"ஹலோ தலைவரே... நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட தென் மாவட்டங்களில், ஒரு மூவர் கூட்டணி நிவாரணப் பணிகளில் கலக்கிவருகிறதே?''”

"ஆமாங்க தலைவரே, கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்ட பகுதிகளில் உதயநிதியும் இயக்குநர் மாரிசெல்வராஜும், இவர் களுடன் காவல்துறை கூடுதல் டி.ஜி.பி. அருணும் வரிந்துகட்டி நின்று, அப்பகுதி மக்கள் மத்தியில் உயர்ந்து நிற்கிறார்கள். இந்த மூவர் கூட்டணி அங்கே பல பகுதிகளிலும் களமிறங்கி ஏராளமானவர் களை வெள்ளப் பகுதியில் இருந்து மீட்டு வருகிறார்கள். இவர்களின் சுறுசுறுப்பிற்கும் வேகத்திற்கும் அதிகாரிகள் தரப்பே ஈடுகொடுக்க முடியாமல் திகைக்கிறதாம். வரலாறு காணாத பாதிப்பை அடைந்திருக்கும் இந்த தென் மாவட்டப் பகுதிகளில் 21ஆம் தேதி காலைவரை ஏறத்தாழ 35 பேர்வரை பேரிடரில் உயிரிழந்திருப்பது அரசுத் தரப்பையே அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.''”

"தென்மாவட்டங்களும் வெள்ளக் காடான நிலையில் முதல்வர் ஸ்டாலின், கூடுதல் நிவாரண நிதி கேட்க டெல்லி சென்றாரே?''”

rang

Advertisment

"மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களின் சீரமைப்புப் பணிகளுக்கும், நிவாரணப் பணிகளுக்கும் தற்காலிக நிவாரணத் தொகையாக ரூபாய் 7,033 கோடியும், நிரந்தர நிவாரணத் தொகையாக ரூபாய் 12,659 கோடியும் தமிழகத்துக்கு வழங்கவேண்டும் என்று, ஏற்கெனவே இங்கு வந்திருந்த மத்திய குழுவிடம் கோரிக்கை வைத்திருந்தார் ஸ்டாலின். இந்த நிலையில் தென்மாவட்டங்களிலும் பேரதிர்ச்சி தரும் வகையில் கனமழையால் பெரும் பாதிப்பு ஏற்பட, நிலைமையை சமாளிக்க நேரடியாக பிரதமர் மோடியை சந்தித்து நிதி கேட்கும் முடிவோடு டெல்லிக்குப் பறந்தார் ஸ்டாலின்.''

"திட்டமிட்டபடி மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து தனது கோரிக்கையை வைத்தார். அப்போது தமிழகப் பாதிப்புகளை, தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். இதையெல்லாம் கேட்டுக்கொண்ட மோடி, பாசிட்டிவாக எந்த பதிலையும் தராமல், பொத்தாம் பொதுவாக, கவலைவேண்டாம் என்று மட்டும் சொல்லியனுப்பி இருக்கிறார். ஸ்டாலின் எதிர்பார்ப்பது போல, முழுமையாக உதவிக்கரம் நீட்டத் தயா ராக இல்லாதது போலவே டெல்லி காட்டிக்கொள்கிறது. இதனால் நிலைமையை எப்படி சமாளிப்பது என்கிற கவலையோடே டெல்லியில் இருந்து திரும்பியிருக்கிறார் ஸ்டாலின்.''”

"தென் மாவட்ட வெள்ளச் சேதத்தைப் பார்வையிட அனுப்பப்பட்டிருக்கும் மத்திய குழுவில், ஒரு முக்கிய அதிகாரியை டெல்லி நீக்கியிருக்கிறதே?''”

Advertisment

rang

"உண்மைதாங்க தலைவரே, கடந்த வாரம் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டப் பாதிப்பு களைப் பார்வையிட மத்தியகுழு வந்தபோது, அதற்கு குணால் சத்யார்த் என்ற அதிகாரிதான் தலைமை தாங்கினார். சேதத்தையும் நிவாரணப் பணிகளையும் பார்வையிட்டபின், இங்கே தி.மு.க. அரசு மேற்கொண்ட நிவாரணப் பணிகளை மனம் திறந்து பாராட்டினார். இந்தப் பாராட்டை டெல்லி ரசிக்காததால், ஒன்றிய உள்துறை அமைச்சகம் அவரை கண்டித்ததாம். இந்த நிலையில், தென்மாவட்ட வெள்ள சேதப்பகுதிகளைப் பார்வையிட மத்தியக்குழு அனுப்பட்ட போது, குணால் சத்யார்த்தை டெல்லி சேர்க்கவில்லை. மேலும், தென்மாவட் டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட குழுவினருக்கு உதவியாக அவர்களுடன் தமிழக அதிகாரிகள் டீம் செல்லத் தயாராக இருந்தனர். ஆனால் டெல்லியின் உத்தரவின் படி, அவர்களையும் தவிர்த்துவிட்டு அந்தக்குழு, சேதப்பகுதிகளைப் பார்வையிட்டிருக்கிறது. டெல்லியின் இந்த போக்கு அதிகாரிகள் மத்தியில் எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறது.''”

rr

"சிறந்த அதிகாரிகளை ஓரம்கட்டும் போக்கை புதுவையிலும் டெல்லி கடைப் பிடித்திருக்கிறதே?''”

