கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதிக்குட் பட்ட தோவாளை ஊராட்சி ஒன்றியத்தின் பீமநகரி ஊராட்சிக்குட் பட்ட பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதிகளைப் புறக்கணித்து வருவதாக ஊராட்சி மன்றத் தலைவி அ.தி.மு.க. சஜிதா மீது அந்த மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சமீபத்தில் ஆதிதிராவிடர் குடியிருப்புத் திட்டத்தின்கீழ் 27 லட்சம் ரூபாய் அந்த ஊராட்சிக்காக அரசு ஒதுக்கிய நிதியில் ஒரு பைசாகூட ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கும் பகுதியில் செலவுசெய்யாமல், அனைத்து நிதியையும் மற்ற ஜாதியினர் வசிக்கும் பகுதிகளில் செலவு செய்திருப்பதுதான் குற்றச்சாட்டுக்கு காரணம்.
இது குறித்து நம்மிடம் பேசிய பீமநகரி தி.மு.க. கிளைச்செயலாளர் பிரைட்... “"பீமநகரி ஊராட்சியில் ஆதி திராவிடர் மக்கள் வசிக்கும் பகுதியில் அடிப்படை வசதிகள் கேட்டு பல ஆண்டுகளாக மக்கள் போராடுகின்றனர். சட்டமன்ற தேர்தலானாலும் உள்ளாட்சி மன்ற தேர்தலானாலும் எங்க பகுதி மக்களைத் தேடிவந்து எல்லா பிரச்
கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதிக்குட் பட்ட தோவாளை ஊராட்சி ஒன்றியத்தின் பீமநகரி ஊராட்சிக்குட் பட்ட பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதிகளைப் புறக்கணித்து வருவதாக ஊராட்சி மன்றத் தலைவி அ.தி.மு.க. சஜிதா மீது அந்த மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சமீபத்தில் ஆதிதிராவிடர் குடியிருப்புத் திட்டத்தின்கீழ் 27 லட்சம் ரூபாய் அந்த ஊராட்சிக்காக அரசு ஒதுக்கிய நிதியில் ஒரு பைசாகூட ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கும் பகுதியில் செலவுசெய்யாமல், அனைத்து நிதியையும் மற்ற ஜாதியினர் வசிக்கும் பகுதிகளில் செலவு செய்திருப்பதுதான் குற்றச்சாட்டுக்கு காரணம்.
இது குறித்து நம்மிடம் பேசிய பீமநகரி தி.மு.க. கிளைச்செயலாளர் பிரைட்... “"பீமநகரி ஊராட்சியில் ஆதி திராவிடர் மக்கள் வசிக்கும் பகுதியில் அடிப்படை வசதிகள் கேட்டு பல ஆண்டுகளாக மக்கள் போராடுகின்றனர். சட்டமன்ற தேர்தலானாலும் உள்ளாட்சி மன்ற தேர்தலானாலும் எங்க பகுதி மக்களைத் தேடிவந்து எல்லா பிரச் சினைகளையும் தீர்த்துவைப்போம்னு சத்தியம் செய்து ஓட்டும் வாங்கிட்டு அதன்பிறகு அந்தப் பக்கம் வந்து எட்டிக்கூட பார்க்கமாட்டார்கள்.
அரசுக்கும் கலெக்டருக்கும் அடிப் படை வசதியை செய்துதரக் கேட்டு பல மனுக்களை அனுப்பியிருக்கிறோம். கிராமசபைக் கூட்டத்தில்கூட மனு கொடுத்திருக்கிறோம். இந்நிலையில் மாநில அரசு இந்த ஊராட்சிக்கு ஆதிதிராவிடர் குடியிருப்புத் திட்டத்தின்கீழ் 27 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியது. எங்கள் ஊராட்சிக்கு இந்தத் திட்டத்தின்கீழ் நிதி கிடைப்பது இதுதான் முதல் முறை. இந்த நிதி முழுவதையும் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் அடிப்படை வசதிகளுக்கு செலவு செய்யணும்.
ஆனால் ஊராட்சி மன்றத் தலைவர் சஜிதாவும் அவருடைய கணவர் சுப்பிரமணியனும் அந்த நிதியை அன்னைநகரில் தனி நபர் போட்ட ரியல் எஸ்டேட் பிளாட்டில் வசிப்பவர்களுக்கு ரூ.9.50 லட்சத்துக்கு ரோடு போட ஒதுக்கியிருக் கிறார்கள். அதேபோல் வெள்ளமடம் பிள்ளைமார் சமுதாய சுடுகாடுக்கு ரூ.3.50 லட்சம் குடிநீர் இணைப்புக்கு ஒதுக்கியுள்ளார்கள்.
