்திருந்த நிலையில், மீண்டும் வாதங்களை முன்வைக்க அனுமதிக்கக் கோரி அவசர மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார் செந்தில் பாலாஜி. இதனால் திட்டமிடப்பட்ட தேதியில் தீர்ப்பு வழங்கப்படுமா? என்கிற பரபரப்பு நீதிமன்ற வளாகத்தைச் சூழ்ந்திருந்தது. இது ஒருபுறமிருக்க, கிட்டத்தட்ட 9 மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் செந்தில்பாலாஜியின் ஜாமீன் மனு தொடர்ச்சியாக தள்ளுபடி செய்யப்பட்டே வந்திருக்கும் நிலையில், சமீபத்தில் ஜாமீன் கேட்டு உச்சநீதிமன்றத்தில் செந்தில்பாலாஜி போட்டுள்ள மனு மீதான விசாரணை ஏப்ரல் 1-ந் தேதி வருகிறது. இதில், தனக்கு சாதகமான தீர்ப்புக் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் செந்தில் பாலாஜி.''
"தனக்கெதிராக இப்படியெல்லாம் பண்ணுவாங்கன்னு நினைக்கலைன்னு ஓ.பி.எஸ். நொந்துபோயிருக்காராமே?''
"ஆமா தலைவரே, பா.ஜ.க. கூட்டணி சார்பாக ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சை சின்னத்தில் நேரடியாகக் களமிறங்கியுள்ள ஓ.பி.எஸ்.ஸை வெற்றிபெற விடக்கூடாதுன்னு எடப்பாடி கட் அண்ட் ரைட்டா சொல்லிட்டாராம். அதையடுத்து, ஓ.பி.எஸ். வேட்புமனு தாக்கல் செய்ததுமே, தெற்குகாட்டூரைச் சேர்ந்த ஒய்யாரம் மகன் பன்னீர்செல்வம், திருமங்கலம் தாலுகாவைச் சேர்ந்த ஒச்சாத்தேவர் மகன் பன்னீர்செல்வம், சோலை அழகுபுரத்தைச் சேர்ந்த ஒய்யாத்தேவர் மகன் பன்னீர்செல்வம் என ஓ.பி.எஸ். பெயரிலுள்ள 5 டம்மி நபர்கள் சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்து ஓ.பி.எஸ்.ஸை அதிரவச்சிருக்காங்க. அதோட, ஓ.பி.எஸ். கேட்டிருந்த வாளி, பலாப்பழம், திராட்சைப்பழம் சின்னங்களில் ஒன்றையே தங்களுக்கும் ஒதுக்குமாறு தேர்தல் அலுவலரிடம் கோரிக்கை வைத்து, ஓ.பி.எஸ்.ஸை தலை கிறுகிறுக்க வச்சிருக்காங்க. இதுல ஒரு டம்மி ஓ.பி.எஸ்.ஸோட, மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. ஐ.டி. விங் மா.செ. சிங்கராஜபாண்டியன் இருக்கிற படம் வெளியாக, டம்மிகளின் பின்னணியில் மாஜி ஆர்.பி.உதயகுமார் இருப்பது வெட்ட வெளிச்ச மாகியிருக்கு. "பணம் தர்றேன்னு சொன்னாங்க.. அதனால மனு போட்டோம்'னு ஒப்புதல் வாக்குமூலமே கொடுத்திருக்காங்க.''
"தூத்துக்குடி அ.தி.மு.க. வேட்பாளரைப் பற்றி கேள்விப்பட்டு எடப்பாடி ஷாக் ஆயிட்டாராமே?''
"ஆமாங்க தலைவரே... தூத்துக்குடியில் தி.மு.க. சார்பில் இந்தமுறையும் களமிறங்கியிருக்கும் கனிமொழியை எதிர்த்து, தங்கள் தரப்பு வேட் பாளரான சிவசாமிவேலுமணியை நிறுத்தியிருக்கிறார் எடப்பாடி. இவர், முன்னாள் அமைச்சர் சண்முக நாதனின் அக்காள் மகனாம். சென்னை வடபழனியில் ’புத்தூர் கட்டு’ என்கிற வைத்திய சாலையை நடத்திவருகிறார். இது தொடர்பாக ஏகப்பட்ட கிரிமினல் புகார்கள் இருப்பதாக, கட்சி நிர்வாகிகள் எடப்பாடிக்கு புகார்களை அனுப்ப, அதைப் பார்த்து பிராக்சர் ஆன மாதிரி ஆகிவிட்டாராம் எடப்பாடி.''”
"நானும் எனக்கு வந்த ஒரு தகவலை பகிர்ந்துகொள்கிறேன். அமைச்சர் நேரு இக்கட்டான சூழ்நிலையில இருக்குறாரு. ஒருபக்கம் பெரம்பலூரில் தன் மகனை ஜெயிக்க வைக்கணும், மறுபுறம் திருச்சியில் வைகோ மகனை ஜெயிக்க வைக்கணும். மேலும் ம.தி.மு.க.வுக்கு சின்னம் வேற பிரச்சினையா இருக்கு. திருச்சி தி.மு.க.வினர் பெரும்பாலானோர், பெரம்பலூர் நேரு மகனுக்காக தேர்தல் வேலைக்குச் சென்றுவிட்டார்கள். இதையெல்லாம் சமாளிச்சி, நேரு இருவரையும் ஜெயிக்க வச்சிடுவாரு என உடன்பிறப்புகளும், ம.தி.மு.க.வினரும் நம்பிக்கையுடன் இருக்கிறார்களாம்.''