"ஆமாங்க தலைவரே, புதுவை மாநிலத்தில் ஊரக வளர்ச்சித்துறை செயலாளராக இருப்பவர் சத்தியமூர்த்தி ஐ.எஃப்.எஸ். நேர்மைக்குப் பெயர்போன இவர், புதுவை அரசின் 100 நாள் வேலைத் திட்டத்தை மிகச் சிறப்பாக நடைமுறைப்படுத்தி வந்தார். இவர், இந்தத் திட்டத்தில் ஆளுங்கட்சி அரசியல்வாதி களின் தில்லுமுல்லுகளுக்கு இடம்கொடுக்காத தால், அங்கிருக்கும் பா.ஜ.க. புள்ளிகள் டெல்லியைத் தொடர்புகொண்டு, அவரை மாற்ற வேண்டும் என்று டெல்லிக்கு பிரஷர் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து சத்தியமூர்த்தி அந்தமானுக்கு மாற்றப்பட்டிருக்கிறார். இதையறிந்து அதிர்ச்சியான பொதுமக்கள், சத்தியமூர்த்தியின் மாற்றலை வாபஸ் பெற வேண்டும் என்று கொதிப்போடு போராடி வருகின்றனர். இதைக்கண்டு இப்போது டெல்லியே திகைத்துப்போயிருக்கிறது.''”

"பரபரப்பான சூழலில் எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா கூட்டணி’கூடியிருக்கே?''”

rr

"ஆமாங்க தலைவரே, இந்தியா கூட்டணியின் 4ஆவது ஆலோசனைக் கூட்டம் 19ஆம் தேதி டெல்லியில் நடந்தது. சோனியா காந்தி, ராகுல்காந்தி, மு.க.ஸ்டாலின், டி.ஆர்.பாலு, நிதிஷ்குமார், லல்லுபிரசாத் யாதவ், சரத்பவார், மம்தா, அரவிந்த் கெஜ்ரிவால் உள்பட 28 கட்சிகளின் முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில், தங்கள் தரப்பின் பிரதமர் வேட்பாளர் உள்ளிட்ட முக்கிய முடிவுகளை எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்க்கட்சி எம்.பி.க்களின் சஸ்பெண்டை எதிர்த்து 24 ஆம் தேதி தேசிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்கிற முடிவைத் தவிர பெரிதாக எந்த முடிவும் இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படாததால், கூட்டம் உப்புச் சப்பில்லாமல் முடிந்திருக்கிறது. அதேசமயம், பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை நிறுத்தலாம் என்று மம்தா சொல்ல, ராகுல் உட்பட பலபேர் இதனை ரசிக்கவில்லை. குறிப்பாக, மோடி யை எதிர்த்து பட்டியிலினத்தைச் சேர்ந்த ஒருவரை நிறுத் தினால், அதனை எதிர்கொள்ள பா.ஜ.க. கஷ்டப் படும் என்ற நோக்கத்திலும், பிரதமர் வேட்பாளராக ராகுல் பெயரை காங்கிரஸ் முன்னிறுத்தி விடக்கூடாது என்கிற உள்ளடி திட்டத்திலும்தான் கார்கே பெயரை மம்தா முன்மொழிந்தார். ஆனால் இதற்குப் போதிய ஆதரவு கிடைக்கவில்லை. அதனால் தேர்தல் வெற்றிக்குப் பிறகு பிரதமர் குறித்து முடிவெடுக்கலாம் என்று கார்கேவே அறிவித்துவிட்டார்.''”

"மணல் புள்ளிகளின் ஆட்டம் மீண்டும் தொடங்கிவிட்டதே?''”

