அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் நான்தான் என சசிகலா நீதிமன்றத்தில் உரிமை கோரி வரும் நிலையில், அ.தி.மு.க. வில் ஓ.பி.எஸ்.சுக்கும் இ.பி.எஸ்.சுக் கும் மட்டுமே அதிக அதிகாரம் இருக்கும்வகையில் கட்சியின் சட்ட விதிகளை திருத்தம் செய்திருக்கும் விவகாரம், அக்கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

add

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு பொதுச்செயலாளரான சசிகலா, சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைக்குச் செல்ல, அவரால் துணைப் பொதுச்செயலாளராக தினகரன் நியமிக்கப்பட் டார். இருவரையும் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, பொதுச்செயலாளர் பதவியே ஒழிக்கப்பட்டு, அதற்குப் பதிலாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கும் வகை யில் கட்சியின் சட்டவிதிகளில் திருத்தம் செய்து, ஓ.பி.எஸ்.ஸும் இ.பி.எஸ்.ஸும் பொதுக்குழு மூலம் அதனை அடைந்தனர். இவற்றை எதிர்த்து சசிகலாவும், அ.தி.மு.க.வின் முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச் சாமியும் தனித்தனியாக நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்குகள் இன்னும் நிலுவையில் இருக்கின்றன.

டிசம்பர் 1 அன்று ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ். கூட்டிய செயற்குழுவில், ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணப்பாளர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படுவார்கள். இருவரும் ஒற்றை வாக்கு மூலம் இணைந்தே தேர்வு செய்யப்பட வேண்டும். சட்ட விதிகளை திருத்தவும், சேர்க்கவும், நீக்கவும் பொதுக்குழுவுக்கு அதிகாரம் இருந்தாலும், ஒருங்கிணைப்பாளர் -இணை ஒருங்கிணைப் பாளர்களை அடிப்படை உறுப்பினர்கள் வாக்களித்து தேர்வு செய்யும் சட்ட விதியை மட்டும் திருத்து வதற்கோ, மாற்றுவதற்கோ பொதுக் குழுவுக்கு உரிய தல்ல’ என்கிற சட்ட திருத்த தீர்மானத்தை கே.பி. முனுசாமி, வைத்திலிங்கம், திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், பொன்னையன், தனபால், தமிழ்மகன் உசேன் ஆகியோர் முன்மொழிந்தனர். இதற்கு செயற்குழு ஒப்புதலளித்திருக்கிறது.

Advertisment

d

இதற்கிடையே, கட்சியின் தற்காலிக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டிருக் கிறார். அ.தி.மு.க.வின் முஸ்லிம் சமூகத்திற்கான மூத்த தலைவராக இருந்த முன்னாள் எம்.பி. அன்வர்ராஜா அதிரடியாக நீக்கப்பட்டதை சமன் செய்யும் முகமாக இந்த நியமனம் நடந்துள்ளது. இவற்றிற்கு பொதுக்குழுவில் ஒப்புதல் பெறவேண்டி யுள்ள நிலையில், இந்த சட்டத் திருத்தங்கள் அ.தி.மு.க.வில் விவாதங்களை உருவாக்கி வருகிறது.

இரட்டை தலைமைக்கு எதிராக ஏற்கனவே வழக்கு போட்டிருக்கும் கட்சியின் முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமியிடம், இப்போதைய சட்டத் திருத்தம் குறித்து பேசியபோது,”"சசிகலாவை ஏற்ப தில்லை என்பதை உறுதிப்படுத்தவும், இரட்டை தலைமைதான் கட்சியை வழிநடத்தும் என்பதையும், அந்த இரட்டை தலைமையில் இருக்கும் தங்களின் அதிகாரத்தை வலிமையாக்கிக் கொள்ளவும்தான் சட்டத்தில் திருத்தம் செய்திருக்கிறார்கள். ஏற்கனவே செய்த சட்டத் திருத்தத்தை எதிர்த்துதான் நான் கோர்ட்டுக்கு போயிருக்கிறேன். அந்த வழக்கு இன்னமும் நிலுவையில் உள்ள நிலையில்... மீண்டும் விதிகளை திருத்தம் செய்ய இவர்களுக்கு அதிகாரம் கிடையாது. இதெல்லாம் செல்லாது.

