சேர்மனை டம்மியாக்கிய ஒ.செ.! -கீழ்பென்னாத்தூர் கிறுகிறுப்பு.

cc

"என்னை சேர்மன் நாற்காலியில் டம்மியா உட்கார வச்சிருக்காங்க. எனக்குன்னு எந்த அதிகாரமும் இல்லை'’என்று குமுறுகிறார் கீழ்பென்னாத்தூர் ஒன்றிய சேர்மன் என்று காற்றுவாக்கில் ஒரு தகவல் காதுக்கு வர...

"அங்கே என்ன நடக்கிறது?' என்ற விபரம் அறிய திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கீழ்பென்னாத்தூர் சென்றோம்.

அங்கே, ஒன்றியக்குழு தலைவர் அய்யாக்கண்ணுவை நாம் சந்தித்து, "என்ன பிரச்சினை?' என்று விசாரித்தபோது,”"இந்த விவகாரம் குறித்து அமைச்சர் எ.வ.வேலு விசாரிப்பதாகச் சொல்லியிருக்கிறார். அதனால் இப்போதைக்கு இது பற்றி நான் பேசினால் சரியாக இருக்காது''”என்று நம்மிடம் பேசத் தயங்கினார்.

இதைத் தொடர்ந்து அங்குள்ள தி.மு.க. கவுன்சிலர்கள் சிலரிடம் நாம் விசாரித்தபோது...

cc

"எங்கள் ஒன்றியத்திலுள்ள 18 கவுன்சிலர் களில் 10 பேர் தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள். 5 பேர் அ.தி.மு.க.காரர்கள். 2 சுயேட்சை, 1 தே.மு.தி.க. இதுதான் இங்குள்ள நிலவரம். இந்த ஒன்றியக் குழுவின் தலைவர் பதவி பட்டியலினத்துக்காக ஒதுக்கப்பட்டதாகும். எங்கள் கட்சியில் வெற்றி பெற்ற பட்டியலின பெண் கவுன்சி

"என்னை சேர்மன் நாற்காலியில் டம்மியா உட்கார வச்சிருக்காங்க. எனக்குன்னு எந்த அதிகாரமும் இல்லை'’என்று குமுறுகிறார் கீழ்பென்னாத்தூர் ஒன்றிய சேர்மன் என்று காற்றுவாக்கில் ஒரு தகவல் காதுக்கு வர...

"அங்கே என்ன நடக்கிறது?' என்ற விபரம் அறிய திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கீழ்பென்னாத்தூர் சென்றோம்.

அங்கே, ஒன்றியக்குழு தலைவர் அய்யாக்கண்ணுவை நாம் சந்தித்து, "என்ன பிரச்சினை?' என்று விசாரித்தபோது,”"இந்த விவகாரம் குறித்து அமைச்சர் எ.வ.வேலு விசாரிப்பதாகச் சொல்லியிருக்கிறார். அதனால் இப்போதைக்கு இது பற்றி நான் பேசினால் சரியாக இருக்காது''”என்று நம்மிடம் பேசத் தயங்கினார்.

இதைத் தொடர்ந்து அங்குள்ள தி.மு.க. கவுன்சிலர்கள் சிலரிடம் நாம் விசாரித்தபோது...

cc

"எங்கள் ஒன்றியத்திலுள்ள 18 கவுன்சிலர் களில் 10 பேர் தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள். 5 பேர் அ.தி.மு.க.காரர்கள். 2 சுயேட்சை, 1 தே.மு.தி.க. இதுதான் இங்குள்ள நிலவரம். இந்த ஒன்றியக் குழுவின் தலைவர் பதவி பட்டியலினத்துக்காக ஒதுக்கப்பட்டதாகும். எங்கள் கட்சியில் வெற்றி பெற்ற பட்டியலின பெண் கவுன்சிலர்கள் இருவரில் ஒருவரை சேர்மனாக்கும்படி எங்கள் ஒ.செ. ஆராஞ்சி ஆறுமுகம் சிபாரிசு செய்தார். ஆனால் எங்கள் மா.செ.வான அமைச்சர் எ.வ.வேலு தலையிட்டு, அய்யாக் கண்ணுவை சேர்மனாகவும், ஒ.செ. ஆராஞ்சி ஆறுமுகத்தின் மனைவி வாசுகியை வைஸ் சேர்மனாகவும் தேர்வு செய்தார். இங்குதான் சிக்கல் ஆரம்பித்தது''” என்றவர்கள்...

"பெயருக்குதான் அய்யாக்கண்ணு சேர்மன். ஆனால் வைஸ்சேர்மனின் கணவரான ஒ.செ. ஆறுமுகம், யூனியனையே நிர்வாகம் செய்கிறார். அவர் கையெழுத்து போடுன்னு சொல்ற இடத்தில் சேர்மன் என்ன, ஏதுன்னு கேட்காமல் கையெழுத்து போட்டாகனும். அந்த அளவுக்கு ஒ.செ., சேர்மனை ஆட்டிப் படைக்க ஆரம்பிச்சிட்டார். இது ஒருவகையான தீண்டாமைக் கொடுமைதான். அதிலும் ஆளும்கட்சியாக தி.மு.க. வந்தபிறகு, ஒ.செவின் ஆட்டம் அதிகமாயிடிச்சி. இதுப்பற்றி தொகுதி எம்.எல்.ஏ.வும் துணை சபாநாயகருமான பிச்சாண்டியிடம் முறையிடச் சென்ற போது, அவர் எதையுமே கேட்கவில்லை. இதனால் ஓராண்டுக்கு முன்பு, "சேர்மனாக என்னை செயல்படவிடாமல் ஒ.செ. தடுக்கிறார். சாதிரீதியாக என்னை ஒடுக்குகிறார்' என்று ஒ.செ. மீது குற்றம்சாட்டி அமைச்சரிடம், சேர்மன் மனு கொடுத்தார். அமைச்சரோ, அது பிச்சாண்டியின் தொகுதிப் பிரச்சினையாச்சேன்னு முதலில் தலையிட விரும்பலை. அதனால் சேர்மன், முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் கடிதம் எழுதினார். அதனால், இது மேலேவரை போக, பதறிப்போன அமைச்சர், ஒ.செ.வை அழைத்து விசாரித்துவிட்டு, இருவரை யும் சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தார். இருந்தும் ஒ.செ.விடம் எந்தவித மாற்றமும் ஏற்படலை.