அன்னை நகரில் குடிநீர் இணைப்புக்கு ரூ.4 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிட மக்கள் வசிக்கிற வேம்பத்தூர் காலனியில் குண்டும் குழியுமான சாலையை சீரமைத்து காங்கிரீட் ரோடு அல்லது இன்டர்லாக் பதிய கேட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. தெற்குத் தெருவுக்கு மக்கள் செல்லக்கூடிய 70 ஆண்டுக்கு மேலான பீமநகரி பாலம் உடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது.
கரையான்குழியில் மக்கள் காலகாலமாக பயன்படுத்தி வந்த நங்குளம், புதர் மண்டி தூர்வாராமல் உள்ளது. அந்த குளத்தைக்கூட நிதி ஒதுக்கி தூர்வார நடவடிக்கை எடுக்கவில்லை. பீமநகர் காலனி, ராஜீவ் நகர் காலனியில் கழிவு நீர் ஓடை சரிவர இல்லாததால் துர்நாற்றமும் கொசுத்தொல்லையும் உள்ளது. அதைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கவில்லை.
ஆதிதிராவிடர்கள் சுடுகாடு மேற்கூரை இல் லாமல் உள்ளது. மழை வந்தால் அதில் தற்காலிக செட் போட்டுதான் இறந்தவர்களை அடக்கம் செய்யும் நிலை. ஆற்றில் இறங்கிக் குளிப்பதற்கு ஒழுங்கான படித்துறை இல்லை. இப்படி ஆதிதிராவிடர் பகுதி யில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றாமல் மற்ற சமுதாயத்தினருக்கு அந்த நிதியைப் பயன்படுத்தியவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.
மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர் கதிர்வேல், "ஆதிதிராவிடர் குடியிருப்பு திட்டத்தின்கீழ் அரசு ஒதுக்கிய நிதிக்கு ஊராட்சி தலைவர் அதற்கான பணிகள் குறித்து ஊராட்சி ஒன்றிய அதிகாரி களுக்கு பரிந்துரை செய்வர். அதிகாரிகள் நேரிடையாக அந்த பகுதிகளுக்கு வந்து அங்கு ஆதிதிராவிடர் மக்கள்தான் வசிக்கிறார்களா?… ஊராட்சித் தலைவர் கொடுத்திருக்கும் பணி அங்கு தேவைப்படுகிறதா என உறுதிசெய்த பிறகே அந்த பணிக்கான உத்தரவை வழங்குவார்கள்.
இங்கு அதிகாரிகள் வந்து பார்வையிடாமல் ஊராட்சி மன்றத் தலைவருக்கு உடந்தையாக இருந்து அந்த நிதியை மற்ற சமுதாய மக்கள் வசிக்கும் பகுதிக்கு ஒதுக்கியிருப்பது குறித்து கலெக்டரிடம் புகார்கொடுத்திருக்கிறேன். அவர் நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளார்''” என்றார்.
ஊராட்சி மன்ற தலைவர் சஜிதா வோ,“"ஆதிதிராவிடர் குடியிருப்பு திட்டத்தின்கீழ் நானே கேட்டுவாங்கிய அந்த நிதியை அந்த சமுதாய மக்கள் வசிக்கிற பகுதியில்தான் ஒதுக்கி பணிகளை செய்கிறோம். அன்னை நகருக்கு சாலை போடவில்லை. அன்னை நகர் வழியாக அண்ணா நகருக்கு செல்லும் சாலைதான் அது. அண்ணா நகரில் 25 சதவிகித மக்கள் ஆதிதிராவிடர்தான்.
அண்ணா நகர் ஆதிதிராவிடர் மக்களுக்கு வேண்டிதான், குடிநீருக்கு அங்கு நீர்த்தேக்க தொட்டி கட்ட இடம் இல்லாததால்தான் அன்னை நகரில் நீர்த்தேக்கத் தொட்டி கட்டி அங்கிருந்து அந்த மக்களுக்கு தண்ணீர் கொண்டு செல்வோம். ஆதிதிராவிடர் இடுகாட்டுக்கு தான் தண்ணீர் கொண்டுசெல்கிறோம். அதை பக்கத்திலிருக்கும் மற்ற சமுதாய மக்களும் பயன்படுத்தும்போது என்ன சொல்ல முடியும்''’எனச் சமாளித்தார்.