Advertisment

செயற்குழு கொடுத்துள்ள ஒப்புதலை பொதுக்குழு ஏற்கிறதா என பார்ப்போம். ஏனெனில், இந்த திருத்தத்தை பொதுக்குழு உறுப்பினர்கள் பலரும் ஏற்க மறுக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். ஒருவேளை பொதுக்குழு இதனை ஏற்பதாக வைத்துக்கொள்வோம். அதனை தேர்தல் ஆணையம் ஒப்புக்கொள்ளுமா என தெரியாது. அதனால், நிறைய வில்லங்கங்கள் இருக்கின்றன.

ddஅ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரை தேர்ந் தெடுக்கும் அதிகாரம் பொதுக்குழுவுக்கு கிடையாது. அடிப்படை தொண் டர்கள் வாக்களித் துத்தான் பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இந்த விதியை மாற்றவோ, திருத்தவோ பொதுக் குழுவுக்கு அதிகாரம் இல்லை என்று சட்ட விதிகளை உருவாக்கி யவர் எம்.ஜி.ஆர். ஆக... பொதுச்செயலாளர் தேர்வுக்கு எம்.ஜி. ஆரால் சொல்லப்பட்ட அதே விதிகளைத்தான் இரட்டைத் தலைமை பதவிக்கு இப்போது கொண்டு வந்திருக்கிறார்கள். அப்படியானால், பொதுச்செயலாளரை தேர்வு செய்யும் அதிகாரம் பொதுக்குழுவுக்கே இல்லை என்கிறபோது அந்த பதவியையே ஒழித்துவிட்டு ஒருங்கிணைப்பாளர் -இணை ஒருங்கிணைப்பாளர் என திருத்தப்பட்ட விதிகள் எப்படிச் செல்லுபடியாகும்? பொதுக்குழுவுக்கு அதிகாரமில்லாதபோது அதன் ஒப்புதலை பெற்றது எப்படிச் செல்லும்?

"ஒரு ஓட்டுப் போட்டு இரட்டை தலைமையை தேர்ந்தெடுக்க வேண்டும்' என திருத்தம் செய்திருக்கிறார்கள். அதாவது, ஒருங்கிணைப்பாளர் -இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு இரண்டு இரண்டு பேராக, ஜோடி ஜோடியாக போட்டி போடவேண்டும் எனச் சொல்கிறது இந்த திருத்தம். எந்த ஜோடி நல்ல ஜோடி என பார்த்து தொண்டர்கள் வாக்களிக்க வேண்டும். இதைவிட காமெடி வேறு எங்கேனும் இருக்குமா? தங்களின் சுயநலன்களுக்காக கட்சியை ஓ.பி.எஸ்.சும் இ.பி.எஸ்.சும் கேவலப்படுத்திக்கொண் டிருக்கிறார்கள்''‘என்று ஆவேசப்படுகிறார் கே.சி.பழனிச்சாமி.

அ.தி.மு.க.வின் சட்டவிதிகளில் ஓ.பி.எஸ்.சும் இ.பி.எஸ்.சும் இப்படி ரவுண்டு கட்டி அடிக்க, அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் நான்தான் என உரிமைகோரும் சசிகலாவின் சட்ட முயற்சிகளுக்கு தடையாக இருந்துவரு கிறார் தினகரன். இதனால் சசிகலாவுக்கும் தினகர னுக்குமிடையேயான மனக்கசப்புகள் அதி கரித்தபடி இருக்கிறது என்கிறார்கள்.

அதன் வெளிப்பாடா கத்தான் சசிகலாவின் நிகழ்வுகளில் அ.ம.மு.க. வினர் கலந்து கொள்ளக்கூடாது என ரகசிய உத்தரவுகளை பிறப்பித்திருந்தார் தினகரன். இந்த மோதல்கள் நீறுபூத்த நெருப்பாக இருந்துவரும் நிலையில், இது குறித்து பேட்டியளித்த தினகரன், ‘’ "அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் பதவிக்கு உரிமைகோரும் சசிகலாவின் சட்ட முயற்சிகளுக்கு தடையாக இருந்துவிடக்கூடாது என்பதால்தான், அவரது நிகழ்ச்சியில் கலந்துகொள்வதை அ.ம.மு.க. நிர்வாகிகள் தவிர்த்திருக் கிறார்கள்'' என்று சொல்லியுள்ளார்.

adf

தினகரன் இப்படி சொல்லி யிருக்கும் நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட கட்சியினரிடம் விருப்ப மனு வாங்கும் அ.ம.மு.க.வினர், "சசிகலாவின் நல்லாசியுடன் விருப்ப மனு வாங்கப்படுகிறது’என சசிகலாவின் பெயரையும், படத்தையும் பயன்படுத்துவது சட்ட சிக்கலை ஏற்படுத்தும்' என்கிறார்கள் சசிகலா விசுவாசிகள்.