யூனியன்ல எந்த வேலை செய்தாலும், ஒ.செ. என்கிற முறையில் 10 சதவீதத்தையும், மாவட்ட கவுன்சிலர் என்கிற முறையில் 10 சதவீதத் தையும், அவர் மனைவி ஒன்றிய கவுன்சிலர் என்கிற அடிப்படையில் பத்து சதவீதத்தையும், வைஸ் சேர்மன் என்கிற அடிப்படையில் 10 சதவீதத்தையும்னு 40 சதத்தை எடுத்துக்கொள்ளும் ஒ.செ. ஆறுமுகம், எம்.எல்.ஏ. கோட்டா வுக்கான 10 சதவீதத்தையும், கட்சி நிதிக்காக 10 சதவீதத்தையும் தன் பக்கம் ஒதுக்கிக்கிறார். ஆக அவருக்கு மட்டுமே 60 சதவீத கமிஷன் போயிடுது. மீதி 40 சதவீதத்தில்தான் பணிகளை சேர்மன் உட்பட கவுன்சிலர் களுக்கு அவரே பிரித்துத் தருகிறார். முதலமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 6.5 கோடி நிதி வந்தது. பள்ளி வளர்ச்சி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 6 கிராமங்களில் உள்ள பள்ளிகளில் இரண்டு வகுப்பறைகள் கட்டித் தர 1.68 கோடி நிதி வந்தது. அதேபோல் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 3.25 கோடி நிதி வருகிறது. இந்த வேலைகளை எல்லாம் ஒ.செ.வின் ஐயன் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியே செய்கிறது. துணை சபாநாயகர் பிச்சாண்டி, தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒதுக்கப்படும் வேலைகளை கமிஷன் வாங்காமல் கட்சிக் காரர்களுக்கு தருகிறார். ஆனால் ஒன்றிய வேலைகளில் எம்.எல்.ஏ.வும் கமிஷன் கேட்கிறார் என ஒ.செ.வே பங்கு வாங்குகிறார். இப்படி வசூலில் கொடிகட்டிப் பறப்பதால், தனது பவரையும் யூனியனில் நிலை நாட்டிவருகிறார். பாவம் டம்மி சேர்மன்''’ என்றார்கள் கவலையாய்.

அ.தி.மு.க.வைச் சேர்ந்த அந்த கவுன்சிலர் நம்மிடம் “"ஒன்றியக்குழு கூட்டத்தில் சும்மா அட்மாஸ்பியருக்காக சேர்மனை உட்கார வைக்கறாங்க. ஒ.செ. ஆறுமுகமே வந்து கூட்டத்தை நடத்த றார். இதைப் பற்றி கேட்டபோது, கடந்த காலத்தில் சேர்மன் இருந்தாலும் ஒ.செ.வாக இருப்பவர்கள்தான் நிர்வாகம் செய்தார்கள், அதைத்தான் என் கணவரும் செய்கிறார்ன்னு வைஸ் சேர்மன் வாசுகி ஆறுமுகம் சொல்றாங்க. அவர் அப்படி சொன்ன வீடியோ பதிவே எங்களிடம் இருக்கு''’என்றார் தலையில் அடித்துக்கொண்டு.

இதுகுறித்து மாவட்ட கவுன்சிலரும் கீழ்பென்னாத்தூர் தி.மு.க. வடக்கு ஒ.செ.வுமான ஆராஞ்சி.ஆறுமுகத்திடமே நாம் கேட்டபோது, "கவுன்சிலர்கள் கோரிக்கை வைத்தால் வைஸ் சேர்மன் கணவர், ஒ.செ. என்கிற முறையில் பி.டி.ஓ. அலுவலகம் சென்று பேசுகிறேன். மற்றபடி சேர்மனை செயல்படவிட வில்லை எனச் சொல்வது பொய். டி.ஆர்.டி.ஏ.வில் ஒப்பந்த தாரராக பதிவு செய்து வைத்துள்ளேன், அங்கு வரும் வேலைகளை டெண்டரில் கலந்து கொண்டு எடுத்துச் செய்கிறேன். ஒன்றியத்தில் நடக்கும் வேலைகளை எல்லாவற்றை யும் நானே எடுத்துக்கொள்கிறேன் என்பதும், அதற்கு கமிஷன் வாங்குகிறேன் என்று சொல்வதும் பொய். நீண்ட அரசியல் அனுபவம் உள்ளவன் நான். துணை சபாநாயகரின் தொகுதியில் தவறு நடந்தால் என்ன பிரச்சினை வரும் என எனக்குத் தெரியும்''’என்றார் அழுத்த மாக.

எனினும், அங்கே சுமுக நிலை இன்னும் ஏற்படவில்லை.

nkn041023
இதையும் படியுங்கள்
Subscribe