மீண்டும் பிரதமராவது அத்தனை எளிதானதல்ல என்பதை மோடி அறிந்தே இருக்கிறார். அவரது கவனம், பா.ஜ.க.வின் வலுவானக் கூட்டணியிலும் காங்கிரஸ் தலைமையில் மெகா கூட்டணி உருவாகி விடக்கூடாது என்பதிலும்தான்! இதற்காகவே டூர் அடித்து வரும் அமித்ஷா, பா.ஜ.க.வின் பழைய தோஸ்துகளான தெலுங்கு தேசம், சிவசேனா, பிஜூ ஜனதா தளம், அகாலி தளம், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளுடன் பேசியதில் பெரிய முன்னேற்றம் இதுவரை இல்லை.

raghul

அதே நேரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தன்னை, சின்ன பையன் (பப்பு) என கிண்டலடித்து வரும் மோடியையும் அமித்ஷாவையும் எதிர்கொள்ளும் வகையில், தன்னை வலிமையான தலைவராகவும், மெகா கூட்டணிக்குத் தலைமை தாங்கும் வகையிலும் கட்டமைக்க வியூகம் வகுத்து வருகிறார்.

Advertisment

sonia""காங்கிரசுக்கு பழைய செல்வாக்கு இல்லை. இந்திரா மறைவுக்குப் பிறகு ராஜீவ்காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி பெற்ற 415 நாடாளுமன்ற இடங்கள்தான் (42% வாக்கு) அக்கட்சிக்கு மிகப்பெரிய வெற்றி. அது படிப்படி யாக குறைந்து, சோனியா தலைவரானபோது 114 எம்.பி.க் களும் 28 சதவீத வாக்கு வங்கியும் இருந்தன. ஆனால், 2014 நாடாளுமன்ற தேர்தலில் வெறும் 44 இடங்களை மட்டுமே பிடித்து அதன் வாக்கு வங்கி மோசமாக சரிந்து விட்டது. அண்மைக்காலத்தில் நடந்த இடைத்தேர்தல் களில் கணிசமான வெற்றியை காங்கிரஸ் கைப்பற்றினாலும் கூட, ஒரு பொதுத்தேர்தலில் கிடைக்கும் வெற்றிதான் காங்கிரசை தூக்கி நிறுத்தும். அதற்கான சவால்தான் ராகுல் முன்னால் தற்போது நிற்கிறது'' என்கிறார் அரசியல் விமர்சகரான வழக்கறிஞர் ரவீந்திரன் துரைசாமி.

இந்த நிலையில், ’காங்கிரஸ் தலைமையில் தேசிய அளவிலான மெகா கூட்டணிக்கு மற்ற கட்சிகள் இதுவரை தயாராகாத நிலையில், ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஏற்ப வலிமையான கூட்டணியை அமைக்கும் வகையில் செயல் திட்டங்களை வகுப்பதுதான் புத்திசாலித்தனமானது‘’ என காங்கிரஸின் மூத்த தலைவர்கள் ராகுலிடம் வலியுறுத்தி வருகின்றனர். ராகுலும், மாநில கட்சிகளுடன் பேச்சு வார்த்தையை துவக்க ஒப்புதல் தந்துள்ளார். அதன்படி, முதல்கட்டமாக, சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ், லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதாதளம், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, ஜார்கண்ட் விகாஸ் உள்ளிட்ட கட்சிகளு டன் பேச்சுவார்த்தையை துவக்கியிருக்கிறது காங்கிரஸ்.

அதேநேரத்தில், ஒவ்வொரு மாநிலத்திலும் காங்கிரசை வலிமைப்படுத்துவதிலும் தீவிரம் காட்டி வருகிறார் ராகுல். இதற்காக, கட்சியின் சூழல் குறித்து இரு வாரங்களுக்கு முன்பு மூத்த தலைவர்களுடன் ஆலோசித்தார் ராகுல்காந்தி.