இதுகுறித்து அ.ம.மு.க.வின் முன்னாள் கொள்கை பரப்பு இணைச் செயலாளர் நாஞ்சில் சம்பத்திடம் கேட்டபோது,”"தினகரன் திசை தெரியாமல் தடுமாறுகிறார்; தத்தளிக் கிறார். தமிழக அரசியலில் அவரை ஆதரித்து நான் பேசிய கால கட்டங்களில், இருந்த இளைஞர்களில் ஒருவர்கூட தினகரனிடம் இப்போது இல்லை. எல்லோரும் விலகிச் சென்றுவிட்டார்கள். நம்பகத்தன்மை இல்லாதவர்.

என்ன நினைக்கிறார்? என்ன கருதுகிறார்? எப்படி பயணிக்கப் போகிறார்? என்பதை தினகரன் வெளிப்படையாக எப்போதும் சொன்னதில்லை. உள்ளத்தில் ஒன்றும் உதட்டில் ஒன்றுமாக நாடகமாடும் தினகரன், சசிகலாவின் படத்தைப் போட்ட விருப்ப மனு படிவத்தை விநியோகிக்கிறாரெனில், சசிகலாவின் தயவும் தாட்சண்யமும் இல்லாமல் ஒரு நிமிடம்கூட தினகரனால் அரசியல் செய்ய முடியாது என்பதால்தான். அதேசமயம், சசிகலா நிகழ்ச்சிகளுக்கு அ.ம.மு.க. நிர்வாகிகள் போகக்கூடாது என தடுக்கிறார். ஆக, ரெட்டை வேடம் போடுகிறார் தினகரன்.

அ.தி.மு.க.வுக்கு தலைமை தாங்கக் கூடிய லட்சியத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கிற சசிகலாவுக்கு தினகரன்தான் சுமையாகவும் தடையாகவும் இருக்கிறார். அரசியலிலிருந்து தினகரனை வெளிப்படையாக சசிகலா அப்புறப்படுத்தினால்தான் அவரது இலக்கு வெற்றியடையும்.

அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் பதவிக்காக சசிகலாவின் உரிமை கோரும் முயற்சிக்கு சட்டச் சிக்கல் வந்து விடக்கூடாது என தினகரன் சொல்வது, அரசியலில் தன்னை தக்க வைத்துக் கொள்வதற்கு அவர் தருகிற மரண வாக்குமூலம். சசிகலா இவரை எப்போதும் சேர்த்துக் கொள்ளமாட்டார். அவரை தனது லட்சியத்துக்கு பயன்படுத்திக்கொள்ளவும் மாட்டார். சசிகலா இல்லையெனில் அ.தி.மு.க.வும் கரை சேராது'' என்கிறார் மிக இயல்பாக.

இந்த நிலையில், அ.தி.மு.க.வின் இரட்டைத் தலைமைக்கு எதிராகவும், ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்.களின் செயல்பாடுகளுக்கு எதிராகவும் பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தலைமைத் தேர்தல் ஆணையரிடம் புகார் மனு கொடுத்துள்ளார் அ.தி.மு.க.வின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் புகழேந்தி.

புகழேந்தியிடம் நாம் பேசியபோது,‘"எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட கட்சியின் சட்டவிதிகளை திருத்துவதற்கு இவர்களுக்கு அதிகாரமில்லை. அது தெரிந்திருந்தும் திருத்தியுள்ளனர். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங் கிணைப்பாளர் என உருவாக்கியது சட்டவிதிகளுக்கு எதிரானது. அப்போதைய பெரும்பான்மையை வைத்து இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கினார்கள். இப்போது நிலைமை வேறு. அதனால் அவர்களுக்கான அதிகாரத்தை திரும்பப் பெறவேண்டும். அ.தி.மு.க. சட்டவிதிகள் குறித்து தேர்தல் ஆணையம் தலையிட வேண்டும் என தலைமை ஆணையரிடம் புகார் கொடுத்துள்ளேன். சசிகலாவின் ஒற்றைத் தலைமைக்குள் அ.தி.மு.க. சென்றுவிடுமோ என்கிற பயம்தான் ஓ.பி.எஸ்.சையும் இ.பி.எஸ்.சையும் இப்படி கட்சியின் விதிகளில் விளையாட வைக்கிறது. நிச்சயம் ஒரு கட்டத்தில் இரட்டை தலைமையை தொண்டர்கள் தூக்கி எறிவார்கள்'' என்கிறார் புகழேந்தி.

பொன்விழா ஆண்டில் எதிர்காலத்தை இருட்டில் தொலைத்துக்கொண்டிருக்கிறதா அ.தி.மு.க?