rr"அமலாக்கத்துறையின் அதிரடி ஆக்ஷன்களுக்குப் பின்னர் ஓடி ஒளிந்திருந்த மணல் புள்ளிகள், தற்போது மீண்டும், பழைய பாணியில் களமிறங்கி ’விளையாட’ ஆரம்பித்திருக்கிறார்கள். குறிப்பாக பிரபல மணல் புள்ளிகளில் ஒருவரான கரிகாலன் தரப்பு, அதிகார மட்டங்களின் கண்ணசைவைப் பெற்று இப்போது தொழிலில் பரபரப்பு காட்டத் தொடங்கிவிட்டதாம். தற்போது கனமழையால் தமிழகத்தின் பல பகுதிகளிலும் ஏற்பட்டிருக்கும் வெள்ளப்பெருக்கால், நிறைய மணல் திட்டுக்கள் அங்கங்கே உருவாகி இருக்கிறதாம். இந்த மணல் கொஞ்சம் அழுக்கடைந்தாற் போல் இருப்பதால், இதை அள்ளியெடுத்து சுத்தம் செய்து, ஒரு யூனிட் ஆயிரம் ரூபாய்க்கும் குறையாமல் விலை வைத்து, இவர் தரப்பு பரபரப்பாக விற்று வருகிறதாம். மணலைத் தவிர சவுடு மண், எம்.சாண்ட், குவாரிக் கற்கள் ஆகியவற்றிலும் கரிகாலன் தரப்பு மீண்டும் புகுந்து விளையாடுகிறது என்கிறார்கள். மணல் புள்ளிகளைக் கைது செய்யப்போவது போல் இதுநாள் வரை, தீவிரமாகத் துரத்தி வந்த அமலாக்கத்துறை தற்போது இதில் அமைதியாகிவிட, மணல் புள்ளிகள் மீண்டும் அடித்து ஆட ஆரம்பித்திருப்பதை இயற்கை ஆர்வலர்கள் கவலையோடு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.''”

"“நானும் ஒரு தகவலைப் பகிர்ந்துக் கறேன். அண்ணாமலையின் செக்ஸ் வீடியோ என்கிற டைட்டிலில் தி.மு.க. தரப்பு டுவிட்டரில் ஒரு விவகாரத்தைக் கையில் எடுத்து பரபரவென்று வைரலாக்க, பதிலுக்கு பொன்முடி விவகாரத்தை கையில் எடுத்து, அதைக் கூட்டியும் குறைத்தும் பா.ஜ.க. தரப்பும் வைரலாக்கி வருகிறது. இவர்களின் இந்த பனிப்போர் சமூக வலைத்தளங்களில் புகைகிறது. பா.ஜ.க. பிரமுகர்கள் பலரும், ஹனி டிராப் வீடியோவில் சிக்கிய நிலையில், அண்ணா மலையும், இப்படிப்பட்ட ஏடாகூட வில் லங்கத்தில் சிக்கியிருக்கிறார் என்று முதன் முதலில் ஸ்மெல் செய்து சொன்னது நம் நக்கீரன்தான். இந்த விவகாரம், பா.ஜ.க. தரப்பை ரொம்பவே சங்கடப்படுத்தி வரு கிறது.''”

___________

இறுதிச் சுற்று!

மழை வெள்ளத்தில் பாதிப்புக்குள்ளான தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங் களை ஆய்வு செய்ய 21-ந் தேதி காலை தூத்துக்குடிக்கு சென்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அந்தோனியபுரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து மனுக்களைப் பெற்றார். முதல்வரிடம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தங்களின் வேதனைகளையும் கஷ்டங்களையும் மக்கள் வெளிப்படுத்தினர். அவர்களுக்குத் தேவையான உதவிகள் அனைத்தும் செய்யப்படும் என மக்களை ஆறுதல்படுத்தினார். நிவாரண முகாம்களில் ஆய்வு நடத்தியதோடு, தூத்துக்குடி எம்.பி. கனிமொழி ஏற்பாடு செய்திருந்த நிவாரண உதவிகளையும் வழங்கினார் ஸ்டாலின். முதல்வருடன் அமைச்சர்கள் நேரு, கீதாஜீவன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இதனையடுத்து நிவாரணப் பணிகள், சீரமைப்பு பணிகள் ஆகியவை 4 மாவட்டங்களில் எந்தளவுக்கு நடந்திருக்கிறது என்பதை ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுடன் விசாரித்ததுடன், புகார்கள் வராதபடிக்கு பணிகளை முழுமையாக செய்து முடிக்கவேண்டும் என்று உத்தரவிட்டார் முதல்வர் ஸ்டாலின்.

-இளையர்

கௌதமி வழக்கு! அழகப்பன் குடும்பத்தினர் கைது!

பா.ஜ.க. ஆதரவாளரும் நடிகையுமான கௌதமி, அழகப்பன் மீது தொடுத்த மோசடி வழக்கில், தலைமறைவாக இருந்துவந்த அழகப்பன், அவரது மனைவி நாச்சாள் அழகப்பன், மகன், மருமகள் உள்ளிட்டவர்கள் தமிழக காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். அழகப்பன் தரப்பில் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவரது வழக்கறிஞர்கள் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் கார்த்திகேயன், இருதரப்பு வாதத்துக்குப் பின் அழகப்பன் தரப்பினரது முன்ஜாமீன் மனுவை நிராகரித்தார். (முன்ஜாமீன் நிராகரிப்பு குறித்த கட்டுரை இந்த இதழின் 10-11ஆம் பக்கங்களில் இடம் பெற்றுள்ளது.) இதையடுத்து 21-12-2023 அன்று திருச்சூரில் பதுங்கியிருந்த அழகப்பன் குடும்பத் தினரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.

-கீரன்