Advertisment

அப்போது, ""கட்சியின் பொதுச்செயலாளர்களில் 80 சதவீதம் ஒரிஜினல் இளைஞர்களுக்கும், 20 சதவீதம் மட்டுமே மூத்த தலைவர்களுக்கும் கொடுக்கலாம் என நினைக்கிறேன். பொறுப்புகள் கிடைக்காத சீனியர்கள் வருத்தப்படாதீர்கள். எனக்கு அரசியல் அட்வைஸ் செய்யும் பணிகளில் அவர்களை ஈடுபடுத்திக்கொள்கிறேன். அப்புறம், கட்சியின் ஒவ்வொரு பொதுச்செயலாள ரிடமும் இரண்டு-மூன்று மாநிலங்களுக்கான பொறுப்புகளை வழங்குவதால் ஜாலி டூர்தான் போகிறார்கள். இனி ஒரு மாநிலம் மட்டுமே இருக்கும். அப்போதுதான் அவருக்கும் மாநிலத்தை முழுமையாக கவனிக்க நேரம் கிடைக்கும். அவர் என்ன செய்கிறார் என்பது மேலிடத்துக் கும் தெரியும். இனி, ஒரு மாநி லத்தில் கட்சியின் வளர்ச்சிக்கும், தேர்தலின் வெற்றித் தோல்விக்கும் அந்த மாநிலத்தின் காங்கிரஸ் தலை வர் மட்டுமே பொறுப்பல்ல. மேலிட பொறுப்பாளராக நியமிக்கப்படும் பொதுச்செயலாளர்களும்தான் பொறுப்பு. இதில் எங்கு தவறு நடந்தாலும் தயவுதாட்சண்யம் பாராமல் நட வடிக்கை எடுப் பேன்.

amitsha

மாநிலத்தின் மேலிட பொறுப்பாளராக நியமிக்கப்படுபவர்கள் இனி 40 வயதுக்கு உட்பட்டவராக இருப்பார்கள். அதேசமயம், இளைஞர்களால் எதிர்கொள்ள முடியாத அரசியல் வலிமையாக இருக்கும் மாநிலங்களில் மட்டும், முன்னாள் முதல்வர்களாக, மத்திய அமைச்சர்களாக இருந்த மூத்த தலைவர்கள் மேலிட பொறுப்பாளர்களாக நியமிக்கப் படுவார்கள்''‘என கறாராகப் பேசியிருக்கிறார். இதனை மறுத்து சில தலைவர்கள் விவாதம் செய்தபோதும் அதனை ராகுல்காந்தி ஏற்கவில்லை. அத்துடன் 40 வயதுக்குட்பட்ட இளம் எம்.பி.க்கள் 5 பேரை மேலிட பொறுப்பாளராக நியமித்திருக்கிறார். அதேசமயம், ஆந்திராவுக்கு மட்டும் முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டியை மேலிட பொறுப்பாளராக நியமித்துள்ளார் ராகுல்.

இந்த அதிரடி மாற்றங்களால் தங்க ளுக்கான நியமனங்கள் பறிபோகிறதே என கவலைப்பட்ட சில சீனியர்கள், சோனியாவை சந்தித்து, ராகுலின் நடவடிக்கைகளுக்கு எதிராக புகார் வாசித்தபோது, ‘’""காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்தான். அந்த பதவியை அவர் ஏற்கும்போதே, சுதந்திரமாக செயல்படும் அதிகாரத்தையும் தந்து விட்டேன். கட்சியில் இரட்டை தலைமை கிடையாது. எனக்கும் அவர்தான் தலைவர். அதனால் அவரிடமே உங்கள் கருத்து வேறுபாடுகளை களைந்து கொள்ளுங்கள்''‘’ என அட் வைஸ் செய்து அனுப்பி வைத் திருக்கிறார் சோனியா காந்தி. புது வியூகம் வகுத்திருக்கும் காங்கிரசை உன்னிப்பாக கவனித்து காய் நகர்த்தத் தயாராகிறது பா.ஜ.க.

-இரா.இளையசெல்வன்